பூங்காவனம் 19 ஆவது இதழ் பூங்காவனம் வாசகர் கரங்களில் தற்பொழுது மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றது. பூங்காவனத்தின் வழமையான அம்சங்கள் இந்த இதழையும் அலங்கரித்திருக்கின்றன. டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை வாசகர்கள் அறிவார்கள். அதனை நினைவுபடுத்துமுகமாக ஆசிரியர் பக்கத்தில் சிறந்த பல யோசனைகள் தரப்பட்டிருக்கின்றன. மனதில் உறுதியிருந்தால் உடலில் ஏற்படும் ஊனம் திறமையை பாதிப்பதில்லை என்பதையும், ஏனையவர்கள் ஊனமுற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தவே வருடாந்தம் ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும், முயற்சியையே மூலதனமாகக் கொண்டுள்ள ஊனமுற்றவர்கள் உலக ரீதியாக பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். இறைவன் இவர்களுக்கு விசேட வல்லமைகளைக் கொடுத்திருக்கிறான் என்ற உண்மையும் கூறப்பட்டிருக்கிறது. ஊனம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் அவர்களை அணுகி அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்கி நட்புடன் உறவாடி `வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற உண்மையை உணர வைக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.
பூங்காவனத்தின் உள்ளே ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, றாபி எஸ். மப்றாஸ், வஸீலா ஷரீப், பதுளை பாஹிரா, மிஹிந்தலை ஏ. பாரிஸ், எம்.எஸ்.எம். சப்ரி, ஷெல்லிதாசன், எச்.எப். ரிஸ்னா ஆகியோரது ஒன்பது கவிதைகளும் தே. நிரோஷனி, நிலாக்குயில், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோரது மூன்று சிறுகதைகளும், கவிஞர் ஏ. இக்பால், பி.ரி. அஸீஸ், கீதா கணேஷ் ஆகியோரது கட்டுரைகளும் காவியன், பீ. ஷைலஜா ஆகியோரது நூல் மதிப்புரைகளுடன் வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்பனவும் இடம்பெற்றுள்ளன.
பழைய மாணவிகளின் சங்கத் தலைவியும், தற்போதைய போஷகியும், முன்னாள் ஆசிரியையுமான பொற்கலசம் நூலாசிரியர் ஹாஜியானி திருமதி. ஆயிஷா இப்றாஹீம் அவர்களை ரிம்ஸா முஹம்மத் நேர்கண்டு பல தகவல்களை வாசகர்களுக்கு அறியப்படுத்தியிருக்கின்றார்.
மாவனல்லை ஹிங்குளோயாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் 1963 ஆம் ஆண்டு ஆசிரியப் பணியை ஆரம்பித்து 2002 ஆம் ஆண்டில், தான் ஓய்வு பெறும்வரை சமூகத்துக்கும், தான் கடமையாற்றிய பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்துள்ளார். இவர் மாவனல்லை கிருங்கதெனிய அந்நூர் வித்தியாலயம், கனேதன்னை முஸ்லிம் வித்தியாலயம், மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் தனது ஆசிரியப் பணியை மேற்கொண்டிருந்தார். இறுதியாக சேவையாற்றிய தமது ஊரான ஹிங்குளோயாவின் அகில இலங்கையிலும் புகழ்பெற்ற மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடாலையில் சேவையாற்றும்போது பத்து மாணவிகளை சேர்த்துக்கொண்டு ஷஷபழைய மாணவிகள் சங்கம்' என்ற பெயரில் ஆரம்பித்த சங்கத்தில் தற்போது பிரபல அதிபர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியைகள், பல்வேறு அமைப்புக்களின் தலைமைத்தவ உறுப்பினர்கள் என பல அங்கத்தவர்களைக் கொண்ட குழு ஒன்று செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விடயம்.
பஸீஹா, பரீஹா ருஷ்தி, பஹ்மி, பஸ்லி ஆகிய நான்கு பிள்ளைகளின் தாயாக விளங்கும் இவரது தங்கைகள் நால்வரில் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியையாகவும், ஏனையவர்கள் கலை, விஞ்ஞானப் பிரிவுகளில் தேறியவர்களாகவும் காணப்படுகின்றனர். இதில் பஸீஹா என்பவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியற் துறை விரிவுரையாளராக விளங்குகிறார்.
இத்தகைய கல்விக் குடும்பம் ஒன்றில் மூத்தவராக விளங்கும் திருமதி. ஆயிஷா இப்றாஹீம், சமூக சேவைப் பணிகள், பாடசாலைச் செயற்பாடுகளுக்கு மத்தியில் வாசிப்பில் ஆர்வம் காட்டி வருபவராகவும் காணப்படுகின்றார். தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு மறக்க முடியாத ஏதாவதொரு சேவையைச் செய்ய வேண்டும் என்று சிந்தித்ததால் விளைந்த பலன்தான் ஷபொற்கலசம்| என்ற ஊர் பற்றிய வரலாற்ற நூல். இதிலே ஊரின் தோற்றமும், வளர்ச்சியும், கல்வி கலாச்சார பொருளாதார முன்னெடுப்புக்கள் பற்றிய தரவுகள், ஊரில் சேவையாற்றிய அரச ஊழியர்கள் பற்றிய குறிப்புகள் என இன்னோரன்ன விடயதானங்களை உள்ளடக்கியதாக புகைப்படங்களுடன் மிகவும் அழகான முறையிலே எவரும் வைத்துப் பாதுகாக்க வேண்டிய ஆவணப் பொக்கிஷமாக பொற்கலசத்தைத் தந்திருக்கின்றார்.
இலக்கிய அனுபவங்ளை அலசி வரும் கவிஞர் ஏ. இக்பால் இவ்விதழிலும் பழைய படைப்புகளைப் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கின்றார். 1967 ஆம் ஆண்டு அ.ந. கந்தசாமி மனக்கண் என்ற நாவலை எழுதியதால் அதிலே ஆங்கில, தமிழ், சிங்கள, முஸ்லிம் வரலாற்றுக் கதைகளில் காணப்படும் கதாபாத்திரங்ககளின் சிறப்புகளைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார். அதேபோன்று மணிக்கொடிகால எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்பில் அவர்களது ஆகர்ஷிப்பால் இலங்கையிலும் எழுத்தாளர்கள் சி. வைத்தியலிங்கம், சோ. சிவபாத சுந்தரம், சம்பந்தன், இலங்கையர்கோன், நா. சிவஞான சுந்தரம் போன்றோர் சிறந்த படைப்புகளாகத் திகழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றார்.
வாராந்தம் பத்து இலட்சம் இதழ்கள் விற்ற லண்டனில் இருந்து வெளிவந்த ஷடிட்பிட்ஸ்| என்ற பத்திரிகை 103 வருடங்களின் பின் 1984 ஆம் ஆண்டு நின்றுபோன தகவலையும், அதனைப் பின்பற்றி தினகரனில் உதவி ஆசிரியராகவிருந்த ஸெயினுல் ஹூசைன் துணுக்குகளைத் தந்த சுவாசியமான செய்தியையும் தந்திருக்கின்றார். அத்தோடு ஆர்.எம். நௌசாத்தின் தூது, தமிழ் நாட்டின் நடை ஏடு பற்றிய தகவல்கள், கர்நாடக தேசிய விருதுப் படமான ஷதபரானா கதா| மகாகவி மில்டன் பற்றிய தகவல்கள் யாவும் மிக மிக அரிதானவை.
திருமணம் முடித்தும் பிள்ளைச் செல்வம் இல்லாத வீடு பாழ் வீட்டை ஒத்தது. அந்த வீட்டுக்கு ஒளி பரவச் செய்ய வேண்டுமெனில் வேறு திருமணம் முடித்து பிள்ளைச் செல்வத்தைப் பெற முயற்சிக்க வேண்டும் அல்லது அநாதை இல்லத்திலிருந்து ஒரு ஒரு பிள்ளையை எடுத்து வளரக்க வேண்டும். அத்தகைய ஒரு சம்பவத்தை பின்னணியாகக்கொண்டே ஹட்டன் தே. நிரோஷனியின் உறவுகள் என்ற சிறுகதை விளக்குகின்றது.
நிலாக்குயில் தந்திருக்கும் பிஞ்சு மனம் என்ற சிறுகதை குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை ஒன்றுபோல் கவனிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பிள்ளைகளின் மனதில் விரோதமும் குரோதமும் ஏற்படுகின்றது. இதனால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்பட அது காரணமாகிறது. ஏனெனில் ஒரு பிள்ளைக்கு ஒரு பொருளை வாங்கும்போது மற்றவர்களுக்கும் அதை வாங்க வேண்டும். அதேபோன்று பிள்ளைகளின் முன்னிலையில் ஒப்புவமை கூறக்கூடாது. தவறினால் நிம்மதியற்ற குடும்பமாக அது மாறிவிடும் என்பதை விளக்குகின்றது.
அதே போன்று என்னதான் பெரிய அதிகாரியாக இருந்தாலும் தவறுசெய்து மாட்டிக்கொண்டால் அத்தவறுக்கான தண்டனை பெற வேண்டும் என்பது நியதி. தனது பலத்தைக் காட்ட முயன்ற ராமநாதன் தனது தவறை மறைக்க சந்திரனைப் பயன்படுத்தி செய்த முயற்சி தோல்விலேயே முடிந்தது. முடிவில் தன் தவறை உணர்ந்த ராமநாதன், சந்திரன் செய்ததாகக் கருதப்படும் குற்றத்தை மன்னித்துவிடுகின்றார். சிங்கம் முயலாகின்றது என்பதற்கு எஸ்.ஆர். பாலசந்திரனின் சிறுகதை நல்லதொரு உதாரணமாகும்.
நூல் மதிப்பீடுகளை காவியனும், பீ. ஷைலஜாவும் தந்திருக்கின்றார்கள். நுணாவிலூர் கா. விசயரத்தினம் பல்வேறு பயன்களைத் தரும் பனைமரம் என்ற நூல் பற்றிய கருத்துக்களைத் தொகுத்து காவியன் தந்திருக்கின்றார். இது தவிர தடம் தொலைத்த தடயங்கள் கவிதைத் தொகுதிக்கான மதிப்பீட்டைத் தந்திருக்கும் ஷைலஜா தற்காலத்தில் இளம் கவிஞர்கள் காதலைச் சொல்லிச் சொல்லியே கனவு கண்டுகொண்டிருக்கும் காதல் பாடல்களைப் படைக்கின்றனர். அதைவிட கவிஞர் பிரகாசக்கவி இந்நூலில் சமுதாய நோக்குடைய கவிதைகளை எழுதியிருப்பது பாராட்டத்தக்கது என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
கீதை கணேஷ் தந்துள்ள சிறுவர்களும் சிறுவர் இலக்கியமும் என்ற கட்டுரை சிறுவர்களின் மனிதப் பண்புகள் வளர்வதற்கான பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது. வாழும் சூழல், வளர்க்கும் பெற்றோர், கல்வி போதிக்கும் ஆசிரியர்கள், கற்கும் நூல்கள் என பலதரப்பட்ட கூறுகளுடன் சிறுவர்களுக்கான இலக்கியங்கள் உதவுகின்றது. அவை சிறுவர்களுக்கு விளங்கும் வகையில் இலகு மொழியில் படைக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் முன்வைத்திருக்கின்றார்.
உணர்வூட்டும் கிராமியச் சுவைகள் என்ற தலைப்பில் கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் சிறந்ததொரு கட்டுரையைத் தந்திருக்கின்றார். அத்தோடு வாசகர் கடிதங்களும், நூலகப் பூங்காவில் 18 நூல்கள் பற்றிய விபரங்களும் இடம்பெற்றிருக்கின்றமை சிறப்புக்குரியது.
சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
மின்னஞ்சல் -
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems