••Sunday•, 07 •February• 2021 09:35•
??- ஊர்க்குருவி -??
கலை
"பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது" - கவிஞர் வைரமுத்து -\
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க - எஸ்.ஜானகி - https://www.youtube.com/watch?v=eXP2G8ocziU
மானுடப்பிறப்பில் இந்தக் காதல் உணர்வு இருக்கிறதே. இது ஒரு விசித்திரமான அனுபவம். இது ஏன் வருகின்றது, எப்படி வருகின்றது என்பது தெரியாது. ஆனால் வந்தால் இது மானுட வாழ்க்கையையே ஆட்டிப்படைத்து விடுகின்றது. இப்பாடலும் அதைத்தான் கூறுகின்றது.
நடிகர் திலகமென்றாலே உணர்ச்சிகளைக்கொட்டி, வசனங்களைக்கொட்டி நடிக்கும் அவரது திரைப்படங்கள்தாம் நினைவுக்கு வரும். வசனங்களைக்குறைத்து, முகபாவங்கள், உடல் அசைவுகள் மூலம் சிறப்பாக அவரது நடிப்புத்திறமையினை வெளிக்கொணர்ந்திருப்பார் இயக்குநர் பாரதிராஜா இத்திரைப்படத்தில். அவ்வகையில் மறக்க முடியாத சிறந்த திரைப்படமாக இத்திரைப்படம் இரசிகர்கள் உள்ளங்களில் நிலைத்து நிற்கின்றது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத கானங்கள்தாம்.
பாரதிராஜா, இளையராஜா & வைரமுத்து கூட்டணி தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு கூட்டணி. தமிழ் சினிமாவில் கிராமத்தைத் துல்லியமாக, உயிர்த்துடிப்புடன் காட்டிய கூட்டணி. சமூகத்தின் பல்வேறு சீர்கேடுகளையும் தோலுரித்துக்காட்டியவை பாரதிராஜாவின் திரைப்படங்கள். ஆனால் அவற்றைக் காதலை அடிநாதமாகக்கொண்டு வெளிப்படுத்தியிருப்பார். அதனால்தான் அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்களும், பாடல்களும் நெஞ்சில் எப்போதும் வளைய வந்துகொண்டிருக்கின்றன.
•Last Updated on ••Sunday•, 07 •February• 2021 09:54••
•Read more...•
••Thursday•, 21 •January• 2021 20:07•
??- வி. ரி. இளங்கோவன் -??
கலை
இலங்கை வானொலியில் நீண்ட காலம் பணியாற்றிய கலைஞர் அ. சிறிஸ்கந்தராசா கனடாவில் (20 – 01 – 2021) காலமானார். எமது நீண்டகாலக் குடும்ப நண்பர் சிறிஸ்கந்தராசாவின் மரணம் வேதனை தருகிறது. அறுபதுகளின் பிற்பகுதி முதல் அவரை நன்கறிவேன். அன்று வானொலியில் மாதமொருமுறை யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம் சார்பாகக் கிராமசஞ்சிகை நிகழ்ச்சியை எனது சகோதரர் த. துரைசிங்கம் தயாரித்தளிப்பதுண்டு. அந்நிகழ்ச்சியில் அன்று மாணவனான நானும் பங்குபற்றியதுண்டு. அவ்வேளை அந்நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக விவியன் நமசிவாயம் கடமையாற்றினார். அவருடன் தயாரிப்பாளராகச் சிறிஸ்கந்தராசா பணியாற்றினார்.
அந்தக் காலங்களில் கொழும்பு செல்லும் வேளைகளில் அவரின் நாரங்கன்பிட்டி வீட்டிற்குத் தவறாது செல்வதுண்டு. பின்னர் எழுபதுகளில் கிராம சஞ்சிகை - கிராம வளம் நிகழ்ச்சிகளுக்கான ஒலிப்பதிவுகளை வடபகுதிக் கிராமங்கள் தோறும் ஒழுங்குசெய்து அவருடன் பயணித்த நாட்கள் நினைவிலுண்டு. தீவுப்பகுதி முதல் வடபகுதியின் குக்கிராமங்கள் தோறும் சென்று நாட்டுபுறக் கலைஞர்களின் திறமைகளை - நிகழ்வுகளை ஒலிப்பதிவு செய்திட அவருக்கு உதவியதும் மறக்கமுடியாத நினைவுகளே..!
•Last Updated on ••Thursday•, 21 •January• 2021 20:22••
•Read more...•
••Friday•, 01 •January• 2021 23:52•
??- ஊர்க்குருவி -??
கலை

"தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன். ஒரு தூதுமில்லை. உன் தோற்றமில்லை. கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை. நெஞ்சம் மறப்பதில்லை. அது தன் நினைவை இழக்கவில்லை. நான் காத்திருந்தேன். உன்னைப் பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை. என் கண்களும் மூடவில்லை." - கவிஞர் கண்ணதாசன் -
'யதார்த்ததிலிருந்து தனிமைப்படுத்தல்' (Quarantine from Reality) 'யு டியூப் சான'லிலிருந்து நான் கேட்ட, இரசித்த இக்காலத்தால் அழியாத கானத்தை நீங்களும் ஒரு முறை கேட்டுப்பாருங்களேன். பாடகி அனு ஆனந்த் சிறப்பாகப் பாடியுள்ளார். காணொளியின் இறுதியில் பி.பி.ஶ்ரீனிவாசின் குரலில் பாடகர் பத்மநாபன் பாடுவார். அதுவும் இக்காணொளியின் சிறப்பு.
•Last Updated on ••Saturday•, 02 •January• 2021 00:54••
•Read more...•
••Thursday•, 01 •October• 2020 12:15•
??- ஊர்க்குருவி -??
கலை

வாழ்வினை ஒவ்வொரு நாளும் தென்புடன், நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதற்குக் கடந்தவற்றை நினைத்து வாடக் கூடாது. ' இன்று புதிதாய்ப்பிறந்தோம்' என்று புத்துணர்ச்சியுடன் மகாகவி பாரதியின் கூற்றுக்கேற்ப வாழ வேண்டும். அருமையான , ஆரோக்கியமான ஆலோசனை. பாரதியின் அந்தத் துடிப்பு, கருத்தும் மிக்க ஒரு திரைப்படப்பாடல்தான் 'புதிய வானம்! புதிய பூமி' பாடலும். கவிஞர் வாலியின் கருத்தாழம் மிக்க, ஆரோக்கிய உணர்வினையேற்படுத்தும் சக்தி மிக்க பாடல். 'உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே', 'புதிய வானம்! புதிய பூமி! எங்கும் பனி மழை பொழிகிறது! நான் வருகையிலே என்னை வரவேற்கவண்ணப்பூ மழை பொழிகிறது!' என்று எண்ணியவாறே ஒரு நாளை எதிர்நோக்குங்கள். எவ்வளவு புத்துணர்ச்சி மிக்க அணுகுதல் அது. அதுதான் இந்தப்பாடலின் சிறப்பு, அதுவே என்னை இப்பாடல் மிகவும் கவர்ந்ததற்குக் காரணமும் கூட.
•Last Updated on ••Thursday•, 01 •October• 2020 12:50••
•Read more...•
••Sunday•, 27 •September• 2020 22:46•
??- ஊர்க்குருவி -??
கலை
அன்றிலிருந்து இன்று வரை இசையென்னும் தண்ணொளியை இசை மழையாகப் பொழிந்துக்கொண்டிருந்த இளைய நிலா தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. பாட்டு, நடிப்பு என்று தன் பங்களிப்பைக் கலையுலகுக்கு நல்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். அந்தபுன்னகை தவழும் முகமும், கேட்பவர் இதயங்களை வருடிச் செல்லும் குரலும் மீண்டும் மீண்டும் நினைவிலாடுகின்றன. கூடவே அந்தக் காணொளியும் நினைவிலாடுகின்றது. மருத்துவ நிலையத்துக்குத் தன்னைத் தனிமைப்படுத்தச் செல்லும்போது, வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்தாமல் , மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்பாமல் செல்வதாகக் கூறிய அந்தக் காணொளியும் நெஞ்சில் துயரத்தை ஏற்படுத்துகிறது.
யாழ்ப்பாணத்தில் நான் பார்த்த ஒரேயொரு தெலுங்குத் திரைப்படம் சங்கராபரணம். யாழ் ஶ்ரீதர் திரையரங்கில் பெரும் வரவேற்புடன் ஓடிய திரைப்படம். அத்திரைப்படத்தில் பாடிய பாடல்களுக்காகப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த பாடகருக்கான தேசிய விருதினை முதன் முறையாகப் பெற்றாரென்பதும் குறிப்பிடத்தக்கது.
•Last Updated on ••Sunday•, 27 •September• 2020 22:53••
•Read more...•
••Sunday•, 27 •September• 2020 22:28•
??By Lavanya Sridharan (Katpadi - Vellore Tamil Nadu) ??
கலை

I'm not one to usually post about celebrities, but this one's hit me really hard. SPB never felt like a celebrity far out of reach. He was in our homes, a part of the family, his voice echoing through the TV, Radio, the car rides and the late nights. My dad and I have always bonded over Music and SPB's voice is always a magnet that draws us together and we mused in fascination over the mannerisms, voice modulations and tiny inflections that he brings to the songs he sang. A fantastic voice artist, composer and actor - he wore many hats in his celebrated career. The way he says "Beautiful" in Sippi Irukudhu song, the way he emotes pain in "En Kadhale", the way he energizes people in Rajini introduction songs, the way he makes people who have never known love to feel what it is like to be in love, the way he laughs and cries and brings a thousand emotions into a single song, there can never be another SPB.
•Last Updated on ••Sunday•, 27 •September• 2020 22:51••
•Read more...•
••Sunday•, 20 •September• 2020 11:15•
??- வ.ந.கிரிதரன் -??
கலை
இதன் சிங்கள மூலத்தை கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்த்ததில் அதன் கூறு பொருளை அறிய முடிந்தது. கூகுள் மொழிபெயர்ப்பு முற்றும் முழுதாகச் சரியாகவிருப்பதில்லை. இருந்தாலும் பாடல் கூறும் பொருளை அறிவதற்கு உதவுகின்றது. அதன் மூலம் இப்பாடலானது இனிமையான கடந்த காலக் காதல் நினைவுகளை இரை மீட்டுவதை அறிய முடிகின்றது. இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். இதயத்தை வருடிச்செல்லும் இசையும், குரலும் எம்மை மெய்ம்மறக்க வைப்பவையென்பதை உணர்வீர்கள்.
இப்பாடல் டி.எம்.ஜயரத்னவின் சிறந்த பாடல்களிலொன்று. இதற்கான வரிகளை எழுதியவர் இவரது மனைவி : மாலினி ஜயரத்ன (Malini Jayaratne). இசையமைப்பு: ரோகனா வீரசிங்க (Rohana Weerasinghe)
https://www.youtube.com/watch?v=uM2KYmdakeo
தென்னக்கோன் முதியான்செலாகே ஜயரத்ன (Tennakoon Mudiyanselage Jayaratne) டி.எம்.ஜயரத்ன (T.M. Jayaratne) என்று அழைப்படும் சிறந்த சிங்களப்பாடகர்களிலொருவர். இவர நான்கு தடவைகள், 1978, 1979, 1980 & 1987 ஆகிய வருடங்களுக்கான, ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். குருணாகல நகரிலுள்ள மலியதேவா கல்லூரியில் கல்வி கற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நாட்டுப்புற ஆய்வுப்பிரிவினால் பாடகராக உருமாறியவரிவர். அங்கு பணியாற்றிய சி.ஜே.எஸ் குலதிலக இவரைப் பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்படி வேண்டியதையடுத்துப் பல அவ்வகைப்பாடல்களைப் பாடியுள்ளார்.
•Last Updated on ••Sunday•, 20 •September• 2020 11:56••
•Read more...•
••Friday•, 10 •July• 2020 10:47•
??- பி.பொன்னுத்துரை & கே.எஸ்.பாலச்சந்திரன் -??
கலை
தினகரன் வாரமஞ்சரி யூன் 6, 20 : தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு கூழாங்கற்களும் அவர் கைகளில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாகும் - பி. பொன்னுத்துரை -
“இலங்கையின் தமிழ் நாடக உலகில் மறக்கமுடியாத ஒரு பேசும் பொருளாக மறைந்த லடீஸ் வீரமணி திகழ்கிறார். அவரின் படைப்புகளையும் ஆளுமைகளையும் முறையாக ஆய்வு ரீதியாகவும் பதிவு செய்தால் தமிழ் நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய வீரியமிக்க பணி வெளிப்படும். அவர் தமிழ் நாடக மேடைக்கு அளித்த பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருக்கும் அந்தனி ஜீவா சுறுசுறுப்பானவர் காத்திரமான தகவல்களை தேடி அவற்றை மக்களிடையே வெளிக்கொணர்வதில் மிகவும் சமர்த்தர். சில நேரங்களில் அவற்றை ஆத்திரமாகவும் வெளிப்படுத்த அஞ்சாதவர்”.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வாராந்தம் புதன்கிழமைகளில் நடத்தும் அறிவோர் ஒன்றுகூடலில் ‘தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் அந்தனிஜீவா உரையாற்றிய கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசும் போதே இவ்வாறு கூறினார். கடந்த மே மாதம் 26ம் திகதி இந் நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றவர்கள் தமிழ் நாடகம் பற்றிய முழுக்கவனம் செலுத்தியதுடன் வந்தாறுமுல்லை செல்லையா போன்ற நாட்டுக்கூத்து கலைஞர்களையும் அவர்களின் கூத்துக்களையும் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வந்து அவற்றை மேடை ஏற்றி அவர்களின் திறமைகளை வெளிகொணந்தவர். பின்னர் வந்த பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்கள் அவரின் செயல்பாடு களை பின் பற்றினாரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று தனது உரையில் மேலும் தெரிவித்தார் சபாஜெயராஜா. அந்தனிஜீவா உரையாற்றுகையில் தலைநகரில் தமிழ் நாடக மேடையில் விஸ்வரூபதரிசனம் தந்தவர் நடிகர் லடீஸ் வீரமணி என்றார்.
