ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மலையக இலக்கியம் புது இரத்தம் பாய்ச்சியது என்ற பேராசிரியர் கைலாசபதியின் கூற்றிற்கிணங்க, மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உந்துசக்தியான வகிபாகத்தை வகித்த, மலையகப் பெண் படைப்பிலக்கியவாதிகளை நாம் கவனத்தில் கொள்வது புறந்தள்ள முடியாத அதிமுக்கிய விடயமாகும். அந்த வகையில் மலையக மூத்த பெண் படைப்பாளிகளான திருமதி. மீனாட்சியம்மாள் நடேசய்யர், 'தூரத்துப் பச்சை' என்ற படைப்பைத் தந்த திருமதி. கோகிலம் சுப்பையா, திருமதி. சிவபாக்கியம் குமாரவேல் போன்ற தமிழ் பிரம்மாக்களின் வரிசையில் மலையக முஸ்லிம் பெண் படைப்பிலக்கியவாதிகளில் பல தளங்களில் தனது பங்களிப்பினைப் பதிவுசெய்து இன்று அயராமல் எழுதிக்கொண்டிருக்கும் 'இலக்கியத் தாரகை' கலாபூஷணம் நயீமா சித்தீக் முக்கியமானவராவார். மலையக இலக்கியத்தை நோக்கும்போது 60களின் பின் 'மறுமலர்ச்சிக் காலம்' என்றே குறிப்பிடலாம். அதற்கு அடித்தளமாக விளங்கியது 'கலாபூஷணம்' க.ப.சிவம் இணையாசிரியராக இருந்து வெளியிட்ட 'மலைமுரசு' என்பதே ஆய்வாளர்களின் கூற்று. மலைமுரசில் தனது ஆரம்ப எழுத்துருவை வெளிக்கொணர்ந்த பலர் இன்று மலையக மாணிக்கங்களாக மிளிர்வது கவனிக்கத்தக்க விடயமாகும். குறிப்பாகக் கூறுவதானால் பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை மேற்கொள்ளாத தேசபக்தன் கோ. நடேசய்யர், 'மலையகத் தமிழர் வரலாறு' போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை மலையக இலக்கிய உலகிற்குக் கொண்டுவந்த சாதனையாளர் சாரல்நாடன், அமைதியே உருவான ஆசிரியை திருமதி. லலிதா நடராஜா ஆகியோரின் வரிசையில் மலைமுரசில் முகிழ்த்தவர்களில் ஒருவரே இன்றைய (மல்லிகை) அட்டைப்படத்தை அலங்கரிக்கும் 'இலக்கியத் தாரகை' 'கலாபூஷணம்' திருமதி. நயீமா சித்தீக் அவர்கள்.
பதுளை மாவட்ட அப்புத்தளையைப் பிறப்பிடமாகவும், தற்போது கம்பளையை வதிவிடமாகவும் கொண்ட இவர், பசறை மத்திய கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைத் தொடர்ந்து, கலைமாணி(பி.ஏ.) பட்டத்தையும், கல்வி டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டவர்.
சிறுகதைப் படைப்பாளியாக இலக்கிய உலகில் முதன்முதலாகத் தடம் பதித்த நயீமா சிறந்த சிறுகதைகள் பலவற்றை வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, தினபதி, பிந்திய 90களில் தோன்றிய தினக்குரல், நவமணி மற்றும் தமிழக தீபம் இதழ்களில் எழுதியுள்ளார். தனது எழுத்துலகப் பணியோடு வானொலி ஆக்கப் பிரதிகள், வானொலி நாடகம், உரைச்சித்திரம் என்பவற்றையும் படைத்துக் காற்றில் கலக்கச் செய்த பெருமைக்குரியவர்.
தனது இளமைக் காலத்தில் சிறுகதை, வானொலிப் பணிகளோடு நயீமா சித்தீக் சமூகப் பணிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு மலையக சமூக மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துள்ளார். இவரது எழுத்துக்களில் காணப்பட்ட வேகம், சமூக மாற்றத்திற்கான எண்ணக்கரு, மலையகப் பெண்களின் வாழ்க்கை அவலங்களைத் தனது மேடைப் பேச்சுக்களிலும் படைப்புகளிலும் மிக வீறாப்புடன் வெளிக்கொணர்ந்ததைக் காணமுடியும்.
இவரின் அருமை, பெருமை, ஆற்றல்களை அறிந்து இவரை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மாதர் பிரிவுத் தலைவியாக, மறைந்த தோழர் ஏ. அஸீஸ் நியமித்தார். இப்பணியின் மூலம் நயீமா மலையகத் தோட்டப் பெண்களின் சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு செயற்திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயற்படுத்தினார்.
மலையகச் சிறார்களின் கல்வி மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு அப்புத்தளையில் 'அசோக வித்தியாலயம்' எனும் பெயரில் கல்விக்கூடம் ஒன்றினை ஆரம்பித்து மலையகக் கல்வி அபிவிருத்திக்குப் பங்காற்றியுள்ளார்.
படைப்பிலக்கியத் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட நயீமா சித்தீக் பத்திரிகைத் துறையையும் விட்டுவைக்கவில்லை என்றே கூறவேண்டும். இவர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் அப்புத்தளைச் செய்தியாளராகவும் பணிபுரிந்து அந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற சமூக அவலங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து மலையகத்தில் பெண் பத்திரிகை நிருபராக முதன்முதலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதோடு, அக்காலத்தில் வெளிவந்த 'தீப்பொறி' இதழின் பெண்கள் பகுதியைப் பொறுப்பேற்று அதனூடாகப் பெண்களின் விடிவிற்காகப் பல கேள்விகளைப் படைத்து அவற்றிற்கான தீர்வுகளை முன்வைத்தவருமாவார்.
