பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

கவிதை

ஒரு பொழுதும் இப்பொழுதும்

•E-mail• •Print• •PDF•

உனக்கும் எனக்குமான
ஒரு கீதத்தை இசைத்தேன்.

அலைநுரைப் பூக்கள் அர்ச்சித்தன.
மலைகள் கம்பீரத்தைப் பெருக்கின.
கங்கைகளும் கடல்களும் நீரமுதாயின.
ஒளி பெருக்கி நின்றது வானம்.
கொடிகளுக்காகவே காற்று வீசிற்று.
நிலமோ நிமிர்ந்தெழுந்தது.

•Last Updated on ••Saturday•, 06 •February• 2021 09:34•• •Read more...•
 

வாசம் பரப்பிய மல்லிகை வாடி வீழ்ந்தது மண்ணில் !

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் டொமினிக் ஜீவா

வாசம் பரப்பிய மல்லிகை
வாடி வீழ்ந்தது மண்ணில்
தேசம் தெரியும் ஜீவா
தேசம் விட்டேகினார் விண்ணில்

வெள்ளுடை வேந்தனாய் ஜீவா
வீதியில் நடந்துமே திரிந்தார்
கல்லிலும் முள்ளிலும் நடந்தார்
கருத்துடன் எழுதியே உயர்ந்தார்

எள்ளவும் அஞ்சவும் மாட்டார்
எடுத்தை முடித்துமே நிற்பார்
கள்ளமில் மனமுடை  ஜீவா
காலனின் கையிலே சென்றார்

•Last Updated on ••Thursday•, 28 •January• 2021 21:16•• •Read more...•
 

பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -1. நலங்கிட்டு அழகூட்டுவேன்

கவிதை எழுதுதல் மகிழ்வு
கவினுறும் ஆய்வும் உயிர்ப்பு
கவிந்த பவளப்பாறையாம் படிமங்கள்
குவிந்த அறிவால் ஒளியாக்கமாகிறது.

கலைமொழியாம் தமிழ் வலைமொழியாகிறது
அலைபோற் பெரும் பயணமாகிறது.
விலையில்லாச் சாகர சம்பத்தாகிறது
கொலையிட எவராலும் முடியாதது

உணர்ச்சியெனும் உருவத்தை வார்த்தை
உளியால் செதுக்குதலே கவிதை
கவிதையுரு வடிக்கும் வரை
குவியும் அவத்தை ஒருவிதமானது.

தமிழாற் பொலி மனதார்
அமிழ்தாய்க் கழிபேருவகை கொள்வார்
சொற்களின் சிம்மாசனம் மகுடவாசகமாய்
இதயம் குளிர்த்தும் மழையாகும்

நாளும் எழுதும் சொற்களே
மீளும் அலங்கரிப்பில் புதுப்பெண்ணாக
ஆளுமையோடு கிறங்கும் மாயவுருவாகிறது
மூளுதலாகிப் பலரை ஈர்க்கிறது.

•Last Updated on ••Sunday•, 24 •January• 2021 01:24•• •Read more...•
 

என்றும் இதுபோல் எங்குமே வாழ்வு நன்றாய் இருந்திட என்றுமே வாழ்த்துகள்!

•E-mail• •Print• •PDF•

கதிரவன் நோக்கி உழவர் பொங்கும்
களிப்புப்  பொங்கல் இன்பப் பொங்கல்
பொங்கல் நாளில் அனைவர் வாழ்வில்
பொங்கி இன்பம் வழிந்திட வாழ்த்துகள்.

அன்பும், பண்பும் மிகுந்து பொங்கிட,
அகிலம் முழுதும் ஆனந்தம் பொங்கிட,
நெஞ்சம் நிறைந்து கூறுவோம் வாழ்த்துகள்.
நெஞ்சம் நிறைந்து கூறுவோம் வாழ்த்துகள்.

•Last Updated on ••Wednesday•, 13 •January• 2021 11:57•• •Read more...•
 

வாழ்வினில் ஒளிவரப் பொங்கலே வா !

•E-mail• •Print• •PDF•

மங்கலம் பொங்கிடப் பொங்கலே வா
மனமெலாம் மகிழ்ந்திடப் பொங்கலே வா
சொந்தங்கள் இணைந்திடப் பொங்கலே வா
சுமையெலாம் இறங்கிடப் பொங்கலே வா !

வறுமைகள் வரண்டிடப் பொங்கலே வா
வளர்ச்சிகள் மிகுந்திடப் பொங்கலே வா
தொழிலெலாம் சிறந்திடப் பொங்கலே வா
துணிவது நிறைந்திடப் பொங்கலே வா !

•Last Updated on ••Wednesday•, 13 •January• 2021 11:57•• •Read more...•
 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

1. பற்றாதே என்கிறது ஞானம்!  பற்றுவேன் என்கிறது மோகம்  !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

வெட்டாதே என்கிறது மரம்
வெட்டுங்கள் என்கிறது குளம்
தட்டாதே என்கிறது மனம்
தட்டுவேன் என்கிறது குணம்
முட்டாதே என்கிறது மூப்பு
முட்டுவேன் என்கிறது கொழுப்பு
பற்றாதே என்கிறது ஞானம்
பற்றுவேன் என்கிறது  மோகம்  !

•Last Updated on ••Wednesday•, 06 •January• 2021 23:31•• •Read more...•
 

கவிதை: ஆயுள்வேத வாகடம்: ஊற்றும் மாற்றும்

•E-mail• •Print• •PDF•

-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

பால சிவகடாட்சம் பல்கலையின் பட்டமுளார்
காலக் கணிப்போடும் கற்றுநன்றே – காலமது
தாறுமாறாய்ப் போந்து தடயங்கள் மாற்றிவரும்
நேர்மாறைக் கண்டார் நிசம் !

செகராச சேகரன்தன் சொல்லுவாக டத்தை
முகத்தாயம் மாற்றியோர் முன்றில் – நகையோடும்
நற்பேரைத் தான்மாற்றி நாளம் வகைமாற்றி
நிற்போரைக் கண்டார் நிலம் !

•Last Updated on ••Wednesday•, 06 •January• 2021 23:10•• •Read more...•
 

கவிதை: கழிவிரக்கக் குளத்தில்..!

•E-mail• •Print• •PDF•

நான்
ஆழமும், முடிவுமற்ற
கழிவிரக்கக்குளத்தில்
மூழ்கிக்கொண்டிருக்கின்றேன்.
முடிவற்ற தொடர் பயணத்தில்
பயணித்துக்கொண்டிருக்கின்றேனா?

•Last Updated on ••Tuesday•, 29 •December• 2020 12:11•• •Read more...•
 

கவிப்புயலின் போன்சாய் கவிதை விளக்கமும் கவிதைகளும்

•E-mail• •Print• •PDF•

கவிப்புயலின் போன்சாய் கவிதை விளக்கமும் கவிதைகளும்

போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள்.

•Last Updated on ••Friday•, 11 •December• 2020 00:59•• •Read more...•
 

கலைமகளைக் காணாமல் ஏடெல்லாம் அழுகிறது !

•E-mail• •Print• •PDF•

*  மறைந்த இலக்கிய ஆளுமை கலைமகள் ஹிதயா ரிஸ்விக்கு இரங்கற் பா -


- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -கலையும் அழுகிறது இலக்கியமும் அழுகிறது
கலைமகளைக் காணாமல் ஏடெல்லாம் அழுகிறது
புலரும் பொழுதெல்லாம் புதுக்கவிதை தருவாயே
அழவிட்டுப் போனதெங்கே அழகுக் கலைமகளே   !

முப்பது ஆண்டுகளாய் நீவளர்த்தாய் தடாகத்தை
இப்போது நீர்வற்றி ஏங்கிறதே தடாகமது
எப்போது நீவருவாய் எனவெண்ணித் தடாகமது
இருப்புதனை தொலைத்துவிட்டு எண்ணியெண்ணி அழுகிறதே  !

இசுலாமியப் பெண்ணாக இருந்தாலும் சோதரிநீ
இன்பத்தமிழ் அணைத்து இங்கிதமாய் பணிபுரிந்தாய்
வீறுகொண்ட பெண்ணாக வெற்றிபல குவித்தாயே
மாறுபடா குணமுடையாய் மனமேங்கி அழுகிறதே  !

அரபுமொழி கற்றாலும் அன்னைத்தமிழ் அருந்தினாய்
அரவணைத்து அனைவரையும் அன்பினால் ஆட்கொண்டாய்
நினைவழியா படைப்புக்களை நீயளித்தாய் தமிழுக்கு
நீஇல்லா நிலைகண்டு படைப்பனைத்தும் அழுகிறதே  !

•Last Updated on ••Thursday•, 26 •November• 2020 00:26•• •Read more...•
 

ஆதாம் ஏவாளின் இறைமகன் நான்….

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

ஆதாம் ஏவாள் உதிரத்தில் ஓருயிராய் ஓருடலாய் நான் கருவுற்றிருந்தபோது,
அன்பும் மனிதமும் இவ்வுலகில் உருப்பெறத் தொடங்கின.
ஆதாமின் கொடுங்கோலற்ற அன்பும்-பரிவும்-களவும்-காமமும்
ஆணாதிக்கச் சாயலை ஒருபோதும்
ஏவாளின் உடலையும்+உள்ளத்தையும்=ஏன் உயிரையும் சிதைக்கவேயில்லை;
மாறாக, ஏவாள் பூப்பெய்தும்போதும் தாய்மையுறும்போதும்
மிக அனுரசணையாக ஆதாம் நடந்துகொண்ட விதம்
பூமித்தாய் மட்டுமன்று; உலகத்தார் உள்ளமும் குளிர்ச்சியுற்றது.

•Last Updated on ••Friday•, 13 •November• 2020 03:21•• •Read more...•
 

தீபாவளிக் கவிதை: வேண்டும் வேண்டும்

•E-mail• •Print• •PDF•

-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

தீபமொடு நன்னெறியும் திரும்ப வேண்டும்
தேசமொடும் மந்திரமும் சேர வேண்டு;ம்
கோபமின்றி மன்பதைகள் குலவ வேண்டும்
குடிசையொடும் வாழ்வியலும் கொடுக்க வேண்டும்
தூபமொடும் திருமறைகள் துலங்க வேண்டும்
தேவாரம் வாசகங்கள் செழிக்க வேண்டும்
சாபமின்றிச் சமவாழ்வுச் சால்பு வேண்டும்
சங்கமெனச் சத்தியமும் சாற்று வீரே !

•Last Updated on ••Saturday•, 14 •November• 2020 23:21•• •Read more...•
 

தீபாவளிக் கவிதை: வாடும் நிலை போயகல வந்து நிற்பாய் தீபாளி !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

வண்ண வண்ண மத்தாப்பு
வகை வகையாய் பட்டாசு
எண்ண வெண்ண நாவூறும்
இனிப்பு நிறை பட்சணங்கள்
கண் எதிரே உறவினர்கள்
கல கலப்பைக் கொண்டுவர
மண்மகிழ மனம் மகிழ
மலர்ந்து வா தீபாவளி  !

•Last Updated on ••Saturday•, 14 •November• 2020 23:20•• •Read more...•
 

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

1. சுயநலம்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -பிறந்தது முதலே ஒட்டிப்பிறந்ததாய்
அந்த அழுக்கு அரைப்பாண்ட்டை அணிந்திருக்கும் மனிதனுக்கு இருநூறுக்கு
மேல் வயதிருக்குமோ என்னவோ.
அந்த வயிறு இதற்குமேல் உள்ளொடுங்கியிருக்கவியலாது.
’பணம் வேண்டாம், டீ வாங்கித்தா’ என்ற குரல் வானத்தின்
எந்த உயரத்திலிருந்து என்னை வந்தடைந்தது?
நான் வாங்கித்தந்த முழுக்கோப்பை என்ற பெயரிலான காலே
அரைக்கோப்பை தண்ணித்தேனீர்
அந்த நடுங்கும் கைகளில் குலுங்கும் நெகிழிக்கோப்பையிலிருந்து
அந்த மனிதனின் உதடுகளுக்குள் நுழையும்
எத்தனத்தில்
என் கண்களில் நீராகிக் குத்துகிறது,
நிறையவே வலிக்கிறது…..


பிச்சையெடுக்கும் தாயுடன் நடந்துவரும் சிறுவன்
என்னைப் பொறுத்தருளட்டும்.
’அவனுடைய அவல எதிர்காலத்திற்கு நானும்தான் பொறுப்பேற்கவேண்டும்’
என்று திரும்பத்திரும்பச் சுட்டிக்காட்டும் இந்த மனசாட்சியை எந்த
முதுமக்கட்தாழியிலடைத்து எங்குபுதைக்க?
பத்து குடும்பங்கள் மேஸ்திரியால் கைவிடப்பட்டு பட்டினி கிடப்பதாய்
பேரோலத்தை முணுமுணுப்பாய் வெளியிடும் அந்தத் தாயிடம்
முதலில் என்னிடமிருந்த நூறு ரூபாயைத் தருகிறேன்.
பின், மனசாட்சி வறுத்தெடுக்க ஒரு ஐந்நூறு ரூபாயைத் தருகிறேன்,
கூனிக்குறுகிக் கும்பிட்டு தளர்ந்த நடையுடன் அப்பால் செல்லும் அந்தச்
சகோதரியின் முதுகு என் கண்களிலிருந்து மறைய மறைய வேகமாய் என்
கால்கள் தன்னிச்சையாகப் பின்தொடர்ந்து செல்ல, எஞ்சியிருந்த இன்னொரு
ஐந்நூறு ரூபாய்த்தாளையும் அவர் கைகளில் தருகிறேன்,
பத்து குடும்பங்களுக்கு ஒருவேளை சாப்பாட்டுக்காவது போதுமானதாகட்டும்
என்ற பிரார்த்தனையோடு….

 

•Last Updated on ••Saturday•, 07 •November• 2020 09:53•• •Read more...•
 

வென்றியும் நன்றியும்

•E-mail• •Print• •PDF•

-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

நன்றி ஒருவர்க்கு நாமியற்றிப் போகுங்கால்
அன்பில் இறுகும் அதுவுமொரு பண்பாமே !

சென்ற நிலையைச் சிதறவைத்தல் போலாகி
ஒன்றை இழத்தல் உறவில்லைக் காணீரோ !

என்றும் இனிமை இதயமொடு நேசித்தல்
மன்றில் இதுவே மகத்துவமே தானாகும் !

தன்னை நிகர்த்த தரத்தினொடு ஒப்பிட்;டுக்
கன்னைக் கெனவே கணக்கிடுதல் வேண்டாமே !

•Last Updated on ••Tuesday•, 13 •October• 2020 09:46•• •Read more...•
 

கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாவின் கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

1. வாழ்த்தும் மனமே வாழும்   !

இறைத்த கிணறு ஊறும்  
இறையாக் கிணறு  நாறும்
செமித்த உணவு சிறக்கும்
செமியா உணவு நொதிக்கும்
நடக்கும் கால்கள் வலுக்கும்
நடவா கால்கள் முடக்கும்
படிக்கும் காலம் சிறக்கும்
படியாக் காலம் இழக்கும்     !

•Last Updated on ••Tuesday•, 29 •September• 2020 10:40•• •Read more...•
 

பாலுவே உன்னிசையை நிறுத்திவிட்ட தேனையா !

•E-mail• •Print• •PDF•

Farewell you legend! Rest in Peace. You'll live on forever in our collective memories

ஏழு சுரங்களும் ஏக்கமுடன் தவிக்கிறது
பாலுவே நீயும் பாட  வருவாயா
தாளலயம் அத்தனையும் தவிக்கிறதே பாலு
நீயெழுந்து வாராயோ நெஞ்சலாம் அழுகிறதே  !

மூச்சுவிடா பாடியே சாதனையைக் காட்டினாய்
மூச்சுவிட்டு அஞ்சலியைப் பாடவைத்தாய் பாலுவே
காற்றுக்கூட  கலங்கியே அழுகிறதே பாலுவே
கட்டழகுச் சிரிப்புமுகம் காண்பதுதான் எப்போது    !

•Last Updated on ••Tuesday•, 29 •September• 2020 12:33•• •Read more...•
 

என்னை யானே...!

•E-mail• •Print• •PDF•

-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

தன்னைப் புகழ்ந்தாலே தாம்முன்னே யாகுவராம்
என்னைப் புகழ்ந்தீரே *ஏமுறவே – சொன்னவண்ணம்
எண்ணித் தமிழ்நூலின் ஏர்க்காலில் நான்பிடித்த
வண்ணம் இதுவே வனம் ! 

எல்லைக் கவிக்கடலே இப்பார் திலகமெனச்
சொல்லால் எனக்குரைத்த செந்தமிழீர் – முல்லையென
முத்தன்ன பட்டுடுத்தி மெல்லச் சிரிப்பெழுதி
வித்தென்று நன்றுரைத்தீர் மேவி !

•Last Updated on ••Tuesday•, 13 •October• 2020 09:41•• •Read more...•
 

தங்கமகன் போனதெங்கே?

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தீங்காற்றுப் பொன்வண்டே சிறகு எங்கே
தென்னாட்டுப் பூந்தமிழின் தெப்பம் எங்கே
பூங்காட்டுக் குயிலதுதான் பெயர்ந்து போச்சோ
புறமுதுகு பாடாதான் பிரிந்து போச்சோ
ரீங்காரத் தேன்வண்டு திரும்பிற் றாமோ
தென்றல்வான் வருங்கீதம் தீர்ந்த தாமோ
தாங்காது துடிக்கின்றோம் தமிழின் ஆறே
தங்கமகன் போனதெங்கே தவிக்கின் றோமே!

•Last Updated on ••Tuesday•, 29 •September• 2020 09:28•• •Read more...•
 

இலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை!

•E-mail• •Print• •PDF•

-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

கார்மேகம் கம்பன் என்கக்
கட்டியம் கூறி மண்ணில்;
ஓர்கவி உண்டோ இல்லை
ஒடிசியும் ஷெல்லி இன்னும்
பார்கவி சேக்ஸ்பி யர்க்கும்
படைத்ததோர் ராமா யணத்தின்
நேர்கவி யோடு வைத்து
நிறுத்திட முடியா தையா !

•Last Updated on ••Wednesday•, 23 •September• 2020 01:36•• •Read more...•
 

கவிதை: கண்ணாடியின் முதுகுத்தோல்

•E-mail• •Print• •PDF•

கவிதைகள் வாசிப்போமா?

எனக்கு பிடித்த என்
இள அழகு முகம்
முகச்சவரம் செய்ய செய்ய
எனக்கே பிடிக்காமல்
நானாகவும் இல்லாமல்
என் சாயலிலுமில்லாமல்
ஒரே மாதிரி இருக்கும்
ஏழுபேரிலும் அடங்காமல்
எவனோ ஒருவன்
என்னுடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்ததுபோல் ஒரு
அன்னிய ரேகை
ஓடுவதையறிகிறேன்

•Last Updated on ••Wednesday•, 23 •September• 2020 01:06•• •Read more...•
 

ஹைக்கூ கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

ஹைக்கூ கவிதைகள்
தானியம் தூவும்
வேடனின் கைகள்
வலை விரிக்கும்

ஆற்றில் மூழ்கியபடி
அடையாளத்தை இழக்கிறது
உடைந்த பாலம்

பிஞ்சுக் கரங்களின்
தொடுதலின்றி வாடுகின்றன
உடைந்த பொம்மைகள்

•Last Updated on ••Wednesday•, 23 •September• 2020 00:53•• •Read more...•
 

கவிதை: 'நீட்'டைப் பூட்டுவோம்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: 'நீட்'டைப் பூட்டுவோம்..

ஆதிக்க சதிவலையின்
முருக்குநூலில் சிக்கி
எத்தனை உயிர்கள் பலியாகுமோ?!
நீட் எமனால்..

கேட்டுக்கு வெளியே நிறுத்தும்
நீட் தேர்வை சாமானியர்கள்
எத்தனைமுறை எழுதினாலும்
வாழ்க்கையில் தேரமுடிவதில்லை.

•Last Updated on ••Wednesday•, 16 •September• 2020 10:01•• •Read more...•
 

கவிதை: காலத்தை கிறுக்கிய

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -

அரக்க பறக்க ஓடும்
உலோகாய யுகத்தில்
பாலைவன ஓடையில் தூண்டிலுடன்
மீனுக்காக காத்திருப்பவன் போல்
ஓய்வுக்கான நேரத்தை கைப்பற்ற
காத்துக் கிடக்கும் மனிதனுக்கு
இடி மின்னல் இன்றி
மடைதிறவா வந்த
lockdown காட்டாறு வெள்ளத்துள்
மூழ்கி திக்குமுக்காடுகிறான்.

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 09:51•• •Read more...•
 

கவிதை: எனக்குள் குரலொன்று...

•E-mail• •Print• •PDF•

அனுமதியில்லாமல் வீட்டின் வரவேற்பறையில்
வந்தமர்ந்த குருவி ஒன்று,
உற்று நோக்கலில் மனிதனின் ஆதிகுரூரம் தொடங்கி
அத்தனையும் அதன் கண்களில்,
உணவிட்டு உறவைப் பேணலாமென்று
எண்ணிய எண்ணத்தில் உண்மையில்லை,
கவட்டையோடு அலைந்த காலத்தில்
என் கல்லிற்கு அடிபட்டு உணவான
குருவியின் நினைவொன்று
தீய கனவாக வந்து சென்றது.

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 08:12•• •Read more...•
 

ச.ராச் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

ச.ராச் கவிதைகள்!

சொந்த வீட்டுக் கதை

"உங்க அப்பாருக்கிட்ட மூனு வீடு இருந்துது
அதுல ஒன்னு என் பேர்ல எழுதி வச்சிருந்தாரு

உங்க அத்தைய கட்டிக்கொடுக்க ஒன்னு
தொழில்ல நஷ்டம்னு ஒன்னு
பஞ்சம் பொழைக்க இந்த ஊருக்கே வந்துட
முடிவெடுத்ததால
கடைசியா என் பேர்ல இருந்த வீடுன்னு
மூனுத்தயும் வித்துட்டாரு
இப்ப அந்த இடமெல்லாம்
லட்சக்கணக்குல போகுதாம்

பாசமா பழகிய மூனாவது வீட்டு பத்மினியம்மா
பழகனத மறந்து
வாடகைவீட்டுக்காரி அவ என்று
தன் புருஷனிடம் காதில் முணுமுணுத்தபடி
பத்திரிகை வைக்காமல் அடுத்த வீட்டுக்கு
தாண்டிக்காலிட்ட  வாதையில்

தூங்கிக்கொண்டிருக்கும் நாளாவதாக பிறந்த ஒருவயது  குழந்தை என்னிடம்
விசனப்பட்டுக்கொண்டிருந்த
வழக்கமான அதே சொந்த வீட்டுக்கதைதான் என்றாலும்
இப்போது கண்ணீர் வராமல்
சொல்லப்பழகியிருந்தாள் அம்மா
என் மகளிடம்."

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 07:58•• •Read more...•
 

கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!

மாநகர் துஞ்சும் நள்ளிரவில்
வெளியே வந்தேன்.
நுண்கிருமியின் தாக்கம்.
சுருண்டு கிடந்தது மாநகர்
உந்துருளியில் நகர்வலம்
வந்தாலென்ன? வந்தேன்.
வாகனவெள்ளம் பாயும் நதிகள்
வற்றாதவை வற்றிக்கிடந்தன.
கட்டடக்காட்டில் இருள்
கவிந்து கிடந்தது.
நிசப்தம் நிலவியது நகரெங்கும்.

•Last Updated on ••Saturday•, 29 •August• 2020 22:01•• •Read more...•
 

கவிதை: பாரதியே வருக!

•E-mail• •Print• •PDF•

கவிதை: பாரதியே வருக!

முண்டாசுக் கவியே!
முத்தமிழின் சுவையே!
முத்தாப்பாய் உன்னைப்பாட
முடியவில்லை என்னால்

மூச்சறுக்கும் முகமூடி
முனகுகிறேன் மனம்வாடி
பொய்மையின் புகலிடமோ
புண்ணிய தேசமிங்கு

•Last Updated on ••Sunday•, 16 •August• 2020 01:23•• •Read more...•
 

கவிதை: என்றும் உன்னுள் உன் இதயமாய்.. -

•E-mail• •Print• •PDF•

கவிதை: என்றும் உன்னுள் உன் இதயமாய்.. -

அன்பே...
சுடர் தரும் சூரியனும் சுகமாய் துயிலிட
அலைகொண்ட மனம் மட்டும் இடைவிடா ஒலித்திட
நீ நான்  நாம் மட்டும் காதல் சிறையில்  கைதானோம்
ஓர் இரவில்....
உன் முகம் பார்த்து வெட்கிப்போனேன்..
ஆயிரம் ஒளி தீபம் எற்றிய வெளிச்சம் கண்டேன்
கண்கூசீப்  போனேன்...
உன் குற்றமற்ற அன்பில் குறுகிப்போனேன்...
குயிலாகிப் போனேன் -உன் பெயரை மட்டும்
கூவும் குயிலாகி போனேன்....

•Last Updated on ••Saturday•, 15 •August• 2020 20:28•• •Read more...•
 

கவிதை: ஆடுகிறார் மனிதரிப்போ?

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

இயல்புநிலை மாறியது
செயற்கையதில் ஏறியது
மனமதிலே நவநினைப்பு
குடியேற்றம் ஆகியது
மனிதரது நடவடிக்கை
இயற்கைக் கெதிராகியது
வாழ்வினிலே பலதுன்பம்
வந்தபடி இருக்கிறது !

நாகரிக மெனும்மாயை
நாளுமே மறைப்பதனால்
ஆகாயம் பூமியெலாம்
அடிமையென எண்ணிவிட்டார்
வேண்டாத பலவற்றை
விரும்பியே நாடியதால்
வேதனையின் பிடியினிலே
மாளுகிறார் மனிதரிப்போ !

விஞ்ஞானம் கண்டறிந்தார்
விந்தைகளும் விளைந்தனவே
மேலுலகை கீழுலகை
விட்டுமவர் வைக்கவில்லை
உடல்பிரித்தார் உருக்கொடுத்தார்
உணர்வுதனை அழித்திட்டார்
மனிதரிப்போ உலகினிலே
அமைதியற்றே உலவுகிறார் !

•Last Updated on ••Friday•, 31 •July• 2020 21:43•• •Read more...•
 

கவிதை அரங்கு-1: தத்துவம் புவிவாழ்கவே

•E-mail• •Print• •PDF•

- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -


பாளையின் சிரிப்புச் சிந்தும்
பாற்கடற் சிரிப்பா கட்டும்
வாழையின் இலையைப் போலும்
வாழ்க்கையே அழகா கட்டும்
காளையின் வலிமை போலும்
கற்பனை வசமா கட்டும்
நாளைய பொழுதே வெல்லும்
நற்தமிழ்ப் பொழுதே வாழ்க !

•Last Updated on ••Friday•, 31 •July• 2020 21:29•• •Read more...•
 

கவிதை: அத்தனையும் வாழ்வினுக்கு அர்த்தமாய் ஆக்கினரே !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர் களே
கூடிப்பனங் கட்டி   கூழும் குடிக்கலாம்
கொழுக் கட்டை தின்னலாம் தோழர்களே
எனக்களிப்போடு கூடி நின்று மகிழ்ந்தோமே
கொழுக் கட்டை அவிப்பாரும் இல்லை
கூழ்தன்னை நினைப் பாரும் இல்லை
அக்கால மிப்போ அடிமனதில் எழுகிறதே  !

படித்தோம் படித்தோம் பட்டமும் பெற்றோம்
நாகரிக மெம்மை நன்றாகக் கெளவியது
நம்முடைய நற்பழக்கம் நாடோடி யாகியது
அன்னியரின் வாழ்க்கை யெமை அபகரிக்கலாயிற்று
வருடமெலாம் வளமாக்க வந்தமைந்த வெல்லாம்
வரலாற்றில் மட்டுமே பதிவாக வாயிருக்கு
அடிவேரும் இப்போது  வலிவிழக்க லாயிற்று
நினைவழியா நாட்கள்தான் நிற்கிறதே யிப்போது  !

•Last Updated on ••Wednesday•, 22 •July• 2020 21:29•• •Read more...•
 

கவிதை: வாழ்க்கை!

•E-mail• •Print• •PDF•

P.செண்பகபிரியா, புதுக்கோட்டை, இந்தியா

வாழ்க்கை… வாழ….
முயற்சி என்னும் சுவாசம் வேண்டும்
வாழ்க்கை பெரும்  கதை… அது
மண்ணில்  புதைந்த விதை
மெல்ல காற்று உன்னை கைதூக்கும்
சூரியன் நித்தம் புதுப்பிக்கும்
சிறு நம்பிக்கை என்னும் இலை
உன்னில் துளிர் விடும்.

•Last Updated on ••Wednesday•, 22 •July• 2020 21:25•• •Read more...•
 

கவிதை: மண்ணின் சிந்தனை வரமாகட்டும்

•E-mail• •Print• •PDF•

- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

அறம்பொருள் இன்பம் வீடு
அகத்தொடும் வாழ்வுங் கூடல்
சிறந்திடும் காதற் பூக்கள்
சிந்திடும் மழலைத் தொட்டில்
நிறைந்திடும் உலக முற்றும்
நீந்துதல் அமுத மாகும் !
மறந்திடும் துன்ப வாழ்வே
மானிடம் வகுப்ப தாமே !

•Last Updated on ••Wednesday•, 22 •July• 2020 21:18•• •Read more...•
 

மல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க !

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினம் ஜூன 27!

வரலாற்றுச் சுவடுகள்: இவர் ஒரு பல்கலைக்கழகம்.

தமிழினை முதலாய்க் கொண்டு
தரணியைப் பார்க்க வைத்த
உரமுடை டொமினிக் ஜீவா
உவப்புடன் என்றும் வாழ்க
அளவிலா ஆசை கொண்டு
அனைவரும் விரும்பும் வண்ணம்
தெளிவுடன் எழுத்தை ஆண்ட
தீரனே வாழ்க வாழ்க !

சொல்லிலே சுவையை ஏற்றி
சுந்தரத் தமிழைக் கொண்டு
மல்லிகை இதழைத் தந்த
மாதவன் ஜீவா வாழ்க
தொல்லைகள் பலவும் கண்டும்
துவண்டு நீ இருந்திடாமல்
மல்லிகை இதழை நாளும்
மலர்ந்திடச் செய்தாய் நன்றாய் !

•Last Updated on ••Thursday•, 02 •July• 2020 13:48•• •Read more...•
 

கனடியப் பொன்மகள் பிறந்தனளே!

•E-mail• •Print• •PDF•

கனடியப் பொன்மகள் பிறந்தனளே!

- வாய்ப்பாடு: இரண்டு விளம் சக ஒருகாய் -

மானிடம் தேனகம் வளம்பெருக
வையகம் வானகம் மறைபெருக
ஞானமும் மந்திரம் நறைபெருக
நற்றமிழ் புத்தகம் நலம்பெருக
பானிதம் பூத்திடும் பரம்பெருக
பைஞ்;ஞிலம் பஞ்சமில் லாதுயர
கானிடும் மாமழைக் கார்பெருக
கனடியப் பொன்மகள் பிறந்தனளே!

•Last Updated on ••Tuesday•, 30 •June• 2020 16:25•• •Read more...•
 

கவிஞர் தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கத்தின் கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

1-செப்பும்; பூமி சிறந்ததுவே

(அறுசீர் விருத்தம்-4 விளம் சக 2 தேமா சக ஒருகாய்)

நீதியின் பாலொரு நித்தியத் துள்வரும்
நேர்மைத் தேர்தல் ஈதுஎன்றார்
ஆதியில் இருந்துமே ஆகிடும்; கலவரம்
அற்றம் ஆக்கும் சரித்திரமே
சாதியாய் வெந்;திடும் சருகென வானதோர்
சாக்கும் போக்கும் சாற்றிவிடப்
பாதியாய் ஆனது பதைக்கவெ ரிந்தது
பற்றும் வாழ்க்கை போனதுவே!

•Last Updated on ••Tuesday•, 30 •June• 2020 16:12•• •Read more...•
 

அப்பாவை எப்போதும் ஆண்டனாய் போற்றிடுவோம் !

•E-mail• •Print• •PDF•

*உலக தந்தையர் தினத்தில் இக்கவிதை தந்தையர்க்குச் சமர்ப்பணம் !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

தேரிலே சாமிவந்தால் தோளிலே தூக்கி வைத்து
பாரடாஎன்று காட்டும்  பாங்கினை மறக்கமாட்டேன்
ஊரிலேயுள்ளார் எல்லாம் உன்மகன் உதவானென்று
நேரிலேவந்து சொன்னால்  நிமிர்ந்தொரு பார்வைபார்ப்பார்

கவலைகள்படவும் மாட்டார் கண்டதை யுண்ணமாட்டார்
தெருவிலேசண்டை வந்தால்  திரும்பியே பார்க்கமாட்டார்
அடிதடிவெறுத்து நிற்பார் ஆரையும் தூற்றமாட்டார்
உரிமையாயுதவி நிற்பார்  ஊரிலே எங்களப்பா

பொய்யவர்க்குப் பிடிக்காது புழுகுவதை வெறுத்திடுவார்
மெய்பேசிநின்று விட்டால்  விரும்பியவர் அணைத்திடுவார்
உண்மையே பேசுவென்பார்  உழைப்பையே நம்புவென்பார்
எண்ணமெலாம் இனிதாக இருக்கவே வேண்டுமென்பார்

அன்பாக விருவென்பார் அனைவர்க்கும் உதவென்பார்
அசடனாய் வாழாதே அறிஞனாய் உயரென்பார்
பலகதைகள் ஊடாக  பண்புகளை வளர்த்திட்டார்
பாரில் வாழநான் பாதையே அப்பாதான்

•Last Updated on ••Thursday•, 25 •June• 2020 00:11•• •Read more...•
 

கவிதை: தந்தை சொல்

•E-mail• •Print• •PDF•

* தந்தையர்தினக் கவிதை!

கவிதை: தந்தை சொல்

கவிஞர்களை அப்பாக்களாகப் பெற்றிருக்கும் பிள்ளைகளே _

உடனடியாக உங்கள் தந்தையால் நீங்கள் கேட்டும் பணத்தைத் தரமுடியாமலிருக்கலாம்....

உங்கள் வகுப்புத்தோழர்களின் சொந்த வீடு கார் பங்களா போல்
உங்களுக்கும் வாங்கித்தர பெருவிருப்பமிருந்தாலும்
உங்கள் தந்தையால் அதைச் செய்யமுடியாதிருக்கலாம்....

ஆனால், உங்கள் தந்தை காற்றைப்போல!

•Last Updated on ••Monday•, 22 •June• 2020 03:23•• •Read more...•
 

கவிதை: கடவுள் = கொரோனா

•E-mail• •Print• •PDF•

கொரோனாவால் இவ்வுலகு
பட்டழிதல் கொஞ்சமல்ல
பரிதவிப்பும் கொஞ்சமல்ல
கெட்டழிந்து போனாலும்
கெடுமதிக்குக் குறைவுமில்லை
ஒட்டிஉலர்ந்த வயிறு
தட்டுத்தடுமாறும் வயது
பொட்டென்று போவதென்ன
இத்தனையும்தாங்கி இன்னும்
உயிர்வாழும் இப்பூமி

•Last Updated on ••Thursday•, 18 •June• 2020 18:56•• •Read more...•
 

கவிதை: கழிவிறக்கமாகும் மலத்தின் குறியீடுகள்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

‘மலம் கழித்துக் கொண்டிருக்கிறேன்
என்னருகில் தயவுசெய்து யாரும் வர வேண்டாம்’
என்கிற எச்சரிக்கை வாசகத்தை
மிருதுவான கரும்பலகையில் எழுதிவிட்டு,
மீண்டும் மலம் கழிக்கும் வேலையை அல்லது தொழிலை
அழுத்தம் திருத்தமாகச் செய்து கொண்டிருக்கிறேன்.
சில நேரங்களில் சலிப்புத் தட்டும்போது
நான் நூலகத்திலிருந்துப் படிக்க எடுத்து வந்த
பழுதானவையும், பழுது நீக்கப்பட்டுள்ள
புதிய ஏடுகளைச் சுமந்த புத்தகங்களை
உறங்கும் நேரம்போகக் கழிவறையிலிருந்தே
பல நேரங்களில் எடுத்து வந்திருக்கிறேன்.
துருப்பிடித்த படைப்பு முதல்
பாலிஷ்டர் அப்பியிருக்கும் படைப்பு வரை
ஏற இறக்கம் பார்க்காமல்
என் வாசிப்பின் சமதளத்திலே வைத்து
அதனை மோப்பம் பிடித்தே
இதுநாள் வரையிலும் வந்திருக்கிறேன்.
சிலது நறுமணம் கமழும்;
சிலது மொப்பு அடிக்கும்.
என்ன செய்வது
வாசித்தாக வேண்டிய பொறுப்பிலே
என்னை அமர்த்திவிட்டார்கள்
சில கசப்பான மனிதர்கள்.

•Last Updated on ••Saturday•, 13 •June• 2020 01:16•• •Read more...•
 

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1. சமத்துவம் : ஒரு சினிமாவின் தலைப்பு

கோவிலுக்குச் சென்றாலும்கூட
கடவுளையா தம்மையா _ யாரை அதிகம் பார்க்கிறார்கள்
சாமான்யர்கள் என்று
மூக்கின் அருகில் கூப்பிய கரங்களின் மறைவிருந்து
அரைக்கண்ணால் அவ்வப்போது பார்க்கும்
பிரபலங்கள் _
பிரபலங்களான பின்பு ஒருநாளும்
தர்மதரிசனத்திற்கான வரிசையில்
அதி ஏழைகளோடும் மித ஏழைகளோடும் சேர்ந்து
சில பல மணிநேரங்கள் காத்திருந்து கடவுளைக் காண
மனமொப்பாப் பெருந்தகைகள் _
அரண்மனைபோலொரு வீட்டைக்
கட்டிமுடித்த கையோடு
சித்தாள்கள் கொத்தனார்களை முன்னறையைத் தாண்டி
வர அனுமதிக்காத பிரமுகர்கள் _
தப்பாமல் ஒப்பனையுடனேயே தெரியும்
பெரியமனிதர்கள் _
என்றெல்லோரும் முழங்குகிறார்கள்
எங்கெல்லாமோ சமத்துவமில்லையென….
பட்டு சுற்றப்பட்ட தன் முதுகில் அழுக்கு தட்டுப்பட
வாய்ப்பேயில்லை என்று
திட்டவட்டமாய்ப் பறையறிவித்துக்கொள்வார்க்கும்,
தன் முதுகைக் காணமுடியாது தன்னால்
என்று தத்துவம் பேசுவார்க்கும்
எதிரில் உண்டு எப்போதும்
விதவிதமான நீள அகலங்களில்
நிலைக்கண்ணாடிகள்.

•Last Updated on ••Friday•, 06 •November• 2020 23:30•• •Read more...•
 

கவிதை: பெரும் பொழுது!

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -"கார்காலம் பூத்தது
தலைவனும் இல்லகத்தே...

நுதல் மகிழ்வில்
ஓரை மனதில்...

தாரை கண்ணகம் அல்ல
தேரும் மாரில் தகும்...

முளிதயிர் பிசைந்து சிவந்தது
கையோடு மனதும் மணந்தது..

உச்சி முகரும் உள்ளி
மன்றல் ஆவின் ஓதையே சொல்லி...

செம்புலம் சிவந்தது
முல்லை அகன்றது...

ஓடா தேரின் ஆடா மணி நா..

பருக்கை நிறைத்த
அன்பின் அம் கை...

காடோ! நாடோ!
அனாதி ஊடல்
கூடிக் கழிகிறது
இருத்தல் நிமித்தமாய்...

•Last Updated on ••Saturday•, 06 •June• 2020 16:28•• •Read more...•
 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

1.   அவசரமாய் திட்டமிடல் அகிலத்தைக் குலைத்துவிடும்  !

தனிமைச் சிறையினிலே தவித்திருந்த மக்களெலாம்
சிறகை விரித்தபடி தெரிவெங்கும் திரழுகிறார்
உலகையே  வாட்டிநிற்கும் உயிர்கொல்லி கொரனோவோ
விலகியே போனதாய் சொல்லுவார் யாருமுண்டோ  !

விமானங்கள் பறக்கவிட விரைந்துள்ளார் இப்போது
கொரனோவும் மகிழ்வுடனே கூடவே குதித்துவரும்
சுகாதார மையமோ தளர்வெடுப்பைத் தடுக்கிறது
அரசியல் மையமோ அதைக்காணா நிற்கிறது   !

வியாபார மையங்கள் வெளிச்சமாய் தெரிகிறது
விழுந்தடித்து மக்களெலாம் தேடுகிறார் பலவங்கு
முகக்கவசம் செயலிழந்து முடங்கியே கிடக்கிறது
முன்தள்ளி பின்தள்ளி  மக்களெல்லாம் திரிகின்றார்  !

தேனீர் கடைகள் திறந்துமே இருக்கிறது
இடைவெளியைப் பாராமல்  ஏந்துகிறார் கோப்பைகளை
விற்கின்றார் முகத்தினிலும் முகக்கவசம் காணவில்லை
விரும்பிக் குடிப்பாரும் அதைப்பொருளாய் கொள்ளவில்லை  !

•Last Updated on ••Thursday•, 25 •June• 2020 00:10•• •Read more...•
 

பா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -1.   உறங்காத பயணத்தில்........

சொற் சுரங்கத்தில் அள்ளும்
அற்புத மணிகள் தினம்
உற்பத்தி செய்யும் படிமம்
கற்பிக்கும் பாடம் உலகிற்கு
நற்பேறு ஈயும் கடமையுண்டு.

ஆழ்மனதில் பூத்த எண்ணம்
வீழ்ந்து பரவி நதியூற்றாகி
வாழ்ந்திட உயிர் தருகிறது

தாழ்ந்திடாத அன்பின் சிலிர்ப்புகளில்
மலரும் மென்மொழிகளாக
கரங்களைப் பற்றுதலாக
இதயத்தை ஆதரவாய் ஒற்றுகின்றன

அடைகாக்கும் அன்பு மொழிகள்
ஆனந்தக் குஞ்சு பொரிக்கட்டும்

இதயக்  கடலில் நினைவுகள்
இறகாக அசைந்து  சிறகு விரித்துப்
படகாகிறது.
உறங்காத பயணமல்லவா இப்புரள்வு!

(  படிமம்  - பிரதிமை ,  வடிவம்)


•Last Updated on ••Tuesday•, 02 •June• 2020 07:54•• •Read more...•
 

முனைவர் பீ. பெரியசாமி, கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

கடற்கரை

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -ஓ! பெண்ணே…
கடலலையாய்  நான்
கடற்கரையாய் நீ
தினம் உன்னை
தொட்டுச் செல்லத்தான்
முடிகிறது என்னால்
கூட்டிச் செல்ல
முடியலையே……..!

கடற்கரை தென்றலே
காதலர் வருவதறிந்து
வீசுகிறாயோ தென்றலை
தேகம் சிலிர்சிலிர்க்க
நெஞ்சம் படபடக்க
உடல்கள் நடுநடுங்க
உறவுகள் கைகொடுக்கத்
தென்றலும் தேகம்வருட
இனிதாய் கழிகிறது
மாலையெனும் மகிழ்வு….

•Last Updated on ••Tuesday•, 02 •June• 2020 07:54•• •Read more...•
 

கவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்

•E-mail• •Print• •PDF•

கவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்

இரவு வானில் கெக்கலிக்கும் சுடர்க்கன்னியர்கள்தம்
நகைப்பில்
எனை மறத்தலைப்போல் ஓரின்பம் வேறுண்டோ?
பால்யத்திலிருந்து இன்றுவரை பொழுதுபோக்குகளில்
முதற்பொழுதுபோக்கு அதுதான்.
சாய்வுநாற்காலியில் சாய்ந்தபடி தொலைவுச்சுடர்தனில்
தனை மறந்திருப்பாரென் எந்தை.
சாறத்தைத் தூளியாக்கித் தொலைவுச்
சுடர்களை, விரி வானினை இரசிப்பதில்
எனை மறந்திருப்பேன்.
விடை தெரியா வினாக்கள் பல எழும்.
அவற்றுக்கப்பால் இருப்பவை எவையோ?
எனைப்போல் அங்கொன்றும்
தனை மறந்து சிந்தனையில் ஆழ்ந்திருக்குமோ?
எண்ணுவேன்.
வானியல் சாத்திர நூல்கள் பல வாங்கினேன்;
வாசித்தேன். சிந்தை விரிவு பெற்றேன். ஆயினும்
வினாக்களுக்கு விடைதானின்னும் கிடைக்கவில்லை.
இருப்பினும் கேள்விக்கான பதில் நாடி
என் பயணம் தொடரும்.
இருப்பிருக்கும் வரையில் இப்பயணமும் தொடரும்
என்பது எனக்கும் தெரியும்.
ஏனென்றால் பரிமாணச்சிறைக்கைதி நான் என்பதும்
அறிந்ததால்தான்.

•Last Updated on ••Tuesday•, 26 •May• 2020 01:52•• •Read more...•
 

கவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் -

கல்லுண்டாய் வெளியினூடே
பயணித்த நாட்களை
எண்ணிப் பார்க்கின்றேன்.
எத்தனை காலைகள்!
எத்தனை மாலைகள்!

இருள் பிரியா அதிகாலைகளில்
நகர் நோக்கிச் செல்வதுண்டு;
நகர்நோக்கி மானுடர் சிலர்
நடந்தும் சில்லுகளிலும் செல்வர்.
உழைக்கும் தொழிலாளர் அவர்.

•Last Updated on ••Monday•, 25 •May• 2020 16:48•• •Read more...•
 

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. மாடிக்கு வந்த குரங்கு

காலை மாலை பூக்கிறதும்
வணத்துப்பூச்சிகள் சிறகசைய
வானவில் எழுதுறதும்
மைனாக்கள் வந்து கவிதை பேசிறதுமாய்
இந்த கொரோனா ஊரடங்கிலும்
உயிர்க்கும் என் மாடித்தோட்டம்
எந்த ஆடுகளுக்கும் எட்டாது என
மகிழ்ந்திருந்தேன்.
.
எதிர்பாரத வேடிக்கைகளால்
எழுதப்படுவதல்லவா வாழ்வு.
காலையில் எங்கிருந்தோ குதித்ததே
ஒரு குரங்குக் குட்டி.
நம்ம மாடிக்கு குரங்கு வராது என்கிற
இந்த மிதப்பில் இருந்தல்லவா
காவியக் கதைகள் ஆரம்பமாகிறது?
.
குரங்கின் காடுகளைவிடவும் அழகிய
மாடித்தோட்டமும் உண்டோ?
இந்த மலரும் குரங்கும்
நான் கொண்டு வந்ததல்ல.
குறும்புக் குரங்கை விரட்ட மனசுமில்லை.
பல்லுயிர்களின் கொண்டாடமல்லவா வாழ்தல்.

03.04.2020

•Last Updated on ••Monday•, 25 •May• 2020 02:09•• •Read more...•
 

என்னவளாய் இருந்தவளுக்கு.....

•E-mail• •Print• •PDF•

வாசிப்போம்

என்னிடமிருக்கும்
அனைத்தையும்
அளந்துவிட்டுச் சென்ற
என்னவளாய் இருந்தவளுக்கு
இந்தக் கவிதை படையல்.

மணமான பிறகும்
இன்னும் மனமாகாமலே
காலத்தைத் தள்ளும்
சமூகச் சட்டகத்தில்
இடம்பிடித்த
புதுவிதத் தம்பதிகள்
நாம்.

மணவுறவு இல்லை
மனவுறவும் சரியில்லை.
இடையில் ஊசலாடும்
உடற்பசிக்குச் சோறில்லை.

•Last Updated on ••Saturday•, 23 •May• 2020 23:03•• •Read more...•
 

சித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

சித்தம் கலங்காதே
சிந்திப்பாய் மனிதா..
சத்தியம் மறந்தாய்
சோதனை கண்டாய்...

வேதனை தீர்ந்திட
வழியினைத் தேடிடு..
வாழ்ந்த வாழ்வினை
கிளறிப் பார்த்திடு...

•Last Updated on ••Tuesday•, 02 •June• 2020 09:00•• •Read more...•
 

கவிதை: மரணத்தின் உரையாடல்

•E-mail• •Print• •PDF•

வாசிப்போம்

நேற்று முன்தினம்
மரணத்தைப் பற்றிய பேச்சை
அதற்கு ஏற்புடையவனுடன்
வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

எனது பேச்சை மறுதளித்தே
அவன் என்னிடம்
தரைகுறைவான விமரிசனத்தை
முன்வைத்துக் கொண்டேயிருந்தான்.

•Last Updated on ••Wednesday•, 13 •May• 2020 10:02•• •Read more...•
 

நீவீர் இன்றி அமையாது உலகு

•E-mail• •Print• •PDF•

நீவீர் இன்றி அமையாது உலகு

"தேவதைகளின் தோற்றம்
விண்ணிலிருந்து - அல்ல
மண்ணிலிருந்தே....

சேவையின் சிறகோடு கடமையின்
தேவதைகள்-
இந்த வெள்ளை தேவதைகள்

•Last Updated on ••Wednesday•, 13 •May• 2020 09:50•• •Read more...•
 

அன்னையர் தினக் கவிதை: தாயே தமிழே தத்துவமே

•E-mail• •Print• •PDF•

- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

தாயே தமிழே தத்துவமே
தாரணி மெச்சும் சத்தியமே
சேயாய் உதித்த சித்திரமே
செப்புங் காலைச் சூரியரே
நேய உலகின் நித்திலமே
நிலவின் ஒளியே நீள்விசும்பே
ஆய கவியே அற்புதமே
அகிலத் தெழிலே ஆரமுதே !

•Last Updated on ••Monday•, 11 •May• 2020 11:31•• •Read more...•
 

அன்னையர்தினக் கவிதை: அன்னையர் தினம்

•E-mail• •Print• •PDF•

அன்னையர் தினக்கவிதைஎழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

ஒவ்வொரு வீட்டிலும்
ஒளிர்ந்திடும்
தியாக தீபம்
அம்மா.. அம்மா...

உலகில் உள்ள
உயிர்களையெல்லாம்
தாலாட்டும் தென்றல்
அம்மா.. அம்மா...

இன்பத்திலும் துன்பத்திலும்
அணைத்திருக்கும்
அழியாத உறவு
அம்மா.. அம்மா...

•Last Updated on ••Saturday•, 09 •May• 2020 20:39•• •Read more...•
 

அன்னையர்தினக் கவிதை: அவளாசி பெற்று நின்று அவள் பாதம் பணிந்து நிற்போம் !

•E-mail• •Print• •PDF•

அன்னையர்தினக் கவிதை: அவளாசி பெற்று நின்று அவள் பாதம் பணிந்து நிற்போம்  !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

ஓயாமலுழைத்து நிற்கும் ஓருயிரை நினைப்பதற்கு
தாய்நாளாய் ஒருநாளை தரணியிலே வைத்துள்ளார்
வாழ்வெல்லாம் எமக்காக ஈந்துநிற்கும் அவ்வுயிரை
வதங்காமல் காப்பதுதான் மானிலத்தில் தாய்த்திருநாள்  !

சுமையென்று கருதாமல் சுகமாக எமைச்சுமந்து
புவிமீது வந்தவுடன் புத்துணர்வு அவளடைவாள்
அழுதழுது அவதியுற்று அவளெம்மை பெற்றிடுவாள்
அவள்மகிழச் செய்வதுவே அன்னையரின் தினமாகும்    !

காத்துவிடும் தெய்வமாய் காலமெலாம் இருந்திடுவாள்
கண்ணுக்குள் மணியாக எண்ணியெமைக் காத்திடுவாள்
பார்க்குமிடம் எல்லாமே  பார்த்திடுவாள் எம்மையே
பாரினிலே அவளுக்கு ஈடாவார் எவருமுண்டோ   !

•Last Updated on ••Saturday•, 09 •May• 2020 20:37•• •Read more...•
 

நீள் கவிதை: திக்குத்தெரியாத காட்டில்…….

•E-mail• •Print• •PDF•

நீள்கவிதை: திக்குத்தெரியாத காட்டில்…….

திசை – 1

ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்.
விமானங்கள் பறக்கத்தொடங்கும்.
கொரோனாக் காலம் என்பது கடந்தகாலமாகும்.
கதைகளில், கவிதைகளில் திரைப்படங்களில் பட்டிமன்றங்களில்
பேசுபொருளாகும்.
கேட்பவர்கள் பார்ப்பவர்களில் சிலர் சிரிப்பார்கள்;
சிலரின் முதுகுத்தண்டுகள் சில்லிடும்.
இனி வரலாகாத அந்த முப்பது நாட்கள் அல்லது
மூன்று மாதங்களின் நினைவு தரும் இழப்புணர்வு
சிலருக்குப் பொருட்படுத்தத்தக்கதாய்
சிலருக்குப் பொருளற்றதாய்
அருகருகிருக்கும் இரு மனங்களின் இடைவெளி
அதலபாதாளமாயிருக்க வழியுண்டு என நினைக்கையிலேயே
அதன் மறுபக்கமும் எதிரொலிக்கும் மனதில்.
மீண்டும் மனிதர்கள் கூடிப்பழகுவார்கள்.
கூட்டங்கூட்டமாக திருவிழாக்களைக் கண்டுமகிழ்வார்கள்
குழந்தைகளை அழைத்துக்கொண்டு
கடற்கரைக்குச் செல்வார்கள்.
கொரோனாவை மீறியும் நீளும் காலம்
நெருக்கும் கூட்டமாய் உந்தித்தள்ள
இருபக்கமாய் பிரிந்துவிட்டவர்கள் இன்னமும்
தேடித்திரிந்துகொண்டிருக்கலாம்.

•Last Updated on ••Saturday•, 02 •May• 2020 21:53•• •Read more...•
 

கவிதை: தொக்கி நிற்கும் குறியீடுகள்

•E-mail• •Print• •PDF•

வாசிப்போம்


(அ)

ஒரு நூற்றாண்டுக் காலத் தனிமையிலிருந்து
தற்காலத் தனிமை அனுபவத்திற்குள் நுழைவது போல்
உணரும் தருணத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது ஒரு கவிதை.

(ஆ)

எனதான கவித்துவானுபவத்தில் ஏற்றி வைத்தத் தீயை
மீண்டும் என்னுள் எரியவிட்டிருக்கிறது.
எனதுயிரில் கருவுற்றுக்கொண்டிருந்த கனலை
உதைத்தவாறு உசுப்பி விட்டிருக்கிறது.

•Last Updated on ••Sunday•, 26 •April• 2020 14:59•• •Read more...•
 

சுயநலத்தை துறந்திட்டால் துன்பமதைத் துடைத்திடலாம் !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

உயிரினங்கள் வரிசையிலே உயர்ந்தவிடம் மனிதருக்கே
அறிவென்னும் பொக்கிஷத்தை அவரேதான் பெற்றுள்ளார்
புவியிருக்கும் உயிரினங்கள் உணவெண்ணி உயிர்வாழ
அறிவுநிறை மனிதர்மட்டும் ஆக்குகின்றார் அகிலமதில்  !

காட்டையே வாழ்வாக்கி வாழ்ந்தவந்த மனிதவினம்
காட்டைவிட்டு வெளிவந்து கலாசாரம் கண்டனரே
மொழியென்றார். இனமென்றார் சாதியென்றார் மதமென்றார்
அழிவுள்ள பலவற்றை ஆக்கிடவும் விரும்பிநின்றார்  !

விஞ்ஞானம் எனுமறிவால் வியக்கபல செய்துநின்றார்
அஞ்ஞானம் அகல்வதற்கு விஞ்ஞானம் உதவுமென்றார்
விண்கொண்டார் மண்கொண்டார் வெற்றிமாலை சூடிநின்றார்
வியாதியையும் கூடவே விருத்தியாய் ஆக்கிவிட்டார்  !

•Last Updated on ••Friday•, 24 •April• 2020 22:52•• •Read more...•
 

நிரந்தரமே இல்லையென நிரந்தரமாய் உறங்கிவிட்டாள் !

•E-mail• •Print• •PDF•

கண்ணுக்குள் மணியானாள்
கருத்துக்குள் உருவானாள்
உணவுக்குள் சுவையானாள்
உணர்வுக்குக் கருவானாள்
மலருக்குள் மணமானாள்
மழைமேகம் அவளானாள்
மண்மீது என்னிடத்து
பிரியேனே எனவுரைத்தாள் !

பொதுநலத்தை உடன்கொண்டாள்
சுயநலத்தைத் தான்துறந்தாள்
வருந்துயர்கள் விருந்தாக
வாஞ்சையுடன் கண்டிடுவாள்
நிரந்தரமாய் இருந்திடுவேன்
எனவுரைத்த மங்கையவள்
நிரந்தரமே இல்லையென
நிரந்தரமாய் உறங்கிவிட்டாள்  !

•Last Updated on ••Friday•, 24 •April• 2020 22:51•• •Read more...•
 

கவிதை : “தீ ”

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

கர்ப்பமெனத் தங்கியதைக் : கரையேற்றும் வரையினிலே
காக்கும்தாய் நெஞ்சினிலே தீ - அது
பெற்றவளைப் போலவொரு : பெண்ணாய்ப் பிறந்துவிட்டால்
பிறகு என்ன வாழ்வுமுற்றும் தீ !

கண்சிமிட்டிப் பார்த்துஅது : கலகலப்பாய்ச் சிரித்துவிட்டால்
கண்திருஷ்டி என்றுஒரு தீ - அதை
கண்சுற்றிக் கழிப்பதற்குக் : கண்டுகொண்ட முறையினிலே
கண்முன்னே எரித்திடுவார் தீ !

கல்விகற்க அனுப்பிவிட்டுக் : காலைமுதல் மாலைவரை
கக்கத்திலே தாய்கொள்வாள் தீ - மகள்
கற்கையிலே ஆங்கொருவன் : காதல்வசப் பட்டுவிட்டால்
கண்களிலே கொண்டிடுவாள் தீ !

காதலித்து மணப்பவனும் : கல்யாணப் பந்தரிலே
காசுபணம் கேட்பதுவும் தீ - அதை
கண்டு துடிதுடித்து : கண்ணீர் வடித்திடுவாள்
கன்னியவள் மூச்சினிலே தீ !

•Last Updated on ••Thursday•, 23 •April• 2020 14:39•• •Read more...•
 

'கொரோனா' நடிகன்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: 'கொரோனா' நடிகன்!
எழுத்தோடுகிறது.
வாருங்கோ... வாருங்கோ.....
வாங்கிட்டுப் போங்கோ..
மலிவு... மலிவு....
நுவரெலியா.. உருளைக் கிழங்கு....
தம்புள்ள.. கிழங்கும் இருக்கு..

சந்தை  வரிசையில்
ஆளுக்கு ஒவ்வொரு விலை
வணிகத்தில் வன்முறை நிகழ்வது
படமாக்கப்படுகிறது.
பெரு மூச்சுக்கு அவிழ்ந்து நகர்கிறது
காட்சி.

•Read more...•
 

இத்தரை எங்கும் இன்பம் பெருகட்டும்!

•E-mail• •Print• •PDF•

சித்திரைப் புத்தாண்டு பற்றி எண்ணியதும்
சிந்தையில் பற்பல நினைவுகள் எழுந்தன.
பால்ய பருவம் இனிய பருவம்.
கவலைகள் அற்ற சிட்டெனப் பறந்த
களிப்பில் நிறைந்த இனிய பருவம்.
அப்பா, அம்மா , தம்பி , தங்கை
அனைவரும் கூடி மகிழ்ந்த பருவம்.
பண்டிகை யாவும் கொண்டாடி மகிழ்ந்த
நெஞ்சில் அழியாக் கோலமென இன்றும்
இனிக்கும் பருவம் பால்ய பருவம்.
புத்தாடை அணிந்து நண்பருடன் கூடி
மான்மார்க், முயல்மார்க் வெடிகள் கொளுத்தி
கொண்டாடி மகிழ்ந்த பருவம் அஃதே.

•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 17:16•• •Read more...•
 

ஆர் வருவார் சித்திரையை ஆவலுடன் வரவேற்க !

•E-mail• •Print• •PDF•

மனமெல்லாம் சித்திரையை வரவேற்கத் துடித்தாலும்
தினம்தினமாய் வரும்செய்தி செவிகேட்கக் கசக்கிறது
புத்தாடை வாங்கலாமா பொங்கலுமே செய்யலாமா
என்கின்ற அச்சநிலை எங்குமே தெரிகிறதே   !

கூடிநிற்றல் குற்றமென கொள்கையிப்போ இருக்கிறது
ஆடிப்பாடி மகிழுவதும்  அரசால் தடையாகிறது
வீட்டினிலே சிறையிருக்கும் வேதனையில் இருக்கையிலே
நாட்டினிலே சித்திரையை  யார்வருவார்  வரவேற்க !

வழிபாட்டுத் தலமெல்லாம் மனிதநட மாட்டமில்லை
வர்த்தக நிலையமெல்லாம் பாதுகாப்பு மயமாச்சு
வெடிவாங்கி கொண்டாட   வேட்டுவைத்த கொரனோவால்
வடிவான சித்திரையை வரவேற்க யார்வருவார்  !

•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 10:41•• •Read more...•
 

ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•


லதா ராமகிருஷ்ணன்

1.பூவின் வாசனைக்குத் தூலவடிவம் தருபவன்!
(சமர்ப்பணம்: இளையராஜாவுக்கு)

இசை உனக்குள் கருக்கொள்ளும்போது
நீ உருவிலியாகி
ஒரு காற்றுப்பிரியாய் பிரபஞ்சவெளியில்
அலைந்துகொண்டிருப்பாய்…...

இசையை முழுமையாய் உருவாக்கி
முடிக்கும்வரை
நீ மனிதனல்ல _ தேவகணம்தான்.

உன் உயிரில் கலந்த இசை
என்னை ஊடுருவிச் செல்லும் நேரம்
காலம் அகாலமாகும்;
காணக்கிடைக்கும் சிந்தா நதி தீரம்……

•Last Updated on ••Saturday•, 11 •April• 2020 12:57•• •Read more...•
 

கவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்

•E-mail• •Print• •PDF•

கவிதை: கவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்- செல்லத்துரை சுதர்சன் -

- கியூபாவின் பிடல் காஸ்ரோ மருத்துவக் குழு இத்தாலியில் மரணமீட்புக்காய்த் தரையிறங்கிய நாள்  23.03.2020. இக்கவிதையை எழுதிய கலாநிதி செ. சுதர்சன் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கவிஞரும் விமர்சகரும் ஆய்வாளருமாகிய இவர் பல நூல்களின் ஆசிரியர் -

உயர் பசிலிகாவின் கீழறை உறங்கும்,
முதுபெரும் ரோமின் பேதுருவே!
லத்தீன் சிலுவையுருவப் பேராலயத் திருக்கதவுகள்
இறுக மூடிக்கொண்டன!
ரைபர் ஆறும் ஜனிக்குலம் குன்றும்
மௌனித்துப் போயின...!
அரவணைக்கும் கரம்கொண்ட
நீள் வட்ட வெளி முற்றம் என்னாயிற்று...!
‘என் ஆடுகளை மேய்’ எனும் போதனையும்
எர்மோன் மலையடிவார வாசகமும்
தொலைந்து போயின காண்...!
பேதுருவே தொலைந்து போயின காண்...!

கலைகொழிக்கும் முதுபெருந்தாய் மடியில்
உறங்குவோய் இது கேள்....!
ஐராப்பிய ஒன்றியக் கதிரையிலமர்ந்து
உன் மக்கள் கழுகுக்காய் உயர்த்திய கைகளும்...
பட்டினி விரித்தவை, குருதி பெருக்கியவை,
பிணங்கள் குவித்தவை, நிலங்கள் கவர்ந்தவை,
விடுதலை மலர்களை நிலமிசைப் புதைத்தவைதாம்.

•Last Updated on ••Tuesday•, 24 •March• 2020 22:51•• •Read more...•
 

கவிதை: குற்றுயிரும் குலையுயிரும்

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -கலியுகத்தின் பிரளயங்கள் ஓயாத
ஒரு பொழுதில்
ஓய்ந்துவிட்ட பூமியின் சூழற்சி.

ஆயிரம் அணுகுண்டுகளை
அடக்கி ஆள்பவனும்,
இலட்சம் படைகளை திரட்டி
மூக்கணாம் கயிறின்றி
முரண்டு பிடிப்பவனும்
கோடான கோடி டாலர்களை
அடுக்கி அரண்களை அபகரித்தவனும்
ஈரல்குலை நடுநடுங்க
அற்பமாய் ஆக்கி போடும்
கண்ணற்ற அழிவின் கடவுளெது?

தூங்கா நகரங்கள் உச்சிப்பொழுதினிலும்
தாலாட்டையும் தலையணைகளையும்
தானமாக பெற்றுக்கொள்கிறது.

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 09:45•• •Read more...•
 

கவிதை: மழை வாழ்த்தும் காதலர்!

•E-mail• •Print• •PDF•

மழை வாழ்த்தும் மானுடர்!
வாழையிலை குடையாக
வதனமெலாம் மலர்ச்சியுற
விண்ணின்று பன்னீராய்
மழைத்துளிகள் சிந்திடவே
நாளைதனை நினையாமல்
நனையுமந்த திருக்கோலம்
பார்ப்பவரின் மனமெல்லாம்
பக்குவமாய் பதிந்திடுமே   !

•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 10:32•• •Read more...•
 

யாத்திரை போகலாம்

•E-mail• •Print• •PDF•
- தம்பா (நோர்வே) -இடி,மின்னல், நெருப்பு
தமக்குள் எதிரியை தேடும்
மைதானத்தில் ஊடுபயிராக
மனிதம் துளிர் விடுகிறது.

உயிர் வலித்து
குருதி பருகும் உடல்
ஆத்மா எனும் அந்நியனுக்கு
அரிதாரம் பூசுகிறது.

ஒளி மறந்த தீயின் குளிர்
வேள்வியின் திசையெங்கும்
ஏடுதுவங்கும் உதிர்வின் பேச்சு.

பறக்கின்ற காற்றில்
உனது மூச்சுக்காற்று எது?
ஓடுகின்ற ஆற்றில்
நீ விட்ட கண்ணீர் எது?
•Last Updated on ••Thursday•, 12 •March• 2020 11:54•• •Read more...•
 

கொடுத்து வரும் தண்டனையே கொரோ நோவாய் வந்திருக்கு !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

இயற்கை யெனும் பெருமரணை
நொருக்கி நிற்கும் வகையினிலே
எடுத்து வரும் பொருத்தமிலா
முயற்சி யெலாம் பெருகுவதால்
இயற்கை அது சீற்றமுற்று
எல்லை இலா வகையினிலே
கொடுத்து வரும் தண்டனையே
கொரோ நோவாய் வந்திருக்கு   !

•Last Updated on ••Thursday•, 05 •March• 2020 09:12•• •Read more...•
 

இழந்த தருணங்கள்….

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

பகலவன் மறைந்து
சில மணி கடந்தும்
அலுவலக வேலையில்
நாளைக்குள் பணியை
நிறைவு செய்யும்
முனைப்பில்
கோப்புகளுக்கிடையே
புதைந்தபடி....
செல்லிடப்பேசி
அழைப்பு மணியில்
அரை மணிக்கு ஒரு முறை
அப்பா எப்ப வருவீங்க?
எனும் பிஞ்சு மொழிக்கும்
விரைவாக வந்து விடுகிறேன்
எனும் பொய்யான பதில்
கூறியவாறே
தொடர்கிறேன் பணியை .....

•Last Updated on ••Thursday•, 05 •March• 2020 09:13•• •Read more...•
 

மெல்பனில் அமரர் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு

•E-mail• •Print• •PDF•

மெல்பனில்  அமரர் சிசு. நாகேந்திரன்  நினைவரங்கு

•Last Updated on ••Monday•, 02 •March• 2020 10:40•• •Read more...•
 

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஐந்து!

•E-mail• •Print• •PDF•

1. பழுதடையும் எழுதுகோல்கள்‘

லதா ராமகிருஷ்ணன்

[ “படித்தவன் சூதும் வாதும் செய்தால்... போவான் போவான் அய்யோன்னு போவான்” -பாரதியார்]

மக்களாட்சியும் மதச்சார்பின்மையும் மாட்சிமை பொருந்தியவை என்று
24X7 முழங்கிக்கொண்டிருப்போர் சிலரின் மனங் களில்
மலிந்திருக்கும் மூர்க்கமான அதிகாரவெறி
ஆயிரம் வாள்களைக் காட்டிலும் அதிகூர்மையாய்
அங்கங்கே தலைகளைக் கொய்தபடியே……

அவரவருக்குத் தேவைப்படும்போது மட்டும்
அகிம்சை underline செய்யப்படும்.

‘பிரபலங்கள் சுதந்திரமாக நடமாட வழிவகுக்கும் கருவி யென

’புர்கா’வுக்குப் பதவுரை வழங்கியும்,
’ஜெய் ஸ்ரீராம்’ இந்த நூற்றாண்டின் குரூர வாசகம்’ என்று
மதிப்புரை யெழுதியும்

நிதமொருவிதமாய் வெறுப்பை வளர்த்து
எழுத்தில் மனிதநேயத்தையும் பெண்ணியத்தையும்

முன்னிறுத்திக்கொண்டிருக்கும்

படைப்பாளிகளும் உளர்.

அன்பையே வளர்ப்பதாகச் சொன்னவண்ணமிருக்கும்
என்புதோல் போர்த்திய உடலங்களாய்
முழுப்பிரக்ஞையிலான Selective amnesia வில்
மும்முரமாய் சில காட்சிகளை மட்டுமே
மீண்டும் மீண்டும் அதிகவனமாகப் பதிவேற்றுவதில்
முந்துவது யார்? _

மூத்த படைப்பாளியா?
முளைவிட்டுக்கொண்டிருக்கும் படைப்பாளியா?

•Last Updated on ••Monday•, 02 •March• 2020 10:30•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து!

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

- அண்மையில் எனது கண்ணம்மாக் கவிதைகள் ஐந்தினைத் தனித்தனியாக இங்கு பதிவு செய்திருந்தேன். அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தந்துள்ளேன். 'காலவெளி' நம் இருப்பின் யதார்த்தம். இச்சொற்றொடரைக் காணும் போதெல்லாம், கேட்கும் போதெல்லாம், வாசிக்கும் போதெல்லாம் நெஞ்சில் களி பொங்குகின்றது; சிந்தனைக்குருவி சிறகடித்துப்பறக்க ஆரம்பித்து விடுகின்றது. காலவெளியற்று இங்கு எதுவுமேயில்லை. காலவெளி பற்றிய என் உணர்வுகளின் பிரதிபலிப்புகள் இக்கவிதைகள். -


1: காலவெளிச்சித்தனின் மடலொன்று!

ஒளிக்கூம்புக்குள் விரிந்து , சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.
அடியே! அண்டத்தில் நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.
ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.
நானே  கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால் இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.
இருந்தாலும் கவலையை விடு.
இன்னும் சிறிது விளக்குவேன்.
நீ, நான் , இங்குள்ள அனைத்துமே
துகள்களின் நாட்டியம்தாம்.
சக்தியின் வடிவம்தான்.
புரிந்ததா சகியே!

•Last Updated on ••Wednesday•, 26 •February• 2020 20:12•• •Read more...•
 

அரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : "நெஞ்சு பொறுக்குதில்லையே"

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே - நம்மை
நெருங்கிடும் துயரங்கள் நீள்வது கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே!

அடிமை விலங்கொடித்து ஆர்ப்பரித்தோம்
அடைந்துவிட்டோம் சுதந்திரமெனக் கொக்கரித்தோம் - இன்று
நெஞ்சு பொறுக்குதில்லையே!

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் கடக்கையில்
அங்கும் இங்குமாய்ச் செய்திகள் படிக்கையில்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

இறைவன் இருப்பிடத்தைக் கேடயமாக்கி
இளஞ்சிறார் சிதைக்கப்படுவதா சுதந்திரம்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

கைம்மாறு கருதாது உதவிய காலம்போய்
கையூட்டு இல்லாமல் காரியம் நடப்பதெங்கே
நெஞ்சு பொறுக்குதில்லையே!

•Last Updated on ••Monday•, 24 •February• 2020 10:38•• •Read more...•
 

பா வானதி வேதா. இலங்காதிலகத்தின் கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -1. அவுஸ்திரேலியா காட்டுத் தீ..

கஞ்சாச் செடிகளைப பாதுகாக்க பற்றைகளுக்கு
அஞ்சாது   தீயிட்டாராம்   ஐம்பத்தோரகவை   மூதாளன்
பஞ்சபூதத்திலொரு அக்னி பகவான்
ஆச்சு(தோ) பாரென்று நெருப்பு யாகம் நடத்துகிறான்.

உருவம்,  உறக்கமில்லா  அழிப்பே    தீ!
கருவான நெருப்பைப் பற்ற வைத்தவனெங்கே!
பாகாசுரப் பசியில் சாம்பலாக்குவது  உன்திறமை!
நெருப்பு நடனம் நீரிற்தானே  அழியும்!

ஆவணியிலிருந்து (2019) குவீன்ஸ்லாந்து, நியூசவுத்வேல்ஸ் பகுதிகளில்
ஆங்காரமிடும் நெருப்புப் புயல்    அவுஸ்திரேலியாவில்.
இயற்கைக்  கோர தாண்டவம் உச்ச கட்டம்!
மயற்கைப் பதட்டத்தில் மக்கள் வேதனையில்!

கடந்தமாத ஐம்பது பாகை வெப்பம் ஆகுதியாகி
கோடிகள் ஐம்பதிற்கும்  மேலான உயிரிழப்பு!
பத்து இட்சம்  கெக்டார் பரப்பளவு நிலம்
பல்லுயிரினம், நானூறுக்கும் மேலான வீடுகள் பாழ்.

•Last Updated on ••Friday•, 31 •January• 2020 11:15•• •Read more...•
 

ஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் !

•E-mail• •Print• •PDF•


ஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் !

பொங்கலென்று சொன்னாலே
பூரிப்பும் கூடவரும்
மங்கலங்கள் நிறையுமென்று
மனமதிலே தோன்றிவிடும்
சங்கடங்கள் போவதற்கும்
சந்தோசம் வருவதற்கும்
பொங்கலை நாம்வரவேற்று
புதுத்தெம்பு பெற்றிடுவோம் !

•Last Updated on ••Wednesday•, 15 •January• 2020 11:13•• •Read more...•
 

உலகையாளும் பொங்கலே வாழியவே

•E-mail• •Print• •PDF•

உலகையாளும் பொங்கலே வாழியவே

இனிதாய்  வந்திடும் பொங்கலே
உள்ளங்கள்  மகிழ்ந்திடும்  பொங்கலே   
உலகமே   கொண்டாடும்  பொங்கலே
உழைப்பை  நினைவூட்டும்  பொங்கலே!

தமிழர்கள்   ஒன்றாகும்    பொங்கலே
தன்மானம்  வளர்த்திடும்  பொங்கலே
பொங்கும்   தமிழரின்    பொங்கலே
போற்றும்   ஒற்றுமைப்   பொங்கலே!

•Last Updated on ••Wednesday•, 15 •January• 2020 10:58•• •Read more...•
 

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தன்மதிப்பு

நாங்கள் ஆளுக்கு நான்கு பிரம்மாண்டக் கப்பல்களின் அதிபதிகள்

என்கிறார்கள்.
அப்படியா என்று கேட்டு அப்பால் நகர்கிறேன்.
அவர்களில் ஒருவருக்குத் தலைசுற்றுவதுபோலிருக்கிறது.
இன்னொருவர் அதிர்ச்சியில் தடுக்கிவிழப் பார்க்கிறார்.
மூன்றாமவர் என்னை அப்படி முறைக்கிறார்.
நான்காமவர் நிதானமிழந்து வேகவேகமாய்த் தொடர்ந்துவந்து
ஆகாயவிமானங்கள் கூட எங்களிடமிருக்கின்றன என்கிறார்.
ஆளுக்கு நாலாயிரமா என்று கேட்கிறேன்
சலிப்பையும் சிரிப்பையும் அடக்கிக்கொண்டு.
அத்தனை மண்டைகனமா என்று ஆத்திரத்துடன் கேட்டபடி
அடிக்கவருகிறார்கள்
அப்படியில்லை, என்னிடமிருப்பதை நீங்கள் அறியவில்லையே

என்ற ஆதங்கம் என்கிறேன்.
”அப்படி யென்னதான் வைத்திருக்கிறாய் பெரிதாக?”
”என்னை” யென்றபடி பிரதிசெய்யமுடியாத
வரிரூபமாகிறேன்.

•Last Updated on ••Monday•, 02 •March• 2020 10:23•• •Read more...•
 

புதுமை காட்டும் பாங்குடனே புதிய வருடம் பிறக்கட்டும் ! இரண்டாயிரத்து இருபதை இன்முகமாய் வரவேற்போம் !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

1. புதுமை காட்டும் பாங்குடனே புதிய வருடம் பிறக்கட்டும் !

வெடித்துச் சிதறும் பட்டாசு
விடியல் காட்டும் குறியல்ல
இடக்கு முடக்கு வாதங்கள்
எதற்கும் தீர்வு வழியல்ல
நினைப்பில் மெய்மைப் பொறியதனை
எழுப்பி நின்று பார்திடுவோம்
பிறக்கும் வருடம் யாவருக்கும்
சிறப்பை ஈந்து சிரிக்கட்டும்  !

அறத்தைச் சூது கவ்வுமெனும்
நினைப்பை பொசுக்கி எரித்திடுவோம்
உளத்தில் உறுதி எனுமுரத்தை
இருத்தி வைக்க எண்ணிடுவோம்
வறட்டு வாதம் வதங்கட்டும்
வெறுக்கும் எண்ணம் மடியட்டும்
சிரிப்பு மலராய் மலரட்டும்
பிறக்கும் வருடம் இனிக்கட்டும்  !

•Last Updated on ••Wednesday•, 01 •January• 2020 01:50•• •Read more...•
 

கவிதை: மூழ்கி நீந்துங்கள்!

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

ஆலகம் (நெல்லி) போன்றது கவிதை.
கீலகம் (ஆணி) போன்ற பூவிதை.
கேலகன் (கழைக்கூத்தாடி) போன்று கோலங்காணும்.
தாலப்புல்லான (பனை)  திறன் உடைத்து.
தூலகம் (பருத்தி), தூலிகை (அன்னத்தின் இறகு) போன்றது.

•Last Updated on ••Wednesday•, 25 •December• 2019 01:54•• •Read more...•
 

கவிதை: எனக்குப் பேசத்தெரியும்

•E-mail• •Print• •PDF•

கவிதை:  எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத்தெரியும்
காக்காய் பிடிப்பது போலவும்
சோப்பு போடுவது போலவும்
ஜால்ரா தட்டுவது போலவும்
பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத்தெரியும்
என் நலன்
என் வீட்டு நலன்
என் நோட்டு நலன்
பற்றி மட்டுமே பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

•Last Updated on ••Wednesday•, 25 •December• 2019 01:50•• •Read more...•
 

கவிதை : உன் மனம் கல்லோ?

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

பெண்  கண்ணை  மீன்  என்று,
பெருங்  கவியில்  எழுதிவைத்  தேன் !
உன்  கண்ணோ  தூண்டி  லதாய்,
உடன்  என்னைக்  கவ்விய  தேன் ?

சிலைபோல்  நீ  அழகு  என்று,
சிறப்பாய்  நான்  உவமையிட்  டேன் !
சிலைபோல்  நீ  கல்லு  என்று,
சிரத்தினை  ஏன்  முட்டவைத்  தாய் ?

•Last Updated on ••Wednesday•, 25 •December• 2019 01:55•• •Read more...•
 

ஞானமே!!!

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -

"ஞானநிலையோடே
அது சிரிக்கின்றது...
பிரிப்படாத
வண்ணங்களில்
புழுதியேறி
அகலத்திறந்த
அதன் வாய்க்குள்
சில கொசுக்களும்
ஈக்களும்
ரீங்காரத்தோடு......
ஈக்கியாய்
உலரும்
பொட்டல்
வெயிலிலும்
அதன் சிரிப்பில்
சிறிதும்
மாற்றமில்லை...

•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 10:38•• •Read more...•
 

புதிய தலைமுறையை உருவாக்குவோம்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சு.குமார்,  உதவிப் பேராசிரியர், ஸ்ரீவினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  உளுந்தூர்பேட்டை -

புதிய தலைமுறையை உருவாக்குவோம்
ஓ இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!
புது வருடம் பிறக்கிறது
புது புது சிந்தனைகளோடு
போராட்ட குணங்களோடு
சமூக விஞ்ஞான உணர்வுகளோடு
புது உலகத்தைப் படைத்திடுவோம்
வாருங்கள் இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!

•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 10:14•• •Read more...•
 

காரிகைக் குட்டி கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

காரிகைக் குட்டி

காலக் கடிதக் குறிப்புகளின் பயணம்.

சில கடிதங்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு முன் வந்திருந்த கடிதங்களில் குறிக்கப்பட்டிருந்த
அதே முகவரி.

கடிதம் அடைய வேண்டிய முகவரி மாறாதிருந்தாலும்
அதனை அனுப்பும்
நபர்களின் முகவரிகள் நிச்சயமாய்
வேறாகவே இருந்தது.

அதே போல் மற்றொன்றாக ஒரு தகவல்
அக்கடிதங்கள் வெவ்வேறு காலத்தில்
அதே முகவரியில் வாழ்ந்த வேறு வேறு நபர்களுக்கானது.
எனில், அது வேறு வேறு காலத்தில் எழுதப்பட்டவைகளே.
அவ்வெழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில்
அந்நபரின் குறிப்புகளை முதலில் கண்டடைதல் வேண்டும்.
பழங்கால எகிப்திய நாகரீக 'கியூனிபார்ம்' எழுத்துக்களையும்,
சிதைந்த 'சிந்து எழுத்து' முறைகளுமாய் இருக்குமெனில்
நைல்நதியின் பாதையோடும்,
தோலால் வரையப்பட்ட மேப்பில் குறிக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு
ஈரானிய 'மெசபடோமிய' நாகரீகத்திற்குள் நுழைந்து
அந்நபர் குறித்த தகவலை நாம் திரட்டியாக வேண்டும்.

இக்கடிதத்தையும் பிரிக்க வேண்டாமென்ற குறிப்புகளோடு
எனது மேசையின் மேல் உறைகிழிக்கபடாமல்
வெறித்தப் பார்த்தன அவ்வெழுத்துகள்...
பெருநாட்டு நீண்ட அலகு பறவையாய்.

* கியூனிபார்ம், சிந்து எழுத்து - இரண்டும் பழங்கால சித்திர எழுத்து முறைகளுள் ஒன்று.

•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 10:07•• •Read more...•
 

முனைவர்.சி.திருவேங்கடம் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

தள்ளாட்டம் …

உள்ளத்தின்
ரணம் ஆற
அருமருந்தென
கூடா நண்பனின்
பரிந்துரைப்பை
செவிமடுத்து
கேட்டு
கண்ணாடிக்
கோப்பைக்குள்
திரவத்தை
ஊற்றிக் கொஞ்சம்
உறிஞ்சிக் குடித்தேன்.

•Last Updated on ••Thursday•, 05 •March• 2020 09:10•• •Read more...•
 

கவிஞர் பூராமின் கவித்துளிகள்!!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1
வந்து விழுந்த
சூரியக் குழந்தை
அழுது ஆர்ப்பாட்டம் செய்தது,
கண் குளத்தின் தண்ணீர்
ஊற்று பொங்கி வழிய
இதய வானில் அன்பு
ஆவேசமானது
எதையாவது கொடுத்து
அழுகையை நிறுத்திவிட
முயற்சிகள் எல்லாம்
அழுகையின் வீரியத்தில்
அடங்கிப் போயின.
கையறு நிலையோடு நின்ற
என்னைக் கள்ளப் பார்வை
பார்த்து மீண்டும் மீண்டும்
அழுகையின் உச்சத்திற்குச் சென்றது.
உடல் சோர்ந்து மனம் அயர்ந்து
அமைதியின் மடியில் அகப்பட்டு
கண்ணை முடினேன்
காதுகளுக்கு அழும் ஓசையின்
சுவடுகூட தென்படவில்லை
ஆழ்ந்த பெருமூச்சோடு கண் திறக்க
மன மற்று இருக்கும் வேளையில்
பிரகாசமான அகஒளியில் நான்.
வெறுமையின் நிறைகுடத்தில்
ததும்பி வழிகிறேன்.
•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 09:51•• •Read more...•
 

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

லதா ராமகிருஷ்ணன்

1. ஆறாத்துயர்

ஒரு நம்பிக்கையில் வெளியே வருபவளிடம்
’இருட்டிய பின் ஏன் வருகிறாய்’ என்ற கேள்வி
பகலிலும் அவள் தனது நம்பிக்கையைப் பறிகொடுக்கும்படி
செய்துவிடுகிறது.

பயத்தில் பதுங்கிக்கொள்ள குகை அல்லது பதுங்குகுழி
தார்ச்சாலையில் இருப்பதில்லை.

இருந்தாலும் அங்கிருந்து கைபேசியில் யாரிடமேனும்
உதவிகோர ‘சிக்னல் கிடைக்காது.

’பலாத்காரம் தவிர்க்கப்படமுடியாதபோது
படுத்து அனுபவி’ என்று ‘quotable quote’
பகன்றவனை
நெருப்பில் புரட்டியெடுக்கவேண்டும்.

•Last Updated on ••Monday•, 02 •March• 2020 10:25•• •Read more...•
 

ஓயாமல் எரிகிறது.....

•E-mail• •Print• •PDF•

"இரவு முழுக்க
வீட்டின்
முன்னறையில்
விளக்கெரிய
குறுக்கும்
நெடுக்குமாக
உலாத்திக்
கொண்டிருந்த
அப்பாவின்
கோபம்
குளிர்ந்திருந்தது.....
அதே அறையில்
கிடத்தி
வைக்கப்பட்டிருந்த
அப்பாவின்
உடலும்
குளர்ந்திருக்க
ஓயாமல்
எரிந்து கொண்டே
இருக்கின்றது
அவ்வறையின்
குண்டு பல்பும்
அக்கா
எழுதிச் சென்ற
கடிதமும்......"

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Saturday•, 09 •November• 2019 02:45••
 

மனக்குறள்:28 , 29 & 30

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

வாகை சூடிய ஹரி ஆனந்தசங்கரி

வையமெலாம் போற்றும் வகையான வெற்றியின்
கைகளிலே வென்றான் ஹரி !

ரூச்றிவர் வண்ணம் உளமாகிச் செந்தமிழ்
ஆச்சுதே மீண்டும் அரண் !

இன்பக் கனடா இயன்றபத் தொன்பதின்
நற்தேர்தல் சொல்லும் நலம் !

சனரஞ் சகத்தோடும் சான்றாகும் யஸ்ரின்
கனடாவென் றானார் கரம் !

எந்நாளும் மக்கள் இதயத் திருப்பாகும்
நல்லோர்க் கெனவாகும் நாடு !

முள்ளிவாய்க் காலும் முகத்தும் கனலாகி
அள்ளுதுயர் கண்டார் அரி !

கனடா நிலைப்பாடு கண்டதுவே அய்நா
இனத்தோடும் எண்ணம் எடுத்து !

போர்தந்த நாட்டிற் புதையுற்ற தாய்நிலத்தில்
நேர்கண்ட மாந்தன் நெறி !

ஐந்தல்ல நூறல்ல ஆயிரம்பல் லாயிரம்
தந்துமண் கண்டான் தனம் !

மண்ணொடும் நீராக வயலொடும் நெல்லாக
எண்ணிய மாமனிதன் என்க !

•Last Updated on ••Friday•, 29 •November• 2019 02:04•• •Read more...•
 

அஞ்சலி: ஆழ்துளை அவலம்

•E-mail• •Print• •PDF•

- மணப்பாறைக்கு (திருச்சி) அண்மையிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழாய்க்கிணற்றினுள்  தவறி விழுந்த இரன்டு வயதுக்குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றுவதற்கான மீட்பதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இறந்த நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. -

தண்ணீரைத் தேடினோம் - ஆனால்
கண்ணீரே வந்தது
ஆழ்துளைக்குள்
அழுகையொலி - இன்னும்
எதிரொலித்தே நிற்கிறது
•Last Updated on ••Tuesday•, 29 •October• 2019 10:05••
 

நன்றி வரைத்தன்று.....

•E-mail• •Print• •PDF•

"திடீரென்று
அலுவலகம்
புகுந்த
அந்தத்
தெருநாயின்
சேறு படிந்த
கால்தடம்
நாள்தோறும்
வீட்டிற்கு
வெளியில்
கிடக்கும்
அப்பாவின்
சேறு அப்பிய
செருப்பினை
நினைவுப்படுத்துகிறது....
வாலாட்டியே
கடந்துபோகும்
அதன்
வாலசைவிற்கு
மண்டியிட்டது
என் வாழ்க்கை...."

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Saturday•, 09 •November• 2019 02:45••
 

ஆனந்தமாய் தீபாவளி அமைகவென வேண்டி நிற்போம் !

•E-mail• •Print• •PDF•

தித்திக்க தித்திக்க பட்சணங்கள் செய்திடுவோம்
தெருவெங்கும் மத்தாப்பு வெடிவெடித்து நின்றிடுவோம்
மொத்தமுள்ள உறவுகளை முகமலர்ச்சி ஆக்கிடுவோம்
அத்தனைபேர் ஆசியையும் அன்புடனே பெற்றிடுவோம்
சித்தமதில் சினமதனை தேக்கிவிடா நாமிருப்போம்
செருக்கென்னும் குணமதனை சிறகொடியப் பண்ணிடுவோம்
அர்த்தமுடன் தீபாவளி அமைந்திடவே வேண்டுமென
அனைவருமே ஆண்டவனை அடிதொழுது பரவிநிற்போம் !

•Last Updated on ••Saturday•, 26 •October• 2019 08:44•• •Read more...•
 

இரவில் நான்

•E-mail• •Print• •PDF•


இரவுக் கட்டியை விழிநீரிட்டு இழைத்தாலும்
அடுத்த நாளும் அடரிருட்டோடு கிடக்க
மிச்சத் துளிகளால் குழைத்தப் பின்னும்
விடாது தொடர்ந்த கருமையை
துடைத்தழிக்க எதுவுமில்லாத
வெறுமையை நிரப்பும்
ஞாபக குவியலை
கிளறித் தேடியதில்

•Last Updated on ••Sunday•, 20 •October• 2019 07:47•• •Read more...•
 

மா -னீ கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

மா -னீ கவிதைகள்!
1.

இனிதே நிறைவு பெற்றது .
பிறகு
அனைவரும் அமர்ந்தனர்.

நான்கிற்கு நான்காய்  வீடு
நடுவில் நீளமாய்  மேஜை
துணி விரித்துப்  போட்டு

விளைநிலம் எழுதி
வீடு எழுதி
வரைபடம் சரி பார்த்து
கையொப்பம் பெற்று
தொகை எண்ணி சம்மதித்து 
மோதிரம் மாற்றிய
பிறகு
அனைவரும் அமர்ந்தனர்.

•Last Updated on ••Saturday•, 19 •October• 2019 22:24•• •Read more...•
 

முனைவர் சி.திருவேங்கடம் கவிதைகள் ஐந்து!

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

1. வேழத்தின் ஓலம்

அடர்ந்த பெருங்காட்டிலிருந்து
வேட்கை மிகுதியால்
நீர் தேடி அலைந்து
திரிந்து திசைமாறி

கணப் பொழுதில்
பாதுகாப்பற்ற
தண்டவாளத்தை
யாதுமறியாமல்
கடந்து செல்ல
முனைகிறது
பேருருவம் கொண்ட
யானை.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:38•• •Read more...•
 

வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்.) கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

1. பகல் வேடக்காடு....

நன்மதியைத் துன்மதி ஆக்குபவர்
வன்முறையாளர் பழிவாங்கும் சிந்தனையாளர்
இன்பமில்லா விடமேறிய சொற்களுடன்
அன்புக்காட்டைக் கொலைக்காடு ஆக்குபவர்
புன்னகையில் மர்மங்கள் புதைத்துள்ள
தென்பற்ற உறவுகள் விலக்குதற்குரியன.

பூச்சொரியும் என்று புறப்பட்ட
பாதங்கள் பாவிசை கேட்காது
பரவச மொழியை இழந்தால்
பந்தம் அறுத்திடும் ஒரு
பகல் வேடக்காடு தானே
பகிரங்க வாழ்வு மேடை.

முகத்தை முகம் பார்த்து
முக்காடற்று நிமிர்ந்து நேராக
முகம் கொடுப்பதே சுயநடை
முனகி விம்மும் மனமுகடு
முரணாகிச் சரிவதும் இயல்பு.
தரமற்ற நிலையின் தழுவலேயிது!

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:08•• •Read more...•
 

மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண்,. அவுஸ்திரேலியா ) கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -1. காந்திசொன்ன தத்துவங்கள் கதிகலங்கி நிற்குது !

- அண்ணல்காந்திக்குச் சமர்ப்பணம் -

கண்ணியத்தை வாழ்வாக்கி
காந்திமகான் வாழ்ந்திருந்தார்
காசுபற்றி எண்ணாமால்
கடமைவழி அவர்சென்றார்
காசுபற்றி எண்ணாதா
காந்திமகான் தனையிப்போ
காசுகளில் இருத்திவைத்து
கறுப்புப்பணம் ஆக்குகிறார் !

காந்திமகான் பெயராலே
காரியங்கள் ஆற்றுகிறார்
கயமைநிறை அத்தனையும்
கவலையின்றி செய்கின்றார்
கயமைதனை அகற்றுதற்கு
காந்திபட்ட துன்பம்
கண்ணீரின் கதையாக
ஆகியதை மறந்திட்டார் !

•Last Updated on ••Saturday•, 19 •October• 2019 21:08•• •Read more...•
 

மனக்குறள் -25 , 26 & 27 :கண்ணதாசன் என்னும் காலக்கவிஞன்

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

மனக்குறள் -25 கண்ணதாசன் என்னும் காலக்கவிஞன்

கண்ணதாசன் இன்பக் கவியரசன் காலெடுத்துக்
கண்;ணில் மலர்ந்தேன் கவி !

எண்ணிப் பரந்த இதயக் கருவறைக்குள்;
எண்ணம் வகுத்தான் இதயம் !

வேதாந்தம் சைவம் விளங்கும் மறைமொழிபோல்
நாதாந்த மிட்டான் நயம் !

ஏடு வரைந்து எடுத்தபெயர் கண்ணதாசன்
வேகும் அரசியலின் வேர்!

அர்த்தமுள்ள இந்துமதம் ஆன்மக் கருந்துகளைக்
கற்றுவிட வைத்தானே கண்!

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 02:04•• •Read more...•
 

கவிதை: தெப்பக்குளத்துப் பிள்ளையார் குமுறல் !

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்தெப்பக்  குளத்தின்  தென்புறத்தில்,
திண்டில்  அரச   மரநிழலில்,
செப்பற்  கடங்கா  அருள்சுரக்கும்,
சிவனார்  உமையாள்  முதற்குமரர்,
தொப்பை  வயிற்றார் :  துதிக்கை  யார்,
தூங்கா  மல்தினம்  கண்விழித்து,
குப்பைக்  குணத்தார்  செயல்கண்டு,
குமுறு  கின்றார்  குழம்புகின்றார் !

“ஆற்றங்   கரையோ  குளக்கரையோ,
அதிலோர்  அரச  மரநிழலோ,
ஏற்றம்  பெறவே  இனிதுநின்  றால்,
என்னை  ஏனதில்  இருத்துகின்றார்?
வேற்று  மதத்தார்  கோவிலெல்லாம்,
விண்புகழ்  சேர்க்கும்  மேன்மைபெற,
நாற்றம்  பிடித்த  இடத்திலெல்லாம்,
நமையேன்  வைத்து  நசிக்கின்றார் ?

காலைப்   பொழுதில்  அபிஷேகம் : பின்,
கடமைக்  கெனவொரு  சிறுபூஜை !
மாலைப்  பொழுதிலும்  இதுதொடரும்,
மதிப்பாய்  தினமும்  இருவேளை !
வேலை   என்று   இதைத்தொடர்ந்து,
வெறுப்பை  உளத்தில்  ஏற்றுகின்றார் !
நாலு  தலையார்  நம்மாமர்,
நமக்கென  ஏனிதை  எழுதிவைத்தார் ?

•Last Updated on ••Wednesday•, 25 •September• 2019 07:16•• •Read more...•
 

விழியாக விளங்குகிறாய் பாரதியே!

•E-mail• •Print• •PDF•

- பாட்டுக்கொரு புலவன் பாரதியின் நினைவு நாளில் இக்கவிதை அவருக்குச் சமர்ப்பணம் -
மகாகவி பாரதியார்
வறுமையிலே  உழன்றாலும்
பெறுமதியாய்   கவிபடைத்தாய்
அறிவுறுத்தும் ஆவேசம்
அதுவேயுன் கவியாச்சே
துணிவுடனே கருத்துரைத்தாய்
துவிண்டுவிடா உளங்கொண்டாய்
புவிமீது வந்ததனால்
பொங்கிற்றே உணர்ச்சிவெள்ளம் !

பலமொழிகள் நீகற்றாய்
பற்றுதலோ தமிழின்பால்
தேமதுரத் தமிழென்று
தீர்க்கமாய் நீமொழிந்தாய்
காதலுடன் தமிழணைத்தாய்
கற்கண்டாய் கவிதைதந்தாய்
ஆதலால் பாரதியே
அமர்ந்துவிட்டாய் உள்ளமெலாம் !

•Last Updated on ••Wednesday•, 11 •September• 2019 07:00•• •Read more...•
 

கவிதை: முதியோர் முரசு

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

அது ஒரு அளவான குடும்பம் - ஆனால்
அழகான குடும்பம் என்று சொல்வதற்கில்லை...

அது மூன்று தலைமுறைகள் வாழுகின்ற வீடு
மூவருக்கு அது கூடு -
வயதில் முதிர்ந்த இருவருக்கு அது கூண்டு...

முதிர்ந்த தலைமுறைக்கு மகனொருவன்
உண்டு - அவன் மனைவி என்னும்
மலரின் பின்னால் சுற்றுகின்ற மயக்க வண்டு...

இன்னும் சொன்னால் மனைவி
என்னும் சாட்டையால் சுற்றுகின்ற பம்பரம்
மணிக்கணக்கில் வேலை
செய்து தளர்ந்துவிடும் எந்திரம்...

அந்த வீட்டின் இல்லத்தரசி ஆணைகளால் ஆளுகிறாள் -
அடக்கி ஆளுகின்ற அதிகாரத்தால் நீளுகிறாள்...

மூன்றாம் தலைமுறையாய் மழலை
மொழி பேசும் மகவொன்றும் உண்டு -
அவன் வாசமும் பாசமும் வீசுகின்ற மலர்ச்செண்டு...

அந்த வீட்டின் இரு தூண்கள் வேம்போடு ஓர் அரசு...
அவர்கள் படும் இன்னல்களில் உருவானது என் முரசு...

வாழ்கையில் கடந்து வந்த பாதைகளை
முதிய நெஞ்சங்கள் அசை போடுகின்றன
விரக்கிதியின் விளிம்பில் நின்று
சோக இசை பாடுகின்றன...

•Last Updated on ••Wednesday•, 28 •August• 2019 06:53•• •Read more...•
 

நிறைவு

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

காலைக் கதிரவனோடு
கைகோர்த்து
தூரத்து
ரயில் பயணம்
தொடர் வண்டியின்
தடதட சப்தம்
திடீரென
வீசிய சாரல்
மழை!!

•Last Updated on ••Wednesday•, 28 •August• 2019 06:50•• •Read more...•
 

கவிதை: குப்பைகள் குறித்து...

•E-mail• •Print• •PDF•

கவிதை: குப்பைகள் குறித்து...

குப்பை:1

இதுவரை அப்படியொன்றும் செய்ததில்லை
எல்லோரும் அதனை சர்வசாதாரணமான நிகழ்வு என்று
தங்களுக்குள்ளும், பிறருக்கும் சொல்லிக் கொள்கின்றனர்.
அவர்களுடைய கால்கள் பதிந்த பாதச்சுவடுகளில் சில
பழைய பாதைகள் பதிவதைக் காணமுடிந்தது. எப்படியோ?
ஆனால் அது உண்மைதான்.
கடற்கரையருகே நடக்கவேண்டியவன்
அலைகளுக்குள் தன்னை கரைத்துக் கொண்டான்
அலைகள் இழுத்துச் சென்ற மணல் மீதிருந்த
ஒரு குப்பையைப் போல.
அவன் ஒரு குப்பைதான் சந்தேகமென்ன?
ஒரு குப்பைக்குத்தான் மற்றொரு குப்பையின் மதிப்பு என்ன?
என்று தெரியுமே.

•Last Updated on ••Wednesday•, 28 •August• 2019 06:40•• •Read more...•
 

கவிதை: குடும்ப விளக்கு

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்- 30.08.2019 அன்று, “மனைவியர் தின” த்தினை  முன்னிட்டு, குத்துவிளக்காகத்  திகழும்  “குடும்ப விளக்கு”ப்  பெண்ணைச்  சிறப்பித்த  பாவேந்தரது வரிகளை,  முடிந்தவரை   என் வரிகளில்   தருகின்றேன். -

முட்டிடும்  கூரைவீட்டில், 
குட்டைபோல்  குனிந்துசேவை.
மட்டிலா  செய்யும் மனைவி!

கட்டிய  கணவன்  நெஞ்சில்,
கிட்டவும்  துன்பம்  சேரா
கெட்டியாய்  நிற்கும்  துணைவி !

பட்டிகள்  தொட்டிதோறும்,
இட்டமாம்  நேசத்தோடு,
பரிமாறும்  இதயம்  இரண்டு !

திட்டமாய்  இருந்தால்  அதனைத்
தீர்க்கமாய்ச்  சொல்லலாமே
திறமான  குடும்பம்  என்று !

பட்டினியோடு  சென்று,
பகல்சாயத்  திரும்பி வந்து
பாயாசம்  உண்டேன் நான்  என்பான்!

கட்டிய  மனையாள் உண்ணக்
கவளத்துச்  சாதம்தொட்டுக்,
காதலோ  டூட்டச்  சொல்வான் இவளோ

•Last Updated on ••Thursday•, 29 •August• 2019 22:38•• •Read more...•
 

மனக்குறள் 22,23 & 24

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

மனக்குறள்-22: தமிழும் தமிழரும்

உயிரெழுத்துப் பன்னிரண்டு மெய்பதி னெட்டும்
பயிராக்கும் முப்பதுவே பார்!

இருநூற்றுப் பத்துமாறும் ஏர்முப்பத் தாய்தம்
இருநூற்றி நாற்பதேழாம்  என்க!

இலங்கையும் சிங்கபூரும் ஏற்றதோ ராட்சி
இலங்க மொழியும் தமிழ்!

எட்டுகோடி யாம்தமிழர் என்க உலகமெலாம்
பற்றுமண் வாழ்கின்றார் பார்!

தொல்வாழ் விடங்கள் சிறகாரும் ஈழமும்
விள்ளும் தமிழ்நாடும் வேர்!

இருநூற்றி ஐந்து எழில்நாடு இன்றெம்
இருந்தமிழர் வாழும் இடம்!

இந்தியா சிங்கப்பூர் (இ)லங்கா மொரிசியசும்
தந்தாரே காசிற் தமிழ்!

தமிழ்மரபுத் தைத்திங்கள் சாருங் கனடா
அரசேற்றி வைத்தார் அறி!

இரண்டா யிரத்துப் பதினாறில் இட்டார்
மரபுதமிழ்ச் சட்டம் வரைந்து!

சொல்லும் தமிழ்மரபு சேர்த்தாரே சட்டமெலாஞ்
சொல்லும் பலநாடு சேர!

•Last Updated on ••Sunday•, 25 •August• 2019 03:01•• •Read more...•
 

தமிழ் நதி

•E-mail• •Print• •PDF•

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

அமைதியின் அதீத அன்பில்
மெளனித்து நிற்கும்
திசையற்ற பொழுதுகளில்
தமிழ்த்தாய் கண் முன்
பேறுவகையுடன் காட்சியளிக்கிறாள்.

•Last Updated on ••Sunday•, 25 •August• 2019 02:46•• •Read more...•
 

இரு கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1.

முல்லைஅமுதன்தண்ணீரில்
மூழ்கிப்போகும் என்று தெரிந்தும்
அம்மா
காகிதக்கப்பலைத் தண்ணீரில் விட்டாள்..
அவ்வைப்பாட்டி
அவள் இல்லை என்று
நினைக்கும்படி
கதை சொல்லிச் சொல்லி
சோறு
ஊட்டிய அம்மா சொன்னதும் பொய்தானே?
இருந்திருக்கலாம்..
நாகரீககோமாளியாக
தாய்மாமன்...
'உம்மாண்டி வருகுது'
என்று சொல்லி
பயமுறுத்தியதும்
அதே அம்மாதானே?
'இந்த வழியால் மட்டுமே போ'
கட்டாயப்படுத்தி
வழியனுப்பிவைக்கின்ற அம்மா..

•Last Updated on ••Sunday•, 25 •August• 2019 02:43•• •Read more...•
 

அகில மக்காள் வாருங்கள் !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -போட்டி பொறாமை எலாம்
பொசுக்கியே விட வேண்டும்
வாட்டமுறும் வகையில் என்றும்
வார்த்தை பேசல் நல்லதல்ல
மூத்தவரை மனம் நோக
வைப்பதிலே என்ன பயன்
கீழ்த்தரமாய் வரும் நினைப்பை
கிழித் தெறிவோம் வாருங்கள் !

பெற்றவர்கள் மனங் கலங்க
பிள்ளை செய்தல் கூடாது
சொத்துப்பற்றி சண்டை செய்து
சுகம் பறிக்கக் கூடாது
கற்றுத் தந்த ஆசானை
களங்கமுற வரும் நினைப்பை
கடுந்தீயில் போட்டு நின்று
கருக்கி நிற்போம் வாருங்கள் !

•Last Updated on ••Saturday•, 24 •August• 2019 23:23•• •Read more...•
 

ஒளிப் பதிவுக் கலை (கவிதை)

•E-mail• •Print• •PDF•

- 19.08.2019  உலகப்  புகைப்பட  தினத்தை முன்னிட்டு, இக் கலையை  மதிக்கும்,  அத்தனை  கலைஞர்களுக்கும்  இக்கவிதை  சமர்ப்பணமாகிறது. -
ஶ்ரீராம் விக்னேஷ்
பாரதி  தாசன்சொல்  “உருக்கவர்  பெட்டி”யின்
பரிணாம  வளர்ச்சியா  லே,
பாரினை  ஓர்திரை  அரங்கிலே  கொட்டிடும்
படைப்பாளி  ஆகினோம் : நாம் !
ஊரினை  பேரினை  உறவினை  அறியாது,
ஓர்முனை  எட்டினோ  ரும்….
யாரவர்  என்பதைக்  கவர்ந்திங்கே  சொல்லுவோம்
யாம்செய்யும்  தொழிலினா  லே !

கனவிலே  சுற்றிடும்  உலகென்று  பேருக்கு
கண்டவர்  சொன்னபோதும் :  பலர்
கனவினை  நனவாக்க  கையிலே  பணங்கொட்டும்
கடவுளாம்  கலையின்  கூடம் !
மனதிலே  தோன்றியும்,  தோன்றலுக்கு  அன்றியும்
மறைந்திடும்  காட்சி  முற்றும்,
தனதுளே  காட்டுமே  தலைசுற்றப்  பண்ணுமே
தந்திரக்  காட்சி  மற்றும் !

“ஏன்.?”என்று  கேட்டிட  எவரின்றி  வீதியில்
இழிநிலை  கண்டமா  தும்,
“மான்”என்று  காட்டிட  ஒப்பனைக்  கலையினார்
மணியாகச்  செய்தபோ  தும்,
வான்நின்று  சிரிக்கின்ற  வண்ணத்  தாரகை
“வா.!”என்று  ரசிகர்மோ  தும்,
நாம்நின்று  செய்திடும்  நல்லஒளிப்  பதிவினால்
நடந்தது  அன்றோ  ஏதும்..?

•Last Updated on ••Saturday•, 24 •August• 2019 23:21•• •Read more...•
 

மனக்குறள் -19 -20 -21!

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

மனக்குறள் -19  தெய்வத் தமிழ்மொழி

தமிழா உலகந் தனையே வரித்த
அமிழ்தின் மொழியாய் அறிக!

பேசும் மொழியே பெரிதாம் புரிதமிழ்
தேசம் வழங்கும் துணை!

மக்கள் மொழியே வணங்கல் மொழியாமே
புத்திக் கிதுவே புகல்!

வணங்கும் மறைமொழி மண்ணின் அறிவாய்
இணங்கும் இறைமொழி என்ப!

செய்யுள் இலங்கும் சிவனார் மொழியைப்
பொய்யில் அமிழ்த்தால் பிசகு!

முதன்மொழி மூத்த முகையெனப் பூமிப்
பதமொழி சொல்வர் பகர்!

எதுசொல நின்றும் புரிதலே காணாய்
விதிமொழி என்றே விளம்பு !

தெரியா மொழியினைத் தெய்வம் துதிக்கும்
சரிமொழி என்பதா சாற்று?

பிள்ளை அகவல் பெருமானார் வாசகம்
வள்ளலா ருந்தமிழ் வான்!

திருக்குறள், காப்பியம் தேவாரம் ஆழ்வார்ப்
பிரபந்தங் கூறும் தமிழ்

•Last Updated on ••Sunday•, 25 •August• 2019 02:56•• •Read more...•
 

மரணத்தின் விளிம்பில் நின்று….மாதாவுக்கு மடல் காவியம் ! (இந்திய சுதந்திரதினக் கவிதை)

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்எனை  ஈன்ற  மாதாவே….!
உன் மகன் எழுதுகிறேன்….!

வீட்டைப்  பாரு : நாட்டைப்  பாரு
என்பார்கள் !     
வீட்டைப்  பார்ப்பதற்காகவே…. நான்,
நாட்டைப்  பார்க்கின்றேன் !

பெற்ற  சுதந்திரத்தைப்,
பெருமையுடன்  காத்துவிட ,
பெறற்கரிய  குடியரசின்,
பேரதனை  நிலை நிறுத்த,

நாட்டைக்  காப்பதற்காய்,
எல்லைப்  புறத்தில், 
இராணுவப்  படையில்,
இன்று  நானும்  ஒருவன் !

பனிபடர்ந்த  மலைகளின் சாரலில்,
மரணத்தின்  விளிம்பினில் – நான்,
நின்றபோதிலும்  எனக்குள்  சுழல்வது,
உந்தன்  நினைவுகளே !

•Last Updated on ••Thursday•, 15 •August• 2019 06:46•• •Read more...•
 

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள் 10

•E-mail• •Print• •PDF•

அநாமிகா (லதா ராமகிருஷ்ணன்  கவிதைகள் 10!)

1.கைவசமாகும் நட்சத்திரங்கள்!

காலடியில் அப்படி ஒளிர்ந்துகொண்டிருந்தது
ஒரு துண்டு ஜிகினாத்தாள்!
பரவசத்தோடு குனிந்து கையிலெடுத்த சிறுமியின் வயது
சில நூறாண்டுகள் இருக்கலாம்!
சிறு வளையலைக்கொண்டு ஒரு வட்டம் வரைந்து
தனக்கான நிலவை உருவாக்கிக்கொண்டவள்
அதைச் சுற்றி அதனினும் சிறிய சில பல அரைவட்டங்களைத்
தீட்டி மேகங்களாக்கி
அவற்றிலிருந்து கீழ்நோக்கி சில
சின்னச் சின்னக்கோடுகளைத் தாளின் அடிப்பகுதிவரை வரைய
நிறைய நிறைய மழைபொழிந்தது!
கொட்டும் மழையில் முழுவதுமாக நனைந்தவள்
கையிலிருந்த துண்டு ஜிகினாத்தாளை துணுக்குகளாய்க் கிழித்து
நாக்கில் ஒட்டிப் பின் தாளின் மேற்பக்கத்தில் பதித்து
’நட்சத்திரங்கள்’ என்றாள்!
’மழை பெய்யும்போது நட்சத்திரங்கள் வானில் ஒளிருமா’
என்ற கேள்வியைக் கேட்கநினைத்து
அவளை ஏறிட்டுப்பார்த்தபோது
கண்சிமிட்டியபடி ‘கேட்காதே’ என்று சைகை காட்டின
சிறுமியின் கண்களில் ஒளிர்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்கள்!

•Last Updated on ••Monday•, 12 •August• 2019 20:53•• •Read more...•
 

மனக்குறள் 16-17-18

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

மனக்குறள் 16: வேந்தரும் விளங்கும் பாடநூலும்

எண்ணங் கருகி இதயம் மடிசோர்ந்து
கண்ணில் உதிக்கும் கவி!

வேந்தனார் தன்னின் மிகுதமிழ் வண்ணமே
காந்தளாய்ப் பூக்கும் கழல் !

பிறந்த பொழுதிலே பெற்றவள் விட்டு
மடிந்தனள் வேந்தன் மகர்க்கு !

பேணி வளர்த்திட்ட பேரனார் நன்றியைக்
காணிக்கை யிட்டநூல் காழ் !

[ காழ்-வைரம், முத்துவடம், விதை ]

•Last Updated on ••Sunday•, 04 •August• 2019 00:18•• •Read more...•
 

கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

முகவரி.

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

திமிராகக் கம்பீரமாகக்
கரையொதுங்கும் அலைகளின்
நுரைச் சதங்கைகள் அமைதியாகின.
ஆர்ப்பரித்தலும் அடங்குதலும் அதன் விதி.
சங்கு சிப்பிகளை அள்ளி வருதலே அதன் முகவரி

கடல் மொழியின் கிளை உச்சாணியில்
காத்திருக்கும் பறவையாக அல்ல
சிறகு விரிக்கும் கவிதைப் பறவையாக நான்.
oo

வாழ்வு முழுதும்...

கெட்ட வார்:த்தைகள் மொழியும் ஒருவன்
கெட்ட வார்த்தைகளால் வளர்க்கப் பட்டிருப்பானோ!
கொட்டிப் பின்னப்பட்டு குட்டுப்பட்டும்
கெட்ட வார்த்தையோடு அமர்ந்திருப்பது
பட்ட மரத்தினடியில் இருப்பது போன்றது.
கெட்ட கனவுகளின்  கிண்ணமே  அவள் வாழ்வு முழுதும்.

•Last Updated on ••Tuesday•, 30 •July• 2019 22:31•• •Read more...•
 

இரு கவிதைகள்: விழிப்புடன் இருக்க வேண்டும் ! & என்றுமே விரும்பி நான் இருக்கின்றேன் !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -மண்ணிலே வாழ்கின்ற மனிதரெல்லாம்  நாளும்
வாய்மையை போற்றியே வாழவேண்டும்  அவர்
கண்ணாலே பார்க்கின்ற காட்சிகளை   என்றும்
கருத்துடன் மனமதில் இருத்த  வேண்டும் !

பெண்மையை பழிக்கின்ற செயல்களை என்றுமே
மண்ணுக்குள் புதைந்திட செய்யவேண்டும் நிதம்
புண்படும் வகையிலே பேசிடும் போக்கினை
புறமெனத் தள்ளியே விடுதல் வேண்டும்  !

அன்புடன்  பேசிடும்  ஆற்றலை  யாவரும்
அகமதில் இருத்திட விரும்ப  வேண்டும்
அறமதை செய்திட  நினைத்திடும் பாங்கினை
அனைவரும் ஏற்றிட  முனைதல் வேண்டும்   !

•Last Updated on ••Tuesday•, 30 •July• 2019 10:34•• •Read more...•
 

மனக்குறள் 13, 14& 15

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

மனக்குறள்13: முள்ளிப் பத்தாண்டு-நீளும் நினைவு! (2009-2019)

ஈர நினைவுகள் இன்னும் அலைத்திடும்
பார நிலத்துப் படர்!

முள்ளிவாய்க் கால்முகம் மூட்டி அழித்தவை
அள்ளிவரும் நெஞ்சின்; அலை !

பிள்ளையோ பாலுக் கிரங்கி யழுகையில்
கொள்ளி விழுங்கியதே கூடு

தன்னைக் கொடுத்துத் தரணிக் கெழுதினன்
மன்னும் நிலத்து மகன்!

ஆயிர மாயிரம் அற்புத நெஞ்சமாய்
தாய்மை துடித்த தணல்!

கண்முன் கரைந்து கனவிழி நீரொடும்
அன்னை யறைந்தாள் அறம்!

வெள்ளைக் கொடியென்றும் மீட்பர் எனநின்றும்
சொல்லி யழித்தார் சிறியர்!

ஏமாற்றிக் குள்ளர் இணைந்து வரலாற்றின்
கோமாளி யானார் கொழுத்தி!

கொல்லும் படிக்கே குதர்க்க வழிகாட்டிச்
செல்லும் படியிட்டார் சேர!

ஆண்டு கரைந்தாலும் அள்ளும் கொடும்போரின்

நீண்டுகொண்டே போகும் நினைவு !

•Last Updated on ••Sunday•, 04 •August• 2019 00:17•• •Read more...•
 

(நாட்டுப்புறக்) கவிதை : “ராசாவே உனை நாடி....”

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

(அவள்)
பாவை என்   முகம்  நோக்கிப்,
பதில் தருவாய்  என  எண்ணி,
பக்கம் நான்  வந்தேனே....!
வெக்கத்தை மறந்தேனே....!!
பார்வை கொஞ்சம்  கீழிறங்கிப்,
பார்ப்பதிலே என்ன விந்தை?
மாராப்பு சேலையிலே,
மர்மம்  என்ன  தெரிகிறது...?

(அவன்)
மாராப்பு தெரியவில்லை....
மச்சமும் தெரியவில்லை....!
மாராப்புக் குள்ளேயுன்,
மனசு தெரியிதடி....!
மனசுக்குள்ளே பரந்திருக்கும்,
மகிமை தெரியிதடி....!

•Last Updated on ••Wednesday•, 24 •July• 2019 07:37•• •Read more...•
 

மனக்குறள் 11 & 12

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

11-தொல்நூல் மரபு

என்மனார் என்று எழுதித்தொல் காப்பியர்
முன்னிருப் பிட்டதே எண்!

எழுத்துசொல் இன்பொருள் யாப்பணி ஐந்தும்
எழுத்தொடும் நூற்பா இயல்

இரண்டரைநூற் றாண்டு இலக்கணப் பல்நூல்
இருந்தன முற்சங்கம் முன் !

தீயாலும் நீராலும் தூர்ந்தன போகவும்
எண்கீழும் மேலென் றிலங்க !

நீதிநூல்  ஐம்பொரும் காப்பியம் மேல்கீழ்உம்
மீதியாம் சங்கம் மொழி !

மதுரைத் தமிழார் மலர்ந்தநற் சங்கம்
நிலந்தரு திருவாம் திடல்!

நாற்பத்து ஒன்பது நற்றாம் புலவரின்;
நோற்பின் உதயமே சங்கம் !

வயலும் வரம்பாய் வளரிலக் கியத்தும்
முயலும் இலக்கண மென்ப !

மரபா லுயர்ந்த மகவுகளைக் கூறும்
தெரிசொல் தமிழின் சிறப்பு !

வடவேங்க டத்தும் குமரிவரை யாகி
அடங்கும் தமிழர்நிலம் அன்று!

•Last Updated on ••Monday•, 29 •July• 2019 10:47•• •Read more...•
 

கவிதை: ஆனந்தம் அடைவோம் நாளும் !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -உறவுகள் வாழ்வில் என்றும்
உணர்வுடன் கலக்க வேண்டும்
அளவிலா அன்பை நாளும்
அள்ளியே வழங்க வேண்டும்
தெளிவுடன் என்றும் வாழ
வழியினை காட்ட வேண்டும்
நலமுடன் இருக்க வேண்டில்
நாடுவோம் நல்லுறவை என்றும் !

பற்பல உறவை எங்கள்
பண்பாட்டில் காணு கின்றோம்
பாட்டியாய் தாத்தா என்று
பரம்பரை வளர்ந்தே போகும்
பெரியம்மா சித்தி அத்தை
பெரியப்பா மாமா மச்சான்
அன்புடை அக்கா அண்ணா
அருகினில் வந்தே நிற்பார் !

•Last Updated on ••Tuesday•, 30 •July• 2019 01:11•• •Read more...•
 

மரணத்திற்கு முன்பு உதிரும் சிறகு.

•E-mail• •Print• •PDF•

பறவை

திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டியவற்றுள்
சில இருப்பதாகத் தோன்றுகிறது.
அது
இறந்து போன ஒரு பறவையின் நீண்ட சிறகாக இருக்குமெனில்,
அது தன்னுடைய மரணத்திற்கு முன்பு
பறந்த வானத்தை
மீண்டும் சிருஷ்டிக்க முடியும்.
அத்தகைய சிருஷ்டியில் இருப்பவை
அது அமர்ந்திருந்த மரத்தை
அம்மரத்தில் தனது காதல் நிகழ்ந்த கூட்டை
அதன் எண்ணிக்கையில்லாக் குஞ்சுகளை
அதன் பறத்தலை
மீண்டும் கண்டு இன்புற முடியும்.

•Last Updated on ••Wednesday•, 17 •July• 2019 07:39•• •Read more...•
 

பத்திநாதர் தந்தை வாழ்வியலை நீத்தார்!

•E-mail• •Print• •PDF•

மீட்பரை இழந்தோம்! சமூகத்திற்காகப் பேசியதுடன் , சமூகத்தையும் பேசவைத்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர்! மெல்பன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் பகிர்ந்துகொள்ளும் நினைவுகள்!

சித்தமொன்று சத்தமின்றிச் சேவகம் செய்திடும்
பத்திநாதர் தன்னைவிட்டோம் பரிதவிக் கின்றமே!
செத்துமாந்தர் சிதறுகுண்டிற் சீவியம் இழக்கவும்
அத்திரமாய்ப் பக்கநின்று ஆதரித்த தந்தையே!

காயமோடு நொந்தபோதும் கருதுமண்ணின் சேவையில்
நேயமோடு நின்றநாதர் நிலத்துநேசர் அல்லவோ?
தூயசேவை ஆகமக்கள் துன்பமோட வைத்தவர்
மாயமொடும் உலகைவிட்டார் வருந்துகிறோம் மக்களே!

•Last Updated on ••Wednesday•, 17 •July• 2019 07:32•• •Read more...•
 

மனக்குறள் 9 & 10

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

மனக்குறள்-9: நிலமும் பயிரும்..கலையும் கதிரும்...!

இலக்கியத் தோட்டம் இலங்கிடும் உலகில்
மலர்ந்திடும் செந்தமிழ் மன்று!

எழுத்தொடும் யாப்பிடும் இன்தமிழ் ஏடுகள்
வழுதியே போற்றுவர் வான்!

வையகம் வாழ்க மணிமொழி வாழ்கவே
செய்பயிர் என்கவே சேர!

இன்தமிழ் ஆக்கும் இலக்கியத் தோட்டமாய்;
அன்;புசால் மண்;ணெலாம் ஆக!

வாழ்க தமிழே வளர்கதொல் காப்பியம்
வாழ்க குறளொடும் வாழ்கவே!

சிறுகதை நாவல் திறம்பா வறிதல்
உறுநேர் உரைத்தலாம் என்ப !

கலைஞர் வலைஞர் கணினித் துறைவர்
அலைபா விசைஞர் ஆக!

கலைத்துறை யோடும் கனமொழி யாற்றல்
புலமையும் சொல்வார் புகல்!

பயிரிடுந் தோட்டம் பயில்மொழி யாப்பும்
அயிரொடும் ஒன்றே அறி!

எழுத்தால் உயர்ந்தவர் ஏடெலாம் போற்றும்
விழுமம் உகப்பர் விருது

•Last Updated on ••Saturday•, 13 •July• 2019 07:32•• •Read more...•
 

ஓன்பது பத்துக் கண்ட உயர்கவி அம்பி வாழ்க!

•E-mail• •Print• •PDF•

ஓன்பது பத்துக் கண்ட உயர்கவி அம்பி வாழ்க!

ஓன்பது பத்து என்ற
உயரிய அழகை யிட்ட
அம்பியே புலவ ரேறே
அகிலமே வியக்கும் மன்னா!
நெம்புகோல் பார திக்குப்
பின்னொரு கவிதை யூறும்
தம்பியாய் வருகை தந்தாய்
தமிழ்மகள் மகிழ்ந்தாள் ஐயா!

மழலையர் மகிழப் பாடி
மதுரமாம் இலக்கி யத்தின்
அழகென ஒலித்த அம்பி
அணித்தமிழ் மரபின் நம்பி
உழவெனப் பாக்கள் இட்டு
உயிரெனக் கவித்தேன் வைத்தே
விழுமியம் படைத்த பாகன்
விளைநிலம் எழுதக் கண்டோம்!

•Last Updated on ••Thursday•, 11 •July• 2019 00:15•• •Read more...•
 

கானடா நாடென்னும் போதினிலே

•E-mail• •Print• •PDF•

கானடா நாடென்னும் போதினிலே, இன்பக்
கானம்வந் தோதும் நம் காதினிலே
தேனினும் இனிய தேசமடா, இதைத்
தேடிப் புகுந்ததும் எம் யோகமடா

எங்கெங்கு காணினும் ஏரிகளே, திசை
எப்புறம் நோக்கினும் ஆறுகளே
பொங்குநீர் வீழ்ச்சிகள் மேவுமடா, பனிப்
பூக்களை வானமும் தூவுமடா

ஊசி இலைமரக் காடுகளாம், பனி
ஓங்கும் உயர்மலை மேடுகளாம்
வீசும் பனிப்புயல் வீடுகளாம், குளிரும்
வெப்பமும் மாறிடும் பருவங் களாம்.

•Last Updated on ••Tuesday•, 09 •July• 2019 22:41•• •Read more...•
 

கனடா தேசீய கீதம்

•E-mail• •Print• •PDF•

கனடா தேசீய கீதம்

ஓ கானடா !
எமது இல்லமே ! சொந்த பூமியே !
நின் மாந்தரிடம் எல்லாம்
நிஜ தேசப் பற்றை
நிலை நாட்டுவது நீதான் !
ஒளி நிறைந்த
உள்ளத் தோடு நீ
உயர்வதைக் காண்கிறோம் !
நேர்வட திசையில் நீ
நிலைத்திடும் தனி நாடே !
நீண்டு அகண்ட கண்டமே,
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
சீரும் சிறப்பும் பொங்கிட
எமது திரு நாட்டை, இறைவா நீ
சுதந்திர நாடாய் வைத்திரு !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !

•Last Updated on ••Tuesday•, 09 •July• 2019 22:41•• •Read more...•
 

மனக்குறள் (1 - 8) - குறள் வெண்பா -

•E-mail• •Print• •PDF•

மனக்குறள்-1: முற்றும் அறத்தின் முடிபே!

பொள்ளாச்சி நல்ல புதுமை மகத்துவங்கள்
இல்லா தொழிந்ததுவோ இன்று?

நாடு நரிகளென்றால் நத்தும் விசுக்கல் என்றால்
ஊடு வலிதானே ஓடும் !

•Last Updated on ••Friday•, 28 •June• 2019 21:36•• •Read more...•
 

கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1

பதின் பருவ பள்ளியாய்ப் போன
முள் மரங்களின் குத்தகைத்தாரர் நீ
ஆடுகளின் ஓய்விடங்கள்
கவட்டையோடு உன்னை அடிக்க
அலைந்து திரிந்த நிலங்கள் பலவிதம்

தலை தூக்கி சூரியனோடு நீ பேசும்
உரையாடல் கேட்க காத்திருந்த மணித்துளிகள் பல
எதற்குத் தலையாட்டுகிறாய் என்று
என்னைத் தவிர யாருமில்லா நண்பகலில்
சிந்தித்துக் கொண்ட காலங்கள் அநேகம்

என் கவட்டைக் கல்லுக்கு இரையான உனது
உறவினர்கள் கனவுகளில் புரியாத மொழியில்
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்

•Last Updated on ••Wednesday•, 03 •July• 2019 08:14•• •Read more...•
 

கவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை: காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் !

•E-mail• •Print• •PDF•

கவிஞர் கண்ணதாசன்

- கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம் ஜூன் 24. அதனையொட்டி வெளியாகும் கவிதையிது. -

திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு
பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே
நிலைநிற்கும் பலகருத்தை சுமந்துவந்த அவர்பாட்டு
நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது !

காதலவர் கைபட்டால் காமனுமே கலங்கிடுவான்
தேவர்கூட அவர்பாட்டை திறமென்றே பகர்ந்திடுவார்
சாதிமதம் காதலுக்கு தடையாதல் தகாதென்று
சேதிசொன்ன பாடலைநாம் தினமுமே ரசித்துநிற்போம் !

பட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்
பலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்
இஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்
கஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான் !

•Last Updated on ••Sunday•, 23 •June• 2019 21:11•• •Read more...•
 

கவிதை: “அகதிகள் ” (உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு)

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

பதியிழந்து   பலமிழந்து,
படைத்துவிட்ட    நாடிழந்து,
கதியிழந்து  வருவரல்ல  அகதி!  -  ஆங்கே
விதியிருந்தும்   கதியிருந்தும்,
விபரமற்றோர்   தமைமிதிக்கும்,
வீணர்களே  உள்ளூரின்   அகதி!

நெற்றிதன்னில்  வழிகின்ற,
நீள்வியர்வை   நிலஞ்சிந்த, 
கஷ்டமுற்று   உழைப்பவனின்  கூலி!  -  அதை
பத்தினுக்கு  எட்டாக்கி,
பகற்கொள்ளை   அடிப்பவரே,
சொத்துசுகம்   வைத்திருந்தும்  அகதி!

•Last Updated on ••Friday•, 21 •June• 2019 07:13•• •Read more...•
 

தந்தையர் தினத்தை பேணுவோம் வாழ்த்தினைப் பெறுவோம்! அவர் வாழ்த்தை வேண்டுகிறேன் !

•E-mail• •Print• •PDF•

விரதமெலாம் தானிருந்து
விரும்பியெனை இறைவனிடம்
வரமாகப் பெற்றவரே
வாய்மைநிறை என்னப்பா
விரல்பிடித்து அரிசியிலே
எழுதவைத்த என்னப்பா
உரமாக என்னுள்ளே
உணர்வோடு கலந்துவிட்டார் !

தோள்மீது எனைத்தூக்கி
தான்மகிழ்ந்து நின்றிடுவார்
வாழ்நாளில் வீழாமல்
வளரவெண்ணி பலசெய்தார்
மெய்வருத்தம் பாராமல்
எனையெண்ணி தானுழைத்தார்
கண்ணெனவே காத்துநின்றார்
கருணைநிறை என்னப்பா !

பொட்டுவைத்த  என்முகத்தை
கட்டிக்கட்டி கொஞ்சிடுவார்
பட்டுச்சட்டை  வாங்கிவந்து
பரவசத்தில் மூழ்கிடுவார்
இஷ்டமுடன்  தன்மார்பில்
எனையுறங்க வைத்திடுவார்
அஷ்ட   ஐஸ்வரியமென்று
அனைவர்க்கும் சொல்லிடுவார் !

நானுண்ட   மிச்சமெலாம்
தானெடுத்து சுவைத்திடுவார்
அவர்பாதி  நானென்று
அவருக்குள் எண்ணிடுவார்
உலகிலென்னை உயர்ந்தவனாய்
உருவாக்க  உருவானார்
நிலவுலகில் என்னப்பா
நிகரில்லா தெய்வமன்றோ !

•Last Updated on ••Sunday•, 16 •June• 2019 01:35•• •Read more...•
 

“தந்தை என்னும் தெய்வம்” (தந்தையர் தினக் கவிதை)

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

பல்கலைக் கழக மென்று : பாரது போற்றிச்  சொல்ல,
நல்லதோர் குடும்பம் செய்யும்…..சிந்தை ! -  அந்த,  
நல்லவர் பேருலகில்……..    தந்தை....!

ஓர்பது  மாதந்  தன்னில் : ஒருத்திதன்  வயிற்றிற்  கொளினும்,
யார் அதன்   வேரை இட்டார்…….  முதலில் ?  -  அவர், 
பேர் அது   தந்தையாகும்……   உலகில்....!

வானது  பெய்தால் தானே : வையகம்  பசுமை  காணும்,
வானைப்போல்  வழங்கிடுவார்……  வாரி !   -  அந்த, 
வான்புகழ்  கொண்ட தந்தை …….     பாரி...!

அன்பெனும்   அமளி  மேலே  :  அன்னைதான்  துயிலச்  செயினும்,
நன்புகழ் அறிவை   ஏற்றும்…….  ஜோதி !  -  அது,
நானிலம்  புகழும்    தந்தை…….      ஜாதி...!

எதை எதோ   நினைத்து  நெஞ்சம் : ஏங்கிய  போதும்  மழலை,    
உதையினைக்  கண்டபோது…… மலரும் !  -  அந்த,  
உத்தமர்  தந்தை என்பார் …….     பலரும் !

•Last Updated on ••Sunday•, 16 •June• 2019 01:22•• •Read more...•
 

பலூனில் மாட்டிக் கொண்ட சிறுமி.

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?
பலூன் ஊதிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி
தவறி அதனுள் விழுந்துவிட்டாள்.
அவளுடைய மூச்சுக் காற்றில்
பலூன் பெரிதாகிக் கொண்டிருந்தது

அவள் மூச்சில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டேயிருந்தது.
பலூனில் கருவில் இருக்கும் சிசுவைப் போல
தத்தளித்துக் கொண்டிருந்தாள்
பலூனின் வாயைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிட
பிரயத்தனம் செய்தவைகள் எல்லாம் வீணாகிக் கொண்டிருந்தன.

•Last Updated on ••Wednesday•, 12 •June• 2019 08:08•• •Read more...•
 

கவிதை: காகிதப் பூ !

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்“பஞ்சத்தில்   உழன்று  :  பட்டினி   கிடந்தாலும்….
பட்டதாரி  ஆக்கிப்  :  பார்க்க வேண்டும்  தம்மகனை….”
நெஞ்சத்தில்  நினைப்போடு  :  நிறையப்   பெற்றோர்கள்,
நெருக்கடிகளைச்  சுமந்து  :  நேரகாலத்  தையும்மறந்து ….,

பட்டணம்  அனுப்பிவைத்துப் :  பட்டதாரி  ஆக்கிவிட்டு,
பட்டயம்  பெற்றதனைப்  :  படம்பிடித்து  மாட்டிவைத்து,
தொட்டதனைப்   பார்ப்பதிலே  :  சுகமொன்றைக்  கண்டுவிடும்,     
பெற்றோர்க்கும்  பிள்ளைகட்கும்  :  இக்கவிதை  சமர்ப்பணமாம் !

பட்டம் பெறுவதில்தான் :  பற்றெல்லாம்  இருந்ததனால்,
பழகியே  எத்தொழிலும்  :  பார்ப்பதற்கு  வாய்ப்பு  இன்றிப்,
பாவம்  இவன் நிலைமை  :  பயனற்ற  அலைச்சலிலே…….
பணிகள்   பலதேடிப்   :  படியேறி  இறங்குகின்றான்…..!

ஒரு ரூபாச்  சீட்டினிலே  :  ஒரு  லட்சம்  கனவுகாணும்….
உருப்படார்  வரிசையிலே :  உள்ளபடி  இவனும் ஒன்று !
“உனக்கும்  கீழுள்ளோர் : ஒருகோடி  என அவரை,
நினைத்துப் பார்   அதிலே :  நிம்மதியை  நாடு”  என்று….,

செப்பிய  கவிஞர்  தன் : சிந்தனை  வரிகளை….
திருப்பியே  பார்த் துணர்ந்து : திருந்தியே  கொள்ளுங்கள் !
“உனக்கும்  முன்னே : உள்ளவர்  பலரே….
உத்தியோகம்  பெற்றோர் : ஒருவர்  சிலரே….! ”

என்கின்ற  உண்மையை : ஏற்றிட  மறுத்தே,
இன்னும்  வாழ்க்கையை :  இழந்திட  வேண்டாம் !
பட்டம்  பெறுவதும் : படிப்பில்  உழல்வதும்,
“பாபச்  செயல்” என்று பகர்ந்திட  வில்லை !

•Last Updated on ••Saturday•, 15 •June• 2019 20:12•• •Read more...•
 

பண்பு பாராட்டும் உலகு

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

அறம் பொருளின்பமென்று முப்பால் முலையெடுத்து
புறம் அகம் நிகழ்வதத்தனையும் - இகம் பரமென்று
எங்குள்ளார்க்கும் புகட்டிப் புவிதனில் புகழொடு 
தோன்றிப் புகழொடு மறைந்தான் திரு வள்ளுவன் !

ஒன்று தெய்வமென்றுணர்தல் வேண்டுமென்று ஓதி
ஒற்றுமையின் வலுவுரைக்க ஓயாது பாடிப் - பெண்ணடிமை
தீருமட்டும் கவியெடுத்துச்சாடி களிறிடரித்தான்  விழுந்து
கண்ணணோடு உறைந்தான் கவி பாரதி !

அன்பாயுதமெடுத்து அஹிம்சையென்னும் உறையிலிட்டு
துன்பம்வரும் வேளையிலும் மலர்ந்து - காலன் வரும்
காலம்வரை நடந்து கருப்பு வெள்ளைக் கலகமோய
கணைகள் வாங்கிச் சரிந்தான் மகான் காந்தி !

நோயடித்த பிள்ளைகளின் துயர்துடைத்தோர் கருணைத்
தாயென்றணைத்து நின்றாள் - அவள் கரம்பட்டுத்
தலைதெறிக்க ஓடியதாம் பிணிகள்; தம்சேவை தேவையென
தேவனழைக்கச் சென்றாள் அன்னை தெரசா !

•Last Updated on ••Tuesday•, 04 •June• 2019 07:31•• •Read more...•
 

சூறை ஆடி விட்டார்கள் ! அனைவருமே ஆசை கொள்வோம் !

•E-mail• •Print• •PDF•
1. சூறை ஆடி விட்டார்கள் !

- யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை வெளிப்படுத்தும் இதயத்தின் குமுறல் -

ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து
நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியாதால்
ஓடாக உழைத்து நிதம் உருப்படியாய் செய்தமையே
வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்

எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே
நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை
எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்

நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது
நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடிடலாம் அறிவையெலாம்
பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்

யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்
சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்
•Last Updated on ••Tuesday•, 04 •June• 2019 07:28•• •Read more...•
 

கவிதை; திருவிழாவில் தொலைந்து போதல்

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -விரிந்த உலக வலையின்
அத்தனை நம்பிக்கைகளும்,
தத்துவங்களும்,
மதங்களும்
சாமானியனுக்கு கைவிரிக்கும்.
அனுதினமும் சாண் எற முழஞ்சறுக்கி
கரையேற்றத்தை கானல் நீராக்கி காக்கவைக்கும்.

வியாபாரிக்கு விலை மதிப்பில்லா
உலோகமோ
பண்டமோ
பத்திரமோ
அடைமானத்தின் பிடிமானமே
கஞ்சத்தனத்தை களைக்கும் நம்பிக்கைகளானது.

மோசமான வியாபாரியே
உலோகமற்ற உயிரின்
அடைமானத்தில் அவமானம் காண்பான்.

உலக மகாநேயத்தின் மன்னனை
தமிழன் என்றால்
அவனுக்கு பெரும் சக்கரவர்த்தி
வேட்பாளர் என புளகாங்கித்து முழங்கு.

•Last Updated on ••Tuesday•, 28 •May• 2019 08:22•• •Read more...•
 

கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1. இயேசுவின் முகத்தில்  பயத்தின் சாயல்

மூக்கைத் துளைத்து
நினைவில் வடுவான
ரத்த வாசனை!

எப்பொழுது  தோட்டாக்களின்
உறக்கம் களையுமோவென்று
உறங்காமல் இருந்த
பொழுதுகள் அதிகம்!

மனித ஓலங்களின் ஓசை
அடங்க மறுத்து தூங்கி
சிவந்த கண்களோடு பகல்!

•Last Updated on ••Friday•, 17 •May• 2019 08:12•• •Read more...•
 

கவிதை: வாழ்க்கைன்னா இதுதான்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

தாயாரின் வலியிலே தாரணியில் வீழ்வதும்
தவழ்வதும் வளர்வதும் தானாகி நிமிர்ந்திட
ஓயாது கற்பதும் உழைப்பதும் உயர்வதும்
ஒருத்தியை மணப்பதும் உறவினில் கலப்பதும்
தீயாக இருப்பதும் தேனாகி சுவைப்பதும்
தீராத மோகத்தில் திரிவதும் திடீர்
நோயாகி வீழ்வதும் நொடிக்குள் மறைவதும்
நீதானே! வாழ்வின் நிசமும் இதுதானே..

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Friday•, 17 •May• 2019 08:12••
 

கவிதை: குரல் வராத வீட்டில் பெய்த மழை!

•E-mail• •Print• •PDF•

- முல்லைஅமுதன்

சிறு தூறலாய்
காட்சி தந்த பெருமழையாயிற்று.
அம்மா
பெரிய கிடாரமாய்
கொண்டுவந்து
கூரை ஒழுக்கைச் சரிசெய்தாள்.
மரங்கள் முறிந்ததாயும்,
காற்று பேயாய் அடிப்பதாகவும்
கணபதியர் சொல்லிப்போவது மெதுவாய்
சன்னலோரம்
குந்தியிருந்தவளுக்கும்
கேட்டது.
அப்பா மூலையில் குடங்கிப்போய்
பிணம்போலக்கிடந்தார்..
மழை விடவேண்டும்..ஊருக்குள் போகவேண்டும்..
இன்று அடுப்பெரிய ஏதாவது வேண்டும்..
கடைசிக்குரலும்
'அம்மா பசிக்குது'
சொல்லி அடங்கிப்போனது.
அம்மா என்ன ஊற்றெடுக்கும் சுரங்கமா?
அழும் குழந்தைக்குப்பால்தர...??

•Last Updated on ••Friday•, 17 •May• 2019 08:13•• •Read more...•
 

கவிதை: நல்லிணக்கம் சமாதானம் நாட்டிலோங்கச் செய்திடுவோம் !

•E-mail• •Print• •PDF•

வெறி   கொண்டு    அலைகின்ற 
நெறி  பிறழ்ந்த  கூட்டமதால்
கறை   படியும்  காரியங்கள்
கண்  முன்னே  நடக்கிறது
பொறி புலன்கள் அவரிடத்து
அழி என்றே சொல்லுவதால்
குடி மக்கள் என்னாளும்
கதி  கலங்கிப்   போகின்றார்   !

மதம்  என்னும்  பெயராலே
மதம் ஏற்றி  நிற்கின்றார்
சினம்  என்னும் பேயதனை
சிந்தை கொள  வைக்கின்றார்
இனம் என்னும் உணர்வுதனை
இருப்பு கொள்ள வைக்குமவர்
தினம் தீங்கு செய்வதிலே
திருப்தி  உற்று  திரிகின்றார்  !

•Last Updated on ••Tuesday•, 04 •June• 2019 07:22•• •Read more...•
 

கவிதை : என் மகன்! (அன்னையர் தினக் கவிதை)

•E-mail• •Print• •PDF•

(ஒரு  தாயின் நிகழ்காலத் துடிப்பும்,வருங்கால எதிர்பார்ப்பும்)


ஶ்ரீராம் விக்னேஷ்

1.
கட்டிய  கணவர்தம்,  
மட்டிலா  அன்பினால்,
கட்டிப் பொன் :  கனியைப்பெற்  றேன்! – வாரிக்
கட்டியே  முத்தம்இட்  டேன்! – சிறு
தொட்டிலில்  போட்டவன்,
தூங்கிடும்  போதிலே,
தூய்மையாம்  தெய்வம்கண்  டேன்! – ஒரு
தாய்மையின்  உய்வில்நின்   றேன்!

2.

எட்டியே  பிடித்துமார்,
பற்றியே  முகத்தினால்,
முட்டியே  பருகக்கண்   டேன்! – முகம்
மோதியே  மகிழக்கண்   டேன்! -  தேன்
சொட்டென   வாயினால்,
விட்டிடும்   வீணிரால்,
சட்டையும்   நனையக்கண்   டேன்! – மனம்
சாலவே   குளிரக்கண்   டேன்!

•Last Updated on ••Saturday•, 15 •June• 2019 20:12•• •Read more...•
 

அன்னையர் தினக் கவிதை: குடியிருந்த கோவில் !

•E-mail• •Print• •PDF•

கருவறையில் குடியிருத்தி
குருதிதனைப் பாலாக்கி
பெற்றெடுக்கும் காலம்வரை
தன்விருப்பம் பாராது
கருவளரக் கருத்துடனே
காத்திருக்கும் திருவடிவம்
உண்டென்றால் உலகினிலே
உண்மையிலே தாயன்றோ  !

குடியிருந்த  கோவிலதை
கூடவே  வைத்திருந்தும்
கோடிகொண்டு கோவில்கட்டி
குடமுழுக்கும் செய்கின்றோம்
கருவறையை தாங்கிநிற்கும்
கற்கோயில் நாடுகிறோம்
அருகிருக்கும் கோவிலாம்
அம்மாவை மறக்கலாமா  !

அன்னதானம்  செய்கின்றோம்
அறப்பணிகள் ஆற்றுகிறோம்
ஆத்ம  திருப்தியுடன்
அநேகம்பேர் செய்வதில்லை
தம்பெருமை தம்புகளை
தானதனில் காட்டுகிறார்
தாயவளைத் தாங்கிநிற்க
தானவரும் நினைப்பதில்லை    !

•Last Updated on ••Saturday•, 11 •May• 2019 08:01•• •Read more...•
 

முகநூற் கவிதைகள்: முகம்மது றியால் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

முகம்மது றியால்

1. கன்னிக் கூறை

வாங்கி வைத்த சந்தனமும்
புதுசு மணக்கும் ஆடைகளும்
வைத்த இடத்தில்
அப்படியே இருக்கின்றன

நான்
பெரிய மனிசியாகி
இந்த வீடடிற்குள் இன்னும்
உங்களுக்காகக்
காத்துக் கொண்டிருக்கின்றேன்
உம்மா...

என்னைக் குளிப்பாட்டி
ஆடை உடுத்தி
அழகு பார்க்க
நீங்கள் இனி
வரவே மாட்டீர்களா?

•Last Updated on ••Saturday•, 11 •May• 2019 05:44•• •Read more...•
 

கவிதை: எண்ணியெண்ணி அழுகின்றோம் !

•E-mail• •Print• •PDF•

இரக்கமின்றி கொலைசெய்ய
எம்மதமும் சொன்னதுண்டா
வணக்கத்தலம் வன்முறைக்கு
வாய்ததென்றும் சொன்னதுண்டா
அரக்ககுணம் மனமிருத்தி
அனைவரையும் அழிக்கும்படி
அகிலமதில் எம்மதமும்
ஆணையிட்டு சொன்னதுண்டா   !

ஈஸ்டர்தின நன்னாளில்
இலங்கையினை அதிரவைத்த
ஈனச்செயல் தனைநினைக்க
இதயமெலாம் நடுங்கிறதே
துதிபாடி துதித்தவர்கள்
துடிதுடித்தார் குருதியிலே
அதையெண்ணி அகிலமுமே
அழுதேங்கி நிற்கிறதே   !

பிராத்தனைக்குச் சென்றவர்கள்
பிணமாகிக் கிடந்தார்கள்
பேயாட்டம் நடந்தேறி
பெருந்துயரே எழுந்ததுவே
இன்னுயிரை ஈந்தளித்த
யேசுபிரான் சன்னதியில்
இரத்தவெறி அரங்கேறி
எடுத்ததுவே பலவுயிரை   !

•Last Updated on ••Thursday•, 25 •April• 2019 07:53•• •Read more...•
 

கவிஞர் மழயிசையின் கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- கவிஞர் மழயிசை -

1. காற்று கரைந்துவிட
நிலம் சடமாக.....                              
நீர் உறைந்துவிட...         
எத்தனித்து உமிழ்கிறது வானம்.
குளிரும் இரவுகளில்....           
எரியும் மனமுல்லை.                          
எரியும் மனமதனில்...            
விரியும் பகற்கொள்ளை.

•Read more...•
 

கவிதை: வாக்களிப்போம் வாருங்கள் !

•E-mail• •Print• •PDF•
தேர்தல்தேர்தல் தேர்தலென்று
தெருவெல்லாம் திரிகிறார்
ஆளைஆளை அணைத்துபடி
அன்புமுத்தம் பொழிகிறார்
நாளைவரும் நாளையெண்ணி
நல்லகனவு காண்கிறார்
நல்லதெதுவும் செய்துவிட
நாளுமவர் நினைத்திடார்  !

மாலை மரியாதையெல்லாம்
வாங்கிவிடத் துடிக்கிறார்
மக்கள்வாக்கை பெற்றுவிட
மனதில்திட்டம்  தீட்டுறார்
வேலைபெற்றுத் தருவதாக
போலிவாக்கை விதைக்கிறார்
வாழவெண்ணும் மக்கள்பற்றி
மனதிலெண்ண மறுக்கிறார்  !

ஆட்சிக்கதிரை ஏறிவிட
அவர்மனது துடிக்குது
அல்லல்படும் மனதுபற்றி
அவர்நினைக்க மறுக்கிறார்
அதிகசொத்து பதவியாசை
அவரைசூழ்ந்து நிற்குது
அவரின்காசை அனுபவித்தார்
அவர்க்குத்துதி பாடுறார் !
•Last Updated on ••Sunday•, 21 •April• 2019 10:01•• •Read more...•
 

கவிதை: சித்திரைப் பாவையே வருக !

•E-mail• •Print• •PDF•

சித்திரைப்புத்தாண்டு!

- சித்திரைப் புத்தாண்டு நாளினையொட்டி அண்மையில் கிடைத்த கவிதை.- பதிவுகள்.காம் -

இன்று
நாங்கள் காலை துயில் எழுந்து
நாட்காட்டியைப் பார்த்தால்
பங்குனித்திங்கள் பெற்றெடுத்த 
சித்திரைப்பாவையே உந்தன்
மத்தாப்பூ முகம் தெரிகிறதே !

இன்று
நோக்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
நேசக்கரம் நீட்டுகிறதே !

இன்று
கேட்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
மனிதநேயம் ஒலிக்கிறதே !

•Last Updated on ••Sunday•, 21 •April• 2019 09:58•• •Read more...•
 

பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

பிச்சினிக்காடு இளங்கோ

1. இராவணன்களே….

அடிப்படையில் அனைவரும்
பத்துத்தலையோடுதான்
வடிவமைக்கப்படுகிறோம்

பத்துத்தலையில்
சிலவற்றைக் குறைத்துக்கொண்டவர்கள்
தலைமுறைக்குத்தேவைப்பட்டார்கள்

சிலவற்றில் சிரத்தையும்
சிலவற்றைத்தவிர்த்தும்
வாழ்ந்தவர்கள்
தலைவர்களானார்கள்
நமக்குத் தத்துவமானார்கள்
தத்துவம்தந்தார்கள்

தலைமுறைகள்
பேசவேண்டுமானால்
உங்கள் கவனம்
சில
தலைகளில் மட்டுமே

•Last Updated on ••Tuesday•, 16 •April• 2019 03:31•• •Read more...•
 

கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1. தேடி அலைந்த பாதியில்  கிடைத்த மீதி

அதிகமாகி விட்டது வயது
பாா்க்காதே அதையெல்லாம்!

உடம்பு இப்படி நடுங்குகிறது
மறைக்க முடியவில்லை
அவளுக்குத் தெரிந்தால்
எனது வீரமெலாம் போச்சு!

பயந்து ஒளிந்து அவளது
அழகு உதட்டைப் பாா்த்தேன்
அனுமதித்தால் ஒரு முத்தம்
எதற்கு கஞ்சத்தனம்
அவளது விருப்பம் வரை!

•Last Updated on ••Tuesday•, 16 •April• 2019 03:15•• •Read more...•
 

கவிதை: நலம் விளைப்பாய் சித்திரையே !

•E-mail• •Print• •PDF•

சித்திரைப்புத்தாண்டு!

புத்தாடை  வாங்கிடுவோம்
புத்துணர்வு பெற்றிடுவோம்
முத்தான முறுவலுடன்
சித்திரையை காத்திருப்போம்
எத்தனையோ சித்திரைகள்
எம்வாழ்வில்  வந்தாலும்
அத்தனையும் அடிமனதில்
ஆழமாய்   பதிந்திருக்கும்

சொத்துள்ளார் சுகங்காண்பர்
சொத்தில்லார் சுகங்காணார்
எத்தனையோ துயரங்கள்
இருந்தேங்க வைக்கிறது
அத்தனையும் பறந்தோட
சித்திரைதான் உதவுமென
நம்பிடுவார் வாழ்வினிலே
நலம்விளைப்பாய் சித்திரையே

•Last Updated on ••Sunday•, 14 •April• 2019 22:45•• •Read more...•
 

கவிதை: சித்திரை மலர்க! வாழ்க!

•E-mail• •Print• •PDF•

சித்திரைப்புத்தாண்டு!

மானிடம் மலர்க! மண்ணின்
மனிதமும் மலர்க! தெய்வ
வானியல் வருக! மாந்தர்
மறைமொழி வருக! நற்றாள்
பூநிறைத் தழகு கொள்ளும்
புதுவயல் வருக! கன்று
பால்நிறை மடியை முட்டிப்
பருகியே திளைப்ப தாக!

செந்தமிழ் சிறப்ப தாக
சிந்தியல் செழிப்ப தாக
எந்தையர் தமிழர் நாவில்
இறைமொழி துதிப்ப தாக
விந்தைகள் உலகப் பந்தின்
விருட்சமும் வளர்வ தாக
அந்தகர் விழிகள் வெட்டி
அகிலமும் காண்ப தாக!

•Last Updated on ••Sunday•, 14 •April• 2019 22:45•• •Read more...•
 

கவிதை: தவிக்கவிட்டுப் போனதேனோ !

•E-mail• •Print• •PDF•

 - மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார்

- மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா  -

சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே
மொத்தமுள்ள தமிழறிஞர் முழுப்போரும் அழுகின்றார்
எத்தனையோ பட்டங்கள் ஏற்றநிறை  விருதெல்லாம்
அத்தனையும் அவர்பிரிவால் அழுதபடி நிற்கிறதே

உலகமெலாம் சென்றிருந்தார் உவப்புடனே தமிழ்கொடுத்தார்
நிலைபெறு மாறெண்ணிநிற்க நிறைவாக அவர்கொடுத்தார்
அளவில்லா கட்டுரைகள் அவர்கொடுத்தார் உலகினுக்கு
அழவிட்டு சிலம்பொலியார் அவ்வுலகு சென்றுவிட்டார்

மாநாடு பலகண்டார் மலர்கள் பலகொடுத்தார்
பூமாலை புகழ்மாலை தேடியவர் போகவில்லை
கோமனாய் கொலுவிருந்தார் கொழுகொம்பாய் தமிழ்கொண்டார்
பாவலரும் காவலரும் பதறியழச் சென்றுவிட்டார்

•Last Updated on ••Saturday•, 06 •April• 2019 23:18•• •Read more...•
 

கவிதை: எப்போதோ அப்போது

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -கடவுளை
எப்போதும் தேடியதுமில்லை
கடவுளை
எப்போதும் நிந்தித்ததுமில்லை.

எப்போது
சினகூகனுக்குள் புகுந்து
கத்தியால் குத்திக் கிழிக்கப்படுகிறதோ
அப்போது
நான் யூதனாக உணர்கிறேன்
எப்போது மசூதிகளுக்குள்
இயந்திர துப்பாக்கிகள் துவம்சம் செய்கிறதோ
அப்போது
நான் இசுலாமியனாக உணர்கிறேன்.
எப்போது
தேவாலயங்களின் மீது
விமான குண்டுகள் வீழ்கிறதோ
அப்போது
நான் கிறிஸ்த்தவனாக உணர்கிறேன்.
எப்போது
கோவில்களை பீரங்கிகள்
மிதித்து சிதிலங்களாக்குகிறதோ
அப்போது
நான் இந்துவாக உணர்கிறேன்.
எப்போது
விகாரைகளை தற்கொலை குண்டுகள்
அழித்து போடுகிறதோ
அப்போது
நான் பௌவுத்தனாக உணர்கிறேன்.

•Last Updated on ••Monday•, 25 •March• 2019 16:39•• •Read more...•
 

கவிதை: பூமித் தாயைக் காப்போம்....!

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

கோடி ஆண்டுகளாய் சுழலுகின்ற பூமி
கொட்டிக் கிடக்கின்ற பிணிகளோடு இன்று...

நாம் அவளைத் தோண்டினோம் - வளங்கள் தந்தாள்!
அவளைக் காயப்படுத்தினோம் - தாயாய் நின்றாள்!
நெஞ்சைப் பிளந்தோம் - நீராய் வந்தாள்!
நேசத்தை வார்க்கின்ற வேராய் வந்தாள்!

அவளே நமக்கு கருவறை - கல்லறையும் அவளே!
அவள் மடி இருக்கும் வரை - அநாதை என்பதே இல்லை!
ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் இருந்தும்
அவள் நிற்பதோ ஆதரவற்றவளாய்...

மரங்கள் அவளது ஊமைச்சேய்கள்...
நதிகள் அவளது இரத்த ஓட்டங்கள் - அவளது நிலை
கண்டு வானம் கூட தன் வற்றிப்போன
கண்களால் எப்போதாவது மழையாய் அழுகிறது!

•Last Updated on ••Saturday•, 16 •March• 2019 01:18•• •Read more...•
 

கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1. கொலைக்கருவிகளோடு மணந்துநிற்கும் பூ

காமமதம் பிடித்த
யானைப்பெண்
கொம்புகள் இரண்டோடு
விழிவேல் நோக்கில்
இதயம் பிளந்து ஒழுகும் குருதிவெள்ளத்தின் துளியொன்று  எதிர்பார்ப்போடு

அன்பெனும் காமவெள்ளத்தில்
அடித்து நொறுக்கப்பட்டது நானென்றாலும்
வாழ்ந்திருப்பது காதல்தான்
இன்னோர் ஆன்மாவின் ரத்தம்
குடிக்க தீராத மோகத்தோடு
அவளும் அவள் நிமித்தமும்

•Last Updated on ••Tuesday•, 16 •April• 2019 03:12•• •Read more...•
 

- பா வானதி வேதா. இலங்காதிலகம் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

1. சங்கில் சதிராடும் சாகரம்

இங்கிதமாய் இதயம் மேவி
அங்கீகரிக்கும் ஆனந்த வெளிப்பாடு
பொங்கிப் புரளும் துன்பத்தால்
பங்கமுறும் காய வெளிப்பாடு
தங்காது முகிழ்த்தலே கவிதை!
பொங்குதலே கவிதை வீச்சு!
எங்கும் விசிறும் விதை
சங்கில் சதிராடும் சாகரம்.

2. கடல் வண்ணம்

பார்! கடல் சிறகெடுத்து
ஊர்கோலம் போகிறது. நீராவியாகி
நீர் வானம் ஏகுகிறது.

•Last Updated on ••Saturday•, 16 •March• 2019 00:46•• •Read more...•
 

கவிதை: கழுவேற்ற வேண்டும் !

•E-mail• •Print• •PDF•

பொள்ளாச்சி என்றவுடன் வந்துநிற்பார் மகாலிங்கம்
வள்ளலாய் அவரிருந்து வாரியே வழங்கிநின்றார்
தெள்ளுதமிழ் நூல்படைப்பார் சிறந்தபக்தி நூல்படைப்பார்
நல்லபடி வாழ்வதற்கு அள்ளியே அவர்கொடுத்தார்

மகாலிங்கம் எனும்பெரியார் வாழ்ந்ததனால் பொள்ளாச்சி
மக்களிடம் பேரூராய் புகழ்பெற்று விளங்கியதே 
இனிமைநிறை இளநீரை கொடுத்துநின்ற காரணத்தால் 
எல்லோரின்  மனத்தினிலும் நின்றதுவே பொள்ளாச்சி

பொள்ளாச்சி எனும்பெயரை இப்போது  உச்சரிக்க
பொறுக்காத வெறுப்புத்தான் மேலோங்கி வருகிறது
நல்லவர்கள் வாழ்ந்தவிடம் நலனழிந்து நிற்பதனால்
நாடெல்லாம் பொள்ளாச்சி பேச்சுத்தான் எழுகிறது

செல்வாக்கு மிக்கவரும் செல்வமுடன் இருப்பாரும்
நல்வழியை விட்டுவிட்டு தம்வழியில் செல்லுகிறார்
பொல்லாத செயலையவர் பொறுப்பென்றே மனதிருத்தி
தொல்லையினை கொடுப்பதையே சொர்க்கமாய் எண்ணுகிறார்

வாழவெண்ணும் மங்கையரை மயக்கமொழி பேசியவர்
வாழ்விழக்கச் செய்துநிற்கும் வலைவிரித்தே நிற்கின்றார்
ஏழ்மைநிலை தனையவரும் சாதகமாய் ஆக்கிநின்று
இறுமாப்பு கொண்டபடி இன்பம் கொண்டாடுகிறார்

•Last Updated on ••Saturday•, 16 •March• 2019 00:43•• •Read more...•
 

சர்வதேச மகளிர் தினக்கவிதை: “ஆளுமை”

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

அகிலத்தில் அதிகம்
“ஆளுமை” செய்தோர்,
ஆண்கள் எனப்பட்டனர்…!
பெருமை பலதைப்
“பேணிக்” காத்தோர்,
பெண்கள் எனப்பட்டனர்…!

குணமும், செயலும்
கொள்கையும் கூடிப்,
பெயரை வகுத்தனவாம்…!
பெயரே மிச்சம்,
பெயர்ந்தன எச்சம்..,
பின்னர் யாரெவராம்…?

•Last Updated on ••Monday•, 11 •March• 2019 23:51•• •Read more...•
 

இறைநிலைக்கே உயர்ந்து விட்டாள் ! [ சர்வதேச மகளிர் தினத்துக்காக இக்கவிதை சமர்ப்பணம் ]

•E-mail• •Print• •PDF•

- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -

பொறுமைக்கு இலக்கணமாய்
புவிமீது வந்திருக்கும்
தலையாய பிறவியென
தாயவளும் திகழுகிறாள்
மலையெனவே துயர்வரினும்
மனமதனில் அதையேற்று
குலையாத நிலையிலவள்
குவலயத்தில் விளங்குகிறாள்

சிலைவடிவில் கடவுளரை
கருவறையில் நாம்வைத்து
தலைவணங்கி பக்தியுடன்
தான்தொழுது நிற்கின்றோம்
புவிமீது கருசுமக்கும்
கருவறையை கொண்டிருக்கும்
எமதருமை தாயவளும்
இறைநிலைக்கே உயர்ந்துவிட்டாள்

பெண்பிறவி உலகினுக்கே
பெரும்பிறவி எனநினைப்போம்
மண்மீது மகான்கள்பலர்
கருசுமந்த பிறவியன்றே
காந்திமகான் உருவாக
காரணமே தாயன்றோ
சாந்தியொடு சமாதானம்
சன்மார்க்கமும் தாய்தானே

•Last Updated on ••Monday•, 11 •March• 2019 23:49•• •Read more...•
 

ஆசிரியம் ஒரு ஆச்சரியம்!

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

அன்பெனும் வழியெடுத்து
அறிவெனும் உளியெடுத்து
சிறந்த சிற்பங்கள் செய்யும்
செம்மையான சிற்பிகள் நீங்கள் !

நாளைய சமுதாயத்தை
நயம்பட படைக்க வேண்டி
நாளும் தவமிருக்கும்
நவயுக பிரம்மாக்கள் நீங்கள் !

தாம் பெற்றதனத்தும்
கசடறக் கற்றதனைத்தும்
தம்மக்கள் பெறவேண்டி
தவங்கிடக்கும் ஏணிப்படிகள் நீங்கள் !

•Last Updated on ••Wednesday•, 27 •February• 2019 17:15•• •Read more...•
 

கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

கவிதைகள் படிப்போமா?

1. சுவரற்ற வீட்டில் எனக்கான தனியறை

உடல்பூத்து மலர்ந்த நாளொன்றில்
காற்றின் இருத்தலைப் போல காமம்
வாடையின் காற்று உள்ளத்தை உருக்குலைக்க
இரவுகள் இங்கிதம் மறந்தொழிய
ஊற்றெடுக்கும் உள்ளொளியில் துணைத்தேடி
கனவுகளோடு நானும்

தொடுதலின் வெற்றுக் கற்பனைகளில்
பண்பாட்டுப்பாறையின் சுமையில்
நிறம் மாறிய ஓவியமாக மனம்

துணையின் தேவையில் கண்டடைந்த
வாழ்க்கையில் காத்திருக்கிறேன்
முதல் காமமுத்தத்திற்காக!

•Last Updated on ••Saturday•, 16 •March• 2019 00:53•• •Read more...•
 

காதலர்தினக் கவிதை: காதல் எனும் கனியமுது

•E-mail• •Print• •PDF•

- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -

இளமையிலும் காதல் வரும்
முதுமையிலும் காதல் வரும்
எக்காதல் இனிமை என்று
எல்லோரும் எண்ணி நிற்பர்
இளமையிலே வரும் காதல்
முதுமையிலும் தொடர்ந்து வரின்
இனிமை நிறை காதலென
எல்லோரும் மனதில் வைப்போம்

காதலுக்கு கண்ணும் இல்லை
காதலுக்குப் பேதம் இல்லை
காதல் என்னும் உணர்வுதனை
கடவுள் தந்தார் பரிசெனவெ
காதலிலே மோதல் வரும்
காதலிலே பிரிவும் வரும்
என்றாலும் காதல் எனில்
எல்லோரும் விரும்பி நிற்பார்

•Last Updated on ••Friday•, 15 •February• 2019 07:56•• •Read more...•
 

காதலர்தினக் கவிதை: காதல்(அன்பின்உயர்நிலை) தினம்?!!

•E-mail• •Print• •PDF•

- வேந்தனார் இளஞ்சேய் -


அன்பின்உயர்நிலைகாதல்
அன்னையின்அன்பும்காதலே
அப்பனின்பரிவும்காதலே
ஆண்டவன்அருளும்காதலே

•Last Updated on ••Wednesday•, 27 •February• 2019 17:14•• •Read more...•
 

கவிதை : “எந்தன் உயிர்க் காதலியே!”

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

வீடுகட்ட வாங்கிவைத்த மணலின்மீது,
விளையாட்டாய்க் குழிதோண்டிக் காலைமூடி,
பாதிஉடல் தானெனக்கு என்றேபேச,
மீதிஉடல் “நான்”என்று தோளில்குந்தி,
ஈருடலும் ஒருவரென்று எண்ணும்வண்ணம்,
இனிமையுடன் சிரித்தாயே சின்னஞ்சிறிசில் !
நாள்பொழுது மாதமாகி வருடங்களாச்சு,
நடந்ததெல்லாம் என்னுயிரே மறந்திடுவேனா...!

மணல்மேலே மனைபோட்டு : குடும்பம்போல,
மகிழ்ந்தோமே நான்அப்பா நீஅங்கே அம்மாவாக !
மறுபொழுது சண்டைவர : உருட்டுக்கம்பால், 
மடத்தனமாய் அடித்தேன்உன் தலையில்நானும் !
ஓடிவரும் உதிரமுடன் வீட்டுக்குஓடி,
உண்மைதன்னைச் சொல்லாமல் : “விழுந்தேன்”என்று,
ஆழ்மனதுக் காதலைநீ அறியத்தந்தாய்,
அதன்உண்மை அறியாநாம் இருந்தநாளில்!

•Last Updated on ••Tuesday•, 12 •February• 2019 20:44•• •Read more...•
 

இளஞ்சேய் வேந்தனார் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- வேந்தனார் இளஞ்சேய் -

1. சிதறிப்போன ஆசைகள்

பனி பொழிந்ததின்று மாலையிங்கு
பள்ளிச்சிறுவர் பனியள்ளி வீசினர்
பார்க்கப் பார்க்க என்நினைவுகள்
புலத்து வாழ்வை எண்ணியேங்கின

சின்னச் சின்ன ஆசைகள்
சிதறிப் போன ஆசைகள்
வாலிபத்தில் இழந்து விட்ட
வசந்த காலப் பொழுதுகள்

ஊர்க்காற்றை சுவாசித்திட ஆசை
உருண்டு மண்ணில்புரள ஆசை
மழையில் கப்பல்விடவும் ஆசை
மாங்காய் எறிந்துவீழ்த்த ஆசை

•Last Updated on ••Wednesday•, 06 •February• 2019 22:12•• •Read more...•
 

கவிதை: புகையாய்ப் போயிடும் பசி!

•E-mail• •Print• •PDF•

கவிதை: புகையா போயிடும் பசி!நடந்து சென்று கொண்டிருந்தோம்
இருவருமே அவரவர் எண்ண ஓட்டத்தின் பாதையில்
வலப்புறம், இடப்புறம் என்று மாறிமாறி

வயிறு சற்று கணத்துப் பசிக்கத் தொடங்கியது.
'நண்பா பசிக்குதுடா" என்றேன்
'உம்" என்றான். உம் வலுவாயில்லாதிருந்தது.
அடிவயிற்றை அவ்வப்போது வருடியபடி நடக்கத் தொடங்கினேன்.

•Last Updated on ••Saturday•, 18 •May• 2019 08:05•• •Read more...•
 

கவிதை: கவிதை!

•E-mail• •Print• •PDF•

- முல்லைஅமுதன்

தேடுவாரற்றுக் கிடந்த
அடர்ந்த மணற்புதருக்குள்
இருந்து எடுத்துவந்தார்கள்.
முகம் சிதைந்திருந்தது.
உடல் அமைப்பைக்கொண்டு
அடையாளம் கண்டு
முடியாமல் இருக்கிறது என்றார்கள்.
அவசரவண்டியுடன்,
காவல்துறையினரும்
வருவதாக
பேசிக்கொண்டார்கள்.
ஆங்காங்கே குண்டுகள் பட்டு
குருதியின் அடையாளத்தையும் கண்டார்கள்..
கள்வனாக இருக்குமோ?

•Last Updated on ••Saturday•, 20 •June• 2020 17:21•• •Read more...•
 

கவிதை: என்ன சொல்லிவிடுகிறது மழைத்துளி...!!!

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -தனித்தனியாய் விழுகிறோம்
தண்ணீராய் எழுகிறோம்...
வறண்டுவிட்ட பூமிக்காய்
வக்கணையாய் அழுகிறோம்..

வானத்தையும் வையத்தையும்
நீர்நூலால் கோர்க்கிறோம்...
முகிலோடு முகிலுரச
நன்னீராய் வேர்க்கிறோம்...

மெல்லமாய் விழுந்தாலும்
வெள்ளமாய்ப் பெருக்கெடுப்போம்...
ஆறு குளம் அத்தனையும்
செல்லமாய்ச் சிறையெடுப்போம்..

காதலுக்கும் தூது உண்டு
கல்லறைக்கும் தூது உண்டு - இது
சாதிமத பேதமின்றி நாங்கள்
சரிசமமாய்ச் செய்யுந் தொண்டு...

•Last Updated on ••Monday•, 04 •February• 2019 02:42•• •Read more...•
 

கவிதை: எருமையின் அருமையுணர்ந்த தருணத்தில்...

•E-mail• •Print• •PDF•

கவிதை: எருமையின் அருமையுணர்ந்த தருணத்தில்...

“கார்மேகமே வண்ண முமானதோ
கருவண்டே யிரு கண்ணென வானதோ
தூம்பு வடிவே சிரம ணிந்த இருகொம்பென யானதொ
முடிசூடிய கோனே யென்றலும் மணிமகுட மொன்றே;
தன்தலை யதனிலே மகுடமென வீற்றிருக்கு மிருகொம்புடனே
முடிசூடா மன்னனென உலவும் கோலங்கொண்டே
புவியழியும் தருண மெனினும் சிறுசலனமே துமற்றே
கூற்றுவனின் ஊர்தியாகிய தென்றதாலெ
தூற்றுவோ ராயிரமிங்கே.

•Last Updated on ••Tuesday•, 29 •January• 2019 06:35•• •Read more...•
 

கவிதை: வழிமாறிய பயணங்கள்.

•E-mail• •Print• •PDF•
- நிலாமுற்ற குழுமத்தில் பாடிய கவிதை -

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

இல்லத்தரசியாக இலங்கையில் தலைகோதியது கவிச்சாரல்
நல்ல முயற்சியால் வழிமாறியது பெட்டகோவாகி ஓய்வு.
சொல்லடுக்கி தமிழின் கழுத்தைக் கட்டியவாறு இன்று
செல்ல மழைத்துளியென் செழுமைக்கு வல்லதமிழ்.
நில்லாத தமிழ்ப் பல்லக்குப் பயணம்.
தொல்லையும் உண்டு நிராகரிப்பு அலட்சியம்.

பணம், பயண அனுமதி, பயணச்சீட்டின்றி
பகிர்ந்திட மனிதரில்லாத வழிமாறிய பயணம்
பத்திரம், ஆரோக்கியம், நித்திரையூர் தொலைத்து
சித்திரவதையாம்  நோயூருக்கு அனுப்பும்.

சுழலும் பூமிக்கு வயதாகியதால் அதன் சுந்தரமான
வாழ்வும் எம்மை உழல வைக்க
வெள்ளம் சுனாமி, வரட்சியாம் நோய்களென
நிழலும் நெருங்காது வழி மாற்றுகிறது.
குழலுள் காற்றாய் நாம் வெற்றியிசை மீட்டவேண்டும்.

வாழ்வின் சுழற்சியால் தடம் மாறாது
தாழ்வு  நிலையேகாத நம்பிக்கைக் கைத்தடியோடு
தழலாய் எழும் தைரியம் ஒன்றினாலே
குழிகள் மேடுகள் தாண்டிக் கவனம் களவாடி 
விழி வியக்கவோடும் பயணங்களே வாழ்க்கை.
•Last Updated on ••Tuesday•, 29 •January• 2019 06:24•• •Read more...•
 

சந்திரன் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. மாற்றம்

- முனைவர் ஆ.சந்திரன் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், வேலூர் -ஏனோ அன்று புத்தாடை வாங்கியே தீரவேண்டுமென்று
பிடிவாதமாய் அங்காடித் தெருவில் நடந்துகொண்டிருந்தேன்
“அங்கவஸ்திரம் தலைக்கு அழகாய் இருக்கும்” என்ற கடைக்காரன்
“தோளில் மாட்டும் பூனூல் இலவசம்” என்றான்
திருப்தியின்றி வேறுகடையினுள் நுழைந்தேன்
“இது லேட்டஸ்டு மாடல் ஜிப்பா” என்று நீட்டியவன்
“இந்த டாலர் செயின் இலவசம்” என்றான்
விளைவு
சாம்ராணிப் புகை வீசிய கடையில் நான்
“இந்தத் துணி வாங்கினால் உங்களுக்குத் தாடி அழகாய்
முளைக்கும்” என்றான் கடைக்காரன்!
மூன்று நாள் சேவ் செய்யாத தாடியைத் தடவியவாறே
எதிரே வந்த துறவியைக் கடந்து வீட்டை அடைந்தேன் !
குளித்து முடித்து, எந்த ஆடையை உடுத்திக்கொள்வது? என்ற
யோசனையுடன் அலமாறியை அலசியபோது
அம்மாவின் கைப்பக்குவத்தை மீறி எழுந்த
மகனின் சிறுநீர் வாசம் “என்னை இருக்கப் பற்றிக்கொள்” என்று
என்முன் வந்து டேன்ஸ் ஆட
அதை எடுத்து உடுத்திப் பார்த்தேன்!
மடிப்பின் இடையில் ஒளிந்துகொண்டிருந்த
மஞ்சள் என்னைப் பார்த்து சைட் அடித்தது!

•Last Updated on ••Saturday•, 26 •January• 2019 00:41•• •Read more...•
 

கவிதை: வண்ணத்துப் பூச்சியின் எண்ணச்சிதறல்கள்!

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -வண்ணம் தோய்ந்த சின்னம் நான்.
வானவில்லின் சாரம் நான்.
சின்னஞ்சிறிய சிறகை அசைத்துச்
சீட்டாய்ப்பறக்கும் சிறுபறவைநான்.

கூட்டைப் பிளந்து  காற்றில் மிதந்து,
கண்டேன் காட்சி  கண்கொள்ளா....!
ஏட்டில் அதுவர , பாட்டில் மதுதர,
காட்டும் சொல்லுக்குத்  தமிழ் நில்லா....!

நித்தம் மலர்ந்தும், மதுவால் நிறைந்தும்,
சொக்கும் மலர்கள் தோழிகளே....!
சித்தம் குளிர்வேன்,  முத்தம் தருவேன்,
சுற்றம் அணைப்பேன், வாழியவே....!

கொட்டும் அருவியும் , முட்டும் மேகமும்,
சொட்டும் எழிலைச் சொல்வதற்கு....!
கட்டி அணைப்பதும், கனியாய் இனிப்பதும்,
சொக்கும் தமிழில்  வேறெதற்கு....?

குதித்தே ஓடும் ஓடைதன்னில்,
குளித்தே ஆடும் மீன்கூட்டம்....!
பதித்தே தடத்தைப் பரவும் அதனைப்
பார்ப்போர் கொள்வார்  முழு நாட்டம்....!

தென்றல்  தவழச்   சாரல் உதிரத்,
திங்கள் ஒளியில் திரள் காட்சி.....!
வந்திடும் உளத்தினில், வாழ்ந்திடும்  நினைப்பினில்,
வந்தனம் இயற்கை  வளம் சாட்சி...!

உங்கள்  நண்பன்  உற்றேன் உவகை....
உண்மை சொன்னால் பேருவகை....!
கண்ணில் கண்ட காட்சியை உரைத்தேன்,
கண்டீர் இதன்மேல்  ஏது(உ)வகை...?

•Last Updated on ••Saturday•, 26 •January• 2019 00:02•• •Read more...•
 

பொங்கற் கவிதை: வாழ்த்தி நின்று பொங்கிடுவோம் !

•E-mail• •Print• •PDF•

பொங்கற் கவிதை:  வாழ்த்தி நின்று  பொங்கிடுவோம் !

மனங்கவரும் மார்கழியில்
மகத்தான நாட்கள்வரும்
இந்துக்கள் கிறீத்தவர்கள்
எல்லோரும் பங்குகொள்வர்
வைஷ்ணவமும் சைவமும்
வாழ்த்திநிற்கும் திருவெம்பா
மார்கழியின் முக்கியமாய்
மனமாசை அகற்றிநிற்கும் !

ஒளிவிழா எனும்பெயரால்
உத்தமராம் யேசுபிரான்
வழிநிற்போர் அனைவருமே
வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
பீடுடைய மாதமாய்
மார்கழியும் அமைந்துதுநின்று
பெருமகிழ்சி வருவதற்கு
தைதனக்கு வழிகொடுக்கும் !

•Last Updated on ••Sunday•, 13 •January• 2019 20:54•• •Read more...•
 

பொங்கற் கவிதை: “பொங்கலோ பொங்கல்!’’

•E-mail• •Print• •PDF•

கவிதை: பொங்கலோ! பொங்கல்!

வானத்தில்  இருளே  பொங்க,
வரும்மழை  ஆற்றில்  பொங்க,
வரண்டமண்  வாய்க்கால்  பொங்கி,
வயலிலே  பயிர்கள்  பொங்க

•Last Updated on ••Sunday•, 13 •January• 2019 20:54•• •Read more...•
 

கவிதை: எதுதான் தகுதி

•E-mail• •Print• •PDF•

 

ஶ்ரீராம் விக்னேஷ்

எச்சிலிலை எடுத்துண்ணும் என் நண்பா உன்னிடத்தே,
கச்சிதமாய் ஒன்றுரைப்பேன் கவனம் , அதை மறைத்துண்ணு….!
பிச்சையெடுப் போரிடமும் பிடுங்கியே தின்றுவிடும்,
'எச்சிக்கலை' பலரின்று  இருக்கின்றார் பதவிகண்டு….!

நாயை வீட்டிலிட்டு நல்விருந்து குவித்தாலும்,
வாயைத் திறந்தோடும் வாய்க்காற் கழிவுண்ண….!
சம்பளத்தைக் கூட்டித்தான் சர்க்கார் கொடுத்தாலும்,
கிம்பளப் பிச்சைபெறக் கிளம்புகிறார் கையேந்தி….!

•Last Updated on ••Monday•, 31 •December• 2018 21:22•• •Read more...•
 

கவிதை: வல்லவொரு ஆண்டாக மலர்ந்துவிடு புத்தாண்டே !

•E-mail• •Print• •PDF•

-    மகாதேவஐயர்  ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -

புத்தாண்டே    நீ    வருக
புத்துணர்வை  நீ  தருக
நித்தமும்   நாம்   மகிழ்ந்திருக்க
நிம்மதியை  நீ   தருக
சொந்தம் எலாம் சேர்ந்திருக்க
சுப ஆண்டாய்  நீவருக
எம்தமிழர் வாழ்வில் என்றும்
இன்பம்  பொங்க  நீவருக

வாருங்கள்   என   அழைத்து
வரும்  மக்கள்  வரவேற்கும்
சீர்  நிறைந்த நாட்டிலிப்போ
சீர்  அழிந்து நிற்கிறது
யார்  வருவார்  சீர்திருத்த
எனும் நிலையே  இருக்கிறது
நீ வந்து புத்தாண்டே
நிலை  திருத்தி  வைத்துவிடு

•Last Updated on ••Monday•, 31 •December• 2018 20:23•• •Read more...•
 

இரு-மொழி இரணைக் கவிதைகள்-6: எமது சிங்களச் சகோதரருக்கு: நீங்களும் நாங்களும் ஒருவரடா! (TO OUR SINHALESE COMPATRIOTS: YOU AND WE ARE ONE, MAN!)

•E-mail• •Print• •PDF•

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -எமது சிங்களச் சகோதரருக்கு:
நீங்களும் நாங்களும் ஒருவரடா!    

நீங்களும் நாங்களும் ஒருவரடா 
ஏங்குறார் எம்மக்கள் நீதிக்கடா.

பௌத்தம் எம் சைவப் பிள்ளையடா
கௌதமன் கந்தனின் தம்பியடா.

சாதியும் பேதமும் சகதியடா
பீதி எம் தீவினைப் பிளக்குதடா.

உம்மொழி-எம்மொழி இரண்டையுமே
நம் மொழிகள் என வளர்ப்பமடா.

ஆங்கிலம் எங்கள் இணைப்பு-மொழி
பாங்குடன் அதனையும் பேண்போமடா.

சிங்களத் தீவையே ஈழம் என்று
எங்களின் தொல் மொழி சொல்லுதடா.

சண்டைகள் எங்களைச் சிதைக்குதடா
பண்புடன் ஒற்றுமை படைப்போமடா.

சிறுமனச் சிந்தனை துறப்போமடா
வெறுப்பையும் பயத்தையும் ஒறுப்போமடா..

நடந்த பல் கொடுமைகள் மறப்போமடா
திடந்தரும் செயல்களால் வளர்வோமடா.

நீங்களும் நாங்களும் ஒருவரடா
ஏங்குறார் எம்மவர் நீதிக்கடா.

நான்கு சோதரராய் வாழ்ந்திடுவோம் – எம்
நான்கு மதங்களால் நலன்பெறுவோம்.

எமக்கும்உமக்கும் இது ஒர்இலங்கை – இங்கு
சமத்துவப் பிணைப்புடன் வாழ்வமடா.

•Last Updated on ••Thursday•, 27 •December• 2018 08:37•• •Read more...•
 

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 3!

•E-mail• •Print• •PDF•

- வேந்தனார் இளஞ்சேய் -

1. குறைகளை விட்டால் பகைமை இல்லை!

இன்பங்கள் மட்டும் நிரந்தரம் இல்லை
இன்னல்கள் காணா வாழ்வும் இல்லை
இழப்புகள் இல்லாத மனிதரும் இல்லை
இடைஞ்சல்கள் தராத உறவும் இல்லை

அன்பினை வேணடாத உயிரும்  இல்லை
அழிவினைத் தந்திடாத போரும் இல்லை
அறிவினை மயக்காத விதியும் இல்லை
அரசைக் கெடுக்காத சதியும் இல்லை

வஞ்சகம் என்றும் வெல்வது இல்லை
வாய்மை இழிவைத் தந்திடல் இல்லை
வலியவர் என்றும் ஆள்வது இல்லை
வறியவர் என்றும் தாழ்வது இல்லை

•Last Updated on ••Friday•, 14 •December• 2018 20:52•• •Read more...•
 

முண்டாசுக் கவிஞனே நீ மூச்சுவிட்டால் கவிதை வரும்

•E-mail• •Print• •PDF•

- பாரதியாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றுவோம்!  பெரும்  பேறாய் போற்றுகின்றோம்! -

- பாரதியாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றுவோம்!  பெரும்  பேறாய் போற்றுகின்றோம்! -

முண்டாசுக்   கவிஞனே   நீ
மூச்சுவிட்டால் கவிதை வரும்
தமிழ் வண்டாக நீயிருந்து
தமிழ் பரப்பி நின்றாயே
அமிழ் துண்டாலே வருகின்ற
அத்தனையும் வரும் என்று
தமிழ் உண்டுமே பார்க்கும்படி
தரணிக்கே உரைத்து நின்றாய்

•Last Updated on ••Thursday•, 13 •December• 2018 07:39•• •Read more...•
 

கவிதை: அஸ்தமனத்தின் அஸ்திவாரங்கள்.

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -முகில்களை முகர்ந்து பார்க்க
மாடிகளாக வளர்த்த பின்
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.
அஸ்திவாரத்தில் கிடப்பதெல்லாம் 
வெறும் கல்லும் மண்ணும் என்று
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.

அஸ்திவாரங்களை அலட்சியபடுத்தி 
ஆகாயத்தில் ஆடித்தவிக்கும்
அரக்குமாளிகைகளை அழகுபடுத்து.

தோளினிலும் முதுகினிலும்
சவாரி செய்து
சவாரியின் தோலை உரித்து
சப்பாத்துகள் செய்துகொள்.
விரியும் பயணத்தின்
பாதங்களை எப்போதும்
பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
உதவியவனை உதைந்து விழுத்த
ஆத்மார்த்தமான  ஆயுதம் அதுமட்டுமே.

•Last Updated on ••Saturday•, 08 •December• 2018 19:56•• •Read more...•
 

கவிதை: பனிக்காலம்

•E-mail• •Print• •PDF•

கவிதை: பனிக்காலம்

டிசம்பர்  மாதத்து
வீட்டு  முற்றங்கள்
கனக்கத்  துவங்கின
மாலை  நான்கிற்கே
கவிகின்ற   காரிருள்
எடை  தாங்காமல் .. ...

இலைகள்  உருவி  விடப்பட்ட
மரங்கள்  நிர்வாணமாய்த்  தெருவோரத்தில்
சின்னஞ்சிறு  மின்விளக்கு  போர்த்திய
கிறித்துவ  மரமும்  மான்  பொம்மைகளும்
கதகதப்பில்  அங்கொன்றும்  இங்கொன்றுமாக....

•Last Updated on ••Thursday•, 06 •December• 2018 21:35•• •Read more...•
 

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 2!

•E-mail• •Print• •PDF•

 

- வேந்தனார் இளஞ்சேய் -

1. விளக்கீடு இன்று!

விளக்கீடு இன்றென்றாள் என் மனையாள்
வந்துமோதின அந்நாள் இனிய நினவுகள்
வகை வகையாய் சுட்டிகளை வைத்தே
வரிசையாய் விளக்கேற்றி நாம் மகிழ்ந்தநாள்

வீடெல்லாம் நிறையவே சுட்டி விளக்கேற்றி
வாழைத் தண்டை  வாசலினில் நட்டுவைத்து
வகையாக நன்கே எள்பொதியிட்டு எரித்தநாள்
வாராதோ மீண்டொருநாள் எம் வாழ்வில்

ஒளியேற்றி உறவுடனே கூடி ஒன்றாய்
ஓடியாடி மகிழ்ந்தே வாழ்ந்தவர் அன்றோ
விளக்கீடு வருவதும் தெரியாமல் நாமிங்கே
விரைவான வாழ்வில் வகையாக மாட்டுண்டோம்.

•Last Updated on ••Saturday•, 01 •December• 2018 20:52•• •Read more...•
 

கவிதை: காலமும். கோலமும்..

•E-mail• •Print• •PDF•

- முனைவர் இரா. இராமகுமார் -

"காலையில் ஆதவன்
கதிரொளியால்
சிரிக்கும் போது
சரீரம் சிணுங்குகிறது.
மாலையில்
சூரியக்காதலன்
மங்கும்போது
மனமும் மயங்குகிறது.
இயற்கையே
உன் படைப்பில்
இன்பமும் இன்னலும்
செயற்கையாய்
கலந்த கலவையா....
இன்பவானில்
சிறகடிக்கும்
மானிடர்களும்
றெக்கை முளைத்த
பறவையா....."

•Last Updated on ••Monday•, 26 •November• 2018 08:28•• •Read more...•
 

கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…

•E-mail• •Print• •PDF•

கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…

அவள் வருவதாய் என்னுள் விதைத்திருந்த ஞானம்
தற்போது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
எனினும்,
என்னுளிருப்பவள் அவளைக் குறித்து பேசாத நாளில்லை.
என்னுடையது அனைத்தும் அவளுக்கே சென்றுவிட்டதென வாதிடுகிறாள்.
எங்களிருவருக்குள் இதுபோல் அடிக்கடிப் பேரிடர்கள் நிகழும்
அது கணிந்து தற்போது ஊடல் பெயரில் உலா வருகிறது.
காமத்தையும் காதலையும் அணுகாமல்
ஊண்ணுன்னும் உடம்பும்
உடலுள்ளிருக்கும் மனதும்
மனிதக் குறிகளற்றத் தன்மையைப் பெற்றிருப்பது போல
உங்களிருவரின் உணர்வுகள் தனித்திருக்கின்றன என்பது
என்னுளிருப்பவளின் தீர்க்கமான விமர்சனம்.

•Last Updated on ••Monday•, 26 •November• 2018 08:22•• •Read more...•
 

கவிதை: வாழ்த்துதல் நன்றன்றோ!

•E-mail• •Print• •PDF•

- வேந்தனார் இளஞ்சேய் -

வாழ்த்துதற்கு நமக்கு நல்மனமது
வேண்டும்
வஞ்சமற்ற நல்ல நெஞ்சமது
வேண்டும்
இதயத்தில் வற்றாத இரக்கமது
வேண்டும்
இன்பமாய் இருந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ!

பாராட்ட நல்ல உணர்வது
வேண்டும்
பக்குவமான சிறந்த குணமது
வேண்டும்
நல்லதை ரசிக்கும் இயல்பது
வேண்டும்
நலமாய் சிறந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ!

•Last Updated on ••Monday•, 12 •November• 2018 07:14•• •Read more...•
 

தித்திக்கும் தீபாவளி திருப்பம் பல தந்திடட்டும் !

•E-mail• •Print• •PDF•

தித்திக்கும்  தீபாவளி திருப்பம்  பல  தந்திடட்டும்  ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -

தீபாவளித் தினத்தில்  தித்திப்பு  உண்ணவேண்டும் 
கோபமெனும்  குணமகற்றி  கொண்டாடி  மகிழவேண்டும்
பாவமென நினைக்கின்ற செயலனைத்தும் துரத்தவேண்டும்
பக்குவமாய் ஒன்றுகூடி பாங்காக மகிழவேண்டும்

உள்ளமதில் உண்மைதனை  ஊற்றெடுக்கச்  செய்யவேண்டும்
கள்ளமுடை  எண்ணமதை களைந்தெறியச் செய்யவேண்டும்
நல்லவர்கள் ஆசிபெற்று நம்வாழ்வு சிறக்கவேண்டும்
நமக்குவாய்க்கும் தீபாவளி நல்வெளிச்சம் காட்டிடட்டும்

•Last Updated on ••Friday•, 02 •November• 2018 22:25•• •Read more...•
 

வைன் பொழுதுகள் (கவிதை)

•E-mail• •Print• •PDF•

கவிதை சுவைப்போமா?

கடும் சிவப்பு
திராட்சை ரசமெனும் வைன்
பலவேளைகளில்
சிலகதை சொல்லும்

காதல் என்றும்
காமம் என்றும்
இலக்கியமென்றும்
சினமாவென்றும்
ஏதேனும் சொல்லும்
சிலவேளை அரசியலும்.

வைன் பொழுதுகளில்
அதனுடன் காதலையும் காமத்தையும்
பற்றி பேசவே ஆசை கொள்வேன்.
வைன் பொழுதுகளில்
நீயும் நானும் எப்போதும் நெருக்கமானவர்களாக
இருப்போம்
உனக்கும் அவ்வாறிருக்கும்.

•Last Updated on ••Friday•, 02 •November• 2018 22:16•• •Read more...•
 

நோயும் நீ…! மருந்தும் நீ….! (கவிதை)

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்“பிணிக்கு  மருந்து  பிறமண் : அணியிழை
தன் நோய்க்கு  தானே  மருந்து”      (திருக்குறள் – 1102)


இதயத்தை  நிறைத்து  நோகும்
என்காயம்  மாற  உந்தன்,
அதரத்தின்  அழுத்தல்  அன்றோ
ஒளஷதம்  ஆகும்  கண்ணே…!
உதயத்தின்  தோன்றல்  போலே
உன்துணை  தந்து  என்னை
கதைதன்னில்  நாயக  னாக
கண்ணேநீ  ஆக்கு  ஆக்கு…!

உந்தனைக்  கண்ட  நாளாய்
உள்ளத்தால்  உருகி  நான்தான்
எந்தனை  மறந்தே  போனேன்..,
எதுமறியாப்  பித்தன்  ஆனேன்…!
வந்தெனை  அணைக்க  வேண்டும்,
வாழ்வில்நீ  கலக்க  வேண்டும்..,
சொந்தமாய்  ஆக  வேண்டும்..,
சொர்க்கத்தைக்  காட்ட  வேண்டும்…!

எத்தனையோ  பெண்க  ளோடு,
என்வாழ்வில்  பழகி  யுள்ளேன்..,
சுத்தமாய்  நெஞ்சில்  தொட்டுச்,
சுகித்தவள்  எவளும்  இல்லை…!
பித்தனாய்  ஆக்கி  என்னைப்,
பின்சுற்ற  வைத்தாய் : விந்தை..,
சொத்தென  எனக்கு  வேண்டும்..,
சொந்தமாய்  ஆகு  ஆகு…!

•Last Updated on ••Friday•, 02 •November• 2018 21:42•• •Read more...•
 

மகாகவிக்கு ஒரு மடல்

•E-mail• •Print• •PDF•

கால சக்கரத்தின் ஓட்டத்தில் இன்றும் நான் பார்வையாளரே

நன்மைகளை நினைவிலிருந்து எரித்தனர் நாகரிகம் என்று

நீ விதைத்த வார்த்தைகள் வளர்ந்தும் மரமாகவில்லை

இன்று நிமிர்ந்த நங்கைகள் கூட காணப்படுகின்றனர் காந்தமாக

மனமுடைந்து மரணிக்கின்றனர் நீ விளையாட சொல்லிய சிறுவர்கள்

•Last Updated on ••Friday•, 02 •November• 2018 21:38•• •Read more...•
 

பிறவிப்பயன் !

•E-mail• •Print• •PDF•

கவிதை சுவைப்போமா?

விழியின்
நுனியில் பார்வை பிறக்க,
உன் கருவிழி
ஓரமாய்
ஒதுங்கி நிற்க,

அசைவால் நயனிக்கும்
அந்தக் குட்டிக்
கூந்தல்..

உன் செவ்விழி
இடையே ஒலி இல்லா
இசை மீட்டியது!

•Last Updated on ••Friday•, 02 •November• 2018 21:32•• •Read more...•
 

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 1!

•E-mail• •Print• •PDF•

- வேந்தனார் இளஞ்சேய் -

1. விருப்புடன் வந்திடுவீர்

பொது வாழ்வில் சேவைதனை
பொறுப்பாய் ஆற்ற வந்தோரே
சங்கங்கள் பலதிலின்று பல
சச்சரவுகள் இருப்ப தேனோ

மன்றங்கள மைத்து பணிதனை
மகிழ்வுடனே ஆற்ற வந்தோரே
மாறுபட்டு நின்றும்முள் மோதி
மல்லுக் கட்டி நிற்பதேனோ

கற்றவர் நாமென்று கூறியென்றும்
கர்வப்படும் நம்மவர் தம்முள்
பிரிந்துநின்று பிணங்கு கொண்டு
பிளவு கண்டு நிற்றலேனோ

சிந்தித்துப் பார்த்திடுவோமே சற்று
சீர்திருத்த முனைந்திடு வோமே
மனம்விட்டுப் பேசி நாமும்நம்
மாறுபாட்டை போக்கலா மன்றோ

•Last Updated on ••Saturday•, 01 •December• 2018 20:51•• •Read more...•
 

இரு-மொழி இரணைக் கவிதைகள்- 5: ஆண்மை MANHOOD, MANLINESS, MALENESS

•E-mail• •Print• •PDF•

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -ஆண்மையின் ஆதி ஆண்கள் பெண்களை
வளைக்க நடிக்கும் இயல்பு. (001) 

The origins of manhood lie in men's
Actions to attract, court and love women.

அடக்குமுறை ஆண்மைக்கு அழிவுதரும் வழியும்
இடக்கான போக்கென்றும் காண்க. (002)

It’s a downward, disastrous way for men
To use force on women, or even men.

ஆண்மைக்குப் பெண்மையை அடக்கலிக்கும் அம்பு
மாண்புடை அன்பெனும் பண்;பு. (003)

The arrow that makes women fall for men
Is men's dignified love for their women. 

ஆண்மையும் பெண்ணவள் காட்டலாம் வாழ்வினில்
வேண்டி வந்த இடத்து. (004) 

Manhood could be used by any woman
Where life warrants her to act like a man. 

ஆண்மைக்கு அழகு, வீடொன்றை அமைத்து
பெண்ணுடன் இன்புறும் பண்பு. (005)

•Last Updated on ••Friday•, 26 •October• 2018 00:54•• •Read more...•
 

கவிதைத்தொகுப்பு: அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள். -

•E-mail• •Print• •PDF•

அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -

கவிதைத்தொகுப்பு: எதிர்காலச்சித்தன் பாடல்! - அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள். -ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

[மறுமலர்ச்சிக் குழுவினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை. இச்சஞ்சிகையில் எழுதிய படைப்பாளிகளையே மறுமலர்ச்சி எழுத்தாளர்களாகக் காணும் போக்கொன்று செங்கை ஆழியானுட்பட இன்று இலக்கிய விமர்சனங்கள், ஆய்வுகள் செய்ய விரும்பும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினைச் சார்ந்த செல்லத்துரை சுதர்ஸன் போன்றவர்கள் மத்தியில் நிலவுவதாகத் தெரிகிறது. இது ஒரு பிழையான அணுகுமுறை. மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கி, அதில் பாடுபட்டவர்களின் படைப்புகள் யாவும் மறுமலர்ச்சிப் படைப்புகளாகத்தான் கருதப்பட வேண்டும். உண்மையில் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், அல்லது மறுமலர்ச்சிக் கவிதைகள், அல்லது மறுமலர்ச்சிப் படைப்புகள் , மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்போது அது மறுமலர்ச்சி சஞ்சிகையில் எழுதிய எழுத்தாளர்களை மட்டும் குறிக்கவில்லை.  அது மறுமலர்ச்சி காலகட்டப் படைப்பாளிகளையும் குறிப்பிடுகிறது. அந்த 'மறுமலர்ச்சி' இதழினை வெளியிட்ட மறுமலர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்களின் படைப்புகளையும் குறிக்கிறது. இதுவே சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும் என்பதென் கருத்து. செங்கை ஆழியான, செல்லத்துரை சுதர்ஸன் போன்றோர் இந்த விடயத்தில் கருத்துச் செலுத்த வேண்டுமென்பதென் அவா. சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்' என்னும் நூலில் ஈழத்துக் கவிதையுலகின் மறுமலர்ச்சிக் கட்ட காலம் பற்றிக் குறிப்பிடும்போது அ.ந.கந்தசாமி, மகாகவி, நாவற்குழியூர் நடராசன் ஆகியோரை மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்களாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் கவீந்த்திரன் என்னும் புனைபெயரிலும் எழுதிய அறிஞர் அ.ந.கநதசாமியை ஈழத்தின் தமிழ்க் கவிதையில் முதலாவதாக இடதுசாரிச் சிந்தனையினை அறிமுகப்படுத்திய படைப்பாளியாகவும் குறிப்பிடுவர்.இவ்விதம் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றியே குறிப்பிடப்படவேண்டுமே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையின் படைப்புகளை மட்டும் மையமாக வைத்து மறுமலர்ச்சிக் காலகட்டத்தை எடை போடக்கூடாது. அவ்விதமான போக்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய பிழையான பிம்பத்தினைத் தந்துவிடும் அபாயமுண்டு. ]

•Last Updated on ••Friday•, 22 •March• 2019 20:27•• •Read more...•
 

ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -1. அவள் அழுதுகொண்டிருக்கிறாள்


அந்த நள்ளிரவில்
அவள் அழும் விசும்பலொலி கேட்டு
கூட்டம் கூடிவிட்டது.

ஆச்சரியத்துடன் சிலர்;
அனுதாபத்துடன் சிலர்;
அக்கறையுடன் சிலர்;
சுடச்சுடச் செய்தி சேகரிக்கும்
ஆர்வத்தில் சிலர்;
தேர் சரிந்த பீதியில் சிலர்;
பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்;
பெருங்குரலெடுத்து அட்டகாசமாய்
இளக்காரத்தோடு சிரித்தபடி சிலர்;
‘இதென்ன புதுக்கதை' என்று
வரிந்துகட்டிக்கொண்டு
களத்திலிறங்கியவர்கள் சிலர்….

;அங்கிங்கெனாதபடியானவள்
ஆற்றொணாத் துயரத்தில்
பொங்கியழக் காரணமென்ன?

•Last Updated on ••Thursday•, 30 •August• 2018 23:49•• •Read more...•
 

வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. பனிப்பூக்கள்.

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

பஞ்சின் மென்மை உன் கன்னமாக
விஞ்சும் அழகால் உள்ளம் கனலாகுதே
அஞ்சும் மனமின்றி ஆசையாய்த் தொடுகிறேன்
கொஞ்சமும் பயமின்றி உன் அம்மா ஏசுவாரென்று

அன்னமே வருவாயா அழகுப் பனியில்
உன்னதமாய்ச் சறுக்கலாம் பனியால் எறியலாம்
சின்ன செடிகளின் தண்டுகளில் பனியும்
என்ன அழகாய் அப்பியுள்ளது பனிப்பூ

வெப்பத்தில் உருகிக் கண்ணாடியாய் மின்னும்
ஒப்பனையற்ற அழகு பிரம்மன் சிருட்டியாய்
கற்பனையிலும் காணவியலாது வெப்ப நாட்டினருக்கு
சிற்பம் செதுக்கியதாய் எத்தனை பனிப்பூக்கள்.

வானமே பூமிக்கு இறங்கியதாக பெரும்
தானமான கவின்கலைப் பனிப்பூக்கள் குளிரில்
தேனமுத அதரபானம் அருந்தி சூடேற்றும்
நாணமற்ற இணைகளிங்கு மூலைக்கு மூலை

•Last Updated on ••Thursday•, 30 •August• 2018 16:08•• •Read more...•
 

இரு-மொழி இரணைக் கவிதைகள்-3: என் கண்ணுள் இவ்வுலகம் (The World In My Eyes)

•E-mail• •Print• •PDF•

கவிதை: என் கண்ணுள் இவ்வுலகம்

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -கிட்ட வா, நண்பனே, எட்ட நிற்காமலே;
என் உள்ளத்தினுள் புகுந்து நல்லாய்ப் பார் –
சுற்றிப் பார், நண்பா; சும்மா, பணம் வேண்டாம்!

என் கண்ணின் படிக்கட்டு வழியாய் மேலேறிச் 
சென்றிடுவாய், உள்ளே, என் மனத்தின் குகைக்குள்ளே.
தெண்டித்துப் பார்க்கும் நபர்கள் எவருக்கும் 
வெண் வெளிச்சமாகும், என் உள் மனமெல்லாம்.

அதோ தெரியும் அந்தத் தம்பியைப் பார் நண்பா:
முதுகினில் புத்தகப் பொதியும் 
கையினில் துப்பாக்கியும் கொண்டு 
பையுறை உடுத்து, பனை போல் வளர்ந்து 
முகத்தின் புன்முறுவல் முன்னரே மறைந்து,
மேவி மனத்தில் நிற்கும் கடமைதனில், வெற்றி 
மேவாத விரக்தியுடன், மனமுடைந்து, சோர்ந்து,
சாவதைப் பார், அவன், பொருந்தோடி, வீழ்ந்து!

அவன் உடலை உன்னித்துப் பார், இப்போ, நண்பா:
கவசம் போல் கல்லுறுதி. பட்டுடையின் பளபளப்பு...
அந்த அவயவங்கள் அசைந்த அழகென்ன?
தங்கப் புன்-சிரிப்பென்ன? நாடியின் துடிப்பென்ன?
மின்சாரக் கண்ணும், மிளிர் கருமைச் சுருள் முடியும்...
அன்பெல்லோ கொண்டிருந்தோம், அளவின்றி, அவன்மேலே!

•Last Updated on ••Friday•, 26 •October• 2018 00:50•• •Read more...•
 

கவிதை: கடவுள்!

•E-mail• •Print• •PDF•

- முல்லைஅமுதன்

பொழுதே போகாமல்
உட்கார்ந்திருந்தார் கடவுள்.
பக்தர்களே வரவில்லை..
திருந்திவிட்டார்களா?
அல்லது அவர்களே சாமியாகிவிட்டார்களா?
தலையைப் பிய்த்துக்கொண்டார் கடவுள்.

•Last Updated on ••Tuesday•, 14 •August• 2018 13:44•• •Read more...•
 

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1.பூனையைப் புறம்பேசல்

அவரிவர் குடியிருப்புப் பகுதிகளோ
ஆற்றங்கரையோரமோ
குட்டிச்சுவரோ
வெட்டவெளியோ _
பூனைக்கு அதுவொரு பொருட்டில்லை.
அதன் சின்ன வயிற்றுக்கு 
இரை கிடைத்த நிறைவில்
கண்களை மூடிப் படுத்திருக்கும்.
உலகை இருளச்செய்யவேண்டும் 
என்று கங்கணம் கட்டிக்கொண்டா என்ன?
பூனையாக நாம் மாறவியலாதது போலவே 
பூனையும் நாமாகவியலாது.
இதில் 
இலக்கும் பிரயத்தனமும்
அடுக்குமாடிகளும் அதிகாரபீடங்களுமாக இருப்பவர்கள்
இலக்கியத்தில் தங்களை யிழந்தவர்களையெல்லாம்
‘அசால்ட்’டாகப் பூனையாக்கிப் பேசுவதால்
அம்பலமாவது இறந்துபோய்விட்டவர்களல்ல –
இவர்களே யென்றறிவார்களாக.

•Last Updated on ••Friday•, 06 •November• 2020 23:32•• •Read more...•
 

கலைஞருக்கு ஓர் இரங்கற்பா: தமிழன்னை தவிக்கின்றாள் !

•E-mail• •Print• •PDF•

கலைஞர் கருணாநிதி

தமிழ்த்தாயின் தவப் புதல்வா
தானாக எழுச்சி பெற்றாய்
அமிழ்தான தமிழ் மொழியை
ஆசை கொண்டு அரவணைத்தாய்
தமிழ் முரசாய் நீயிருந்தாய்
தமிழெங்கும் முழங்கி நின்றாய்
தவிக்க விட்டுப் போனதெங்கே
தமிழ் அன்னை தவிக்கின்றாள் !

சங்கத் தமிழ் இலக்கியத்தை
தானாகக் கற்று நின்றாய்
பொங்கிவந்த தமிழ் உணர்வால்
பொழிந்து நின்றாய் பலவுரைகள்
ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை
உள்ளம் அதால் நேசித்தாய்
உனைப் பிரிந்து வாடுகின்றார்
ஓலம் அது கேட்கலையா    !

•Last Updated on ••Thursday•, 09 •August• 2018 01:44•• •Read more...•
 

இரு-மொழி இரணைக் கவிதைகள் 2: வழியைத் தெளியக் காட்டும் (Show Me The Way)

•E-mail• •Print• •PDF•

வழியைத் தெளியக் காட்டும்

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -எனது மனத்தினிலுள்ள கோவிலிலென்றும் காவலிருக்கும் கடவுளரே,
தினமும் உம்மைப் பற்பல தடவை தலைவணங்கி நான் வேண்டுகிறேன்.

நாளாந்தம் நானும்மைப் பலதடவை துதிக்கையிலே சொல்வதெல்லாம்
வாழ்வதற்கு வழிகாட்டும், தயைசெய்து, பேரீசா, என்னும் சொல்லே.

நடப்பதுவும் நிற்பதுவும் காவுவதும் கடத்துவதும்
கடகடந்து கருமத்தில் களைப்பதுவும் துடைப்பதுவும் 
படிப்பதுவும் பார்ப்பதுவும் மேய்ப்பதுவும் மனமுடைந்து 
கடிவதுவும் வேண்டுவதும் எல்லாமே நான் செய்வேன், காட்டித்தாரும்,
அடியேனுக்கு, ஒன்றே, நீர், படிப்படியாய் – நான் போகும் பாதை ஒன்றே.

நீரே என் வழிகாட்டி, வேறே யார் என் துணைக்கு உள்ளார், ஈசா?
சீராகச் செவிசாய்த்து நீரே என் பிழையெல்லாம் திருத்திச் செல்லும்.
நேரான பாதை தனில் தவறாமல் செல்வதற்கும் சொல்லித் தந்து
கூரான சிந்தனையும் தாரீர், நீர், என் மனத்தில் குடியிருக்கும் பேரீசா.

எனது மனத்தினிலுள்ள கோவிலிலென்றும் குடியிருக்கும் கடவுளரே !
தினமும் நான் என் தலைவிதி படியே பார்த்துச் செல்ல வழி சொல்லும் !!

•Last Updated on ••Friday•, 26 •October• 2018 00:51•• •Read more...•
 

கவிதை: காயத்தால் பயிர் செய்.

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -அரசனும் மந்திரியும்
வாள்களை வீசி விளையாட
வழியெங்கும் வலிகளை
ஊமைகளும் குருடர்களும்
சுமக்க வேண்டி இருக்கிறது.

பகைவனைச் சுடுவதற்கே
சுருங்கிக் கொண்ட
சுண்டு விரல்கள்
சுருள்வாளைச் சுழற்றி
சுழலவிட்டுச்
சுருண்டு கிடக்கின்ற
சுற்றத்தானை
சுற்றி ஓடவிடும்
சூட்சுமத்தை
சூறையாடிக் கொண்டன.

குவளைத் தண்ணீரில்
குதிக்கப் பயந்தவன்
அரபுக்கடலை ஆறுதடவை
அளந்து வந்தானாம்.

•Last Updated on ••Wednesday•, 01 •August• 2018 21:03•• •Read more...•
 

கவிதை : “எண்ணச் சிறகுகள்!”

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்சிந்தனை   என்பது   பெருவானம்!  -  அதில்
சீறிப்   பறப்பது   அறிவாகும்! 
விந்தைகள்   புரிவது   அறிவாலே!  -  இதை
விளங்குவர்   இருப்பார்   நிறைவாலே!
சிந்தனை   வானில்   பறப்பதற்கு  -  எண்ணச்
சிறகுகள்   முளைப்பது   அவசியமே!
வந்தனை   செய்தே   வரவேற்போம்!  -  நல்ல
வளமிக்க   கருத்தினை  சிரமேற்போம்!

சிந்தனை வேறு ;  செயல் வேறு  -  வந்து
செறிந்திடும்   கருத்துக்கள்   பலநூறு!
வந்ததெல்   லாமரங்   கேறாது  -  அதில்
வடித்தெடுத்   தவையே   மாறாது!
இருபது   முடிந்து   நூற்றாண்டு  -  உலகு
எப்படியோ  வெல்லாம்   மாறியது!
ஒருபது   நூறின்   முன்னுள்ள  -  சில
உருப்படா   கருத்திங்கு   ஊறியது!
விஞ்ஞானத்தின்   வளர்ச்சியிலே  -  அவர்
விண்ணுல   கினிலே   பறக்கின்றார்!
அஞ்ஞானத்தில்   அழுந்தியதால்  -  இவர்
அசிங்கத்தினிலே   மிதக்கின்றார்!
ஜாதிச்சண்டை   மதச்சண்டை    -  அதில்
ஜாலப்பேச்சில்   நிலச்சண்டை!
ஏதும் வேறு   அறியாது  -  இதில்
ஏற்றம்   என்பது   கிடையாது!

•Last Updated on ••Thursday•, 02 •August• 2018 19:31•• •Read more...•
 

இரு-மொழி இரணைக் கவிதைகள் 1: பிள்ளைப் பாச இழுபறிகள்

•E-mail• •Print• •PDF•

முந்திப் பிறந்த கவிதை: OFFSPRING TENSIONS (1997)

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -Fathers and mothers
Do love their children –
Differently.

Dissimilar still
If the offspring are
Singularly.

While fathers’ love is
Farsighted and kind –
Productively,

Maternal love is
Indulgent and blind –
Invariably;

And hence that causes
Domestic tensions
Eternally!

[From ‘Life in Nutshells’ (First Prize Winner), ISBN: 1-86 188-600-4, p-22, 1997]

•Last Updated on ••Friday•, 26 •October• 2018 00:52•• •Read more...•
 

கவிதை: ஆசீர்வதிக்கப்பட்ட எல்லைகள்!

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -எல்லாக் கிளிக்கூண்டுகளையும்
எல்லாக் குருவிக்கூண்டுகளையும்
திறந்து வையுங்கள்.
அவை வானத்தின் எல்லைகளை
முகர்ந்து பார்க்கட்டும்.

எந்த உயிரினமும் சிறைகளின்
நிழலைக்கூட பார்த்துவிடக்கூடாது.

எல்லாக் குதிரைகளின் லயங்களையும்
எல்லா மாடுகளின் தொழுவங்களையும்
திறந்து வையுங்கள்.
அவை வனத்தின் எல்லைகளை
தகர்த்து பார்க்கட்டும்.

சுதந்திரக்காற்றும் சுவாசப்பையின்
எல்லைகளுக்குள் சுருங்கிவிடுவதில்லை.
சூரியனைத் தொட்டெறிக்கும்
எல்லைகளும் கட்டைவிரல்
கணக்கினுள் கனிந்துவிடுகிறது.

ஆனாலும் பதிலுக்கு
குதிரைகளின் லயங்களிலும்
மாடுகளின் தொழுவங்களிலும்
எல்லைகளைக் கடந்து வரும்
ஏழைகளை அடைத்துவிடுங்கள். 

•Last Updated on ••Tuesday•, 03 •July• 2018 13:38•• •Read more...•
 

கவிதை: ஆறாம் விரல்

•E-mail• •Print• •PDF•

- ருக்மணி -

செவிக்கும் வாய்க்கும்
பாலமாய்  இருத்திய படி
எக்காளமிட்டுச் சிரித்தனர்
யாரும் பார்க்காமல் அழுதனர்

தூர இருந்து கொஞ்சினர்
அருகில் வைத்து முத்தமிட்டனர்
காதலில்தான் ஆரம்பித்தனர்
காமத்தையே உரைத்தனர்

•Last Updated on ••Friday•, 29 •June• 2018 22:55•• •Read more...•
 

கவிதை: பாரைவிட்டுப் போனதேனோ !

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் பாலகுமாரன்

- அண்மையில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுக் கவிதை. -

குங்குமம் பொட்டும் குறுகுறுத்த பார்வையும்
எங்குமே பரந்துநிற்கும் எழிலார்ந்த கற்பனையும்
பொங்கிவரும் தமிழுணர்வும் பொறுப்பான எழுத்துக்களும்
எங்களுக்கு அளித்துவிட்டு எங்குசென்றீர் சித்தரையா   !

எழுதிக் குவித்தகை எப்படித்தான் ஓய்ந்ததுவோ
அளவின்றி  பலவற்றை ஆர்வமுடன் தந்தீர்கள்
வழுவின்றி வைகத்தில் வாழும்வகை எழுத்தாக்கி
வழங்கிவிட்டு ஏனையா மனமேங்க வைத்துவிட்டீர்        !

வெள்ளுடையில் மேடையேறி வெளியாகும் கருத்துக்களை
அள்ளிநாம் பருகிவிட ஆசையுடன் இருக்கின்றோம்
வெண்தாடி வெள்ளுடையில் வேறுயார் இங்குள்ளார்
வித்தகரே சித்தரையா விரைவாகச் சென்றதேனோ     !

•Last Updated on ••Sunday•, 10 •June• 2018 15:33•• •Read more...•
 

கவிதை: அரூபமானவை பூனையின் கண்கள்

•E-mail• •Print• •PDF•

ரிஷான் ஷெரீப்எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும்
ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும்
அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர

ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும்
மேனி வரிகளோடு
அச்சுறுத்தும் சிலவேளை அதன்
அசட்டுச் சிப்பிக் கண்கள்

இரைக்காகக் காத்திருக்கும்வேளையில்
அக் கண்களினூடு ததும்பும்
சலனமற்ற ஒற்றைச் சாதுவின் தியானம்

வேட்டை விலங்கின்
உடல் மொழியைப் பேசும்
பின்னங்கால்களில் அமர்ந்து
மீதிப் பாதங்களை ஊன்றி
நிமிர்ந்து பார்க்கையில்

ஏதேனும் யாசித்துப் பின் தொடரும்
அதன் பார்வையில்
தயை கூறக் கோரும்
கெஞ்சல் மிகைத்திருக்கும்

•Last Updated on ••Thursday•, 07 •June• 2018 01:33•• •Read more...•
 

கவிதை: நாக்குகள்

•E-mail• •Print• •PDF•

ஒரு நாக்கைப் பல நாக்குகளாகப் பெருக்கும் தொழில்நுட்பம்
தெருக்கோடியில் புதிதாகத் திறந்திருக்கும்
மனிதார்த்த மையமொன்றில் கற்றுத்தரப்படுகிறது என்று
ஒலிபெருக்கியில் அலறிக்கொண்டே போனது ஆட்டோ…
போன வருடம் இதே நாளில் சிறிய விமானமொன்று
துண்டுப்பிரசுரங்களைத் தூவிவிட்டுச் சென்றது.
தாவியெடுத்துப் பார்த்தால் அதில் தரப்பட்டிருந்த
கட்டணத்தொகையில் தலைசுற்றியது.
முற்றிலும் இலவசமென்று இப்போது சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது
Pied Piper of Hamelin பின்னே போகும் எலிகளில் ஒன்றாய்
போட்டது போட்டபடி ஆட்டோவைப் பின்தொடர்ந்தேன்.

’பலநேரங்களில் எதிர்வினையாற்றமுடியாமல்தானே இருக்கிறது –
இதில் பல நாக்குகளின் தேவையென்ன?’
என்று தர்க்கம் செய்யத் தொடங்கியது அறிவு.’
ஒரு நாக்கை வைத்துக்கொண்டே
நேற்றொன்றும் நாளையொன்றுமாய்
கருத்துரைத்துக்கொண்டிருக்கிறோம்
இதில் இருபது நாக்குகள் இருந்தாலோ……?’
என்று உறுத்தியது மனசாட்சி.
ஓங்கிக் குட்டியதில் இரண்டும் வாய்மூடி
ஏங்கியழுதபடி தத்தமது மூலையில் ஒடுங்கிக்கொண்டன.

•Last Updated on ••Tuesday•, 29 •May• 2018 02:49•• •Read more...•
 

கவிதை: சண்டைக்கு அழைக்கும் சமாதானத் தூதுவர்கள்

•E-mail• •Print• •PDF•

கையில் கிடைத்த கற்கள் சில;
கவனமாய் கூர்தீட்டிவைத்துக்கொண்ட கற்கள் சில;
உடைந்த கண்ணாடிச்சில்லுகள்,
காலாவதியாகிவிட்ட அம்மிக்குழவிகள்,
அறுந்த சங்கிலிகள்
அம்புகள் விஷம்தோய்ந்த முனைகளோடு....

அத்தனையும் சொற்களாய்
உருமாறி வெளியே தெறிக்கும் வேகத்தில்
அப்பாவி மண்டை பிளந்து
ரத்தம் பெருக்கெடுக்க,
அநியாயமா யொருவரின் விழி சிதைய,
அவனை மனைவி பறிகொடுக்க
இவளைக் கணவன் இழந்தழிய,
கொள்ளைபோகும் மனிதநேயம்.

•Last Updated on ••Tuesday•, 29 •May• 2018 02:49•• •Read more...•
 

கவிதை: நாமெனும் நான்காவது தூண்

•E-mail• •Print• •PDF•

கவிதை: நாமெனும் நான்காவது தூண்

வயிற்றுப்பிழைப்புக்கென இழவு வீடுகளில்
ஒப்பாரி வைப்பவள் ‘ருடாலி’
அப்படியும்
வாய்விட்டுக் கதறிமுடித்துக்
கூலியை வாங்கிமுடிந்துகொண்டு
வழியேகும்போதெல்லாம்
ஒவ்வொரு வீட்டின் ஆற்றொணாத் துயரமும்
அவள் மீதும் தவறாது ஒட்டிக் கொள்ளும்.
இரவு கயிற்றுக்கட்டிலில் படுத்தபடி
ஒரு கையறுநிலை மனதை சுருக்கிட்டு இறுக்க
அண்ணாந்து வானத்தை வெறிக்கும் அவள் கண்களில்
மாட்டிக்கொண்டு பதறும் காலம் உருண்டிறங்கும்
நீர்த்துளிகளாய்.
இழவுவீட்டில் அலறியழும்போதெல்லாம்
இறந்துவிட்ட கணவன்,
இரண்டு பிள்ளைகள்,
இளமை, யதன் இனிய மாலைகள்
வெள்ளம் அடித்துக்கொண்டுபோய்விட்ட தன் ஊர்மக்கள்
பள்ளத்தில் விழுந்து காலொடிந்து மடிந்த ஆட்டுக்குட்டி
மெள்ள மெள்ள அடங்கிப்போன பொன்னியின் உயிர்
எல்லாமும் உள்ளே தளும்பித் தளும்பி மேலெழும்பி
சொல்லுக்கப்பாலான பிளிறலாய் வெளிப்படும்
அவளைப் பிளந்து.

•Last Updated on ••Tuesday•, 29 •May• 2018 02:52•• •Read more...•
 

தம்பா (நோர்வே) கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -1. இருப்பில் இல்லாத கடன்.

இரண்டு வீடு
மூன்று கார்கள்
இலட்சம் இலட்சமாக பணம்
வங்கி வைப்புகளில் இருந்தும்
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்யும் 
மேலத்தேய பிச்சைக்காரர்கள் நாம்.

நேற்றய தினமும்
நேற்றய முன் தினமும்
இன்றய தினத்திலிருந்து
நேரத்தை திருடி தின்று
ஏப்பம் விட்டு விடுகின்றன..

நாளைய தினத்திலோ
நாளைய மறு தினத்திலோ இருந்து
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்ய வேண்டிய நிலை இன்று.
நாளாந்த கடனாளி மீண்டுவிடுவான்.
நாமோ ஆயுள் கடனாளியாக
சபிக்கப்பட்டவர்கள்.  

நேரம் பொன்னானது தான்,
இந்த பொன்னை மட்டும் தான்
யாராலும் திருட முடிவதில்லை.
நான் மட்டுமே திருட முடிகிற
பாதுகாப்பான வங்கிக்கணக்கு.

•Last Updated on ••Tuesday•, 03 •July• 2018 13:36•• •Read more...•
 

ஜீவா நாராயணன் (கடலூர்) கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?


1. கண்ணீரும் கலக்கட்டும்விடு

விடு  விடு
நீரை  திறந்துவிடு  - அது 
உங்கள்  காவேரியே  ஆனாலும்
அணைகளில்  இருந்து  திறந்துவிடு

மகிழ்ச்சியில்  கரை 
புரண்டோடவிடு
எங்கள்  மண்ணை 
தழுவவிடு
ஆனந்த  கண்ணீரை 
சிந்தவிடு

எங்கள்  பயிரும் 
செழிக்கட்டும்விடு
எங்கள்  உள்ளமும் 
குளிரட்டும்விடு

•Last Updated on ••Monday•, 30 •April• 2018 16:41•• •Read more...•
 

கவிதை: வரவேற்போம் வாருங்கள் !

•E-mail• •Print• •PDF•

கவிதை: வரவேற்போம் வாருங்கள் !

தைபிறந்தால் வழிபிறக்கும்
தானென்று நாம்நினைப்போம்
தைமகளும் சேர்ந்துநின்று
சித்திரையை வரவேற்பாள்
பொங்கலொடு கிளம்பிவரும்
புதுவாழ்வு தொடங்குதற்கு
மங்கலமாய் சித்திரையும்
வந்துநிற்கும் வாசலிலே  !

சித்திரை என்றவுடன்
அத்தனைபேர் மனங்களிலும்
புத்துணர்வு பொங்கிவரும்
புதுத்தெம்பு கூடவரும்
எத்தனையோ மங்கலங்கள்
எங்கள்வீட்டில் நிகழுமென
மொத்தமாய் அனைவருமே
முழுமனதாய் எண்ணிடுவார் !

•Last Updated on ••Friday•, 13 •April• 2018 13:40•• •Read more...•
 

கவிதை: பருத்தித்துறைக் கடற்கரையில்...

•E-mail• •Print• •PDF•

- கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe)

- சிங்கள மொழியில் தான்  எழுதிய இக்கவிதையினை  ஆங்கில வடிவில் அனுப்பியிருந்தார் கத்யானா அமரசிங்க. அதனைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன். அண்மையில் அவரது வடக்குக்கான பயணத்தில் பருத்தித்துறைக்கடற்கரையில் அவரடைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. தமிழ் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை நன்கு உணர்ந்துகொண்ட சிங்கள எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்க. சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தற்போது லக்பிம பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.  - பதிவுகள் -


 


நான் அங்கிருந்தேன் கண்ணீர்த்துளியின் மறு முனையில்
துயரக் காற்றினால் தாக்கப்பட்ட மறுமுனை
ஆழமான நீலக் கடலும் கூட
நெஞ்சை வலிக்கும் கதையினை அமைதியாகக்
கூறும்.

வீசிக்கொண்டிருந்த புயல்கள்
இளம் பறவைகளை அவற்றின்
அன்னையரிடமிருந்து பிரித்திருந்த
நேரமொன்றிருந்தது.

•Last Updated on ••Friday•, 06 •April• 2018 13:17•• •Read more...•
 

குழந்தைகளை எப்படி மாற்றுவது

•E-mail• •Print• •PDF•

கவிதை படிப்போமா?

அவ்வளவு தூய்மை
வழிகிறது குழந்தைகள் கண்ணில்
தடுமாறுகிறார்கள் தந்தைகள்

எப்படி இந்த மாசுபட்ட உலகை
அவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது

அவர்களின் நுரையீரல்
பிரம்ம முகூர்த்தத்து ஓசோனால்
நிரம்பி வழிய வேண்டும்

காற்றின் நறுமணம் கற்பழிக்கப்பட்டதை
அந்தப் பிஞ்சுகளுக்கு எப்படிச் சொல்வது

அவர்களின் கைகளில்
வழிய வழிய பூக்கள் பூக்க வேண்டும்
ரத்தம் வழியும் துப்பாக்கிகள்
எதற்காக என்று அவர்கள் கேட்டால்
என்ன சொல்வது

•Last Updated on ••Friday•, 06 •April• 2018 12:25•• •Read more...•
 

அழுகிறதே அறிவுலகு !

•E-mail• •Print• •PDF•

ஸ்டிபன் ஹார்கிங்ஸ்

ஊனநிலை வந்தாலும் ஊக்கமதை இழந்திடாமல்
தானெடுத்த முயற்சிதனில் சாதனையைப் படைத்துநின்ற
இங்கிலாந்தின் விஞ்ஞானி இணையில்லா ஸ்டீபன்தனை
எல்லோரும் வியந்துநின்று இதயத்தால் வாழ்த்துகிறார் !

பேசாத நிலையினிலும் பெருங்கருத்தை வெளியிட்டார்
பேராசிரியாய் இருந்து பெரும்பொறுப்பை நிருவகித்தார்
பெருங்குறைகள் தனக்கிருந்தும் பேதலிக்கா மனமுடனே
பேரண்டம் தனையாய்ந்து பெருமைதனைப் பெற்றுநின்றார் !

•Last Updated on ••Thursday•, 22 •March• 2018 20:51•• •Read more...•
 

தம்பா (நோர்வே) கவிதைகள்: ஏட்டிக்குப் போட்டி, சிறை ஒன்று அடிமைகள் வேறு.

•E-mail• •Print• •PDF•

1. ஏட்டிக்குப் போட்டி.

- தம்பா (நோர்வே) -பாலைவானத்து குருமணலை
நீர்வற்ற வறுத்து
குளிசைகளாக பிணைந்து
வறண்ட தொண்டைக்கு
தாகசாந்தி செய்யும்
வைத்திய வைரியர் நாம்.

எதிர்த்தவன்  வீட்டு
முகடு எரிவதை
ரசித்து குதிக்கிறான்
தன் வீட்டு
அத்திவாரம் தகர்வதை மறந்து.

பற்ற வைத்ததவன்
தொற்றவைத்து பதறவைக்க
தகர்ந்தவன் தடுமாறுகிறான்
தகடு வைத்து  தவறிழைக்க.

•Last Updated on ••Tuesday•, 13 •March• 2018 16:35•• •Read more...•
 

இன்றல்ல நேற்றல்ல....

•E-mail• •Print• •PDF•

இன்றல்ல நேற்றல்ல....’வனஜா, கிரிஜா – வளைஞ்சா நெளிஞ்சா….”
என்று அந்தக்கால திரைப்படமொன்றில் நாயகன் வாயசைக்க
படுஜாலியாகப் பாடிய ஆண்குரல்
நட்டநடுவீதியில் அந்தப் பெயருடைய பெண்களை (மட்டுமா)
முண்டக்கட்டையாக்கப்பட்டதாய் கூனிக்குறுகவைத்தது.

”கலா கலா கலக்கலா…” என்று கேட்டுக் கேட்டு

இன்னொரு குரல்
பகலில் வெளியே போகும் பெண்களையும்
இடைமறித்துக் கையைப் பிடித்து இழுத்து
Eve-torturing செய்துகொண்டேயிருந்தது பலகாலம்.

’நான் ரெடி நீங்க ரெடியா?’ என்று 

பெண்குரலில் பாடவைக்கப்பட்ட வரி
நடுரோடில்அழைப்புவிடுக்கப்பட்டு 

அவமானத்தில் பொங்கியெழுந்த பெண்களைப்
போலிகளாகப் பகடிசெய்து சிரித்தது.

‘ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயன் மாரிமுத்து’ 

என விளித்து
ஊருக்குள்ளே வயசுப்பொண்ணுங்க சௌக்யமா
என்று விசேஷமாக விசாரித்த நாயகன்
ஹாசினிப்பெண்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் படத்தில்
தன் நண்பர்களோடு, ஊர்ப்பெண்களையெல்லாம்,

•Last Updated on ••Wednesday•, 31 •January• 2018 18:23•• •Read more...•
 

கவிதை: மின்னுவதெல்லாம்.....

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -சாவே வாழ்வான போதினிலும்
குண்டுமழையில் கவசக் குட்டையாகி
மக்களை காத்தவனுக்கு
கைகளையும் கால்களையும்
காணிக்கையாக பெற்றுக் கொண்ட போர்
தண்டனையாக
ஒரு வேளை உணவுக்காக
கை ஏந்தி நிற்கவைக்கிறது.

`பெடியள்´, `போராளி´ என
பல்லாக்கு தூக்கி
போற்றிப் பாடியவன்,
முடம்
பரதேசி
பாரச்சுமை என
ஒதுக்கி ஓடுகிறான்.

•Last Updated on ••Wednesday•, 31 •January• 2018 07:31•• •Read more...•
 

பொங்கலோ பொங்கல்!

•E-mail• •Print• •PDF•

பொங்கலோ பொங்கல்!

தைதரும் வளமெனுந் தங்கநாள் பொங்கல்
தமிழ்ப்பெருஞ் சந்ததிச் சார்பிடும் பொங்கல்
கையிலே அறுவடைக் களம்தரும் பொங்கல்
காலமெல் லாம்பிணி காத்திடும் பொங்கல்
மைவரை உலகமாய் மாண்பிடும் பொங்கல்
மரபெனுஞ் செந்தமிழ் வார்த்திடும் பொங்கல்
செய்யவார் வெள்ளையர் தேசமும் பொங்கல்
சிறப்பிடும் நன்றியே!  பொங்கலோ பொங்கல்.

வானுயர் தமிழ்மர பென்றுவை யத்துள்
வரையறை செய்துஇன் னுலகெலாம் பொங்கல்
தேனுயிர் தமிழருந் திருவரங் காத்து
தேசமெல் லாமொடும் அரசிடும் பொங்கல்
மானுயிர் வாழ்வெனும் மானமும் தண்ணார்
மணித்தமிழ் கொண்டுமே வாழ்த்திடும் பொங்கல்
ஈனமுஞ் சதியொடும் ஈட்டிகொண் டானாய்
எழியர்போய் வந்ததே பொங்கலோ பொங்கல்

•Last Updated on ••Saturday•, 13 •January• 2018 19:25•• •Read more...•
 

உளம் மகிழப் பொங்கிடுவோம் !

•E-mail• •Print• •PDF•
- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -
மனங்கவரும் மார்கழியில்
மகத்தான நாட்கள்வரும்
இந்துக்கள் கிறீத்தவர்கள்
எல்லோரும் பங்குகொள்வர்
வைஷ்ணவமும் சைவமும்
வாழ்த்திநிற்கும் திருவெம்பா
மார்கழியின் முக்கியமாய்
மனமாசை அகற்றிநிற்கும் !

ஒளிவிழா எனும்பெயரால்
உத்தமராம் யேசுபிரான்
வழிநிற்போர் அனைவருமே
வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
பீடுடைய மாதமாய்
மார்கழியும் அமைந்துதுநின்று
பெருமகிழ்சி வருவதற்கு
தைதனக்கு வழிகொடுக்கும் !
•Last Updated on ••Saturday•, 13 •January• 2018 19:12•• •Read more...•
 

ஆகாயக் கடல்!

•E-mail• •Print• •PDF•

எத் திசையிலும் எப்போதும்
சுழன்றடிக்கலாம் காற்று
அதன் பிடியில்
தன் வேட்கைகளையிழந்த
ஓருருவற்ற வானம்
மேகங்களையசைத்து அசைத்து
மாறிக் கொண்டேயிருக்கிறது

விதவிதமாக வர்ணங்களைக் காட்சிப்படுத்தும்
தொடுவானத்தினெதிரே
ஒற்றை நிறம் நிரப்பிப் பரந்து கிடக்கிறது கடல்

•Last Updated on ••Monday•, 01 •January• 2018 08:36•• •Read more...•
 

புத்தாண்டே நீ வருக !

•E-mail• •Print• •PDF•

2017-2018

புத்தாண்டே  நீவருக
புதுத்தெம்பை  நீதருக
எத்திக்கும் நடக்கின்ற
இடர்களைய  நீவருக
சொத்துக்காய் சுகத்துக்காய்
சூழ்ச்சிகளைச் செய்வாரின்
புத்தியினை மாற்றிவிட
புத்தாண்டே நீவருக !

அரசியலில் குழப்பங்கள்
அத்தனையும் அறவேண்டும்
ஆன்மீகம் மக்களது
அகமதனில் அமரவேண்டும்
குறைபேசும் குணமெல்லாம்
குழியதனுள் விழவேண்டும்
குவலயத்தில் அமைதிவர
குதித்துவா புத்தாண்டே !

•Last Updated on ••Thursday•, 07 •June• 2018 01:16•• •Read more...•
 

நெடுங்கவிதை: ஈரோடு எனக்குத் திருத்தலம்

•E-mail• •Print• •PDF•

பேரோடும் புகழோடும்
பெரும்பணி ஆற்றும்
சீரோடும் சிறப்போடும்
சிந்தனையைத் தூண்டும்
ஈரோடு மக்கள்
சிந்தனைப் பேரபையின்
உலகத்தமிழ்ப் படைப்பரங்கில்
உங்கள்முன் நிற்கிகிறேன்
பிச்சினிக்காடு  நான்
பிறந்தது தமிழ்நாடுதான்
எனினும் எனக்கு
சிங்கப்பூர்
இரண்டாவது தாய்நாடு
தமிழ்நாடு

•Last Updated on ••Saturday•, 30 •December• 2017 13:44•• •Read more...•
 

கல்லறை உயிர்ப்பு!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

நீ
சிந்திச்செல்லும்
கண்ணீருக்காய்..

இன்னமும்
உயிர்த்திருக்கிறேன்..

கல்லறைக்குள்
நான்

 

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Friday•, 29 •December• 2017 16:55••
 

இரா.இலக்குவன் கவிதைகள்: குமாரபுரம் ரயில்வே ஸ்டேசன்! தாமிரபரணி புராணம்!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

1. குமாரபுரம் ரயில்வே ஸ்டேசன்!

கு.அழகிரிசாமியின்
குமாரபுரம்
ரயில்வே ஸ்டேசனுக்குக்
காவிய குலுங்கலோடு
வந்து நின்றது
இரயில் வண்டி.

•Last Updated on ••Friday•, 29 •December• 2017 16:56•• •Read more...•
 

கவிதை: தொப்புள் கொடியும் முக்கணாம் கயிறும்.

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -

"வா மகனே வா
உன் வருகையே
எமக்கு சுக்கிர திசையாகும்.~

"வேண்டாம் பெற்றவரே வேண்டாம்,
ஒன்றுவிட்ட அகவையை
மூலதனமாக்கி மூச்சிரைக்க வைக்காதீர்."

"கந்து வட்டியும் காணா வட்டியும்
குலைந்து போகுது.
போட்டதை எடுத்ததுமில்லை.
பல்மடங்காகி பெருகியதுமில்லை.
வா மகனே வா"

" உயிர் ஒன்றும் பணமல்ல
முதலீடு செய்வதற்கு,
உணர்வுகள் ஒன்றும் பொருளல்ல
விற்பனைக்கு வைப்பதற்கு,
மகிழ்ச்சி ஒன்றும் கணக்கல்ல
லாப நாட்டம் பார்ப்பதற்கு."

"ஊருக்கும்  உலகுக்கும்
தனயனின் வளச்சியை
பறைச்சாற்றும் மகிழ்வறிவாயோ?"

"உதயத்தில் உதிர்ந்த
லச்சோபலட்ச கணங்களில்
என்வாழ்வும் என்மகிழ்வும்
அறிந்த கணமேதுமுண்டோ?

•Read more...•
 

சிந்தனை கிழிக்கும் பேனா!

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

வந்தனை செய்ய  வேண்டும்
அந்தமின்றியென்னை  எழுத  வைக்கும்
அந்தரங்கமேதும்   இல்லை   பகிரங்கம்.
அந்தரிப்போர்  யாருக்கும்  குரலெழுப்பும்.
இந்தளவு    என்றில்லையெவ்வளவும்   எழுத
சிந்தனை   கிழிக்கும்  பேனா.

உந்துதலீயும் பிறர்  கருத்துகள்.
எந்திர    வில்   போன்றது.
ஐந்தெழுத்துத்   தொடங்கி   ஆதரவு
கொந்தளிக்கும்  பிரச்சனைகள்   அரிய
சந்தக்  கவிகள்  என்று  எத்தனையோ..
சிந்தனை  கிழிக்கும்   பேனா.

•Last Updated on ••Saturday•, 16 •December• 2017 14:10•• •Read more...•
 

இருந்து .....இறந்தோம் !

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

வெளுத்துப்  பெய்யும்  மழையின்  குரல்
இருட்டில்  என் கனவை  விழுங்கிற்று
அகலும்  அறிகுறியில்லை
போன பொழுதில்  பெய்தபோது
அம்மா அலுப்பின்றி  கிடந்தாள்
அருவமாகிப்  போன  அவளை
பெருமழைதான்  தின்று போட்டது
எங்களுக்கிடையேயிருந்த  காலம்
வலியைத்  துடைக்கத்  தவறியது
சலசலத்துப்  பொங்கிச்  சீரும்  நீர்
வாசலில்  பூதம் போல்  பெருகியது
என்  கண்ணீரையும்  வறுமையையும்  போக்கி
என்  அரவணைப்புக்குள்  இருந்த  உரிமை !
வெள்ளத்தின் பேரலைக்குள் நழுவும்
அவள்  இறுதி  உயிர்மூச்சு
மெல்லிய  அவள்  குரல்
தேக்கு மரக்கதவோரம்  பனித்துளிபோல் 
அடங்கி  முடங்கிற்று

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 14:08•• •Read more...•
 

மழயிசை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

மழயிசை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) கவிதைகள்!

1.
லேசான பட்டாம்பூச்சியைப் போல சிறகடித்தும் மகிழ்வினூடே
சிரித்துத் திரிந்த
அந்த நொடிகள்
நெருப்பினூடே இரும்பை இலக்குவது போல உருகிச் சிதைந்தது.
பதிலியை ஏற்காத
வினை தவிக்கிறது.
வலி தாங்க இயலாமல்
வெள்ளம் பெருக்கெடுக்க
கண்கள் குளமாக...
ரணத்தின் உச்சத்தில்
மனம் தற்கொலை செய்ய...
பிரிவின் இறுதியில்...
உயிர் மீட்டுகிறது ஆதிக்காதலின் நினைவுகளை!!"
நிறைவுற்றது காதற்கிளவி!!!

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 14:02•• •Read more...•
 

சிவசக்தி (புதுவை) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. மீண்டும் நான்..

வாழ்வில் ஏதோ தேடி
கிணற்றை எட்டிபார்த்தேன்
தண்ணீர் கூட்டம்
அசைவால் அதிர்ந்தது
சிறுகல்லை வீசினேன்
சிற்றலை சிரித்தது
அமைதியானது..

என் மௌனம்
நிலையில்லாமல் நின்றது
கடலின் மடியில்
அமர்ந்தேன்
அலையின் வேகம்
குறையவில்லை
என்னைபோல்
கரையில் கூட்டம்
எதை தேடுகிறது
சற்று துணிந்தேன்
நீந்தக் கற்றுகொள்ள
கடலில் குதித்தேன்
அலை கரை ஒதுக்கியது

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 13:58•• •Read more...•
 

எம் . ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -

1. வசந்தமாய் மாறும் !

ஆண்டவன் படைப்பிலே அனைத்துமே அற்புதம்
ஆயினும் மனிதனோ அனைத்திலும் அதிசயம்
வேண்டிய அனைத்தையும் விரைவினில் பெற்றிடும்
வித்தைகள் அவனிடம் சொத்தென இருக்குதே !

மனிதனைப் படைப்பினில் உயர்வெனக் கருதிட
மனிதனின் செயல்களே காரணம் ஆயின
புனிதனாய் மனிதனும் புவிதனில் இருக்கையில்
மனிதனின் மாண்புகள் மாட்சிமை ஆகிடும் !

தானமும் செய்தான் தவமும் செய்தான்
ஈனமாம் காரியம் எண்ணிலாச் செய்தான்
யானது என்னும் ஆணவக் குப்பை
போனது போலத் தெரியவே இல்லை !

குப்பைகள் குவிந்திடின் குணமெலாம் சிதறும்
தப்பிதமாகவே செயல் எலாம் அமையும்
எப்பவும் மனநிலை இறுகியே இருக்கும்
எதை நினைத்தாலும் பதட்டமே பெருகும் !

விருப்புகள் வெறுப்புகள் நிறையவே இருக்கும்
வேதனை சோதனை நாளுமே குவியும்
மனமதில் குப்பையாய் இவற்றினைச் சேர்த்தால்
வாழ்கின்ற வாழ்வு வதங்கியே போகும் !

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 13:53•• •Read more...•
 

கவிதை: கத்தலோனியா மூதாட்டி (THE OLD WOMAN OF CATALONIA: ):

•E-mail• •Print• •PDF•

- தீபச்செல்வன் -

தங்க நகரமெங்கும்
இறைதூதர்கள் பொரகோ மலர்களைத் தூவ
சுதந்திர தேசப் பிரகடனம் நிகழ்த்தப்படுகையில்
புன்னகை நிரம்பி இருதயம் வெடித்த அந்த மூதாட்டி,
முன்பொருநாள், 'மகளே! கண்ணுக்கு தெரியாத
யுத்தத்தினால் நாம் நிர்மூலம் செய்யப்படுகிறோம்!' என
தன் பிள்ளைகளுக்குச் சொன்னாள்.

'எம்மிடம் இருப்பது பிரிக்க முடியாத நாட்டுக்கான சாசனம்' என
ஸ்பெயின் பிரதமர் தொலைக்காட்சியில்  உரையாற்றுகையில்
பர்சலோனா நகரைப்போல பளபளக்கும் கன்னங்களுடன்
துடிதுடிப்பாக திரியும் அந்த மூதாட்டி
'மகனே! நமது கூழாங்கற்களை  திருடி ருசிப்பட்டவர்கள்
சுதந்திரத்தை பிரிவினை என்று நம் விழிகளை மறைப்பார்கள்!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 09:08•• •Read more...•
 

கவிப்புயல் இனியவன் கவித்துளிகள்!

•E-mail• •Print• •PDF•

கவிப்புயல் இனியவன் கவித்துளிகள்!

1. காதலுடன் பேசுகிறேன்

காணாமல் போனால் ......
கண்டுபிடித்துவிடலாம்......
உனக்குள் காணாமல்......
போன என்னை எப்படி.....
கண்டுபிடிப்பாய்.....?

காதலை மறைக்க......
முடியாது.......
கழுத்தில் உள்ள......
தாலியை சேலையால்....
மறைப்பது போல்....!

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 09:05•• •Read more...•
 

தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -1. நினைக்கின்றோம் இதுநாள்!

கார்முகிலின் கார்த்திகையிற் கஞ்சநிமிர் வஞ்சிநிலம்
கற்பெனவே பெற்ற குரலாய்
போர்அனைய வெஞ்சுருளில் வீழ்ந்துவி;டச் சொந்தமொடு
பொங்கிவருந் தீயின் அலையாய்
ஊர்உலகம் பார்த்துறவே ஓலமுடன் வீழ்சடலம்
உள்ளதனை உப்பும் நினைவாய்
மார்அடித்து வாதையுற மன்றுருக யாம்பதறி
வைத்துஅழு கின்றோம் அறிவீர்!

நீள்மடியில் ஓர்கணமும் நெஞ்சுருகும் வஞ்சநிலை
நீதியெனுஞ் சார்பு நிலையில்
கோள்பரவ நின்றதி(ல்)லை கூடியொரு வாழ்வுடனார்
கொஞ்சுமுல காற்றும் படியே
தாள்பரவ வள்ளுவனார் சாற்றிவிடும் மன்நெறியில்
தங்கநிறை கொண்ட இனமாய்
ஏழ்உலகும் வார்ப்பெடுத்து இன்னுருவாய் நீதிநெறி
இட்டுவலங் கொண்டார் இதுநாள்!

ஏறியுயிர் குண்டழுத்தி ஏகமுடன் போர்வழுதி
இன்னுயிரும் போன தறிவோம்
காறியுமிழ் கின்றதொரு கஞ்சலெனப் போயகலாக்
கண்ணியமுங் கண்டு மகிழ்ந்தோம்!
ஊறுசெய நின்றதிலை உண்மையெனப் போற்றுமொரு
உள்ளஇனங் காண விளைந்தோம்!
சாறுமொரு வாகைநிலச் சத்தியமும் வழுவாத
சாகரமாய் எல்லவரும் வாழ நினைத்தோம்!

•Last Updated on ••Monday•, 04 •December• 2017 18:16•• •Read more...•
 

மொழிபெயர்ப்புக் கவிதை - சிங்களக் கவிதை: கவிதை: உன்னிடம்தான் தரித்திருக்கிறது மகளே எம் சுவாசக் காற்று!

•E-mail• •Print• •PDF•

- எம்.ரிஷான் ஷெரீப்

- செய்தி – கெக்கிராவ கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலையொன்றில்,  பட்டினியின் காரணமாக வாந்தியெடுத்த 14 வயது மாணவியை, கர்ப்பிணியென பழி சுமத்தி அப் பாடசாலையிலிருந்து நீக்கி விட்டார் பெண் அதிபர். கல்வியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த அந்த ஏழைச் சிறுமி தூய்மையானவள் என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் பின்னர் தெரிய வந்தது. -


இரவு பகலாகக் கூலி வேலை
தினம் ஒரு வேளை  மட்டுமே உணவு
மகளுக்குக் கல்வியளிக்கப் பாடுபட்டு
வாடி வீழ்ந்தோம் நாம் கைகால் வலுவிழக்க

கல்வி மாத்திரமே அவள் சூடியிருக்கும் மாலை
அதுவே எமதும் ஒரே கனவு
அக் கனவுக்கு வேட்டு வைத்ததில்
சிதறியது முத்து மாலை
இனி எவ்வாறு கோர்ப்போமோ அதை
ஜீவிதம் எனும் நூலிழையில்

சொற்களால் பின்னப்பட்ட புத்தகங்களின்
பக்கங்கள் கிழிந்து கிடக்கின்றன
சொற்களை உச்சரித்து வாசிக்கும்
உதடுகள் பூட்டப்பட்டிருக்கின்றன
வழமை போல தலையுயர்த்திப் பார்க்கவியலா நிலையில்
வீழ்ந்தழுகிறாள்  எமது மகள்

•Last Updated on ••Saturday•, 04 •November• 2017 13:28•• •Read more...•
 

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

1. அன்பின் விலை

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

யாருமே சொல்லாதவொரு காரோப்ளேன் கதை சொன்னான் –
பேரானந்தமாயிருந்தது குழந்தைக்கு.
சீராட்ட அதன் கையில் சில
புலிப்பஞ்சவர்ணக்கிளி யளித்தான்.
கலகலவென்று கைகொட்டிச் சிரித்தது பிள்ளை.
விண்ணோக்கிப் பாயுமொரு ஆறு பாரு
என்று காட்டினான்.
கண்விரியக் கண்டுகளித்தது குட்டிமனுஷி.

குழந்தைக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது.
யார் தனக்கு சாக்லேட்டுகள் தந்தாலும்
அதில் அதிகம் அவனுக்கென எடுத்துவைத்து
குறைவாய் தன் வாயில் போட்டுக்கொண்டது.
அவனுடைய தொண்டைக்குள் இறங்கும் இனிப்புச் சுவை
குழந்தை வாயில் அமுதமாய் ருசித்தது.

அவன் ஒரு புகைப்படக்காரன்.
புதுப்புது கதை சொல்லி பிள்ளைக்கு சிநேகக்காரனானான்.
படிப்படியே பிள்ளையின் உலகமே அவனாகிப் போனதை
அவன் அறிவானோ, அறியானோ…..

’உயிர்ப்பின் சாரம்’ என்ற தலைப்பில்
அகில உலக புகைப்படப் போட்டிக்கு அனுப்ப வாகாய்
குழந்தையைப் பலகோணங்களில் படம்பிடித்துக்கொண்டான்.

•Last Updated on ••Tuesday•, 24 •October• 2017 07:27•• •Read more...•
 

தீபாவளிக் கவிதை: தீபத் திரு நாளில்

•E-mail• •Print• •PDF•

தீபத் திரு நாளில்......
தீய எண்ணத்த எரித்துவிடு.....
தீய செயலை தூக்கியெறி......
தீய பார்வையை மறைத்துவிடு.....
தீய பேச்சை துப்பியெறி......
தீய தொழிலை செய்யாதே......!

•Last Updated on ••Wednesday•, 18 •October• 2017 17:53•• •Read more...•
 

தீபாவளிக் கவிதை: நல் தீபாவளி !

•E-mail• •Print• •PDF•

பட்டாடை உடுத்திடுவோம்
பட்சணமும் உண்டிடுவோம்
மத்தாப்புக் கொழுத்திடுவோம்
மனமகிழ இருந்திடுவோம்
தப்புக்கள் தனைமறப்போம்
தாழ்பணிவோம் மூத்தோரை
எப்பவுமே இறைநினைப்பை
இதயமதில் இருத்திடுவோம் !

•Last Updated on ••Tuesday•, 17 •October• 2017 18:27•• •Read more...•
 

கவிதை: 1. அப்பாவின் பெண்ணே

•E-mail• •Print• •PDF•


1. அப்பாவின் பெண்ணே

உன்னிடம் நான்
சொன்னதில்லை மகளே!!

என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என...

உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
வார்த்தையில் வடிக்காது
மெளனமாக இரசிக்கிறேன்...

உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்
என் கண்களுக்குள்
நீ மட்டுமே தெரிந்தாய்...

•Last Updated on ••Tuesday•, 17 •October• 2017 18:17•• •Read more...•