••Monday•, 28 •December• 2020 23:46•
??- முனைவர் செ சு நா சந்திரசேகரன் (பாரதிசந்திரன்) -??
கணித்தமிழ்
- இனிது இணைய இதழில் (https://www.inidhu.com) வெளியான 'பதிவுகள்' இணைய இதழ் பற்றிய குறிப்பு. -
உலகத்தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியம் பேசும், நவீன முன்னெடுப்புகளான தமிழின் பல்வேறு வடிவங்களைப் பதிவு செய்யும் இணைய இதழ் தான், பதிவுகள் – பன்னாட்டு இணைய இதழ்! இத்தளத்தின் ஆசிரியர் வ.ந.கிரிதரன் ஆவார். இவர் சிறந்த இலக்கியவாதி, திறனாய்வாளர், வரலாற்றாலாளர், இதழாளர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். இவரின் சீரிய முயற்சியில் 2000 லிருந்து தொடர்ந்து இவ்விதழை நடத்தி வருகிறார்.
“அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” எனும் மந்திரச் சொல்லுடன் அறிவை உலகமயமாக்கும் பெரும் தமிழ் உழைப்பே இத்தளம். இத்தளத்திலுள்ள தலைப்புகளுக்குள்ளே ஆயிரம் ஆயிரம் படைப்புகள். அவை கீழ்கண்டவாறு உள்ளன.
•Last Updated on ••Tuesday•, 29 •December• 2020 00:33••
•Read more...•
••Monday•, 12 •June• 2017 00:25•
??- டி.எம்.க -??
கணித்தமிழ்
இந்தியா பல்வேறு மொழியினைப் பேசுபவர்களைக் கொண்ட நாடாக இருப்பதால், அனைத்து மொழி பேசுபவர்களும் அறிந்து கொள்வதற்கேற்றதாக ஆங்கில மொழியைத் தொடர்பு மொழியாகக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு நிர்வாகம், துறைகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் என அனைத்திற்கும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களும் தங்களுடைய வணிகப் பயன்பாட்டுக்கு ஆங்கில மொழியையே அதிகளவில் பயன்படுத்தி வருகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆங்கில மொழியே முதன்மைத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல், உலகின் பல்வேறு செயல்பாடுகள் ஆங்கில மொழியையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இன்றைய உலகில் அனைவரும் பயன்படுத்தி வரும் புதிய ஊடகமான இணையத்திலும் ஆங்கில மொழியே முதலிடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் தங்கள் தாய்மொழி மேல் பற்று கொண்டவர்கள் கணினி மற்றும் இணையப் பயன்பாட்டில் ஆங்கில மொழியைத் தவிர்த்துத் தங்கள் தாய்மொழியைப் பயன்படுத்தத் தேவையானவைகளை உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இப்படித் தமிழ் மொழியும் இணையப் பயன்பாட்டில் மிகக் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும், தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இணையத்தில் தமிழ் மொழியினைக் கொண்டு வருவதற்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர்.
கணினி மற்றும் இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகள் எப்போது தொடங்கியது? அதில் யாரெல்லாம் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பது போன்ற பல்வேறு செய்திகளையும், இணையத்தில் தமிழ் மொழியில் எப்படி பங்களிப்பு செய்யலாம் என்பது போன்ற தகவல்களையும் உள்ளடக்கி ஏதாவது நூல் ஒன்று வெளியாகாதா? என்று புதிய தமிழ் இணையப் பயன்பாட்டாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டுவில் அமைந்திருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து வரும் முனைவர் துரை. மணிகண்டன் மற்றும் கரூர் மாவட்டம், மாயனூர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புவியியல்துறை விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் த. வானதி ஆகியோர் இணைந்து “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்” எனும் நூல் ஒன்றினை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.
•Last Updated on ••Monday•, 12 •June• 2017 21:56••
•Read more...•
••Sunday•, 15 •January• 2017 20:58•
•administrator•
கணித்தமிழ்
எண்ணிம நூலகச் (Noolaham Digital Library)செயற்பாடுகளில் ஆரம்பத்தில் செயற்பட்டுவந்த நூலக நிறுவனமானது இன்று மேலும் பல துறைகளில் குறிப்பாக ஆவணப்படுத்தல் , ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணப்படுத்தல் துறைகளில் தன் சேவைகளை விரிவு படுத்தி ஆற்றி வருகின்றது. உலகத்தமிழர்கள் அனைவரும் பெருமைப்படத்தக்கதொரு கலைக்களஞ்சியமாக, தகவற் சுரங்கமாக, ஆய்வாளர்களுக்கு உசாத்துணை வளமாக விளங்கி வருகின்றது. நூலகம் பற்றிய விரிவான தகவல்களை http://noolahamfoundation.org/web/ta என்னும் இணையத்தள முகவரியில் காணலாம். நூலகம் தளத்துக்கு நீங்கள் பல்வேறு வழிகளில் பங்களிப்பு செய்யலாம். தன்னார்வத்தொண்டர்களாக, நிதிப்பங்காளர்களாக இன்னும் பல்வேறு வழிகளில் உங்கள் பங்களிப்பினை நீங்கள் வழங்கலாம். இவை பற்றிய விரிவான தகவல்களை இத்தளத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
•Last Updated on ••Monday•, 16 •January• 2017 18:39••
••Sunday•, 01 •January• 2017 07:29•
•administrator•
கணித்தமிழ்
ஆனந்த விகடன் சஞ்சிகையின் 2016 டாப் நபர்கள்; பட்டியலில் இலங்கையைச்சேர்ந்த கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனும் இடம் பெற்றிருக்கின்றார். வாழ்த்துகள். நண்பர் மயூரநாதன் விக்கியபீடியா (தமிழ்) பிரிவுக்கு கடந்த பல வருடங்களாக ஆற்றிவரும் பங்களிப்பு பலரும் அறிந்ததொன்றே. விகடன்.கா. இணையத்தளத்தில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வறிவிப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்2றோம்.
"இன்று விக்கிபீடியாவில் 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் குவிந்துகிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இ.மயூரநாதனின் பெரும் உழைப்பு. 2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது. அதன் எதிர்கால வீச்சை உணர்ந்து, விக்கிப்பீடியாவோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார். அதன் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு வருடம் தனியாளாக உழைத்தார். ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆன்லைன் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று 88,000 தமிழர்கள் விக்கிப்பீடியாவில் பதிவுசெய்துள்ளனர். இலங்கைத் தமிழரான இவர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறார். உலகளாவிய பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை, ஆற்றல் வாய்ந்த குழுமமாக உருவாக்கியது இவரது அரிய சாதனை. இவரே தன்னுடைய முனைப்பால் 4,458 கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். உலகப் பன்மொழித் திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ்மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசினால், தமிழ் மொழிக்கான ரேங்க் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும். இதற்கு ஒரே காரணம் மயூரநாதன்"
நன்றி:: http://www.vikatan.com/anandavikatan/2017-jan-04/2016-special/127082-2016-top-10-humans-india.art
•Last Updated on ••Sunday•, 01 •January• 2017 07:33••
••Saturday•, 03 •December• 2016 20:38•
?? - முனைவர் துரை மணிகண்டன் -??
கணித்தமிழ்
[அண்மையில் இலங்கையில் உத்தமம் அமைப்பு சார்பாக இலங்கையில் அதன் செயற்குழு உறுப்பினர் திரு.சரவணபவானந்தன் அவர்களின் முன்னெடுப்புகளால் இரண்டுநாள் பயிலரங்கம் 8,9-நவம்பர் 2016 நடைபெற்றது. அதன் நிகழ்வுகளைப் பற்றிய விபரங்களை முனைவர் துரை மணிகண்டன் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியிருந்தார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம். - பதிவுகள் -]
8,9-நவம்பர் 2016 இரண்டுநாட்கள் திருக்கோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கவிழா 8-11-2016 காலை 9 மணிக்கு இனிதே தொடங்கியது. நிகழ்வில் உத்தமம் உறுப்பினரும், கிழக்குக் கல்வி அமைச்சரின் இணைப்பாலருமான வ. கலைச்செல்வன் வரவேற்புரை வழங்கினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஆசிரியர்கள் கணினியில் தமிழ்மொழியினை அதிகமாகப் பயன்படுத்துவதோடு அதேசமயம் அந்த விடயத்தை மாணவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். மேலும் கணினியில் தமிழின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று, தாய்மொழியின் ஊடாக இணையத்தில் அதிகமான தொழில்நுட்ப அறிவையும், தமிழில் இருக்கின்ற இலக்கிய ஆக்கங்களையும் பெற்று புதிய நோக்கில் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள இது பேருதவி புரியும் என்றார். இணையத்தில் தமிழ்மொழியை வளர்ப்பதன் மூலம் உலக மொழிகளில் தமிழையும் ஒரு சிறந்த இட்த்திற்குக் கொண்டுசெல்ல முடியும் என கருத்துரைத்தார்.
•Last Updated on ••Saturday•, 03 •December• 2016 21:21••
•Read more...•
••Monday•, 22 •August• 2016 20:16•
??- குரு அரவிந்தன் -??
கணித்தமிழ்
- 'பதிவுகள்' இணைய இதழ் பற்றிய படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்ஏறோம். உங்கள் கருத்துகளை
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். - பதிவுகள் -
பதிவுகள் என்ற இணையப் பத்திரிகையுடனான எனது தொடர்பு நீண்ட காலத்திற்கு முன்பே ஆரம்பமானது. இலக்கியக் கூட்டங்களில் பதிவுகளின் ஆசிரியரை அடிக்கடி சந்தித்திருக்கின்றேன் ஆனால் இவர்தான் அதன் ஆசிரியர் என்பதைத் தொடர்பு படுத்திப் பார்க்கவில்லை. ஆனந்தவிகடன் பவளவிழா ஆண்டில் வெளிவந்த ஒரு இதழில் ‘பல்லிக்கூடம்’ என்ற சிறந்ததொரு கதையை வ.ந. கிரிதரன் என்பவர் எழுதிப் பணப்பரிசு பெற்றிருந்தார். அதிபர் பொ.கனகசபாபதி அவர்களுடன் உரையாடும் போது பதிவுகள் ஆசிரியர் தான் இவர் என்பதை அறிந்து கொண்டேன். எனவே அவருடன் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டினேன். அவருடன் தொலைபேசி மூலம் உரையாடும் போது அவர் ஆனந்தவிகடனில் வெளிவந்த எனது கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார். அவரிடம் பாரபட்சமற்ற நிறையவே தேடல் இருப்பதை அப்போது புரிந்து கொண்டேன்.
ஒரு முறை அவருடன் தொலைபேசியில் உரையாடும்போது, அவர் என்னிடம் ‘விகடனுக்கான ஆக்கங்களைத் தபால் மூலமா அனுப்புகின்றீர்கள்’ என்று வினாவினார். நான் அதற்கு ஆம் என்று பதில் அளித்தேன். அந்தக் காலகட்டத்தில் நண்பர் சசிதரனின் பாமினி எழுத்துருதான் என்னிடம் இருந்தது. தமிழ் ஆரம் ஒளிநாடாவையும் பயிற்சி நூலையும் நான் முதலில் வெளியிட்ட போது எனக்கு ஒரு தமிழ் எழுத்துரு தேவைப்பட்டதால், பாமினி எழுத்துருவையே சசியிடம் இருந்து வாங்கியிருந்தேன். அப்பொழுது எழுத்துரு மாற்றிகள் பாவனையில் இல்லாத படியால் பாமினி எழுத்துருவில் மின்னஞ்சல் மூலம் விகடனுக்கு என்னால் அனுப்ப முடியாமல் இருந்தது. அப்பொழுது ‘அஞ்சலி’ என்ற எழுத்துருவில் ஆக்கங்களை அனுப்ப முடியுமா என்று ஆசிரியர வீயெஸ்வி அவர்கள் என்னிடம் கேட்டிருந்தார். அதன் பாவனை எனக்குத் தெரியாததால் நான் தொடர்ந்தும் தபால் மூலமே விகடனுக்கு ஆக்கங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். காலதாமதத்தை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று நினைத்த போது நண்பர் கிரிதரன் எனக்கொரு ஆலோசனை தந்தார். எழுத்துருவை யூனிக்கோட்டாக மற்றி அனுப்பலாம் என்ற ஆலோசனையை முதலில் தந்தது அவர்தான்.
•Last Updated on ••Monday•, 22 •August• 2016 20:18••
•Read more...•
••Sunday•, 14 •August• 2016 18:12•
??- நுணாவிலூர் கா. விசயரத்தினம் / சத்யானந்தன் -??
கணித்தமிழ்
'பதிவுகள்' இணைய இதழ் பற்றிய படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்ஏறோம். உங்கள் கருத்துகளை
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். - பதிவுகள் -
பார் போற்றும் 'பதிவுகள்' -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-
கனடாவிலிருந்து வெளிவரும் நாள் இதழான 'பதிவுகள்' ஓர் இணையத் தளமாகும். இதன் ஆசிரியர் புகழ் வாய்ந்த திரு. வ. ந. கிரிதரன் ஆவார். அதில், உலக இலக்கியம், அரசியல், கவிதை, சிறுகதை, அறிவியல், சுற்றுச் சூழல் நிகழ்வுகள், கலை, நேர் காணல், அறிவித்தல்கள், இணையத்தள அறிமுகம், வரலாறு, அகழாய்வு, கட்டடக்கலை, நகர அமைப்பு, வாசகர் கடிதம், பதிவுகளின் நோக்கம், தோற்றம், கணித் தமிழ், நூல் அறிமுகம், பரத நாட்டிய நிகழ்வுகள் ஆகியன நாள் தோறும் பவனி வருகின்றன. இவ்வாறான பல அரிய துறைகளைத் தொட்டுச் செல்லும் பதிவுகள் வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதென்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. பதிவுகளில் வரும் ஆக்கங்கள் அனைத்தும் மிக்க தரம் வாய்ந்தவை. அதில் வரும் பல ஆய்வுக் கட்டுரைகள் பட்டப்படிப்பு மாணவர்களாலும், பட்டதாரிகளினாலும் எழுதப்படுபவை. எல்லா ஆய்வுக் கட்டுரைகளையும் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிப்பது ஒரு சிறந்த நோக்காகும். இவை என்றும் என் மனதைக் கவர்ந்தவையாகும். தலையங்கம் யாவும் அறிவார்ந்தவை. செய்திகள் செறிவார்ந்தன. இலக்கியக் கட்டுரைகள் யாவும் சிந்தையைத் தொடுவன. மற்றவை மனதில் உறைவன. இவ்வாறானவற்றை மேலோட்டமாகப் படிக்க முடியாது. பதிவுகளுக்கு நாம் மணித்தியாலக் கணக்கில் நேரத்தை ஒதுக்க வேண்டும்.
பதிவுகளுக்குத் தொடர்ந்து ஆக்கங்களை அனுப்பி வருவோரில் 15 பேருக்குமேல் தெரிவு செய்து அவர்களுக்கான பக்கங்களை ஒதுக்கி, அதில் அவர்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிவாக்கம் செய்து வரும் முறை பாராட்டுக்குரியதாகும். இப் பக்கங்களைத் திறந்தால் அவர்களின் எல்லா ஆக்கங்களையும் பார்த்து மகிழலாம்.
•Last Updated on ••Sunday•, 14 •August• 2016 18:24••
•Read more...•
••Tuesday•, 28 •July• 2015 19:02•
?? - வ.ந.கிரிதரன் -??
கணித்தமிழ்
- 25.07.2015 அன்று 'டொராண்டோ' தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற 'கணினித்தமிழ் வரலாறும், வளர்ச்சியும்' என்ற நிகழ்வில் 'இணையத்தமிழ் : இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை' என்னும் தலைப்பில் ஆற்றிய உரையிது. சுருக்கமாக மேற்கூறிய விடயங்களை ஆராய்கிறது. நிகழ்வில் நேரம் காரணமாகச்சில விடயங்களை முழுமையாக வாசிக்க முடியவில்லை. வாசித்த கட்டுரையின் முழு வடிவம் இங்கு ஒரு பதிவுக்காக பிரசுரமாகின்றது. - வ.ந.கி -
கணித்தமிழ், கணினித்தமிழ், இணையத்தமிழ் என்று பல்வேறு சொற்தொடர்களால அழைக்கப்பட்டாலும் இச்சொற்தொடர்களெல்லாம் ஒரு பொருளையே சுட்டுகின்றன. கடந்த இருபது வருடங்களில் இணையத்தமிழ் பல்வேறு துறைகளிலும் காத்திரமாகக்கால்பதித்து ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது. இணையத்தமிழின் வளர்ச்சி நம்பிக்கையூட்டுவது. மகிழ்ச்சியினைத்தருவது. ஆனால் , இணையத்தின் சகல ஆரோக்கியமான அம்சங்கள் பலவற்றை கலை, இலக்கியத்துறையிலுள்ளவர்கள் அனைவரும் முறையாகப் பாவிக்கின்றார்களா? பாவித்துப் பயனடைகின்றார்களா? என்று பார்த்தால் கிடைக்கின்ற பதில் ஏமாற்றமே. இங்குள்ள எத்தனை பேர் வலைப்பூக்களை வைத்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் மின்னூல்களைப் பதிப்பித்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களில் எழுதுகின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களை நடாத்துகின்றீர்கள்? இன்று கூட இணையத்தில் தமிழில் எழுதத்தெரியாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். பாமினி எழுத்துருவில் எழுதியதை ஒருங்குகுறி எழுத்துக்கு மாற்றத்தெரியாதவர்கள் இருக்கின்றார்கள்? இன்று விண்டோஸ் போன்ற 'ஒபரேட்டிங் சிஸ்டம்' எல்லாம் ஒருங்குறியை மையமாகக்கொண்டே இயங்குகின்றன. இருந்தும் MSWord போன்ற விண்டோஸ் அப்ளிகேசன்களில் தமிழில் எழுத எத்தனை பேருக்குத்தெரியும்? இணையத்தில் பலருக்குத் தமிழ்ப்பாட்டுகளைக் கேட்பதும், முகநூலில் புகைப்படங்களை இடுவதும் போன்ற செயற்பாடுகளுடன் பொழுது முடிந்துவிடுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இணையத்தொழில்நுட்பம் வழங்கும் பயன்கள் பற்றிய பூரண அறிவில்லாமலிருப்பதும், அவற்றை எவ்விதம் பாவிப்பது என்பதுபற்றிய தெளிவில்லாமலிருப்பதும்தான் என்று கருதுகின்றேன்.
•Last Updated on ••Tuesday•, 28 •July• 2015 19:54••
•Read more...•
••Tuesday•, 16 •June• 2015 21:27•
??- குமரிநாடு.நெற் -??
கணித்தமிழ்
தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர். கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணலில் தமிழ் ஏடுகள் தற்போது இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன.
மதுரைத்திட்டம் என்ற இணைய தளம் ஏறக்குறைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தன்னுள் மின்பதிப்பாகக் கொண்டுள்ளது. http://www.project madurai.org” இணையதள முகவரிக்குச் சென்றால் இத்தளத்தைப் பார்வையிடலாம். இத்தளத்தின் சிறப்பு என்னவென்றால் பல தமிழ் அன்பர்கள் ஒன்றுகூடி, அவர்கள் அவர்களாகவே சிலச்சில நூல்களை மின்வடிவமாக மாற்றி ஒட்டுமொத்தமாகத் தந்திருப்பதுதான். இது ஒரு கூட்டு முயற்சியாகும்.
•Last Updated on ••Tuesday•, 16 •June• 2015 21:46••
•Read more...•
••Monday•, 22 •September• 2014 23:46•
??- குமரிநாடு.நெற் -??
கணித்தமிழ்
பாரத அரசாங்கம் சென்னைக் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தை நிறுவி, அணுவியல் ஆய்வுகளை நடத்தியும், அணுமின் சக்தியைப் பரிமாறியும் வருகிறது. தென்கோடியில் ரஷ்ய உதவியால் இரட்டை அணுமின் நிலையம் கூடங்குளத்தில் உருவாகி வருகிறது. ஆனால் விஞ்ஞானத் துறைகளை வளர்த்து, இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கத் தனியாகச் சென்னை மாநில அரசு என்ன முயற்சிகளைக் கையாள்கிறது என்பது தெரியவில்லை ?
கலைக்காட்சி மாளிகைகள் [Art Museums] சில சென்னையில் உள்ளன. ஆனால் எத்தனை விஞ்ஞானக் காட்சி மாளிகைகளை [Science Museums] மாநிலத்தில் நிறுவி, ஆர்வமுள்ள தமிழரின் விஞ்ஞானச் சிந்தனைகளைத் தூண்டி விடுகிறது, தமிழரசு ? சினிமா இதழ்கள் நிறைந்த சென்னை மாநிலத்தில் எத்தனை விஞ்ஞான இதழ்கள் வாரவாரம் வெளியாகின்றன ? எத்தனைத் தமிழ்வார இதழ்கள், மாத இதழ்கள் விஞ்ஞானத்திற்குச் சில பக்கங்களை ஒதுக்கி, விஞ்ஞானச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன ?
•Last Updated on ••Monday•, 22 •September• 2014 23:49••
•Read more...•
••Friday•, 04 •July• 2014 18:17•
??- ரெ. சாந்தா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, திருச்செந்தூர். -??
கணித்தமிழ்
முன்னுரை இன்றைய வாழ்வியல் கூறுகளில் கனிப்பொறி என்பது அத்தியாவசியமான ஊடகமாகிவிட்டது. ஒவ்வொரு அறிவியல் தொழில்நுட்பமும் மனிதனுக்கு ஆக்கம் விளைவிக்கவே தோற்றுவிக்கப்பட்டன என்றும், மொழி என்பது அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்த இன்றியமையாத ஒன்றாகிறது. கணிப்பொறி என்றவுடன் ஆங்கிலத்தாலே இயங்கக்கூடிய ஓர் ஊடகம் என்ற எண்ணம் நிலவி வருகிறது. இந்நிலையை மாற்றி கணிப்பொறியில் தமிழ்ப் பயன்பாடுகளை ஏற்படுத்த தமிழ் எழுத்துருக்கள் அவசியமாகின்றன. அத்தகைய தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தலும், வடிவமைத்தலில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விளக்க இக்கட்டுரை முனைகிறது.
குறியீட்டு முறையும் எழுத்துருவும் கணிப்பொறியானது நமக்குத் தேவையான கட்டளைகளைக் கணக்கிட்டு தரவேண்டுமெனில் நாம் சொல்வதைப் பொறியானது புரிதல் அவசியம். எந்தமொழியைப் பயன்படுத்திக் கட்டளைகளைப் பிறப்பித்தாலும் கணிப்பொறியானது. பொறி மொழியிலே செயல்படுகிறது. அதாவது 0,1 போன்ற பைனாp எண்களே கணிப்பொறியினை இயக்குகின்றது. ஆகவே கணிப்பொறி என்பது கணிப்பான மட்டுமே பயன்படும் போது எவ்விதச் சிக்கல்களும் தோன்றுவது இல்லை. மாறாக, அவற்றை எழுத்து வடிவங்களாகச் சேமிக்கும் பொழுது, ஒவ்வொரு எழுத்துக்கும் எண்களை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். இம்முறையே குறியீட்டு முறை (Coding) எனப்படும். மேலும் சேகரித்த தகவல்களைத் திரையில் பார்க்க எண்களை எழுத்துக்களாக மாற்ற வேண்டும். இதற்கு எழுத்துருக்கள் அவசியமாகின்றன. இத்தகைய எழுத்துருக்களே ஒவ்வொரு எண்ணிற்கும் என்ன வடிவம் என தீர்மானிக்கிறது. ஆனால் ஒரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி பெற்ற தகவல்களை மற்றொரு குறியீட்டு முறை கொண்டு அறிய முடியாது. எனவே ஆங்கிலம் போல தமிழிலும் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது.
•Last Updated on ••Friday•, 04 •July• 2014 18:26••
•Read more...•
••Tuesday•, 24 •June• 2014 05:03•
??- முனைவர் இராமர்திலகம்., Antony Women Arts and Science College, Thamaraipadi, Dindigul -??
கணித்தமிழ்
- அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். - ஆசிரியர், பதிவுகள் -
முன்னுரை : தற்போது கணினி அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கல்விச் செயல்முறையிலும் கணினி அதிகம் அளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ”கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு” என்பதற்கு ஏற்ப கணினியின் மூலம் இலக்கணம் எப்படி பயனுள்ள வகையில் கற்கமுடியும் என்பதையும் விபரங்களை பாதுகாக்கவும் பகுத்தாய்வு செய்யவும் பயன்படுத்தப்படுகின்றது என்பதை இக்கட்டுகரையில் காண்போம்.
•Last Updated on ••Tuesday•, 24 •June• 2014 05:10••
•Read more...•
••Monday•, 16 •June• 2014 05:28•
??- மா.பிரகாஷ், முனைவர்ப்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, தேசியக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி. -??
கணித்தமிழ்
- அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். - ஆசிரியர், பதிவுகள் -
ஆய்வுச்சுருக்கம் தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் இணைய ஏந்துகள் (வசதிகள்) தற்போது பல்கிப் பெருகி வருகின்றன. மழலையர்; கல்வி தொடங்கி முனைவர் படிப்பு வரையில் தமிழில் படிப்பதற்குரிய வாய்ப்புகளை இன்றைய இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து முதலான அடிப்படைப் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரையில் இணையத்தில் படிக்கக்கூடிய நிலைமை உருவாகிக்கொண்டு வருகின்றது. தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு இணையத்தை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும், இணையம் தொடா;பான ஏந்துகளைத் தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதையும், இலக்கணத்தையும் இலக்கியத்தையும் புதிய ஊடகத்தின் வழியாக புதிய அணுகுமுறைகளோடு தமிழ்மொழியைக கற்பது கற்பிப்பதுப் பற்றி இக்கட்டுரை எடுத்துக் கூறுகின்றது.
•Last Updated on ••Tuesday•, 24 •June• 2014 05:07••
•Read more...•
••Saturday•, 07 •June• 2014 19:49•
??- செ.ஜமுனா, முனைவர் பட்ட ஆய்வாளர். ந.ம.க.கல்லூரி, பொள்ளாச்சி. -??
கணித்தமிழ்
வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினிப் பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணையப்பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணையக் கலாச்சாரம் அதீத வளர்ச்சியடைந்து வருகிறது. இன்று இணையம் ஒரு ரூபாய் நாணயத்தைப்போல நன்மை, தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.
வலைதளங்கள் உலகளாவிய அளவில் பல்வேறு வலைதளங்கள் உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுதுபோக்கிறகாக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும்.
சமூக வலைதளங்கள் இணையம் வழியாக சமூக வலைதளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களின் பங்கு அமைகிறது. இத்தகைய சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தற்சமயம் பல குற்றங்களும் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது. பல்வேறு இணையங்களும், சமூக வலைதளங்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைப்பட்டவையாக அமைந்துள்ளன.
•Last Updated on ••Saturday•, 07 •June• 2014 19:53••
•Read more...•
••Saturday•, 17 •May• 2014 22:36•
??- Dr.P.Vijaya, CAS in Linguistics, Annamalai University. Chidambaram -??
கணித்தமிழ்
Introduction This paper is mainly concerned about developing electronic dictionary for Antonyms and Synonyms in Tamil. This e-dictionary makes learning simple and it covers the lexical items used in Tamil. This widespread introduction of new lexical items would be helpful to the students and research scholars who work in the Tamil Language and Linguistics. Lexicography means the collection of lexical items and descriptions of the way they are used. A dictionary is a simple tool that helps us to pronounce in the language. It gives meanings to words which cannot be understood or words that have more than one meaning. Besides meaning, it also provides information on the reader syllables, intonation and pronunciation of words. Dictionaries are considered practical sources of information on which learners and teachers can depend. Dictionaries could take different formats like traditional print dictionaries of varies types, handheld electronic dictionaries, concordance, indexes, terminologies, online dictionaries and CD ROM dictionaries depending on the purpose of their required usage. Handheld electronic dictionaries, also known as "pocket electronic dictionaries" or PEDs, resemble miniature clamshell laptop computers, complete with full keyboards and LCD screens. Because they are intended to be fully portable, the dictionaries are battery-powered and made with durable casing material. Dictionaries have become very important tools for learning of a language especially the new forms of electronic dictionaries. Several technological developments have led to the invention of electronic dictionaries in the operational processes of teaching and learning process. Language can be studied from the point of view of language structure and language use. Study of language structure is called structural or formal linguistic study. Study of language use is called as functional linguistic study. Read the full article
•Last Updated on ••Saturday•, 17 •May• 2014 22:43••
••Saturday•, 26 •April• 2014 20:43•
??- M.சோமதாசன், இலங்கை & முனைவர் சு.சரண்யா, மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் -??
கணித்தமிழ்
முன்னுரை
- அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். - ஆசிரியர், பதிவுகள் -
காலத்தால் சாலப்பழைமையுடைய நம் செம்மொழியாம் அருமைத் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்து சீரிளமைத் திறத்தோடு விளங்குகின்றது. அறிவியல் நுட்பங்களைத் தன்னகத்தே உள்வாங்கி மாறிவரும் உலக சூழலுக்கேற்ப தகவல் தொடர்பு மின்னணுச் சாதனங்கள் மற்றும் கணினி இணைய வலைத்தளங்கள் ஊடாக தேவைக்கேற்ப பரிணாம வளர்ச்சி பெறும் தன்மையானது ஒரு மொழியின் நிலைத்த தன்மைக்கு இன்றியமையாததாகும். அந்த வகையில் இந்த பாரினுள் கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் தலைசிறந்த கலை இலக்கிய அறிவுப் பெட்டகமாகத் திகழும் எமது தமிழ் மொழியை இன்றைய கணினி யுகத்திலே கணினிச் சுதேசிகள் Digital Natives என்றழைக்கப்படும் எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு இட்டுச் செல்வது நாம் நமது மொழிக்குச் செய்யும் பாரிய தொண்டாகும். இதை மையப்படுத்தி இந்த ஆய்வுக் கட்டுரையிலே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், சீரிய வாழக்கைக்கு அடித்தளமிடும் வாழ்க்கை நெறிகளுக்கும் பழமொழிகள் வழங்கும் பங்களிப்பு யாது என்பது ஆராயப்படுவதோடு மட்டுமல்லாமல் அவற்றை மின் கற்றலுக்காக E-Learning, கணினி மயப்படுத்தி அடுத்த சந்ததியினர் பயன் பெறவும், ஒரு கணினி மென்பொருள் உருவாக்கப்படுகிறது. இந்த உருவாக்கமானது கணினி வழி ஊடாக தமிழ் மொழிக் கற்றலில் ஒர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளுக்கு எமது மொழியின் தங்கு தடையற்ற பாவனைக்கும் ஒரு பாலமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
•Last Updated on ••Saturday•, 26 •April• 2014 21:05••
•Read more...•
••Friday•, 18 •April• 2014 18:28•
??- சிவாப்பிள்ளை, இயக்குநர், கல்வியியல் துறை,கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம், லண்டன். -??
கணித்தமிழ்
- அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முதல் கட்டுரையாக திரு.சிவாப்பிள்ளை (கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம் லண்டன்) அவர்களின் கட்டுரை வெளியாகின்றது. - ஆசிரியர், பதிவுகள் -
மொழிகலாச்சார வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதை பிரிட்டிஷ் மொழியியல் அமைப்பு அடையாளம் கண்டு இவற்றை வருங்காலத்தில் மக்களுக்கு அடையாளம் காணடுபிக்க வேண்டும் என்ற தேவையை உணர்ந்து கொண்டனர். குழந்தைகளின் இரு மொழிஅறிவை கலாசார அறிவு சமூக வளர்ச்சி ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை கடந்த காலங்களில் தெளிவாக அறிந்து கொள்ளவில்லை. அதிர்ஷ்டவசமாக சமீப காலத்தில் UK மற்றும் பல நாடுகளில் மொழியியல் ஆய்வாளர்கள் இவற்றின் முக்கியத்துவத்தைக் கண்டறிந்து கல்வி கற்பிப்போருக்கும் பெற்றொருக்கும் இருமொழி ஆற்றல் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள். இது பற்றிய பல ஆய்வுக்கட்டுரைகள் பல நாடுகளில் பலர் எழுதி இருக்கிறார்கள். இரு மொழிஅறிந்த குழந்தைகளின் பள்ளிக்கூடப் பெறுபேறுகள் ஒரு மொழிதெரிந்த குழந்தைகளை விட மேலாக இருப்பதையும் அவர்களின் புரிந்துணர்வை மனப்பான்மையையும் அவர்கள் சமூகத்திற்கு நல உதவிகனைளச் செய்வதில் ஆற்றல் படைத்தவர்கள் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்.
•Last Updated on ••Friday•, 18 •April• 2014 19:34••
•Read more...•
••Saturday•, 29 •March• 2014 22:48•
??- தேவகெளரி மகாலிங்கசிவம் -??
கணித்தமிழ்
-March 19, 2014, கொழும்பு தழிழ் சங்கத்தில் நடைபெற்ற 'துரைவி' அவர்களின் நினைவு தினத்தில் நினைவுப்புபேருரைக்காக வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை. ஊடகக்கல்லூரியில் (இலங்கை) சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் தேவகெளரி மகாலிங்கசிவம் அவர்களின் முகநூற் பதிவிலிருந்து மீள்பிரசுரமாகின்றது. நன்றி. -
இணையத்தில் இலக்கியம் என்ற இந்த பொது தலைப்பில் நவீன ஊடக சூழலில் இலக்கியம் பற்றிய என் அவதானிப்புகளை முன்வைக்கிறேன்..குறிப்பாக இங்கு நவீன ஊடகங்கள் சார்ந்து நவீன இலக்கியங்களின் போக்கை கணிப்பிட முயன்றுள்ளேன். நவீன இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற கதை,கவிதை,நாவல் வகையறாகளின் வெளிப்பாடும் இருப்பும் இந்த தொழில் நுட்ப கலாசாரத்தில் எத்தகையதாக இருக்கிறது?நவீன ஊடகம் இவற்றில் எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறது?என்பதற்கான விடைகளை தேடிய ஒரு ஆய்வாகவே இது அமையும். குறிப்பாக 1970 களில் அடித்தளமிடப்பட்ட இணையத்தில் ஆரம்பித்து கடந்த ஆறு ஆண்டுகளாக விஸ்வருபம் எடுத்திருக்கும் சமூக வலைத்தளங்கள் (முகப்புத்தகம் 10ஆம்வருடம்) வரை இலக்கியம் பரிணமித்திருக்கிறது.இதனூடாக ஒரு இலக்கியகாரருக்கு அவரது ஒட்டுமொத்த எழுத்து சூழல் மாறியிருக்கிறது. ஒரு கதையை எழுதி இரண்டு பேரிடம் கொடுத்து சரிபார்த்து அல்லது வெகுஜன ஊடகத்தில் பிரசுரத்திற்கு அனுப்பி அது வெளிவந்து ,சிலவேளை வெளிவராமலும் இருக்கும் நிலையில் பின்னர் அதை நூலாக்கி அறிமுகப்படுத்தி ,வாசிப்புக்கு விட்டு ,விமர்சனத்துக்குள்ளாக்கி ஒரு மீள்ளுட்டத்தைப் பெறும் பொறிமுறை உண்மையில் பிரசவம்தான்.காலமும் பொறுமையும் அந்த இலக்கிய காரரின் சிந்தனைக்கே சிறைவைத்துவிடுகிறது.அடுத்த படைப்பிற்கு வெகுகாலம் எடுக்கிறது.
•Last Updated on ••Saturday•, 29 •March• 2014 22:57••
•Read more...•
••Friday•, 27 •September• 2013 20:08•
??- பார்வதிஸ்ரீ -??
கணித்தமிழ்
எல்லா மொழி விக்கிப்பீடியாக்களையும் நாளாந்தம் 500 மில்லியன் பயனர்கள் பயன்படுதுகிறார்கள். அண்ணளவாக 200 000 பயனர்கள் தொகுக்கிறார்கள். ஆனால் விக்கிப்பீடியர்களில் 13% ஆனவர்களே பெண்கள்.[1] இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாகத் தொகுப்பவர்களில் 1% பயனர்கள் மட்டுமே பெண்கள். இந்த நிலை ஏன் பாதகமானது, குறைவான பங்களிப்புக்கான காரணங்கள் என்ன, பெண்கள் பங்களிப்பை எப்படி ஊக்குவிக்கலாம் ஆகிய விடயங்களைச் சுருக்கமாக விபரிப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.
பங்கேற்பதன் முக்கியத்துவம் விக்கியூடகம் இன்று பரந்து பயன்படுத்தப்படும் ஒரு தகவல் ஊடகம். இதில் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தில் பெண்களின் பங்களிப்பு இருப்பது முக்கியம் ஆகும். எழுதப்படும் தலைப்புகள், எழுதப்படும் முறை, விக்கி செயற்படும் நோக்கு ஆகியவற்றில் பெண்கள் தங்களின் உள்ளீடுகளை வழங்க முடியும். இல்லாவிடின் பெண்கள் தொடர்பான தலைப்புக்கள் போதிய அக்கறை பெறாமல் போகும் வாய்ப்பு உள்ளது.[2]
பல மொழிகள், பண்பாடுகள், துறைகள், ஈடுபாடுகளைக் கொண்டவர்கள், கட்டற்ற அறிவு என்ற ஒரே இலக்கோடு இணையும் களம் விக்கியூடகம். அதில் பெண்கள், பெண்களின் குரல்கள், பங்களிப்புக்கள் சிறப்பாக இருக்க வேண்டும். விக்கி அனைவரையும் உள்வாங்கும் பங்கு கொண்டது, எனவே அதில் இணைவது, செயற்படுவது இலகுவானது.[3] பெண்கள் உரிமைகள், பெண்கள் இயக்கத்தின் செயற்பாடுகளின் ஒரு நீட்சியாக இது அமையும்.[4]
•Last Updated on ••Friday•, 27 •September• 2013 20:19••
•Read more...•
••Friday•, 27 •September• 2013 19:52•
??- கலையரசி -??
கணித்தமிழ்
பொதுத்தகவல் இணையமே தற்காலத்து மிகப்பெரிய தகவல் ஊடகமாக இருக்கின்றது. இவ்வாறான இணையத்தில் மிகவும் பயனுள்ள, புகழ்பெற்ற ஊடகமாக விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் இருக்கின்றது. 2001ஆம் ஆண்டு, இதனை ஜிம்மி வேல்ஸ் என்பவரும் லாரி சாங்கர் என்பவரும் இணைந்து ஆரம்பித்தனர். விக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தொடங்கப்பட்ட இந்த விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தன்னார்வத்துடன் இணைந்து கொண்ட பல பயனர்களின் பங்களிப்பால் மிக விரைவாக வளர்ச்சியடைந்து வந்தது. இந்த 2013ஆம் ஆண்டில், ஆங்கில விக்கிப்பீடியா 4.3 மில்லியன் கட்டுரைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது. அதிவேகமாக வளர்ச்சியடையத் தொடங்கிய விக்கிப்பீடியாவில், தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழிகளும் இணைந்து கொண்டன. இன்றைய காலகட்டத்தில், 286 மொழிகளில் விக்கிப்பீடியா இயங்கத் தொடங்கியுள்ளது. தமிழ் மொழியிலான தகவல்களுக்கும் இணையம் மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், தமிழ் விக்கிப்பீடியாவும் மிக முக்கியமான ஒரு ஊடகமாக இருக்கின்றது. விக்கிப்பீடியாவின் உருவாக்கத்தின் பின்னர், விக்கிமீடியாவின் விக்கி நூல்கள், விக்கிச் செய்திகள், விக்சனரி, விக்கிப் பொதுவகம், விக்கி மேற்கோள்கள், விக்கித் தரவு போன்ற பல செயற்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, வளர்ச்சி பெற்றன. தமிழ் மொழியிலும் இதே செயற்திட்டங்கள் தொடங்கப்பட்டு, பல தன்னார்வலர்களின் பங்களிப்பால் வளர்ச்சியடைந்து வருகின்றன.
•Last Updated on ••Sunday•, 29 •September• 2013 15:54••
•Read more...•
••Friday•, 27 •September• 2013 19:37•
??- நித்தியானந்தன் ஆதவன் -??
கணித்தமிழ்
- தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்" என்ற கட்டுரையை விக்கிப்பீடியர்கள் உதவியுடன் 13 வயது 8 ஆம் வகுப்பு மாணவர் நித்தியானந்தன் ஆதவன் எழுதியுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவை மாணவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள், பங்களிப்புக்கள், பங்களிக்க இருக்கும் தடைகள் உட்பட்ட விடயங்களைக் இக் கட்டுரை சுருக்கமாக மாணவர் பார்வையில் இருந்து ஆய்கிறது. - தமிழ் விக்கியூடகங்கள் என்பது யாவராலும் தொகுக்கப்படக் கூடிய இணைய ஊடகங்கள் ஆகும். இதில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள் போன்ற பலரும் பங்களிக்கின்றனர். இப்படி பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்கள் தன்னகத்தே கொண்டுள்ளவை ஏராளம். இதிலும் குறிப்பிட வேண்டியது, விக்கியூடகங்களின் உள்ளடக்கம் அனைவருக்கும் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது தான். அந்த வகையில் பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்களில் மாணவர்களின் செயற்பாடு பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
•Last Updated on ••Friday•, 27 •September• 2013 20:19••
•Read more...•
••Friday•, 27 •September• 2013 19:24•
??- இ. மயூரநாதன் -??
கணித்தமிழ்
தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10.
தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை 'பதிவுகள்' தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சிலவற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து 'பதிவுகளு'க்கு அனுப்பியவர்: சந்திரவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது. தமிழ் விக்கிபீடியா பற்றி ஆக்கங்களை அனுப்ப விரும்புவோர்
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்- பதிவுகள் -
தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள்
விக்கியூடகங்களின் தொலைதூரக் கனவு, "உலக அறிவு முழுமையையும் ஒவ்வொரு மனிதப் பிறவியும் கட்டற்ற முறையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு உலகைக் காண்பது" ஆகும். இந்தத் தொலைதூர உலகத்தை அடைவதற்கான சில நடைமுறைச் சாத்தியமான நோக்கங்களையும் செயற்பாடுகளையும் முன்னிறுத்தியே பன்மொழி விக்கித் திட்டங்கள் இயங்கிவருகின்றன. "கட்டற்ற உரிமங்களின் கீழ் அல்லது பொது உரிமத்தின் கீழ், கல்விசார் உள்ளடக்கங்களைச் சேகரித்தும், உருவாக்கியும் உலக அளவில் பரவச் செய்வதற்கு மக்களுக்கு ஆற்றல் அளித்து ஊக்குவிப்பது" என்பதே இத்திட்டங்களை இயக்கிவரும் விக்கிமீடியா நிறுவனத்தின் செயலிலக்கு.
பல்வேறு விக்கித் திட்டங்களை உருவாக்கி இயக்கிவரும் எல்லா மொழிச் சமூகங்களும் மேற்படி நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. இந்த நோக்கங்களை அடைவதில், எல்லா மொழிச் சமூகங்களுமே ஒரே மாதிரியான பின்னணிகளையும், வசதி வாய்ப்புக்களையும் கொண்டிருப்பதில்லை. பல்வேறு, வரலாற்று, அரசியல், சமூக பண்பாட்டுக் காரணிகள் இந்த மொழிச் சமூகங்களிடையே ஒரு சமமற்ற தன்மையை உருவாக்கி வைத்துள்ளன. இதனால், மேற்படி இலக்குகளை அடைய விரும்பும் மொழிச் சமூகங்கள் விக்கியூடகங்களின் உள்ளார்ந்த ஆற்றல்களையும், வளங்களையும் புரிந்துகொண்டு, தமது பின்னணிகளுக்கும் தேவைகளுக்கும் பொருத்தமான முறையில் அமைந்த திட்டங்களின் அடிப்படையில் செயல்படுவது முக்கியமானது.
•Last Updated on ••Friday•, 27 •September• 2013 22:56••
•Read more...•
••Thursday•, 15 •August• 2013 22:31•
?? - முனைவர் துரை.மணிகண்டன் ( தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி.) -??
கணித்தமிழ்
முன்னுரை
”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொன்மொழிக்கு நிகராக இன்று உலகில் இருக்கும் அனைவரும் உறவினர்களாக உருவாக்கம் பெற்று வருகின்றனர். காரணம் இணையம். இணையம் இன்று பல்துறைப்பணிகளையும் செய்யும் அன்புக் கடவுள். இணையம் முதலில் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் பிறகு அது பல்வேறு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றலுடன் வலம் வந்தது. இணையத்தில் நாம் ஒரு செய்தியைத் தேடி எடுக்க வேண்டுமென்றால் அதற்குப் பல இணைய முகவரிகளோயோ, வலைப்பதிவு முகவரிகளையோ, பொது தளங்களையோ சென்று நாம் காண வேண்டிய சூழலில் உள்ளோம். இதனால் அதிகமான நேரத்தையும், பொருள் செலவையும் இழக்க நேரிடுகிறது. ஆனால் செல்பேசி மற்றும் கையடக்கக் கணினிகளில் என்ன செயலுக்கு எந்த வலைமுகவரியோ அதைவிட அதிகமான, மிகத் துல்லியமானச் செய்திகளை நமக்குத்தரும் தமிழ்க் குறுஞ்செயலிகள் இன்று ஆயிரத்திற்கும் மேல் உள்ளன.