மேலும் அவர், கண்டி திருமதி. சிவபாக்கியம் குமாரவேலு அவர்களோடு இணைந்து 'மங்கை' என்ற பெண்களுக்கான இதழையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
படைப்பிலக்கியம், தொழிற்சங்கம், கல்வி என்று பல தளங்களில் தனது உழைப்பை வெளிக்கொணர்ந்த இவரின் பத்திரிகைத் துறை சார்ந்த பங்களிப்பு தனியாக நாம் கவனிக்கத்தக்க விடயமாகும்.
'நாம் இவ்வாறு தமிழில் பாண்டித்தியம் பெற வழிசமைத்த பசறை மத்திய கல்லூரியில் எமக்குத் தமிழைப் போதித்த நல்லாசான் அமரர் ஐ. சாரங்கபாணி ஐயாவையே சாரும். எனது ஆற்றல்களை இனங்கண்டு அதற்கேற்ற வகையில் நெறிப்படுத்தி மலையகப் பெண் படைப்பிலக்கியவாதியாக மிளிரச்செய்த பெருமையும் அவரையே சாரும்' என மனந்திறந்து கூறுகிறார் திருமதி. நயீமா சித்தீக்.
'எனது அறிவு வியாபிக்கும்போது, 'நான் வாழ்ந்த பெருந்தோட்ட மக்களின் அவலங்கள் பலவற்றைப் போக்க நாம் என்ன செய்ய முடியும்?' என்று என்னுள் எழுந்த வினாவிற்கு விடையாகவே படைப்பிலக்கியங்களைப் பதிவு செய்யத் தொடங்கினேன்' என்று கூறிப் பெருமைப்படும் இவர், அந்த மக்களின் ஏக்கங்கள், ஏளனப்பட்ட விடயங்கள், சிறிய எட்டடி அறையில் வாழும் வாழ்க்கை, கூட்டுக்குடும்ப பாரம்பரியம், மிக வறுமையான சூழலிலும் நெறி பிறழாத வாழ்க்கை முறை, 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மலையில் பாடுபட்டு வீடு திரும்பியபின் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்கும் திறன், அவர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளி வர்க்கம், தொழிற்சங்கவாதிகளின் கபட நாடகம் என்பவற்றைக் கண்டதாலும் கேட்டதாலும் இவற்றுக்கெதிராக மேடைகளில் பேசவும் எழுதவும் முடிந்தது என்கிறார்.
இவரின் படைப்பிலக்கியப் பணியினைப் பாராட்டிப் பல்வேறு சமூக, பொது நிறுவனங்கள் விருது வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை பின்வருமாறு:
1986 ஆம் ஆண்டு மலையக கலை இலக்கியப் பேரவை இவரது இலக்கியப் பணிகளுக்காக விருது வழங்கிக் கௌரவித்தது.
1989 ஆம் ஆண்டு மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழாவில் விருதுடன் சான்றிதழும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
1991 ஆம் ஆண்டு மத்திய மாகாண முஸ்லிம் தமிழ் சாகித்திய விழாவில் 'இலக்கியத் தாரகை' எனும் பட்டமும் விருதுடனான சான்றிதழும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
1994 ஆம் ஆண்டு அவர் பிறந்த மாவட்டமான ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவில் விருதுடனான சான்றிதழும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
2002 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகா நாட்டில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
2002 ஆம் ஆண்டு கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும் ஞானம் இலக்கியப் பண்ணையும் இணைந்து நடாத்திய 'சுதந்திரன் சிறுகதைகள்' நூல் அறிமுக விழாவின்போது யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
2002 ஆம் ஆண்டு இலங்கை அரசால் கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுகதைத் துறையில் இவரின் பங்களிப்பு விசாலமானதாகக் காணப்படுகின்றது. சமூகத்தின் அவலங்களையும் மூட நம்பிக்கைகளையும் தத்ரூபமாகச் சித்திரிப்பதில் இவரின் பாங்கு தனித்துவமானது.
தனது படைப்புகளில் வாழ்க்கையின் உணர்வுகளை மிக அவதானமாகப் பல்வேறு கோணங்களில் நோக்கியுள்ளார். அத்தளத்திலேயே அவர் படைத்த படைப்புக்களான 'வாழ்க்கைப் படகு' (நாவல்) வீரகேசரி வெளியீடு, 'வாழ்க்கைச் சுவடுகள்' சிறுகதைத் தொகுதி கல்ஹின்ன தமிழ்மன்ற வெளியீடு (1987), 'வாழ்க்கை வண்ணங்கள்' (கண்டி சிந்தனை வட்ட வெளியீடு 2004), 'வாழ்க்கை வளைவுகள்' (சிறுகதைத் தொகுதி) மணிமேகலைப் பிரசுர வெளியீடு 2005, அந்தனி ஜீவா தொகுத்த 25 பெண் பிரம்மாக்களின் 'அம்மா' என்ற சிறுகதைத் தொகுப்பு 2005(தமிழக கலைஞன் பதிப்பகம்) என்பன படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மற்றும் மலையகப் படைப்பாளிகளின் தொகுப்புகளிலும் இவரின் சிறுகதைகள் பல வெளிவந்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
- நாவலப்பிட்டி கே.பொன்னுத்துரை
(நன்றி: மல்லிகை, ஜூலை 2006-அட்டைப்படக் கட்டுரை)
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems