 - விஞ்ஞான கம்யூனிசம் என்னும் வலைப்பதிவிலிருந்து இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. இவ்வலைப்பதிவினை உருவாக்கிப் பராமரிப்பவர் - A.K.ஈஸ்வரன் --
[இங்கு பயன்படுத்தும் பெரியாரின் படைப்புகள் முனைவர் மா.நன்னன் தொகுத்த பெரியார் கணினி என்ற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. வெளியீடு ஞாயிறு பதிப்பகம் 11, முதல் தெரு, அரங்கராசபுரம், சைதாப்பேட்டை, சென்னை 600015.]
தமிழகத்தில் தந்தை பெரியார் பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டியவராவார். கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது, வெகு காலமாக நடைபெற்று வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பக் கூடாது. அனேகம்பேர் பின்பற்றுகிறார் என்பதனால் அதை நம்பிவிடக் கூடாது. எந்த விசயமானாலும் நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திரச் சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. (33.4.1)* என்று எதனையும் பகுத்தறிவோடு சிந்திக்க வைத்தவர் தந்தை பெரியார்.
பெரியார் எதனையும் புத்தியைக் கொண்டு தான்முடிவெடுக்க வேண்டும், மற்ற சிறப்புகளின் அடிப்படையில் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார். இது மட்டுமல்லாது யாருக்கும் எசமான் கடவுளோ, மதவாதிகளோ அல்ல. அறிவுதான் எசமானன். தான் கூறியதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் பகுத்தறிவிற்குச் சரியெனப் பட்டதை மட்டுமே ஏற்றுக் கொண்டு மற்றவற்றைத் தள்ளிவிடும்படி பெரியார் வலியுறுத்துகிறார். (33.4.22)
நா.வானமாமலை பெரியார் நூற்றாண்டின்போது பெரியாரின் நாத்திகவாதத்தை ஆராய்ந்து, அதன் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து, பெரியாரின் நாத்திகக் கருத்துகளை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் கற்று, அறிவியல் அறிவின் முடிவுகளோடு இணைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
•Last Updated on ••Friday•, 29 •January• 2021 12:03••
•Read more...•
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
ஜான் பெர்கின்ஸ் என்பவர் சர்வதேச ஆலோசனை நிறுவனமான மெய்னுக்கு ( Main ) பொருளாதார அடியாளாக இருந்தார். இவர் ஆரம்பத்தில் தனது வாழ்நிலை சூழலை கருதி ஆசை அதிகாரம் பணம் என்பவற்றின் கவர்ச்சியில் சாராசரி மனிதனாகவே ஈடுபட்டார். காலப்போக்கில் இந்த சதிவலையின் பாரதூரமான விளைவுகளை கண்டு மிகுந்த குற்றவுணர்ச்சிக்கு உள்ளானார். இந்த பெருநிறுவனங்களின் நயவஞ்சக செயற்பாடுகளினால் ஏழைமக்களும், பழங்குடி மக்களும் மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளானார்கள். இந்த உண்மையை வெளியுலகிற்கு எடுத்துக் கூறவேண்டும் என்றவாறு மய்னின் நிறுவனத்தில் இருந்து விலகினார். அவர் பெற்ற அனுபவங்களை “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற புத்தகமாக வெளியிட்டார்.
உலகமயமாதல் பெயரில் ஒரு நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனிதவளங்கள் பெருநிறுவனங்களால் பங்கிடப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற மாயத்தோற்றங்ஙளை காட்டி மக்களை ஏமாற்றுகிறது. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் காலனித்துவமாக வைத்திருந்த அடிமை நாடுகளின் வளங்களை ஆளுமை செய்த நாடுகள் கொள்ளையிட்டது போலவே இன்று உலகமயமாதல் என்ற பெயரில் அரங்கேறுகிறது.
அமெரிக்க சர்வதேச நிறுவனம் மெய்ன் (Main) என்பதாகும். அதன் நோக்கம் மூன்றாம் உலக நாடுகளில் நீர் மின்நிலையங்கள், அணைக்கட்டுகள், நெடுஞ்சாலைகள், விமானநிலையங்கள் என மிகப் பெரிய திட்டங்களை அமுல் படுத்துவதாகும். இந்த நிறுவனத்திற்கும், அரசுக்கும், சர்வதேச வங்கிக்கும் பரஸ்பர உறவு காணப்படும். மெய்ன் நிறுவனத்தில் பொருளாதார வல்லுனராக இருப்பவருக்கு கொடுக்கப்படும் வேலையானது இரண்டு முக்கிய விடயங்களை கொண்டிருக்கும்.
1. பெரிய சர்வதேச கடன் வாங்குவதை நியாயப்படுத்தி வாங்க வைத்து மீண்டும் அப்பணம் முழுவதும் பொறியியல் கட்டுமான வேலைகள் மூலமாக மெய்னுக்கும், அமெரிக்க நிறுவனத்திற்கும் கிடைக்குமாறு திருப்பி விட வேண்டும்.
2. கடன் வாங்கிய நாடுகளில் இருந்து பணம் மெய்னுக்கும், நிறுவனத்திற்கும் வந்து சேர்ந்த பிற்பாடு அந்நாடுகளை திவாலாக்கி விட வேண்டும். இங்கு வேலையில் அமர்த்தப்படும் அனைவரும் நிறுவனம் தொடர்பான சகல விபரங்களையும் இரகசியமாக பேணுதல் வேண்டும்.
•Last Updated on ••Monday•, 14 •December• 2020 22:12••
•Read more...•
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
உலகறிந்த மார்ச்சிய தமிழ் அறிஞர் பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து 38 ஆண்டுகள் ஆகின்றன. 1933 ஏப்ரல் 05 ஆம் திகதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிறந்த கைலாசபதி, 1982 டிசம்பர் 06 ஆம் திகதி கொழும்பு பொது வைத்தியசாலையில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். மரணிக்கும் போது அவருக்கு 49 வயது மட்டுமே நிரம்பியிருந்தது.
உலகில் சாதனை படைத்த பல மனிதர்களைப் போலவே கைலாசபதி அவர்களையும் மரணம் இளம் வயதிலேயே காவு கொண்டுவிட்டது. தனது குறுகிய ஆயுள் காலத்தில் அவர் தமிழ் இலக்கியத்துக்கும், மார்க்சிய விமர்சனத்துறைக்கும் அளித்த அளப்பரிய, காலத்தால் அழியாத பங்களிப்பை நோக்குகையில், அவர் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் அறிவுலகம் இன்னும் எத்தனை அரும் பெரும் பொக்கிசங்களை அவரிடமிருந்து பெற்றிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கைலாசபதி அவர்களைப் பற்றி நான் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கேள்விப்பட்டிருந்தாலும், அவரை முதன்முதலாகப் பார்த்தது 1966 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த எமது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில்தான். தோழர் வி.ஏ.கந்தசாமியைச் சந்திப்பதற்காக அவர் வந்திருந்தார். ஆனால் கந்தசாமி அந்த நேரத்தில் அங்கிருக்காததால் உடனும் திரும்பிச் சென்றுவிட்டார்.
முதலில் வந்தவர் யார் என்று நான் அறிந்திருக்கவில்லை. பின்னர் அலுவலகத்தில் அப்பொழுது இருந்த ஒரு தோழர் மூலம்தான் வந்தவர் பிரசித்தி பெற்ற கைலாசபதி அவர்கள் என அறிந்து கொண்டேன். அன்றே அவரது தோற்றம் எனது மனதில் பதிந்து கொண்டது. நெடிதுயர்ந்த தோற்றம். கண்ணாடியின் பின்னே கூர்மையான கண்கள். கையில் ஏதோ ஒரு புத்தகம் வைத்திருந்தார். கட்டம் போட்ட அரைக்கை சேர்ட் அணிந்திருந்ததாக நினைவு. அவருடன் சில வார்த்தைகளாவது கதைக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் தோன்றியது. • அதன் பின்னர் அவர் எழுதிய பல கட்டுரைகளைத் தேடிப் படித்தேன். ஆரம்பத்தில் அந்தக் கட்டுரைகளின் கனதியான சாராம்சத்தை கிரகிக்க முடியாமல் போய்விட்டாலும், பின்னர் படிப்படியாக அவற்றைக் கிரகித்துக் கொண்டேன். அவர் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகள் கணக்கில் அடங்காதவை. அதேபோல, அவர் எழுதி வெளியிட்ட நூல்களும் பலப்பல.
அந்தக் காலத்தில் தோழரும் எழுத்தாளருமான சுபைர் இளங்கீரன் எழுதிய “நீதியே நீ கேள்” என்ற நாவல் என்னைப் போன்றவர்கள் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நாவல் ‘தினகரன்’ பத்திரிகையில் தொடராக வந்தது என்றும், அப்பொழுது கைலாசபதி அவர்கள்தான் தினகரன் ஆசிரியராக இருந்தார் என்றும் கேள்விப்பட்டேன். அது மாத்திரமல்லாமல், கைலாசபதி ஆசிரியராக இருந்த காலம் தினகரன் பத்திரிகையின் பொற்காலம் எனவும், அவர்தான் பல எழுத்தாளர்களை தினகரன் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் என்றும் பிற்காலத்தில் அறிந்தேன். பின்னர் நான் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக வேலை செய்த காலத்தில், தோழர் நீர்வை பொன்னையன் மூலம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அந்தச் சங்கத்தின் அச்சாணியாகவும், பிரதம வழிகாட்டியாகவும் கைலாசபதிதான் செயற்பட்டுக் கொண்டிருந்தார். எனவே கொழும்பு செல்லும் போது சில சந்தர்ப்பங்களில் நீர்வை பொன்னையனுடன் சேர்ந்து கைலாசபதியை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன.
•Last Updated on ••Friday•, 04 •December• 2020 08:04••
•Read more...•
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
 ஈழத்தின் மூத்த, முதல் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான பவானி ஆள்வாப்பிள்ளை, அறுபதுகளில் எழுத ஆரம்பித்தவர். ஈழத்தில் பெண்ணிய நோக்கிலான கருத்துகளை தனது படைப்புகளினூடாக வெளிப்படுத்திய முதல் பெண் எழுத்தாளர் இவரே என்று ஈழத்துச் சிறுகதை வரலாறு நூலில் செங்கை ஆழியான் குறிப்பிடுகின்றார். ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற அளவெட்டிக்கிராமத்தில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியும் ஆவார். 1958/59 ஆம் ஆண்டுக்குரிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின் இதழாக “இளங்கதிரில்” இவரது அர்ப்பணம் என்கிற சிறுகதை “மதிற்பிற்குரியது, நூற்பரிசு பெற்றது” என்கிற சிறுகுறிப்புடன் வெளியாகியிருக்கின்றது. அவர் அக்காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது எழுதிய கதையாக இது இருக்கலாம்.
இவரது கதைகள் இளங்கதிர், கலைச்செல்வி, சுதந்திரன், ஈழநாடு, தேனருவி, வீரகேசரி, மரகதம், சங்கம், திரைக்கலை, திருக்கோணமலை தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு மலர், தினகரன், செந்தாமரை, உன்னைப்பற்றி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. இவரது சிறுகதைத் தொகுப்பொன்று 1962 இல் வெளியாகியிருக்கின்றபோதும் தற்போது அது கிடைப்பதில்லை என அறியமுடிகின்றது. ஆயினும் இவரது சிறுகதைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் ஊடாக இவரது சிறுகதைத் தொகுதியை மீள்பதிப்பிக்க முயற்சிகள் எடுத்திருக்கின்றார். அந்த முயற்சியின் பலனாக, முன்னர் தொகுப்பில் இடம்பெறாத சில கதைகளும் சேர்க்கப்பட்டு 1994 இல் “கடவுளும் மனிதரும்” என்கிற தொகுப்பு இருபது கதைகளுடன் வெளியானது. இந்நூலிற்கான முன்னுரையில் இந்த நூலை வெளியிடுவதற்கான காரணங்கள் பற்றிச் செல்வி திருச்சந்திரன் கூறுகின்ற காரணம் முக்கியமானது. ஒரு பெண் எழுத்தாளரது கதைகள், அவரது பெண் நிலைவாதக் கருத்துகளைத் தாம் ஆதரிக்கின்றோம் என்பதற்கும் அப்பால் தாம் வெளியிடக் காரணம், சிட்டி சுந்தரராஜனும் சிவபாதசுந்தரமும் எழுதிய ”தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்”, கா. சிவத்தம்பி எழுதிய தமிழில் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் போன்ற முக்கிய நூல்களில் கூட பவானியின் சிறுகதைகள் பற்றிய எந்தக் குறிப்புகளும் காணப்படவில்லை என்பதையும் பவானிக்குரிய சரியான இடம் வழங்கப்படவேண்டும் என்கிற தனது அவாவினையும் வெளிப்படுத்தி அதுவே இந்நூலைத் தாம் வெளியிடக் காரணமாக அமைந்தது என்று செல்வி திருச்சந்திரன் கூறுகின்றார். கலை, இலக்கியங்களின் வரலாறுகளைப் படிக்கின்றபோது இது போன்ற நிறைய விடுபடல்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
•Last Updated on ••Friday•, 04 •December• 2020 07:52••
•Read more...•
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -

அமெரிக்காவில் தேர்தலில் தான் தோல்வியுற்றேன் என்பதனை ஏற்க டொனால்ட் ரம்ப் மறுக்கின்றார். சட்டரீதியாக போராடுவேன் என சபதம் எடுத்து களத்தில் இறங்கியுள்ளார். அங்கு ஒவ்வொரு மாநிலத்துக்குமென வாக்குகள் உள்ளன.; வாக்களிப்பின் பின்னர் தமது மாநிலத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி வேட்பாளரை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் அதனை கொங்கிரஸ் உறுதிப்படுத்தும் Electoral votes முறையை சில தடவைகள் மாற்ற முற்பட்ட போது, தென் மாநிலங்கள் மறுத்து விட்டன. பல தேர்தல்களில் இந்த தென் மாநிலங்களே இறுதியாக ஜனாதிபதியை தீர்மானிக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஆவணி 2019ல் காஸ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுகின்றது. இவ்வாறான விடயத்தை அமெரிக்காவில் செய்ய முடியாது. கனடாவில் கியுபெக் மாநிலம் இரண்டு தடவைகள், பிரிந்து செல்வதற்காக வாக்கெடுப்பு நடாத்தியது. அதே போல் ஸ்கொற்லன்ட்டும் வாக்கெடுப்பு நடாத்தியது. 750 மொழிகளைக் கொண்ட ஒரு உப கண்டத்தில் இவையாவும் சாத்தியமற்றவை. ஐரோப்பாவில் பெரும்பாலும் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மொழி பேசும் மக்களைக் கொண்டுள்ளது. அப்படிப்பார்ப்பின் இந்தியாவும் ஒரு கண்டமாகும். ஆனால் ஒரு மொழி, ஒரு யாப்பு, ஒரு மதம், ஒரு நாடு என இந்தியா மாறிவருகின்றது. மாற்றப்படுகின்றது. இந்தியா உயர் சாதி இந்துக்களின் நாடாக மாற்றப்பட்டு வருகின்றது. மாநில சுதந்திரங்களும் படிப்படியாக பறிக்கப்படுகின்றன.
•Last Updated on ••Saturday•, 14 •November• 2020 08:59••
•Read more...•
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
- வெற்றிச்செல்வன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் 1982 தொடக்கம் 1987 வரைக்கும் இயங்கியவர். இவர் தற்போது முகநூலில் தன் இயக்க அனுபவங்களை எழுதி வருகின்றார். ஆனால் இவர் இயக்கத்தில் இயங்கிய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு அரசியல்வாதிகளுடன் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு இயக்கங்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை மையமாக வைத்து இவர் எழுதிவரும் பதிவுகள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் இந்திய மத்திய, தமிழக அரசியல்வாதிகளின் பங்களிப்புகளை, இந்திய உளவுத்துறையின் பங்களிப்புகளை விரிவாக எடுத்துரைக்கின்றன. இது இவரது தனிப்பட்ட அனுபவங்களின் உளப்பதிவுகள். அதனையும் வாசிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் இவ்வகையில் விரிவான பதிவுகள் எவையும் இதுவரையில் வெளிவரவில்லையென்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் சம்பவங்களை இவர் ஆவணப்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்துக்கேற்பப் பதிவு செய்து வருகின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வனுபவங்களில் இவர் தெரிவிக்கும் கருத்துகள் இவரது கருத்துகள். பதிவுகளின் கருத்துகளல்ல. இவற்றில் குறிப்பிடப்படும் பலர் இவற்றுக்கு மாற்றுக் கருத்துகள் கூறக் கூடும். ஆயினும் இவற்றின் முக்கியத்துவம் கருதி இவற்றை அனைவரும் அறிந்திருக்க வேண்டுமென்னும் அடிப்படையில் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -
பகுதி 1 எனக்கு நேரடியாகத் தெரிந்த ஈழ தமிழ்விடுதலை இயக்கங்களும் இந்திய தொடர்புகளும்!
டெல்லியில் பேச்சுவார்த்தைகளின் போது அது எல்லா கூட்டங்களிலும் பங்குபெற்றவன் என்ற முறையில் எனக்கு தெரிந்த உண்மைகள் நினைவில் உள்ள வரை பதிவுகளாகப் போட யோசித்துள்ளேன். விடுதலைஇயக்கங்கள் எல்லாம் டெல்லியில் பேசுவது ஒரு மாதிரி சென்னையில் வந்து அறிக்கை விடுவது இயக்கத் தோழர்களிடம் கூறுவது வேறு மாதிரி. தங்களை இந்திய எதிர்ப்பாளர்கள் போலவும், உத்தமர்கள் போல் காட்டிக் கொண்டதும் இன்று வரை வெளியில் வரவில்லை. எல்லா ஈழவிடுதலை தலைவர்களும் அவர்கள் விட்ட அறிக்கைகளுக்கும்அவர்கள் நடந்து கொண்ட விதங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை இன்று வரை பலர் அறியவில்லை. அவர்கள் பொது வழியில் தங்களை உத்தமர்களாக காட்டிக்கொள்ள விட்ட அறிக்கைகள் காரணமாமாகத் தாம் இன்றும் பலர் அவர்கள் மிகத் திறமையானவர்கள் சிந்தனையாளர்கள் சிறந்த தலைவர்கள் என எழுதி வருகிறார்கள் 1982கடைசியிலிருந்து 1987 ஒப்பந்தம் வரைஎனக்குத் தெரிந்த சம்பவங்களை மட்டும் தான் நான் எழுதுகிறேன். அதிலும் பல செய்திகள் கோர்வையாக இருக்காது. இந்தப்பதிவு இந்தியாவுக்கு ஆதரவான பதிவு அல்ல.உண்மையில் நடந்த சம்பவங்களை பதிவிட விரும்பிய படியால் எழுதுகிறேன்.
•Last Updated on ••Saturday•, 14 •November• 2020 08:57••
•Read more...•
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. சந்திரா நல்லையா அவர்களின் முகநூற் பதிவுகளிலிருந்து பெறப்பட்டது. நன்றி. - பதிவுகள் -
பதினேழாம் நூற்றாண்டில் 1692 தொடக்கம் அமெரிக்காவில் Massachusetts, Salem போன்ற பகுதிகளில்( witch-hunt ) சூனியக்காரிகளை அழித்தல் எனும் சம்பவம் நடந்ததை வரலாறுகளினூடாக அறிய முடிகிறது. இந்த சம்பவம் பெண்ணிலைவாதிகளினால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பதையும் காணமுடிகிறது. இவ்வாறு விமர்சித்தவர்களில் Silvia Ferederic என்பவர் குறிப்பிடத்தக்கவர் எனலாம். இதே சம்பவமானது ஐரோப்பாவில் 15, 16, 17 நூற்றாண்டு காலப்பகுதியில் ஜேர்மனி , சுவிஸ்லாந்து , பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற இடங்களிலும் நிகழ்ந்திருப்பதையும் அறிய முடிகிறது. ஆதலால் இந்த வரலாறு பற்றி சற்று முன்நோக்கி பார்ப்பது அவசியமாகிறது.
விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த பின்பும் மனிதர்கள் சூனியம், சாஸ்திரம் போன்ற அறிவிற்கு பொருந்தாத விடயங்களை இன்றும் மிகையாக நம்புவதைக் காணலாம். ஆனால் நானூறு வருடங்களுக்கு முன்பு அறிவுத்துறை வளர்ச்சியடையாத காலகட்டத்தில் அமெரிக்காவில் சேலம், Massachusetts போன்ற பகுதிகளிலும், மற்றும் உலக நாடுகளிலும் சூனியத்தில் நம்பிக்கையானது மிகவும் வலிதானகாகவே இருந்திருக்க முடியும். “ Witches “ என்பது சூனியக்காரிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தார்கள். இந்த சூனியக்காரி அடையாளமானது வெறும் வதந்திகளுடனும், சந்தேகங்களுடனும் தொடங்கியது எனலாம். இவ்வாறு ஏன் “சூனியக்காரி “ என்ற முத்திரை குத்தப்பட்டார்கள் என்பதை பரிசீலனை செய்வது இன்றியமையாததாகும்.
•Last Updated on ••Saturday•, 14 •November• 2020 08:57••
•Read more...•
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
காலாற நடந்துகொண்டிருந்தேன். எடைகூடிவிட்டது. வயிறும் பெருத்துவிட்டது. இலையுதிர்காலமும் நெருங்கிவிட்டது... இலை பழுக்கும் மரங்களைப் பார்ப்பது, என் வயோதிகத்தை எதிர்கொள்ளும் சவால். கியூபெக்கில் யாருக்குமே கொரானா வைரஸ் பற்றிய பயம் இல்லை என்று தெரிந்தது. வீதியில் உலவும் அத்தனைபேரிடமும் முகமூடி இருந்தது. முழங்கையிலும், மூக்குக்குக்குக் கீழேயும் அது பாதுகாப்பாக இருந்தது.
ஒரு கிழவரை வழிமறித்தேன். “பெரியவரே! முகமூடியை ஒழுங்காக அணியுங்கள்” என்றேன். அவரிடம் பழைய காலங்களின் தூசஷணங்கள் சில இருந்தன.. அதையெனக்குக் கற்பித்தார்! நாங்களிருவரும் கொந்தளிப்புக் குறைந்து பேச முற்பட்டபோது, “எனக்கு மாதம் 2800டொலர்கள் ஓய்வூதியம் வருகிறது...கனவானே! எனக்கு வாழ்வைப்பற்றி அறிவுரை கூறவேண்டாம்” என்றார்.
“ஐயா! உங்களது வாழ்வைப்பற்றியல்ல, என்னுடைய வாழ்க்கையைப்பற்றியே எனக்குக் கவலை” என விளக்க முயன்றேன். திரும்பவும், பழைய கியூபெக் மக்கள் பேசும் அன்பான தூஷணத்தைப்பேசிவிட்டு நகர்ந்து கொண்டார்.... கோபத்தோடு அவரைக்கடந்து சென்றபோது, என் கால் தடக்கித் தடுமாறியது... என்னுடைய பழைய தூஷணத்தைப் பொழிந்து தள்ளினேன்..
அது, உங்களெல்லோருக்கும் தெரிந்த பொன்வார்த்தைகள்தாம்.
•Last Updated on ••Saturday•, 14 •November• 2020 08:58••
•Read more...•
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. க.பாலேந்திரா அவர்களின் முகநூற் பதிவுகளிலிருந்து பெறப்பட்டது. நன்றி. - பதிவுகள் -
தினகரன் 04-07-1978
இம்மாதம் ஒன்பதாம் திகதி (09-06-78) மாலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ரென்னஸி வில்லியம்ஸின் (த கிளாஸ் மெனேஜரி) என்ற நாடகத்தின் தமிழாக்கமான “கண்ணாடி வார்ப்புகள்” மேடையேறியது. யாழ். வளாக இலக்கிய மன்ற நிதிக்காக க. பாலேந்திராவினால் தயாரிக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட இந்நாடகம் சமீப காலத்தில் யாழ்ப்பாணத்தில் மேடையேறிய ஒரு சில தரமான நாடகங்களிடையே முதன்மை வகிக்கிறது என்று துணிந்து கூறலாம். ரென்னஸி வில்லியம்ஸ் என்ற அமெரிக்க நாடகாசிரியரது புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்றுதான் (த கிளாஸ் மெனேஜரி) ரென்னஸி வில்லியம்ஸை ஒரு நாடகாசிரியராக பொதுமக்களிடையே ஜனரஞ்சகப்படுத்தியதும் பலதடவை வெற்றிகரமாக மேடையேற்றி புகழ்பெற்றதுமான இந்நாடகம் உலகப் புகழ்பெற்ற நாடகங்களின் வரிசையில் தவறாது இடம்பெறுவதாகும்.
ரென்னஸி வில்லியம்ஸ் தனது இளமைக்கால வாழ்க்கையனுபவங்களையே இந்நாடகமாக எழுதினார் என கூறப்படுகிறது. இளமையில் தந்தையால் கைவிடப்பட்ட குடும்பத்தில் தாயுடனும் சகோதரியுடனும் வாழ்ந்து கொண்டு சப்பாத்துக் கம்பனியில் வேலை பார்த்த ரென்னஸி வில்லியம்ஸ் குடும்பப் பொறுப்புகட்கும் தனது இலட்சியம் கனவுகள் ஆகியவற்றுக்கும் இடையே சிக்கித் தடுமாறும் ரொம் என்ற பாத்திரத்தை இந் நாடகத்தில் உருவாக்கினார். இப்பாத்திரத்தின் மூலம் ரென்னஸி வில்லியம்ஸ் தன்னையே பிரதிபலித்தார். ரொம் என்ற பாத்திரத்தை விட அமென்டா-தாய், லோரா-மகள், ஜிம்-விருந்தாளி ஆகிய பாத்திரங்கள் இந்நாடகத்தில் இடம் பெறுகின்றன. மொத்தத்தில் நான்கே பாத்திரங்கள் கொண்டு இரு அங்கங்களுடையதான 8 காட்சிகளுடையதாக இந்நாடகம் அமைந்துள்ளது.
வேலை செய்யுமிடத்தில் ஏற்பட்ட சச்சரவினாலும் குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினாலும் குடும்பத்தை விட்டு வெளியேறிய ரொம்மின் நினைவாகவே நாடகம் நடக்கிறது. 1940ம் ஆண்டுகளில் சிதைந்துகொண்டிருந்த அமெரிக்கப் பொருளாதாரச் சூழலில் தேங்கிக்கிடந்த மத்தியதர வர்க்க வாழ்க்கைப் பின்னணியில் இந்நாடகம் எழுதப்பட்டுளது. சாரமற்ற வாழ்க்கையில் சிறைப்பட்டுக் கிடக்கும் மனிதனின் தேம்பல் நாடகத்தின் அடிநாதமாக ஒலிக்கிறது.
•Last Updated on ••Monday•, 31 •August• 2020 02:53••
•Read more...•
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
10.11.2019 அன்று மகாவம்சத்தின் இறுதிப் பாகம் பூரணப்படுத்தப்பட்டு பெரிய விழாவொன்றில் அது வெளியிட்டுவைக்கப்பட்டது. பௌத்த பிக்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தவர் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய. சரியாக ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருவாரத்துக்கு முன்னர் தான் இது நிகழ்ந்தது. இலங்கையிலேயே பெரிய இனவாதக் கோட்டை என்று கருதப்படும் கிரிபத்கொட என்கிற பிரதேசத்தில் இது நிகழ்ந்தது. அங்கு தான் களனி பன்சலையும் இருக்கிறது. புத்தரின் மூன்றாவது இலங்கை விஜயம் இந்த களனியில் நிகழ்ந்ததாக மகாவம்சம் சொல்கிறது.
அரசுக்கு வெளியில்; வெவ்வேறு நபர்களால் உரையெழுதப்பட்ட மகாவம்சப் பிரதிகள் சந்தையில் உண்டு. இது கிரிபத்கொட ஞானானந்த தேரர் முதலாவது தொகுதியை மூன்று பகுதிகளாக எளிமையான சிங்கள விளக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பௌத்த விகாரைகளுக்கும், பாடசாலைகளுக்கும், நூலகங்களுக்கும் இதை இலவசமாக விநியோகிப்பதாக விளம்பரம் செய்து வருகிறார்கள். “சிங்களவர்களே மீண்டும் எழுங்கள்” என்கிற சுலோகத்துடன் அந்த விளம்பரங்கள் உள்ளன.
மேற்படி மகாவம்ச வெளியீடு குறித்து தமிழில் இந்த முக்கிய நிகழ்வு குறித்து செய்தியாகக் கூட எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்பது இன்னொரு கதை.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த கிரிபத்கொட ஞானானந்த தேரரின் உரையில் இப்படி குறிப்பிடுகிறார்.
“சிங்கள இனமின்றி பௌத்தமும் இல்லை. பௌத்தமின்றி சிங்கள இனமுமில்லை. இதனை தெளிவாக்குகின்ற நூலே மகாவம்சம்.”
இனத்தின் ஆதிக்கமும், மதத்தின் ஆதிக்கமும் ஒரு சேர கோலோச்சும் மரபுக்கு மகாவம்சத்தையே அவர்கள் மூலமாகக் கொள்வதை அறிந்திருப்பீர்கள்.
முதல் பிரதியை கோட்டபாயவின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு ஞானானந்த தேரர் மீண்டும் இப்படி கூறுகிறார்.
“துட்டகைமுனு எல்லாளனுடன் போர் புரிவதற்கு புறப்பட்ட போது மூன்று முக்கிய பௌத்த மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டு சென்றார். இந்த மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டு தான் துட்டகைமுனு எல்லாளனுடனான போரில் வென்றார். இப்போது நாம் எல்லோரும் அந்த உச்சாடனத்தை கோட்டாபய அவர்களின் தலைமையில் செய்யப்போகிறோம். சகல எதிரிகளையும் வீழ்த்தி அரசை அமைப்பதற்கு பௌத்த முப்பீடங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.”
•Last Updated on ••Saturday•, 22 •August• 2020 08:18••
•Read more...•
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
இலங்கையில் நான் மிகத் தீவிரமாக இயங்கிய 76-82 காலப் பகுதியில் , நாடகங்களை தொடர்ந்துமேடையேற்றியது மட்டுமல்ல , நாடகங்கள் பற்றிய விமர்சன கூட்டங்கள் , பத்திரிகை வாயிலாக நாடகங்கள் பற்றிய விவாதங்கள் போன்ற பலவற்றையும் நடத்தினோம்.நாடகம் குறித்து மிக உக்கிரமான விவாதங்கள் நடந்த காலம் அது.விவாதத்தின் மையப் புள்ளியாக நான் நெறிப்படுத்தி மேடையேற்றிய நாடகங்கள் அமைந்தன.
இலங்கையில் தேசிய அளவிலான பத்திரிகைகள் எமக்கு களம் கொடுத்தன. தமிழகத்தில் இப்படியான நிலைமை இருக்கவில்லை.1982 இல் நான் தமிழகம் சென்ற போது ஒரு இலக்கிய ஆளுமை என்னிடம் கூறியிருந்தார். அங்கு அப்போது, தீவிர நாடக முயற்சிகளுக்கு பெரிய பத்திரிகைகளில் ஒரு single column news கூட கொடுக்க மாட்டார்கள் என்று கூறினார்.
1979- காலப் பகுதியில் "தினகரன்"பத்திரிகையின் ஆசிரியப் பீடத்தில் அப்போது பணி புரிந்த திரு ஈ கே ராஜகோபால் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க "மேடைப் பிரச்சினைகள் " என்ற தலைப்பில் ஒரு பத்தி சில வாரங்களுக்கு எழுதினேன். அதில், நான் முக்கியமாக முன் வைத்த நவீன தீவிர தொடர்ந்த நாடகமேடையேற்றங்களின் தேவை பற்றியும்,நாடகப் பிரதிகளின் பஞ்சம் , சினிமா,வானொலி போன்றவற்றுக்கும் நாடகத்துக்கும் உள்ள வேறுபாடுகள் போன்ற பல விடயங்கள் பகிர படடன. இளைய தலைமுறை நாடக ஆர்வலர்களுக்கு அன்றைய ஈழத்து நாடக சூழலைப் பற்றி அறிந்து கொள்ளவும்,வரலாற்றை அறிந்து கொள்ளவும் இந்த எனது பதிவுகள் உதவலாம்.
"மேடைப் பிரச்சினைகள் " கட்டுரை ( பத்தி ) தொடரின் முதலாவதை இன்று பகிர்கிறேன்.தொடர்ந்து மற்றைய பதிவுகள் வரும். இந்தமுதலாவது கட்டுரை 03-06 1979 இல் பத்தி எழுத்தாக வருவதற்கு முன்னர் எனது நெறியாள்கையில் மழை , கண்ணாடி வார்ப்புகள் பலி , நட்சத்திரவாசி,ஒரு யுகத்தின் விம்மல் ,பசி,புதிய உலகம் பழைய இருவர்,ஒரு பாலை வீடு ஆகிய நாடகங்கள் பல தடவைகள் மேடையேறியிருந்தன.
•Last Updated on ••Friday•, 03 •July• 2020 12:18••
•Read more...•
என் ஊடக சகோதரர்கள் வேலை இழப்பு, பணி விடுமுறை, சம்பளக் குறைப்பு என்ற இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்ற செய்திகளைக் கேட்க எனக்கு வருத்தமே மேலிடுகிறது.அவர்களில் பலர் கடுமையான உழைப்பாளிகள். அவர்களின் பெயரோ முகமோ கூடப் பலருக்குத் தெரியாது (என்னுடைய நூல் ஒன்றை அது போன்ற பத்திரிகையாளர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்) அவர்களுக்கு இது போல் இடர் நேரிட்டிருக்கக் கூடாது. கொரானா உலகையே வாட்டிக் கொண்டிருக்கிறது கொரானா இப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்தும் என நான் நினைத்ததில்லை. ஆனால் இது போன்ற நிலை என்றேனும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எனக்குக் கொரானாவிற்கு முன்னரே அவ்வப்போது ஏற்பட்டதுண்டு.
நான் பத்திரிகை உலகில் நுழைந்த போது வார இதழ் அலுவலகங்களில் ஆசிரியர் துறையில் அதிகம் பேர் இருக்கமாட்டார்கள். பெரும்பாலும் பத்திரிகையின் உரிமையாளாரே ஆசிரியராக இருப்பார். வெறுமனே பெயருக்கு மட்டுமல்ல. எழுத்தாளராகவும், பத்திரிகையில் வெளியிடப்படுவதைப் பற்றி முடிவெடுப்பவராக இருப்பார். ஆசிரியர் துறையில் மூன்று அதிகம் போனால் நான்கு பேர் இருப்பார்கள். குமுதம் தமிழ் வார இதழ்களில் விற்பனையில் முதலிடத்தில் இருந்த போது ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், சண்முகசுந்தரம் (புனிதன்) ஆகிய மூவர்தான் ஆசிரியர் பிரிவில் முழு நேர ஊழியர்கள். பால்யூ அரசுப்பணியில் இருந்ததால் ரீட்டைனர் ஆக இருந்தார். ஆனால் அவரும் முழு நேரப் பணியாளர் போலத்தான் பங்களித்து வந்தார். ரஜத், பாமா கோபாலன் போன்றோர் வெளியிலிருந்து பங்களித்தார்கள். பின்னால் பிரபஞ்சன் முழு நேரப் பத்திரிகையாளராக இணைந்து கொண்டார்.எஸ்.ஏ.பி. யோடு சேர்ந்து இவர்கள் எல்லோரும்தான் தமிழில் அதிகம் விற்பனையாகும் இதழின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்து வந்தார்கள் ராகி, ஜராசு, புனிதன், இந்த மூவரும் சிறுகதை, துணுக்கு, தொடர்கதை முதல் வாசகர் கடிதத்தைத் தேர்வு செய்வது வரை பத்திரிகை தொடர்பான அத்தனை வேலையையும் செய்வார்கள். எழுதுவதோடு எடிட் செய்வது, லே அவுட்டைத் தீர்மானிப்பது, புகைப்படங்கள், ஓவியங்களைத் தேர்வு செய்வது என்று அஷ்டாவதானம் செய்து கொண்டிருந்தார்கள். இறுதி முடிவை எடிட்டர் (எஸ்.ஏ.பி) எடுப்பார். அச்சுக்குப் போகிற இறுதி நிலையில் கூட இது வேண்டாமே என்று அவர் சொல்லிவிட்டால் அந்தக் கடைசி நிமிடத்தில் அதற்கு மாற்றைத் தேடியாக வேண்டும். அப்போது ஆஃப்செட்டில் அச்சாகி வந்தது.பிளேட் என்பதுதான் இறுதி நிலை. பிளேட்டை மிஷினில் மாட்டி ஓட்டினால் அதிலிருப்பது அச்சாகிவிடும். பிளேட் போட்டபின் அம்மோனியா பிரிண்ட் என்று கட்டிட வரைபடங்களுக்கு நீல வண்ணத்தில் பிரிண்ட் எடுப்பது போல முழுப்பத்திரிகையும் அம்மோனியா பிரிண்டாக வரும் போது அதில் கூட எடிட்டர் திருத்தி நான் பார்த்திருக்கிறேன்.
•Last Updated on ••Friday•, 22 •May• 2020 12:16••
•Read more...•
 பதிவுகள் இணைய இதழ், திண்ணை இணைய இதழ் போன்றவை ஒரு காலகட்டத்தில் (முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் தோன்றியிராத காலத்தில், வலைப்பூக்கள் உருவாகாத காலத்தில்) உலகெங்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் பங்கு பற்றும் முக்கிய களங்களாகவிருந்தன. அக்காலகட்டத்தில் இலக்கிய ஆளுமைகள் பலரின் தொடர்புகள் ஏற்பட்டன. மொன்ரியால் மைக்கல் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் ஜீவன் கந்தையா, சதுக்கபூதம் என்னும் புனைபெயர்களில் வந்து விவாதங்களில் பங்கு பற்றியிருக்கின்றார். பதிவுகள் இதழில் பல படைப்புகளை எழுதியுள்ளார். 'ஏழாவது சொர்க்கம்' என்றொரு நாவல் எழுதியுள்ளார்.
தற்போது மொன்ரியாலில் வயோதிபர்களுக்கான முதியோர் இல்லமொன்றில் தலைமைச் சமையற்காரராக (Chef)வேலை பார்க்கின்றார். கொரோனாவின் தாக்கத்தால் உலகே அலறிக்கொண்டிருக்கும் தற்போதுள்ள சூழலில் இவரைப்போன்ற முன்னிலைப்பணியாளர்களின் சேவை போற்றுதற்குரியது. முதலில் அதற்காக இவர்களுக்கு எம் நன்றியைத்தெரிவிப்போம். அவர் தற்போது தனது கொரோனா அனுபவங்களைச் சிறு சிறு முகநூற் குறிப்புகளாகப் பதிவு செய்து வருகின்றார். அவை வெறு ம் குறிப்புகள் மட்டுமல்ல. இலக்கியத்தரமான குறிப்புகளும் கூட. அக்குறிப்புகள் கொரொனா மானுடர் மேல் ஏற்படுத்தும் உளவியல்ரீதியிலான தாக்கங்களை, உணர்வுகளை வெளிப்படுத்துகின்றதால் மேலும் முக்கியத்துவம் மிக்கவையாகவுள்ளன. அவற்றில் அண்மையில் அவர் எழுதிய குறிப்புகளை இங்கு தொகுத்துத் தருகின்றேன். அவை ஒரு குறிப்பிட்ட கால மானுட அனுபவங்களாக இன்னுமொரு காலத்தில் விளங்கும் என்பதாலும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -
உயில்(1): பெரு மழை.
இந்த இடர்க்கால வாழ்க்கையை நான் எழுத விரும்புகிறேன் . நான் வேலை செய்யும் geriatric centerஇல் உண்மையான இடர் வெளிவரமுடியாது. ஆங்கு, 99வீதமாமான வயோதிபகர்கள் யூதர்கள். நிர்வாகம் ஏதோவொரு காரணத்திற்காக எல்லா உண்மைகளையும் மறைக்கிறார்கள். இன்று நான் பகிர்ந்தளித்த 564 சாப்பாடுகளுக்குள், முப்பத்தியாறு சாப்பாடுகள் தனிமைப்படுத்தியவை. அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதாக நம்புகிறேன்.
•Last Updated on ••Saturday•, 16 •May• 2020 00:49••
•Read more...•
 இயற்கை அற்புதமானது, இயற்கை புதிரானது என்று இயற்கையை வர்ணித்த எமக்கு இன்று இயற்கை இரக்கமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலியாக்கிக் கொண்டிருப்பது மனவேதனையை அழிக்கின்றது. கொரானாவின் இந்தக் கொடுமையான தாக்கத்தினால் உலகமே துயரத்தால் உறைந்து போயுள்ளது.
லண்டன் வைத்தியசாலைகளில் தமது மிகுந்த அர்ப்பணிப்போடு உன்னத பணிபுரிகின்ற வைத்தியர்களையும், தாதிமார்களையும், பணியாளர்களையும், வயது வந்தவர்களையும், பெண்களைவிட கூடுதலாக ஆண்களையும், குறிப்பாக ஆசிய மக்களையும், ஆபிரிக்கர்களையும் இந்தக் கொரோனாவைரஸ் உயிர்ப்பலியாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய துயரத்தில் மூழ்கித்; தமது ஆதங்கங்களை வெளிப்படுத்த முடியாது துவண்டுபோய் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த வேளை ஆத்மவெளியில் தன் கலைப்பயணத்தை முன்னெடுத்து வந்து ஈழத்துக் கலைஞனின் வாழ்வையும் இது பறித்துவிட்டதாக அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனேன்.
ஈழத்தில் யாழ் தெல்லிப்பளையில் கலைக்குடும்பத்;தில் பிறந்தவர் மறைந்த பிரபல மிருதங்க வித்துவான் ஆனந்தநடேசன். இவரின் தந்தை கந்தையா ஓவியராகவும் ஆசிரியராகவும், தாயார் இராசமலர் மகாஜனாக் கல்லூரியின் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்கள். ஏப்ரல் 16ஆம் திகதி அவரது சுவாசக் காற்றைக் கொரோனா நிறுத்திய கொடூர செய்தி எம் நெஞ்சை அதிரவைத்தது. குறிப்பாக அவர் ஸ்தாபித்துவந்த ‘ஆனந்தாலயா மிருதங்கப் பள்ளியில்’ அவரிடம் மிருதங்கக் கலையைப் பயின்ற மாணவர்களைக் குமுற வைத்தது. அன்பும் அரவணைப்பும் ஆத்மார்த்தமான கருணையின் வடிவில் பயணிக்கும் அருமையான ஆசான் அவர்.
•Last Updated on ••Thursday•, 02 •July• 2020 21:53••
•Read more...•
எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் மே 3!
எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தின் முக்கிய அம்சங்களாக நான் கருதுவது: ஆழமான விடயங்களை மிகவும் இலகுவான நடையில் சாதாரண வெகுசன வாசகர்களுக்கு வழங்கியது, சிறு சிறு வசனங்களை வாசகர்களைக் கவரும் வகையில் அவற்றில் புதுமைகளைப் புகுத்தி மொழிக்கு வளம் சேர்த்தமை, பல்வேறு அறிவியல் துறைகளையும் சாதாரண வெகுசன ஊடக வாசகர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையான , புரிந்துகொள்ளும் நடையில் வழங்கியமை இதன் மூலம் மொழியை வளப்படுத்தியதுடன், ஒரு தலைமுறையை அறிவியல் எழுத்துகளில் ஆர்வம் கொள்ள வைத்தமை ஆகியவற்றைக் கூறுவேன்.
விஞ்ஞானச் சிறுகதைகள், நாவல்கள், மர்ம நாவல்கள், சங்க இலக்கியப் படைப்புகள் இவற்றையெல்லாம் வெகுசன வாசகர்கள் ஆர்வத்துடன் வாசிப்பதற்கு அவரது எழுத்துகள் தூண்டின. அவர் பாதிப்பு எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
என்னைப்பொறுத்த வரையில் வாசிப்பின் வளர்ச்சியில் அவரது எழுத்துகளுக்கும் ஒரு கட்ட முக்கியத்துவமுண்டு. குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம் என்று பல்வேறு படிக்கட்டுகளை உள்ளடக்கியதுதான் ஒருவரின் வாசிப்பின் பரிணாம வளர்ச்சியும். அவ்வளர்ச்சியில் சுஜாதாவின் முக்கிய பங்களிப்பாக வெகுசன இலக்கியத்துக்கு அவராற்றிய பங்களிப்பைக் குறிக்கலாம். ஒருவர் தீவிர வாசிப்புக்கு எடுத்த எடுப்பில் நுழைந்து விடுவதில்லை. குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம் , வெகுசன இலக்கியம் என்று பல படிகளைக் கடந்துதான் அந்நிலைக்கு வருகின்றார். அவ்விதம் வருபவர் கூட எப்பொழுதுமே தீவிர வாசிப்புக்குள் மூழ்கிக் கிடப்பதில்லை. அவ்வப்போது அவ்வாசிப்பிலிருந்து ஓய்வு கொடுப்பதற்காக எளிய, இலேசான வாசிப்பிலும் ஈடுபடுவதுண்டு. அப்பொழுதும் கை கொடுப்பவை இவரைப்போன்றவர்களின் எழுத்துகளே. வாசிப்பின் ஒரு படியில் இன்பம் தந்த படைப்புகள் என்பதால் , பின்னர் அவை அழியாத கோலங்களாக வாசகர்கள்தம் உள்ளங்களில் நிலைத்து நின்று விடுவதால், அந்நினைவுகளுக்காக இத்தகைய படைப்புகளை அவ்வப்போது தட்டிப்பார்ப்பதுமுண்டு. அவ்வகையில் இவ்வகை எழுத்துகள் முக்கிய பங்கினையாற்றுகின்றன.
•Last Updated on ••Sunday•, 03 •May• 2020 18:19••
•Read more...•
 சுஜாதாவின் எழுத்துக்களில் நான் ஈர்க்கப் பட்டது அவரது துப்பறியும் கதைகள் மூலமே.அவரது கணேஸ் வசந் எனும் பாத்திரங்களின் படைப்பு நாம் அவர்களுடன் பயணிக்கும் அனுபவத்தை நம் முன் கொண்டு வந்து நிறுத்தும் .
அனேகமாக அவரது துப்பறியும் புனைவுகள் முழுவதையும் வாசித்திருக்கிறேன் எப்போதும் பி டி சாமி முதல் ராஜேஸ்குமார் என நீளும் அத்தகைய நாவல்களில் மூழ்கிப் போனது ஒரு காலம்.மூதூர் பட்டினசபை நூலகத்தில் இந்த வகை நாவல்கள் நிறையவே இருந்தன.சுஜாதா எனக்கு அறிமுகமானது "கரையெல்லாம் செண்பகப் பூ " மூலமே.ஆனந்த விகடனில் அந்த நாவல் வந்த போது பாக்கியராசா அண்ணன் அந்த நாளில் ஆனந்த விகடனை எங்களூரில் கிரமமாக எடுக்கும் தீவிர வாசிப்பாளர்.அவர் வாசிப்புக்கு எல்லையே கிடையாது. கரையெல்லாம் செண்பகப்பூ இப்போது நினைத்தாலும் அந்த வாசிப்பின் நினைவாய் நீள்கிறது.
தமிழ் நாட்டு வார சஞ்சிகைகள் அவர் கதைகளால் நிறைந்து கிடந்தன கடைசி வரை அவர் ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக பலவற்றை எழுதி வந்தார். எனக்கு எழுத்தின் மூலம் அறிமுகமானது போலவே அவர் எழுத்தால் என் மகளும் ஈர்க்கப் பட்டாள் அவரது விஞ்ஞான அறிவியல் சார்ந்த எழுத்துக்கள் அவளுக்கு பிடித்துப் போனது.
•Last Updated on ••Sunday•, 03 •May• 2020 19:07••
•Read more...•
 சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) 02/20/2020 இலே தொண்ணூற்றுமூன்றாம் அகவையை எட்டியிருக்கும் ஹொலிவுட் நடிகர். நாற்பதுகளிலே போல் உரோபிசன் (Paul Robeson), ஐம்பதுகளிலே ஹரி பெலொபாண்டே (Harry Belafonte), என்ற வரிசையிலே வெள்ளைத்தோலர்களின் அருகிலே பத்தோடு பதினொன்றாய் நின்று எடுபிடி வேலைசெய்யும் (Gone with the Wind இன் மாமி, போக், பிரிஸி போன்ற) கறுப்பினப்பாத்திரங்களுக்கு மாறாக, தோல் நிறம் சார்ந்த சமூகப்பிரச்சனைகளை அக்காலகட்டத்தின் எல்லையை மீறியோ மீற முயன்றோ பேசமுயன்ற ஹொலிவுட் படங்களின் நடிகராய் அறுபதுகளிலே சிட்னி பொய்ரியேய் வருகிறார். ஒப்பீட்டளவிலே உரோபிசனுக்கிருந்த வசதியும் உயர்கல்விபெறும் வாய்ப்பும் கரிபியன்பின்புலத்தைக் கொண்ட நண்பர்களான பின்னைய இருவருக்குமிருக்கவில்லை. ஆயினும், ஐம்பதுகளிலே நியூ யோர்க்கின் வட அமெரிக்கக்கறுப்பர் நாடக அமைப்பினூடாகத் தம்மை வெளிக்காட்டி ஹொலிவுட்டினுள்ளே நுழைந்தவர்கள். இவர்கள் திறந்துவைத்த கதவு ||ஓரளவுக்கு|| வெள்ளையருக்குமப்பால் அனைத்துத்தோலர்களையும் உள்ளடக்கும் வெளியினை ஏற்படுத்தித் தந்திருக்கின்றதெனலாம். அதற்கு அறுபதுகளிலே மார்டின் உலூதர் கிங்-இளையவர் முன் நின்று போராடிய குடிசார் உரிமைக்கான அமைப்பு மட்டுமல்ல, ஊடகங்களாலே பேச மறுக்கப்படும் ஆயுதம் தாங்கிய கறுப்புச்சிறுத்தைகள் போன்ற அமைப்புகளும் காரணமாகின்றன! அதேவேளையிலே கிங்கோடு வன்முறையறு போராட்டங்களிலே தம் திரைச்செல்வாக்கினையும் முதலாய்ப் போட்டுக் கலந்துகொண்டவர்களிலே பெலொபாண்டேயும் பொய்ரியேயும் அடங்குவார்.
பார்த்த பொய்ரியேயின் படங்களிலே குறிப்பிடத்தக்கவையெனக் கருதுகின்றவை, The Defiant Ones, Lilies of the Field, A Raisin in the Sun, Guess Who's Coming to Dinner, To Sir, with Love, In the Heat of the Night. They Called Me Mr. Tibbs படம் அவரின் In the Heat of the Night படத்தின் பாத்திர வெற்றியை முதலிட்டுக் காசு காண வந்த படமாகவே தோன்றியது. தொண்ணூறுகளிலே வந்த Sneakers, The Jackal இரண்டும் அக்காலகட்ட நட்சத்திரப்பட்டாளங்களோடு இரண்டாம் நிலைப்பாத்திரமாக அவர் வந்துபோகும் நகைச்சுவை, விறுவிறுப்புப்படங்கள். அவரின் அறுபதுகளிலே வந்த படங்களின் சமூகம் சார்ந்த பிரச்சனைகளைப் பேசும் தேவை அவற்றிலிருக்கவில்லை அல்லது அவற்றுக்கிருக்கவில்லை.
The Defiant Ones: சிறையிலிருந்து தப்பும் கறுப்பு-வெள்ளைக்கைதிகளூடாக ஐம்பதுகளின் பிற்பகுதியின் அமெரிக்கக்கறுப்புவெள்ளை நிலவரத்தைப் பேசும்படம். நடிகை ஜேமி லீ கேர்டிசின் தந்தை ரொனி கேர்டிசுடன் இணையராக பொய்ரியேய் தோன்றிய படம். ஒட்டாத சமாந்திர வெளிகளிலே அருகருகே வாழ்கின்றவர்களை வெளியினைப் பகிர்ந்தாகவேண்டிய வெட்டுத்துண்டுகளுள்ளே இருக்க நெருக்கினால், அவர்களும் சமூகமும் எப்படியாக எதிர்கொள்ளுமென்பதைச் சமூகப்பரிசோதனை செய்யும் படம். பின்னாலே, இதே நிலைமுரணை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிப் பேசும் பல படங்கள் வந்தன. எடி மேர்பி- டான் ஆர்க்ரோய்ட் நடித்த Trading Places, இரிச்சர்ட் ப்ரையர்- ஜீன் வைல்டர் நடித்த Silver Streak மற்றும் See No Evil, Hear No Evil உள்ளிட்ட சில படங்கள் இப்படியான சூழலை உருவாக்கின நகைச்சுவைப்படங்கள். இதுபோன்ற முரண்பாடுடையோரைச் சூழ்நிலையமுக்கத்தாலே வெளியைப் பங்கிடும் நிலையை உருவாக்கிச் சமூகச்சிக்கல்களைப் பேசும் போர்க்காலப்படங்கள் அமெரிக்காவுக்கு அப்பாலும் அண்மைக்காலத்திலே விரிந்திருக்கின்றது; பொஸ்னியச்சிக்கலை முன்னிட்ட No Man’s Land ஓரெடுத்துக்காட்டு.
•Last Updated on ••Monday•, 24 •February• 2020 12:11••
•Read more...•
- முகநூல் எனக்கு வழங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர். இவர் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துவரும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர்தான் மதிப்புக்குரிய ஜவாத் மரைக்கார். இவரது முகநூற் பதிவுகள் இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய அரிய தகவல்களை உள்ளடக்கியவை. அண்மைக்காலமாக இவர் பதிவு செய்துவரும் கவிதைச் சமர் பதிவுகள் அவ்வகையானவை. ஐம்பதுகளில் பேராசிரியர் கைலாசபதி ஆசிரியராகவிருந்த காலகட்டத்தில் கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன், முருகையன் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கவிதைச் சமர் இது. அச்சமர் பற்றிய பதிவுகள் அவை. வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய பதிவுகள் இவை. - பதிவுகள் -
பாரதி கவிதைச் சமர் - 1
1950 களின் இறுதிப் பகுதி . தினகரனின் பிரதம ஆசிரியராக கலாநிதி க .கைலாசபதி கடமையாற்றிக் கொண்டிருந்த காலம். பாரதியார் நினைவு நாளையொட்டி , ஞாயிறு தினகரனில் ஒரு கவிதை வெளிவந்தது. கவிதையின் தலைப்பு " சூட்டி வைத்த நாமங்கள் சொல்லுந் தரமாமோ? ". கவிதையை எழுதியிருந்தவர் , 'தான்தோன்றிக் கவிராயர்'.
பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன் அங்கதக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதும் தான்தோன்றிக் கவிராயர் என்ற புனைபெயரிலேயே அவர் தனது கவிதைகளை எழுதுவது வழக்கம் என்பதும் இலங்கை இலக்கிய உலகில் பிரசித்தம்.
மேற்குறிப்பிட்ட கவிதையைப் பிரசுரித்ததோடு கைலாசபதி நின்றுவிடவில்லை . முருகையன், மஹாகவி போன்ற பிரபல கவிஞர் பலருடன் தொடர்பு கொண்டு ஒரு கவிதா மோதலையே ஏற்படுத்தினார். இம்மோதலில் பிரசவமான கவிதைகள் "பாரதி கவிதைச் சமர்" என்ற பெயரில் தொடர்ச்சியாக வெளிவந்தன. இச்சமரில் முதலாவது மறுப்பு , " நீர் கண்ட தோற்றம் நிசமல்ல , தான்தோன்றீ ! " என்ற தலைப்பில் கவிஞர் இ .முருகையனால் எழுதப்பட்டது. அதற்கு தான்தோன்றிக் கவிராயர், "ஏலே முருகையா ! ஏன் உமக்கு இந்தலுவல் ? " என்று பதில் கவிதை எழுத நீலாவணன் , மஹாகவி , மு.பொ ., ராஜபாரதி போன்ற பல கவிஞர்கள் உள்ளே நுழைந்து தமக்குள்ளேயே மோதிக்கொள்ள .....கடைசியில் முருகையனும் தான்தோன்றிக் கவிராயரும் ஓரணியில் நின்று ஏனையவர்களைச் சாட...... கவிதைப் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
இக்கவிதைச் சமரைச் சுவைத்திராதவர்களுக்காகவும் சுவைத்து மறந்தவர்களுக்காகவும் எனது அடுத்த பதிவிலிருந்து தொடர்ச்சியாக அவற்றைத் தர எண்ணுகின்றேன்.
•Last Updated on ••Wednesday•, 13 •November• 2019 01:38••
•Read more...•
- பாடகர் டி.எம்.எஸ் (டி.எம்.செளந்தரராஜன்) அவர்களின் நினைவு தினம் மே25. அதனையொட்டிய நினைவு பகிர்தல் -

பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மறைந்து இன்றுடன் ஆறு வருடங்கள் ஆகின்றன.. ஒருவரின் மரணத்தை அவன் இறந்த நாளிலிருந்து கணிப்பதுதான் வழமை. ஆனால் ஒரு கலைஞனின் மரணம் வேறு விதமாகவும் நிகழ்ந்து விடுவதுண்டு . புகழ் வெளிச்சம் தன்னை விட்டு மெல்ல மெல்ல அகலத் தொடங்கும் அந்தக் கணத்திலிருந்து அவன் தனக்குள் சிறிது சிறிதாக மரிக்கத் தொடங்குகின்றான். அப்படி ஒரு சூழ் நிலையில்தான் டி.எம்.எஸ். அவர்களை நான் சந்தித்தேன். நான் அவரை சந்தித்த போது அவருக்கு எண்பத்தொன்பது வயது.
உரையாடல் சுவாரஸ்யம் கொண்ட ஒரு கட்டத்தில் ''வா ... என் அறைக்குள்ளயே உட்கார்ந்து சாவகாசமாகப் பேசலாம் '' என த் தன்னுடைய அறைக்குள் என்னை அழைத்துச் சென்று விட்டார் . 'புகழின் வெளிச்சத்தில்' வாழ்ந்து பழக்கப் பட்ட ஒரு கலைஞனின் அந்திம காலத்து தனிமையின் இருளையும் ,துயரத்தையும் அவருடன் கழித்த அன்றையப் பகல் பொழுதில் உணர்ந்தேன்.
''தில்லையம்பல நடராஜா '','தாழையாம் பூ முடிச்சு..',ஒரே ஒரு ஊரிலே ..' பாடல்களை எல்லாம் பெட்டி மொடல் பிலிப்ஸ் ரேடியோவில் நான் ஆர்வத்துடன் கேட்ட அந்தக் காலத்தை நினைவு கூர்ந்தேன். அப்போது சின்னப் பையனாக அறியாப் பருவத்தில் இருந்த நான் வானொலிப் பெட்டியின் பின்புற துவாரம் வழியாக அவற்றைப் பாடிய டி.எம்.எஸ்.ஸை தேடிய கதையையும் கூறினேன். ...எம்.ஜி.ஆர்.,சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் . போன்றோர்கள் திரையில் தோன்றி வெளிப்படுத்திய குணச்சித்திரங்களை திரைக்குப் பின்னால் குரல் வழியாக நடிப்புடன் பாடிய அவருடைய அபூர்வ ஆற்றலைப் பற்றி நான் சொல்லிக் கொண்டே போனேன். என் சிறு வயதில் பிரியத்துக்குரிய நடிகர் எம்.ஜி.ஆர். தன் பாடல்களில் அவர் முன் வைத்த கருத்துகளால் உலகத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் வரப் போகிறது என நான் நூறு வீதம் நம்பியதையும் ,அவற்றை இருநூறு வீத நம்பிக்கையுடன் டி.எம்.எஸ். பாடிய தொனியையும் சிலாகித்துக் கூறினேன்.
இறந்த காலங்கள் பற்றிய பேச்சைத் தவிர்த்து ,எதிர் காலம் பற்றிய கனவுகளையே அவர் வெளிப் படுத்த முயன்று கொண்டிருந்தார்..நான் அவரை அவ்வப்போது நிகழ் காலத்துக்கு கொணர மிகவும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன்..அசாத்தியமான எதிர்கால ஆசைகளுக்கும் , ஒளியின் கனவாகிப் போன இறந்தகாலத்துக்கும் ,தனிமையின் துயரும்,இருளும் படிந்த நிகழ்காலத்துக்கும் நடுவே மாறி மாறி அவருடைய ஊஞ்சல் பயணித்துக் கொண்டிருந்தது. சில வேளைகளில் தூக்கக் கலக்கத்தில் பேசுவது போல் அவர் வார்த்தைகள் வெளிவந்தன .
''ஒரு கலைஞனுக்கு மிகப் பெரிய தண்டனை என்ன தெரியுமா? தனிமை... இதோ பார்..இந்த வீட்டில் என் மனைவியும் நானுந்தான் இப்போது இருக்கிறோம். அவளுக்கும் உடம்பு முடிவதில்லை...ஒரு காலத்தில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? என்னுடைய அப்போதைய சம்பாத்தியத்தில் இந்த சென்னையின் அரை வாசிப் பகுதியையே வாங்கியிருக்கலாம் ... ஆனால் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை.ஜாலியாக வாழ்ந்து விட்டேன்.... இப்போது யாருமில்லை... உன்னைப் போல் எங்கிருந்தோ ,எவனோ ஒருவன் ரசிகன் என்று சொல்லிக் கொண்டு வருகின்றான்...அதுதான் நான் தேடிய பெரிய சொத்து....''
•Last Updated on ••Saturday•, 25 •May• 2019 09:26••
•Read more...•
- முகநூலில் வெளியாகும் கலை, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் இப்பகுதியில் பிரசுரமாகும். இவ்விதமான பதிவுகள் முகநூலில் கலை, இலக்கிய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவன. - பதிவுகள்.காம் -
அண்மையில் தி ஜானகிராமனின் ‘செம்பருத்தி’யை பலகாலம் கழித்து மீண்டும் வாசித்தேன். சாவி ஆசிரியராய் இருந்த தினமணிக் கதிரில் 1968ல் தொடராக வந்த புதினம் ‘செம்பருத்தி’.
தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒரு அசைக்கமுடியாத இடம் தி.ஜானகிராமனுடையது. தஞ்சை மண்ணின் மணம்கமழும் எழுத்து. காட்சி சித்தரிப்புகளிலும், உணர்வுகளைத் துல்லியமாக எழுத்தாக்கும் நுண்மையிலும் அவருக்கு இணை அவரே தான். அவருடைய பத்து நாவல்களில் மிகவும் அதிகம் விமரிசிக்கப்பட்டவை அம்மா வந்தாள், மோகமுள், மற்றும் மரப்பசு ஆகிய மூன்றும் எனில், அதிகம் கவனம் பெறாத நாவல் அவருடைய ‘செம்பருத்தி’ என சொல்லலாம்.
நிகழ்வுகளைக் கட்டமைக்கும் நேர்த்தி, சரளமான நடை, கதைசொல்லலை உரையாடல்களாலேயே நகர்த்திக் கொண்டுபோகும் லாவகம், சொல்லாமல் போனவற்றை ஓரிரு சொற்களில் பூடகமாய் இட்டுநிரப்பும் ஜாலம்....இவை தி ஜாவின் தனிமுத்திரை.
கண்களைக் கட்டிக்கொண்டு கம்பிமேல் நடக்கும் கழைக்கூத்தாடி நமக்குள் எழுப்பும் பரபரப்பையும் பரிவையும், அவருடைய முக்கிய வார்ப்புகள் எழுப்புவதை அந்தப் படைப்புகலைஞனின் வெற்றி எனத்தான் கொள்ள வேண்டும். ஆண்பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களை, மனிதமனம் காமம் சார்ந்து கொள்ளும் கோணல்களை, கட்டுமீறும் வேட்கைகளை, வெறும் நினைவுகளாகவே மட்டும் முயங்கும் ஆசைகளை தி ஜா போன்று சித்தரித்தவர்கள் இல்லை. அந்த விவரிப்பு, ஒரு நூல் பிசகினாலும் ஆபாசமாய் அனர்த்தப் படக்கூடிய கட்டங்களை, அந்த எல்லையின் இழையிலேயே தடுமாற்றமின்றி கொண்டுசெல்லும் நுட்பம்......எவ்வளவு பெரிய படைப்பாளி தி ஜா?!
ஒரு சாதாரண கதையோட்டத்தை தன் புனைவின் மந்திரத்தூரிகையால் பெரும்சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார் தி ஜா.
தி ஜா வின் படைப்புகளில், செம்பருத்தியில்தான் பெண்களின் சித்தரிப்பு ஏதோ ஒருவகையில் துர்க்குணமே சற்று தூக்கலாக காட்டியிருப்பதாய்ப் படுகிறது.
கதையின் ஓட்டத்தினூடே ஏதோ வரியில், ஒரு உரையாடல் துணுக்கில் கதையின் ஒரு முக்கிய முடிச்சை பொதித்து வைக்கும் தி ஜாவின் கதைகூறல் மிக நளினமானது. நாவலை படிப்பவர்கள், தன் வாசகத்தன்மையின் மேன்மையை தானே உணர்ந்துகொள்ள, அவர் வைக்கும் வசீகரமான ‘மின்னல்வேக வினாவிடை பரிட்சை’யோ இது என்று தோன்றுகிறது.
தி ஜா வைப் படிக்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்தவுடன் மனசு பரபரவென்று தன்னை அலம்பிவிட்டுக் கொண்டு தெளிந்து போவதும், படிக்கத் தொடங்கியவுடனே புத்தி தன்னை கூர்படுத்திக் கொள்வதும், வாசிப்பின் போது, இரண்டாம் பக்கத்திலேயே சூட்சும சரீரம்தாங்கி, ஜீவரசம் ததும்பும் கதை மாந்தரோடு தாமும் ஒரு பாத்திரமாய் மாறிப்போவதும் தி ஜா வின் ரசனைக்கார வாசகர்களின் சுபாவம். கேள்விகள் எழும்பாத மோனத்திளைப்பு. கேள்வியெல்லாம் எழுவது சில மீள்வாசிப்புகளுக்குப் பிறகுதான். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம் மனசே சொல்லும் ஒரே ஒரு பதிலும் ஒன்றுண்டு.
•Last Updated on ••Wednesday•, 10 •April• 2019 09:09••
•Read more...•
முகநூல் கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில் மிகப்பயனுள்ளதாக விளங்குகின்றது. இலக்கியப்படைப்புகள், இலக்கிய ஆளுமைகள் பலர் பற்றிய விபரங்கள், கருத்துகள், எழுத்தாளர்கள் பலரின் பல்வகை விடயங்களைப்பற்றிய எண்ணங்கள், படைப்புகளென அது மிகவும் வளமாகச் செழுமையாக விளங்குகின்றது. முகநூலில் அவ்வப்போது என் கவனத்தை ஈர்க்கும், கலை, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமெனக் கருதுகின்றேன். எழுத்தாளர் எச்.எல்.எம்.ஹனீபாவின் “யூழேன் இயொனெஸ்கோ” வின் 'காண்டாமிருகம்' பற்றிய பதிவும் அத்தகையது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.- வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் பதிவு கிழே:
“யூழேன் இயொனெஸ்கோ” வின் 'காண்டாமிருகம்' - எஸ்.எல்.எம்.ஹனீபா -
உலகின் உன்னத மொழிகளில் ஒன்றான பிரெஞ்ச் மொழியின் இலக்கிய வடிவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை. நாம் வாழும் நமது வாழ்வையே நமக்கு காட்சிப்படுத்துவதோடு அத்தகைய இலக்கியம் நாடக வடிவுறும்போது நாமும் அங்கே நடிகர்களாகிறோம். அது பற்றி “காண்டாமிருகம்” என்ற இந்த நாடகத்தை எழுதிய உலகப் புகழ்பெற்ற “யூழேன் இயொனெஸ்கோ” இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
“அனைத்துப்பார்வையாளர்கள் நெஞ்சத்திலும்ஒரு வேதனையான உணர்வை, சங்கடத்தை, ஒரு விதமான வெட்கத்தை உண்டுபண்ண வேண்டும். சோகமானது ஜூர உணர்விற்கு மாறாவிட்டால் என்னுடைய சந்தோசம் துன்பத்திற்கு மாறாவிட்டால் நான் மிகச் சாதாரணமானவனாகவும், உணர்வற்றவனாகவும் உணர்கிறேன். நான் என்னை அவமதித்துக் கொள்கிறேன். ஏனென்றால் என்னால் விசயங்களின் எல்லை வரையில் செல்ல முடியவில்லை என்று அர்த்தம். ஒருவன் வடக்கில் வெகுதூரம் செல்ல வேண்டும் தெற்கை அடைவதற்கு, என்கிறார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் சில வக்கிரங்கள் நாகரீகமாகக் கருதப்பட்டு, எல்லோரும் அதில் கண்ணை மூடிக்கொண்டு விழுவது நமக்கு தெரிந்ததே. பாசிசம், நாசிசம், சர்வாதிகார நாடுகளின் அரசு முறை, மதவாதம். ஆனால் ஒவ்வொருவரும் விரைவில் பரவிவரும் இந்த நாகரீகத்தை தழுவிக் கொள்ள ஒரு காரணம் கற்பிக்காமல் போக முடிவதில்லை. எனவே மனத்தின் ஒரு மூலையில் ஒரு உறுத்தலும், அதற்குச் சமாதானம் சொல்ல ஒரு தேவையும் தெளிவாகின்றன. இந்த நாடகத்தில் ஒருத்தி கணவனை கைவிட முடியாததால் காண்டாமிருகமாக மாறுகிறாள்; மற்றவர்களுக்கெல்லாம் அறிவுரை தரும், நம்பிக்கை தரும் ஒரு மனிதன் தான் முதலாவதாக காண்டாமிருகமாகிறான். ஒருவன் மிகத் தெளிவாக சிந்தித்து பேசிவிட்டு, ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்று கூறி மாறுகிறான். எல்லோரும் மாறும் போது மாறாமல் இருப்பவர்களுக்கு தங்களைப் பற்றியே சந்தேகம் வருவது இயல்பு. இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரம் எளிதாக வருத்தத்திற்குள்ளாகிறவன், தவறுகளுக்கு தன்னைத்தானே மிகவும் நொந்து கொள்கிறவன், உள்மொழி விடாமல் ஒலிக்கும் மனதுடையவன், சுயசந்தேகங்களினால் விரட்டப்படுகிறவன், ஆனால் எல்லாவற்றிற்கும் எதிராக நின்று கடைசியில் மாறுதலைத் தவிர்த்து நின்று, மனிதனாக எஞ்சிப் போராட தீர்மானிக்கிறவன் இவன்தான். மனிதத் தன்மைகளை வெளிப்படையாகக் கொண்டவன் என்பதினால்.”
•Last Updated on ••Wednesday•, 03 •April• 2019 21:04••
•Read more...•
நான் மௌனமாகவும் இல்லை உரத்த குரலில் பாடலும் இல்லை மனதுக்குள் ராகம் ஒன்றை முணுமுணுக்கிறேன்.” (வாஜ்பாய் எழுதிய கவிதை வரிகள்)
இந்த வரிகளுக்குள் அம்மனிதன் வாழ்ந்தான், வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போதும் நினைவுகளின் ஈரத்தில் அந்த மனிதனின் நாட்கள் .. அந்த ராகம் அபூர்வ ராகம் தான். குடும்பம் காதல் கற்பு இப்படியான சமூக எல்லைக்கோடுகளுக்குள் வரையறுக்க முடியாமல் வாழ்ந்து முடிந்த வாழ்க்கை … இதோ உடல் தளர்ந்து நடை முடங்கி படுக்கையில் ஒதுங்கி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் இன்றைய பொழுதுகளில் அந்த மனதுக்குள் ராகமாக ஓடிக்கொண்டே தான் இருக்கும்.
அவருடைய ராஜகுமாரியும் அவரும் குவாலியர் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். வாஜ்பாய் புத்தகத்தில் வைத்து அனுப்பிய காதல் கடிதத்தின் சொந்தக்காரி. ஆனால் காதலை அவள் ஏற்றுக்கொண்டதும் அவள் எழுதிய கடிதமும் வாஜ்பாயால் வாசிக்கப்படாமல் புத்தகத்தின் பக்கங்களிலேயே முடிந்துப் போனது.
1947 இந்திய சுதந்திரம் மட்டுமல்ல, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் சோகம் டில்லியைச் சுற்றி ஓலமிட்ட போதுதான் ராஜ்குமாரியின் காதலும் பிரிவினையில் தன்னை துண்டுகளாக்கி கொண்டது. எல்லைக்கோடுகள் வரையப்பட்டன. இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரி நாடுகளாகிப்போயின.
“உங்கள் நண்பர்களை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம், ஆனால் உங்கள் அண்டைநாடுகளை மாற்றிக்கொள்வது சாத்தியமில்லை”
வாஜ்பாய் சொல்லிய கருத்துதான். காதல் திருமணத்தில் முடியாமல் போகலாம்… ஆனால் காதலர்கள் அதனாலேயே முடிந்துப் போய்விடுவதில்லை” (இது என்னுடைய வரிகள்!!) வாழ்க்கை இருவரையும் வெவ்வேறு திசைகளை நோக்கி பயணிக்க வைத்தது. ராஜ்குமாரி திருமணத்திற்குப் பின் ராஜ்குமாரி கவுல் ஆனார். வாஜ்பாய் அரசியலில் முழுமூச்சுடன் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பயணப்பட்டுவிட்டார். விதி அவர்களுடன் புதிதாக விளையாடியது. மீண்டும் டில்லியில் அவர்கள் சந்திக்கிறார்கள். மீண்டும் மீண்டும் மீண்டும்.. நினைவுகளில் வாழ்ந்தவர்கள் .. தங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள். சந்திப்புகள் தொடர்கின்றன… காத்திரமான உரையாடல்களுடன், கவிதைகள் அவர்கள் தோட்டங்களில் பூத்துக்குலுங்குகின்றன. கணவர் தன் இரு பெண் குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜ்குமாரி கவுல் அவர்களின் வீட்டில் நிரந்தர உறுப்பினராகிவிடுகிறார் வாஜ்பாய்.
•Last Updated on ••Wednesday•, 01 •August• 2018 20:53••
•Read more...•
விமர்சனம் என்றால் என்ன என்று நான் அறிந்து வைத்திருக்கிறேன். நான் ஒரு வாசகன். எனக்கு என்கருத்தை வெளிப்படுத்துவதில் எந்தவித சங்கோசமும் இருந்ததில்லை.. எனக்கு வேண்டியவர், என்னோடு ஒன்றாகப் படித்தவர்.. எனது கொள்கையை ஏற்று கொண்டவர்...என்பதற்காக ஒரு படைப்பாளியை ஏற்றி போற்றவோ....விரோதமானவார் உடன்பாடற்றவர் என்பதற்காக அவரது நல்ல படைப்புகளை நிராகரிக்கவோ நான் ஒருப்படேன். விமர்சனம் ஒருதலைப்பட்சமாக இருக்கக் கூடாது என்பதிலும் நான்காட்டமான கருத்துள்ளவன்..
கே.டானியல்.... ஒரு மா.ஓ வாதி. அவர் சாதி அமைப்புக்கு எதிரானவர் அதற்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். ஆனால் தலித்திய சிந்தனையாளர் அல்ல. சாதிச்சங்கங்கள் கூடாது என்கிற சிந்தனையாளர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கச் செயற்பாட்டாளர். இதனை சிலர் மறைக்கப் பார்ப்பது உண்மையில் கண்டிக்கப்படவேண்டியது.
1975 ஆக இருக்காலம் ..அவரது “போராளிகள் காத்திருக்கின்றனர்” நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்திருந்தது. அதற்கான வெளியீட்டு நிகழ்வு. யாழ்/ றிம்மர் மண்டபத்தில் ஏற்பாடாகி இருந்தது. தலைமை பேரா. சி தில்லைநாதன் . பேரா.கைலாசபதி சில்லையூர், பாசையூர் தேவதாசன், மற்றும் சிலர் பெயர் நினைவில் இல்லை அவர்களோடு நானும் ஒரு பேச்சாளன்.நிகழ்வுக்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காக கே டானியலோடு அவரது மோட்டர் சைக்கிளில் நானும் பல இடங்களுக்குச் சென்றேன். குரும்பசிட்டியில் கனகசெந்திநாதன் வீட்டுக்குச் சென்றது நினைவிருக்கிறது... “நாகம்மா இஞ்சை பாரப்பா உவன் டானியல் வந்திருக்கிறான் உவன் பொடியன் நந்தினியும் வந்திருக்கிறான் எதேனும் தின்னக்கொண்டுவா” என்று எம்மை உபசரித்ததும்..அவர் மனைவி வெட்டித்தந்த மாம்பழத்தை சுவைத்ததும் நினைவில் இருக்கிறது. உரும்பிராய், புன்னாலைகட்டுவன்.என்று பல இடங்களுக்கும் சென்று திரும்பினோம்.
வெளியீட்டு நிகழ்வு... மண்டபம் நிறைந்த கூட்டம்
•Last Updated on ••Saturday•, 30 •January• 2016 08:45••
•Read more...•
•Last Updated on ••Friday•, 16 •May• 2014 18:02••
கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் என்ற பெயரை விட ஒரு நூற்றாண்டு தனிமை (One Hundred Years of Solitude )என்பதே அதிகமான பரிச்சயப்பட்ட பெயராகவே இருக்கிறது. 1967ல் வெளிவந்த இந்த நாவல் பல பதிப்புகள் கண்டு 30மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன.ஆனால் இவரது அறியப்படாத தடை செய்யப்பட்ட நாவல் ஒன்றும் உண்டு. Memories of My Melancholy Whores நாவல் ஈரானில் முதற்கட்டமாக ஐயாயிரம் பிரதிகள் விற்ற நிலையில் தடை செய்யப்பட்டது . உலக வாசகர்களின் கவனிப்பிற்கும் கொண்டாட்டத்திற்கும் ,நேசிப்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த லத்தின் அமெரிக்க, கொலம்பியா படைப்பாளி கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் நேற்று தனது 87வது வயதில் மறைந்தார். தனது எழுத்துக்களை மேஜிக்கல் ரியலிசம் என்னும் ஜால யதார்த்த பாரம்பர்ய கதை சொல்லும் முறையில் நாவலை படைத்துக் காட்டியவர். 1982களில் நோபல்பரிசினை பெற்ற மார்க்யுஸ் காலனிய ஆட்சிக்கால குரூரங்களைஎழுதிப் பார்த்தவர். தனது மூதாதைகளின் கதை சொல்லல் முறையினையும் மார்க்வெஸ் தனது எழுத்தின் உயிரோட்டத்தில் இணைத்தவர். துவக்கத்தில் பத்திரிகையாளராக இருந்த மார்க்யுஸ் கதையற்ற எழுத்துக்களில் தனது பயணத்தை துவக்கி கதையுலகிற்குள் நுழைந்தார். 1967 களில் வெளிவந்த ஒரு நூற்றாண்டு தனிமை(One Hundred Years of Solitude) நாவல் படைப்புலகின் புது மாதிரியான மேஜிக்கல் ரியலிசத்தை அறிமுகப்படுத்தியது. யதார்த்த வாழ்வை புனைவின் ரூபத்தில் புதிர்மைகளோடு படைப்பாக்கம் செய்த அவரது உத்தி பிரபலமானது.ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்கு பிறகு கவி சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் இந் நாவல் சென்ற ஆண்டு தமிழுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்பும் மார்க்யுஸின் மொழிபெயர்ப்புகள் தமிழின் மிகத் தீவிர எழுத்தாளர்களால் அறிமுகம் ஆகியிருந்தது.
•Last Updated on ••Saturday•, 19 •April• 2014 20:54••
•Read more...•
மதுரை, மார்ச் 26- முற்போக்கு இலக்கிய முன்னோடியாக விளங்கிய திகசி என மூன்றெழுத்துக்களால் தமிழ் படைப்...புலகில் முத்திரைபதித்த தி. க. சிவசங்கரன் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன்ஆகியோர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
பள்ளிப்பருவத்திலேயே பாரதியாரின் தேசபக்திப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்ற திருநெல்வெலி கணபதி சிவசங்கரன் கவிதைகள் எழுதுவதிலேயே முதலில் கவனம் செலுத்தினார். எழுத்து எமக்குத் தொழில் என்று இலக்கியத்துக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட வல்லிக்கண்ணன் அவர்களை ஆசானாக வரித்துக் கொண்டவர் திகசி. அவரது வழிகாட்டுதலாலும் அரவணைப்பாலும் வளர்ந்த திகசி தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென தனித்தடத்தை அமைத்துக் கொண்டவர்.
•Last Updated on ••Wednesday•, 26 •March• 2014 23:14••
•Read more...•
- அண்மையில் முகநூலில் எழுத்தாளர் பெருமாள் முருகன் தளபாடங்களுக்குப் பாவிக்கப்படும் - அறைக்கலன், அறைகலன் ஆகிய சொற்களைப் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். அதனைத்தொடர்ந்து பலர் அதுபற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். மிகுந்த பயனுள்ள கலந்துரையாடலது. அக்கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துகளில் சிலவற்றை 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். - பதிவுகள் -
பெருமாள் முருகன்: இன்றைய ‘தி இந்து’ நாளிதழ் இணைப்பு ‘சொந்த வீடு’ பகுதியில் ‘அறைகலன்கள்’ வாங்கப் போகிறீர்களா?’ என்னும் தலைப்பில் ஆர்.எஸ்.ஒய். என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையின் தலைப்பிலும் உள்ளும் ‘அறைகலன்’ என்னும் சொல்லாட்சி பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. Furniture என்னும் ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு இது. Furnitureஐத் தட்டுமுட்டுச் சாமான் என்று எழுதியதுண்டு. அது சரியல்ல. எனினும் சரியான சொல் அமையவில்லை. தட்டுமுட்டுச் சாமான் என்பது அன்றாடம் வீட்டில் புழங்கும் எல்லாவகைப் பொருள்களையும் குறிக்கும். எப்போதாவது பயன்படுத்துவதற்காகவோ பழுதாகிப் போய்விட்டதாலோ தனியாகப் போட்டு வைத்திருக்கும் பொருள்களையும் இச்சொல் குறிக்கும். மேசை, நாற்காலி, சோபா உள்ளிட்ட உட்காரவும் உட்கார்ந்து செய்யும் வேலைகளுக்காகவும் பயன்படும் பொருள்களுக்கான பொதுச்சொல்லாக ஆங்கிலத்தில் ‘Furniture' உள்ளது. அப்படி ஒரு பொதுச்சொல் தமிழில் இல்லை. பழைய கால வீடுகளின் அமைப்பில் ‘Furniture'க்கெனத் தனியிடம் நம் சமூகத்தில் இல்லை போலும். ஆனால் இன்றைய வீடுகளில் வரவேற்பறை முக்கிய இடம்பெறுகிறது. அங்கே ‘Furniture'களுக்குத் தான் இடம்.
•Last Updated on ••Monday•, 24 •March• 2014 17:06••
•Read more...•
தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை எழுப்பட்ட கோயில்கள் அனைத்தும் மரம்,செங்கல்,சுண்ணாம்பு, உலோகம் போன்ற பொருட்களையே பயன்படுத்தினர், இதனால் இவை அதிகபட்சமாக ஒரு நூற்றாண்டிற்கு மேல் நிலைக்கவில்லை, பல நூற்றாண்டுக...ள் தாண்டி நிலைக்கும் கோயில்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய "மகேந்திர வர்மன்" என்ற பல்லவ மன்னன் முதன் முதலில் செஞ்சிக்கு அருகே இருக்கும் "மண்டகப்பட்டு" என்ற ஊரில் பாறைகளை குடைந்து "குடவரைக் கோயில்" ஒன்றை உருவாக்கினான் , இந்த குடவரைக் கோயில் தான் தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்படவிருந்த பல ஆயிரம் கலைக் கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அஸ்திவாரமாக அமைந்தது. மாடிக் கோயில் என்பது "மாடிபோல் அமைந்த கோயில்" என்று பொருள், கோயில் விமானத்திற்குள் மாடிப்படிகள் அமைத்து (அதாவது ஒரே கோயிலுக்குள் பல கோயில்களை ஒன்றின் மேல் ஒன்றாக 1st FLOOR, 2nd FLOOR போன்று இவற்றை அமைத்திருப்பர். கடைசி கோயிலுக்கு சென்றடைந்ததும் நீங்கள் விமானத்தின் உச்சியில் நின்று கொண்டு ஊரின் அழகை ரசிக்கலாம், இது போன்ற கோயில்களை இன்று பார்ப்பது மிகமும் அபூர்வம். தமிழகத்தில் உள்ள சுமார் 40,000 மேற்பட்ட கோயில்களில், அந்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மாடிக்கோயில்களின் அமைப்பை தாங்கி இன்று தமிழகத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள "வைகுண்டப் பெருமாள் கோயில்" மற்றொன்று உத்திரமேரூர் "சுந்தரவரதப் பெருமாள் கோயில்" இந்த இரண்டு கோயில்களும் பல்லவ மன்னர்களால் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும், தமிழகத்தில் முற்காலத்தில் செங்கற்களால் கோயில்கள் கட்டப்பட்டிருந்தன என்பதற்கு ஆதாரமாக பழைய பாடல்களில் காணமுடிகின்றது.
•Last Updated on ••Sunday•, 24 •November• 2013 20:32••
•Read more...•
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்று வாழ்வியலில் அனைத்து அடக்கி-ஒடுக்கல்களுக்கும்-எதிராகப் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளையும் மக்களையும் நினைவில் நிறுத்துவோம். அவர்களின் தியாகங்களுக்கு சிரம் தாழ்த்துவோம்.
•Last Updated on ••Monday•, 25 •November• 2013 06:32••
படைப்புக்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு, ‘பெருமானே, பிரசுரமாகுமா? ஆகாதா?’ எனப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்களை – சேர்த்து அனுப்பிவைத்த தபாற் தலைகளுடன் திரும்பிவந்த படைப்புக்களால் மனமுடைந்து சோர்ந்து போனவர்களை – பெண்டாட்டியின் தாலியை அடகு வைத்துப் புத்தகம் போட்டவர்களை – பெருமனம் படைத்த பிரசுராலயங்கள் வாரிச் சுருட்டியதால் வங்குரோத்தானவர்களை – படிப்பாரற்றுப் பரணில் தூங்கி அடைகாக்கும், கன்னிகழியாக் கதை, கவிதைப் புத்தகாசிரியர்களை – கக்கத்துள் அல்லது கைப்பைக்குள் சுருட்டிக் கட்டி வைத்துக்கொண்டு காண்போர், கதைப்போரின் கைகளுக்குள் தம் புத்தகங்களைப் பலவந்தமாய்த் திணித்தவர்களை – இப்படியாக, எண்ணிலா ‘இம்சைகள்’ தந்தும், தாங்கியும் வந்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் இன்னுமின்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கடுதாசியிலான புத்தகங்கள் புழக்கத்திற்கு வந்த காலத் ‘துயர்காதைப் புராணங்கள்’ இவை.
•Last Updated on ••Saturday•, 31 •August• 2013 20:44••
•Read more...•
லாங்ஸ்ரன் ஹியூஸ் கவிதைகள் [தமிழில் : அ. யேசுராசா]

அமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902 இல் பிறந்த கறுப்பினத்தவர். “இரவைப் போன்று கறுப்பானவன் / எனது ஆபிரிக்காவின் ஆழங்களைப் போன்று கறுப்பானவன்” என்பவை அவரது வரிகள்.ஆங்கிலத்தில் எழுதியவர். கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள், ஒருபுதிய பாடல், அன்புக்குரிய அழகிய மரணம் முதலிய அநேக கவிதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. புனைகதை,நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். 1967இல் மரணமானார்.
•Read more...•

எழுத்தாளர் சீர்காழி தாஜ் எனது முகநூல் நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். அவர் அவ்வப்போது முகநூலில் இடும் பதிவுகள், சிறு குறிப்புகளாகவிருக்கட்டும் அல்லது குறுங்கவிதைகளாகவிருக்கட்டும், கலந்துரையாடலைத் தூண்டுபவை. அவரது எழுத்தில் வெளிப்படும் பாசாங்கற்ற உண்மையின் தெளிவும், தனக்குச் சரியென்று பட்டதை மனம் நோகாதவாறு துணிச்சலுடன் கூறும் பண்பும் , மற்றும் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் அங்கதமும் என்னை மிகவும் கவர்ந்தவை. அண்மையில் முகநூலில் அவர் சில குறுங்கவிதைகளைப் பதிந்திருந்தார். அவை பற்றிய முகநூலில் பதிவு செய்த எனது கருத்துகளையும் (கவிதை வடிவில்), அவற்றையும் பதிவுகள் வாசகர்களூடன் பகிர்ந்துகொள்வதன்பொருட்டு இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
•Last Updated on ••Sunday•, 20 •January• 2013 23:20••
•Read more...•
[முகநூலில் நண்பர்கள் அவ்வப்போது பதிவு செய்யும் படைப்புகளை, எண்ணங்களை 'முகநூல் குறிப்புக'ளில் மீள்பிரசுரம் செய்கின்றோம். அந்த வகையில் உமாமகேஸ்வரியின் 'மரப்பாச்சி' என்னுமிச் சிறுகதையும் பிரசுரமாகின்றது. இதனை முகநூலில் பதிவு செய்தவர் எழுத்தாளர் சீர்காழி 'தாஜ்'.- பதிவுகள்]
பரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். கடந்த காலத்தின் தூசு அவர் மீது மங்கலாகப் படிந்திருந்தது. பழைய பொருள்களோடு ஞாபகங்களையும் உருட்டிக் களைத்துக் கனிந்த முகம். அப்பா அனுவைக் கூப்பிட்டார் – எந்த நொடியிலும் விழுந்து சிதறுவதற்கான அச்சுறுத்தல்களோடு அவசர வாழ்வில் விளிம்பில் தள்ளாடும் அபூர்வமானதொரு குழந்தைக் கணத்தைத் தன்னிலிருந்து சேகரித்து அவளில் நட்டுவிட வேண்டும், உடனடியாக. ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை அனுவிடம் நீட்டினார். சிறிய, பழைய மஞ்சள் துணிப்பையில் பத்திரமாகச் சுற்றிய பொட்டலம், பிரிபடாத பொட்டலத்தின் வசீகரமான மர்மத்தை அனு ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்து ரசித்தாள். உள்ளே என்ன? பனங்கிழங்குக் கட்டு? பென்சில் டப்பா? சுருட்டிய சித்திரக் கதைப் புத்தகம்? எட்டு வயது அனுவிற்கு இந்தப் புதிரின் திகில் தாங்க முடியவில்லை. அப்பாவின் ஆர்வமோ அது இவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்பதாக இருந்தது. அவசர அவசரமாகப் பிரித்தபோது வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று. தெய்வ விக்கிரகங்களின் பிழைபடாத அழகோ, இயந்திரங்கள் துப்பிய பிளாஸ்டிக் பொம்மைகளின் மொண்ணைத்தனமோ வழவழப்போ அதற்கில்லை. விரல்களை உறுத்தாத சீரான சொரசொரப்பு. இதமான பிடிமானத்திற்கு ஏதுவான சிற்றுடல்; நீண்டு மடங்கிய கைகள்; ஒரு பீடத்தில் நிறுத்தப்பட்ட கால்கள்; வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளுக்குள் நிறைத்த கண்கள்; உறைந்த உதடுகள். ‘ஹை, பின்னல்கூட போட்டிருக்கப்பா.’ அனு ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தாள் அதிசயமாக. ‘ஒவ்வொரு அணுவிலும் இதைச் செதுக்கிய தச்சனின் விரல்மொழி, உளியின் ஒலி’ என்று அப்பா முழங்கை, கால்கள் மற்றும் முகத்தில் இருக்கிற சிறுரேகைகளைக் காட்டிச் சொன்னார். பிறகு அவளுடைய திகைப்பைத் திருப்தியோடு பார்த்தபடி, புதிய விளையாட்டுத் தோழியுடனான தனிமையை அனுமதிக்கும் விதமாக அங்கிருந்து நகர்ந்தார்.
•Last Updated on ••Saturday•, 08 •December• 2012 19:57••
•Read more...•
•Last Updated on ••Saturday•, 08 •December• 2012 00:05••
•Read more...•
••Tuesday•, 13 •November• 2012 17:40•
??ஆய்வாளர் : சித்ரகலா, நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி.??
முகநூல் குறிப்புகள்
[எழுத்தாளர் குளச்சல் மு. யூசுப் நல்லதொரு மொழிபெயர்ப்பாளர். மீஸான்கற்கள் (நாவல்), ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (அனுபவப் பதிவு), மஹ்ஷர்பெருவெளி (நாவல்), நளினிஜமீலா (சுயசரிதை), நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி (சுயசரிதை), அழியாமுத்திரை (நாவல்), அமரகதை (நாவல்), வினயா (சுயசரிதை), அடூர் கோபாலகிருஷ்ணனின் இடம் - பொருள் - கலை (திரைப்படப் பதிவு), உலகப்புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைத் தொகுப்பு), நக்ஸலைட் அஜிதா (சுயசரிதை), மேலும் சில இரத்தத் துளிகள் (நாவல்) போன்ற மலையாள இலக்கியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் இவரே. இவர் தான் வழங்கிய நேர்காணலொன்றினை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனைப் 'பதிவுகள்' தனது 'முகநூல் குறிப்புகள்' வாயிலாகத் தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. - பதிவுகள்]
•Last Updated on ••Saturday•, 08 •December• 2012 00:00••
•Read more...•
[எழுத்தாளரும் , திறனாய்வாளருமான கே.எஸ்.சிவகுமாரன் தினகரன் வாரமஞ்சரியில் வெளியான தன்னுடனான நேர்காணலை முகநூலில் பதிவு செய்திருந்தார். அதனை 'பதிவுகள்' தனது வாசகர்களுக்காக மீள்பதிவு செய்கின்றது. -பதிவுகள்] 1953களில் எழுத்துப்பணியை ஆரம்பித்து, ஊடகவியலாளர், அறிவிப்பாளர், திறனாய்வாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என பல தளங்களில் இயங்கியவர்தான் கே.எஸ். சிவகுமாரன். இன்று 76 வயதிலும் அதே சுறுசுறுப்புடன் களத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இவரது தனித்துவ திறமையை அசைபோட்டு பார்க்க விரும்பினேன். கடந்த முதலாம் திகதி 76வது பிறந்த நாளை குதுகலத்துடன் கொண்டாடிய அவரிடம் பிறந்தகத்தைப் பற்றிக் கேட்டேன்.
என்னுடைய பிறந்தகமென்று கூறினால் அது மட்டக்களப்பாகத்தான் இருக்கும் என்னுடைய மூதாதையர்கள் யாழ் கந்தரோடையைச் சேர்ந்தவர்கள். என் தந்தையார் அரச ஊழியராக இருந்தமையால் காலத்திற்கு காலம் குட்டி போட்ட பூனைகள் போல் இடத்திற்கு இடம், எங்களை காவிச் சென்றிருந்தார். என்னை நான் உலகளாவிய மனிதன் என்று சொல்வதையே விரும்புபவன். ஏனெனில் என் வாழ்க்கைப் பின்புலத்தில் இலங்கை மண்ணும் - பாரத மண்ணும் பிணைந்திருக்கின்றது.
•Last Updated on ••Saturday•, 06 •October• 2012 23:42••
•Read more...•
' புத்தன் யேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?' பாடல் பதிவுக்கான கருத்து...
அப்துல் மஜீத்: ஒரு சிறுகுழந்தையும் ஒரு கிழவரும் இந்தப்பாட்டில் எம்ஜிஆரிடம் மாட்டிக்கொண்டு படும்பாடு என்னை நான் MGR ரசிகனாயிருந்த சிறுவயதிலேயே உறுத்தியிருக்கிறது. பிறகு பலரிடம் சொல்லியுமிருக்கிறேன். does anybody agree?
கிரிதரன்: நண்பரே, அந்த ஆட்டுக்குட்டியை விட்டு விட்டீர்களே :-) நிச்சயமாக அந்த ஆட்டுக்குட்டிக்குச் சில வேளைகளில் விருப்பமில்லாமலிருந்திருந்தாலும், மனிதர்களுக்கு வாத்தியாருடன் திரைப்படத்தில் நடிக்கிறோமென்ற சந்தோசம்தான் நிறைந்திருக்குமென்று நினைக்கின்றேன். பாட்டும், டி.எம்.எஸ்ஸின் குரலும், கூறும் பொருளும், வாத்தியாரின் ஆளுமையும்தாம் பார்ப்பவர்கள். கேட்பவர்களுக்கு இருந்திருக்குமென்று நினைக்கின்றேன். மேலும் வாத்தியார் ரசிகனாயிருந்தேன் என்று இறந்த காலத்தில் அடிக்கடி பல ஆளுமைகள் , கலாப்பிரியா முதல், கூறுவதைக் கேட்டு வருகின்றேன். இதன் மூலம் அவர்கள் என்ன கூற வருகிறார்களென்றால்.. தங்கள் அறிவு இப்பொழுது கூடிவிட்டதென்பதை மறைமுகமாக அவர்கள் கூறுவதாகத்தான் நான் உணர்ந்துகொள்கின்றேன். இவ்விதமான கூற்றுகள் எனக்கு எப்பொழுதுமே புன்னைகையினைத்தான் ஏற்படுத்துவது வழக்கம்.
•Last Updated on ••Tuesday•, 14 •August• 2012 21:05••
•Read more...•
[முகநூலில் இருவருடங்களுக்கு முன்னரே பதிவு செய்திருந்தாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்தான் நுழைந்து பார்த்தேன். முகநூலை இயலுமானவரையில் நண்பர்களுக்கிடையிலான நல்லதொரு கலந்துரையாடலுக்கான களமாகக் கொள்ளவே விரும்பினேன். முகநூலில் நண்பர்களுக்கிடையில் அவ்வப்போது நடந்த சுவையான கலந்துரையாடல்கள் சிந்திக்கவும், சிரிக்கவும் வைப்பன. பேய்கள் தொடக்கம், சினிமா, இலக்கணம், இலக்கியமென்று பல்வேறு பட்ட விடயங்களைத் தொட்டுச் சென்ற கருத்துப் பரிமாறல்களவை. இவ்விதமான முகநூல் கலந்துரையாடல்களை அவ்வப்போது 'பதிவுகளி'ல் பதிவு செய்வது 'பதிவுகள்' வாசகர்களும் அவற்றை அறிந்து, சுவைக்க முடியுமென்பதால் , அவை அவ்வப்போது 'பதிவுகளில்' மீள்பிரசுரமாகும். எழுத்தாள நண்பர் தாஜ், ஆபிதீன் போன்றவர்களை மீண்டும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி; முகநூலுக்கு நன்றி. நண்பர் சீர்காழி தாஜ் அவர்களை நான் முதன் முதலில் அறிந்து கொண்ட விடயத்தினை தற்பொழுது நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். ஸ்நேகா (தமிழ்நாடு) பதிப்பகமும் , மங்கை பதிப்பகமும் (கனடா) இணைந்து தமிழகத்தில் வெளியிட்ட 'அமெரிக்கா (சிறு நாவலும், சிறு கதைகளும்), 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (ஆய்வு) ஆகிய நூல்களை வாசித்துவிட்டு எனக்கு அவை பற்றி விரிவான இரு கடிதங்களை அனுப்பியிருந்தார் தாஜ். அதன் பினனர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுக்கொரு யானை இருந்தது' நாவலையும் அனுப்பி உதவியிருந்தார். இதற்காக அவருக்கு என் நன்றி. -ஆசிரியர் -]
•Last Updated on ••Friday•, 10 •August• 2012 20:37••
•Read more...•
[ முகநூல் குறிப்புகள்: முகநூலில் பதிவுசெய்தவர்: பாஸ்டன் பாலா] எஸ்.ரா: வாழ்வது என்பதே ஒரு மாயம் தான். தீராநதி பிப்ரவரி 2005 இதழில் எனது நேர்முகம் வெளியாகியிருக்கிறது. அப்பேட்டியின் சில பகுதிகள் அவர்களால் வெளியிடப்படவில்லை. இணைய வாசகர்களுக்காக முழுமையான நேர்முகம் பிரசுரிக்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் எனது வாழ்க்கை குறிப்புகள் சார்ந்த கேள்விகள் அடங்கிய எனது நேர்முகம் முன்னதாக காலச்சுவடு இதழிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் குமுதம் இலக்கியமலரிலும் வெளியாகியிருக்கின்றன. ஆகவே அக்கேள்விகள் இந்த சந்திப்பில் இடம் பெறவில்லை. -
1) புதுவகை எழுத்துகள் ஒரு போக்காக தமிழில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த வகை எழுத்துக்களை முன்வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்போது யதார்த்தவாதம் முடிந்துவிட்டது கதை யம்சம் தேவையில்லை என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன ஆனால் அப்போதும் புதுமுயற்சிகளை செய்தவர்களில் நீங்கள் மட்டும் கதையம்சம் கொண்ட கதைகளை எழுதி வந்தீர்கள். அது சார்ந்து குறிப்பாக அப்போது நடைபெற்ற விவாதங்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்.?
•Last Updated on ••Saturday•, 08 •December• 2012 00:03••
•Read more...•
[முகநூலில் வெளிவரும் கலை / இலக்கியக் குறிப்புகள் அவ்வப்போது இப்பகுதியில் பிரசுரமாகும்.- பதிவுகள்-]
இந்தச் சீனத்து கவிதைகளை மொழிபெயர்த்த திரு.வை.சுந்தரேசன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இந்தக் கவிதைத் தொகுப்பு 1990-களின் மத்தியில் வெளிவந்ததாக அறியமுடிகிறது. (புத்தகத்தில், காலம் குறித்தோ/ தேதி குறித்தோ எந்தத் தகவலுமில்லை) இக் கவிதைகள் மொழிபெயர்ப்பே என்றாலும்.. தமிழீழப் பிரச்சனையின் பின் புலத்தில் வைத்துப் பார்க்க முடியும். உள்நாட்டு யுத்தம் நடக்கும் காலகட்டங்களில், அந் நாட்டில் வாழும் மக்கள் கலைஞர்கள் மேற்கொள்ளும் யுக்திகளில் ஒன்றாக, இப்படியான செயல்பாடுகளை பார்க்கிறார்கள். உலகப் பார்வையிலும் இது வரவேற்கப்படுகிறது.
•Last Updated on ••Tuesday•, 19 •June• 2012 00:05••
•Read more...•
|