•Last Updated on ••Thursday•, 15 •August• 2013 22:45••
•Read more...•
••Saturday•, 24 •November• 2012 23:56•
??- வ.ந.கிரிதரன் -??
கணித்தமிழ்
அண்மையில் மறைந்த ஈழநாதனின் வாழ்நாள் குறுகியது. இளம் வயதில் அவரது இழப்பு அவரது குடும்பத்தவருக்கு பேரிழப்பு. அவரது கலை, இலக்கிய உலக நண்பர்களுக்கும் பேரிழப்பே. 'நூலகம்' தளம் இன்று முக்கியமானதோர் ஈழத்துத் தமிழ நூல்களின் ஆவணச் சுரங்கமாக விளங்குகின்றது. இத்தளத்தின் தோற்றத்திற்கும், ஆரம்பகால வளர்ச்சிக்கும் ஈழநாதன் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. நூலக நிறுவனத்தின் மாதாந்த செய்திக் கடிதத்தின் அண்மைய பதிப்பு ஈழநாதன் நினைவிதழாக வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழநாதனின் பங்களிப்பு இன்னுமொரு வகையிலும் நினைவு கூரத்தக்கது. பல்வேறு படைப்பாளிகளின் இணையத்தளங்கள், வலைப்பதிவுகளில் வெளியாகும் படைப்புகளை வாசிப்பதோடு மட்டுமல்லாது அவற்றுக்குக்கான பின்னூட்டங்களில் தன் கருத்துகளையும் பதிவு செய்திருக்கின்றார். கூகுள் தேடுபொறியில் அவரது பெயரையிட்டுத் தேடினால் அவ்விதமான சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர அவர் வலைப்பதிவுகள் சிலவற்றையும் நடாத்தி வந்தார். அவற்றைப்பற்றி பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
•Last Updated on ••Sunday•, 25 •November• 2012 00:27••
•Read more...•
••Sunday•, 11 •November• 2012 22:26•
?? - கா.இரி.சதிசு தமிழாசிரியர் புதுச்சேரி -??
கணித்தமிழ்
இதழியல் நோக்கில் இணையத்தில் பல்கிப் பெருகி இருப்பவை இணைய இதழ்கள். அச்சு ஊடகங்களை ‘இணைய இதழ்கள்’ என்ற பட்டியலில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது. சிற்றிதழ்கள், இதழ்கள் என இணையம் முழுவதும் தமிழ் மற்றும் பொதுவான செய்திகளைத் தாங்கிய வண்ணம் இவை இணையத்தில் வடிவங்கொண்டுள்ளன. சில அச்சு ஊடகங்களும் (செய்தித்தாள்) இணையத்தில் தங்களுடைய செய்தித்தாளில் இடம்பெறக் கூடிய செய்திகளை ஏற்றிக் காண்பிக்கின்றன. இருப்பினும் இணைய இதழ்களின் பட்டியலில் அவை சேரா. இணையத்தில் மட்டுமே வெளிவந்து, செய்திகளை வழங்கும் இதழ்களை இணைய இதழ்கள் என்று கூறலாம். இணையத்தின் முதல் இணைய இதழாக ‘திண்ணை’ என்னும் இதழ் தடம் பதித்தது. இதன் பின்னர் பல இதழ்கள் செய்திகளை வழங்கத் தொடங்கின. தமிழுக்கென்று மட்டும் பல இதழ்கள் நடத்தப்பட்டன.
•Last Updated on ••Sunday•, 11 •November• 2012 22:37••
•Read more...•
••Wednesday•, 20 •June• 2012 19:51•
??- முனைவர் மு. பழனியப்பன், ஸ். ராமகிருஷ்ணன், முனைவர் மு. இளங்கோவன், முனைவர் க.துரையரசன், தமிழ் இணைப்பேராசிரியர், பத்ரி சேஷாத்ரி, சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., முனைவர். மு. இளங்கோவன் -??
கணித்தமிழ்
இணையத்தில் தமிழ்!
- முனைவர் மு. பழனியப்பன் -
தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர். கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணலில் தமிழ் ஏடுகள் தற்போது இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன.
•Last Updated on ••Wednesday•, 20 •June• 2012 20:14••
•Read more...•
••Wednesday•, 20 •June• 2012 19:45•
??- லூசியா லெபோ -??
கணித்தமிழ்
அரசியல், சமூகம், இலக்கியம், சமையல், பெண்கள், மருத்துவம், ஆன்மீகம், வணிகம், சோதிடம், பல்சுவை என பல தலைப்புகளில் செய்திகளை தன்னில் உள்ளடக்கி வெளிவரும் இணைய இதழ்களில் கீழ்க்கண்டவை பலராலும் வரவேற்பு பெற்றவை. திண்ணை: வீட்டில் திண்ணை வைத்துக்கட்டுவது தமிழா் மரபு. இந்த திண்ணையில் உட்கார்ந்து பல செய்திகள் அலசப்படும். அதுபோல இலாப நோக்கமின்றி நடத்தப்படும் இம்மின்னிதழில் கலை, அரசியல், கதை, கட்டுரை இலக்கியம், கவிதை எனப் பலவற்றையும் படிக்கலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுகிறது. பழைய மின்னிதழ்களில் இதுவும் ஒன்று. தட்ஸ் தமிழ்: இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப்போல வெளிவருகிறது. இதில் பலதுறைச் சார்ந்த செய்திகளும் இலக்கியமும் இடம் பெற்றுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளிவருகிறது. மேலும் திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். வார்ப்பு: தமிழ்க் கவிதைக்கோர் இணைய இதழ். 1998 இல் 'நிக்குமோ நிக்காதோ” என்ற பெயரில் வந்த இம்மின்னிதழ் பிறகு 'வார்ப்பு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுமதி, கனிமொழி போன்ற கவிஞர்களின் கவிதைகள் இதில் வெளிவந்துள்ளன. புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நுால்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களை இந்த இதழில் உள்ள 'நூலகம்” என்ற இணைப்பின் வழியாக காணலாம். பதிவுகள்: 2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் வ.ந. கிரிதரன் . மாதந்தோறும் வெளிவரும் மின்னிதழ். இதன் நோக்கம் 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” என்பதாம். கவிதை, சிறுகதை, நாவல், நூல் விமர்சனம், அறிவியல். . .இலக்கியம் சார்ந்த செய்திகளைப் படிக்கலாம். இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகிறது. மேலும் விக்கிபீடியா (தமிழ் தகவல் களஞ்சியம்), மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் இணைப்புகளையும் வழங்குகிறது.
•Last Updated on ••Wednesday•, 20 •June• 2012 19:50••
•Read more...•
••Tuesday•, 26 •July• 2011 22:46•
??- முஜிப் ரகுமான - ??
கணித்தமிழ்
கூகுல் பல்கலை ஒன்றை நடத்தி வருவது உங்களுக்கு தெரியுமா?கூகுல் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுல் இந்த இணைய பல்கலையை நடத்தி வருகிறது.இந்த பல்கலையில் பட்டம் வாங்க முடியாது என்றாலும் கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்களை கற்று கொள்ளலாம். கம்ப்யூட்ட ர் கல்வி தொடர்பான இணைய பாடங்களை இந்த இணைய பல்கலையில் கூகுல் பட்டியலிட்டுள்ளது.புதிய புரோகிராமிங் மொழிகள், எச்.டி.எம்.எல் வடிவமைப்பு, இணையதள பாதுகாப்பு,ஆன்டிராய்டு என பல்வேறு தலைப்புகல் தொடர்பான இணைய பாடங்கள் வீடியொ விளக்கங்களோடு இடம் பெற்றுள்ளன.ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான பாடத்தை கிளிக் செய்து படிக்கலாம்.கட்டணம் கிடையாது என்பதோடு உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.
•Last Updated on ••Wednesday•, 27 •July• 2011 15:45••
•Read more...•
••Saturday•, 23 •April• 2011 21:28•
??ஆசிரியர், பதிவுகள்??
கணித்தமிழ்
பதிவுகள் வாசகர்களே! நண்பர்களே! உறவினர்களே! உங்கள் அனைவருக்கும் அவ்வப்போது உங்களது நண்பர்களிடமிருந்து அல்லது ஏன் உங்களிடமிருந்தே கூட பல்வேறு வகையான மின்னஞ்சல்கள் வரலாம். இத்தகைய மின்னஞ்சல்கள் பல்வேறு வகையான விளம்பரங்களைத் தாங்கி வருவதே வழக்கமாகுமென்பதையும் அறிந்திருப்பீர்கள். இத்தகைய மின்னஞ்சல்களைப் பற்றி இணையத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் புதியவர்களோ தங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து இத்தகைய மின்னஞ்சல்கள் வரும்போது அதிர்ச்சியடைந்து விடுவார்கள். சில வேளைகளில் தேவையற்ற குழப்பங்களும், சஞ்சலங்களும் இவ்வகையான மின்னஞ்சல்களினால் ஏற்பட்டுவிடும் அபாயமும் உண்டு. இதனைத் தடுப்பதற்கு சரியான வழிமுறை இத்தகைய மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றனவென்பதை அறிந்து கொள்வதுதான். அவ்விதம் அறிந்த பின்னர் அவ்விபரங்களை உங்களுக்கு இணையச் சேவையினை வழங்கும் நிறுவனத்திற்கு அறிவித்து விடுங்கள். ஆயினும் ஒருபோதுமே இவ்விதமான மின்னஞ்சல்களைத் தவிர்த்துக்கொள்ள முடியாது. இவ்விதமான சந்தேகத்திற்கிடமாக வரும் மின்னஞ்சல்களை உடனேயே அழித்து விடுவதுதான் சரியான நிலைப்பாடு. சரி இப்பொழுது இவ்வகையான மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றவென்பதை எவ்விதம் அறிந்துகொள்வது என்பதைப் பார்ப்போம்.
•Last Updated on ••Saturday•, 23 •April• 2011 21:31••
•Read more...•
••Wednesday•, 23 •March• 2011 13:26•
?? சு. குணேஸ்வரன் ??
கணித்தமிழ்
[கணித்தமிழ் பற்றி குறிப்பாக இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில் பிரசுரிக்கிறோம். இணைய இதழ்கள் பற்றிய மேற்படி கட்டுரைகளின் தொகுப்பானது இணைய இதழ்கள் பற்றியதோர் ஆவணங்களின் தொகுப்பாகமிருக்கும்; அதே சமயம் இணைய இதழ்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வோருக்குப் பேருதவியாகவுமிருக்கும் -பதிவுகள்]
1. இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்
- சு. குணேஸ்வரன் -=
1.0 அறிமுகம் புகலிடச் சிற்றிதழ்கள் கடந்த 1983 இன் பின்னர் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 150 ற்கும் மேற்பட்ட இதழ்கள் இதுகாலவரையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வெளிவந்துள்ளன. 90 களின் பிற்பகுதியில் இருந்து இலத்திரனியற் சூழலை தமிழ்ப் படைப்புலகு தமது எழுத்துக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது.
2.0 இலத்திரனியற் சூழலில் சிற்றிதழ்கள் கலை இலக்கியம் சார்ந்து வெளிவரும் இதழ்களை இலக்கியச் சிற்றிதழ்கள் (Little Magazines) என்று அழைப்பர். 1914 இல் அமெரிக்காவில் வெளியாகிய The Little Review என்ற இதழுடன் சிற்றிதழ் என்ற சொற்பிரயோகம் வழக்கத்திற்கு வருகிறது. (தமிழகத்தில் 1933 இல் வெளிவந்த ‘மணிக்கொடி’யும், ஈழத்தில் 1946 ஜனவரி வெளிவந்த ‘பாரதி’ யும் முதல் இதழ்களாக வெளிவந்தபோதிலும்) தமிழில் 1959 இல் தோற்றங்கொண்ட ‘எழுத்து’ இதழே முதல் இலக்கியச் சிற்றிதழாக அமைகின்றது. ஈழத்தில் 1946 இல் வெளிவந்த மறுமலர்ச்சியும, புகலிடத்தில் 1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தூண்டிலும் முதலில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களாக அமைந்துள்ளன. சிற்றிதழ் என்பதற்கு “கவிதைகள் புனைகதைகள் விமர்சனக் கட்டுரைகள் முதலியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு குறைந்த எண்ணிக்கைப் பிரதிகளை வெளியிடும் இதழ்கள். நீடித்த ஆயுளைக் கொண்டிராதவையுங்கூட.” (1)
•Last Updated on ••Wednesday•, 20 •June• 2012 20:04••
•Read more...•
••Monday•, 28 •February• 2011 14:00•
??முனைவர் மு. பழனியப்பன் ??
கணித்தமிழ்
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து என்பதாம் ஆண்டு முதல் கணினியில் தமிழ் இடம் பெற ஆரம்பித்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு முதல் தமிழ் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது. இணையத்தில் தமிழ் இடம் பெற்று ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த சூழலில் அதன் வளர்ச்சி குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணினி அல்லது இணையம் தமிழை வளர்க்க ஒரு துணை கருவியாகப் பயன்பட்டு வந்தது.
•Last Updated on ••Tuesday•, 05 •April• 2011 16:53••
•Read more...•
••Monday•, 01 •September• 2008 00:00•
??- முனைவர் மு. இளங்கோவன் -??
கணித்தமிழ்
22.08.2008 மாலை சிங்கம்புணரியில் நீண்ட நேரம் நின்றும் பேருந்து இல்லை.மழை பெய்தபடி இருந்தது.மதுரை செல்லும் பேருந்து வரவில்லையாதலால் கொட்டாம்பட்டி சென்றால் விரைவுப் பேருந்துகள் கிடைக்கும் என்றனர்.கொட்டாம்பட்டிக்கு அங்கிருந்து நகர் வண்டியில் சென்றேன்.அங்கிருந்தும் பேருந்துகள் வாய்ப்பாக இல்லை.கூட்டம் மிகுதியாக இருந்தது.அவ்வழியில் மகிழ்வுந்து ஒன்று வந்தது.அதில் ஏறிக்கொண்டேன். கையில் கைப்பையும்,மடிக்கணினிப் பையும் தோள்பட்டைகளைப் பதம் பார்த்தன.இப்பொழுது செலவு இனித்தது.போக்கில் இருக்கும் பொழுது அறிஞர் தமிழண்ணல் அவர்கள் செல்பேசியில் அழைத்தார்கள்.பிறகு பேசுவதாக ஐயாவிடம் தெரிவித்துவிட்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் இணையக் கருத்தரங்கை ஏற்பாடு செய்த நண்பர் முத்துராமன் அவர்களுக்குப் பேசினேன்.
•Last Updated on ••Wednesday•, 28 •September• 2011 20:16••
•Read more...•
|