“தலைநகரில் தமிழ் நாடக வரலாறு தமிழ் நாடக மேடையின் முன்னோடி யும் முதல்வருமான இராஜேந்திரம் மாஸ்டர் அவர்களிடமிருந்தே தொடங்குகிறது. இந்தியாவில் தூத்துகுடியிலிருந்து வந்து கொழும்பு மத்தி ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் குடியேறிய கத்தோலிக்க குடும்பத்தில் கலையார்வமிக்க இளைஞர் ஒருவருக்கு இசைக்கருவிகளை வாசிப்பதிலும், கத்தோலிக்கக் கூத்துக்களிலும் ஈடுபாடு இருந்தது. ஈழத்து தமிழ் நாடக வரலாறு கலையரசு சொர்ணலிங்கத்துடன் தொடங்குவதைப் போல் கொழும்பு தமிழ் நாடகமேடையின் வரலாறு இராஜேந்திரம் மாஸ்டர் என்ற கலையார்வமிக்க இளைஞனுடனே தொடங்குகிறது. டவர் ஹோல் நாடக அரங்கின் முன்னோடிகளான ஜோன் டி சில்வா, டொன் பாஸ்ரியான், சார்ள்டயஸ் ஆகியோரின் நாடகங்களும் கொழும்பில் வாழ்ந்த இராஜேந்திரன் மாஸ்டர் என்ற கலைஞரை ஊக்குவித்தன.
•Last Updated on ••Friday•, 10 •July• 2020 22:56••
•Read more...•
••Sunday•, 28 •June• 2020 16:09•
??- மகாகவி பாரதியார் -??
கலை
பாடகர்களான தான்யஶ்ரீ, மாளவிகா இவர்கள்தம் குரலினிமையுடன் ராஜேஷ் வைத்யாவின் வீணையிசையும் சேர்ந்த பாரதியாரின் இப்பாடல் எம்மை முற்றாகவே வசியப்படுத்திவிடுகின்றது.

கேட்டு மகிழ்வதற்கான காணொளி: https://www.youtube.com/watch?v=YQZotAqfQzk
•Last Updated on ••Sunday•, 28 •June• 2020 16:23••
•Read more...•
••Saturday•, 09 •May• 2020 13:13•
??- ஊர்க்குருவி -??
கலை

என அபிமான நடிகைகளிலொருவர் நடிகை ஜெயாபாதுரி. சாதாரண அடுத்த வீட்டுப் பெண் போன்ற தோற்றம். மானுட உணர்வுகளை உள்வாங்கி மிகச்சிறப்பாக, இயல்பாக நடிக்கும் திறமை. இவை இவரது நடிப்பின் வலுவான அம்சங்கள். ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னரே இவருக்கு நடிப்புத்திறமையில் ஆர்வமிருந்தது. உலகப்புகழ்பெற்ற இயக்குநர் சத்யத் ரேயின் 'மாநகர்' திரைப்படத்தில் இவர் தன் பதின்ம வயதில் நடித்திருக்கின்றார். பின்னர் இவர் நடிப்பு, சினிமா இவற்றில் ஆர்வம் கொண்டு புனாவிலுள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து தங்கப்பதக்கம் பெற்று தேர்ச்சியடைந்தார். இவரது முதலாவது ஹிந்தித்திரைப்படம் ரிஷிகேஷ் முகர்ஜியின் இயக்கத்தில் வெளியான 'குட்டி'.
•Last Updated on ••Saturday•, 09 •May• 2020 13:27••
•Read more...•
••Saturday•, 14 •March• 2020 14:55•
??- ஊர்க்குருவி -??
கலை

"வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்" - கவிஞர் விவேக் வேல்முருகன் -
வாழ்க்கையை நொண்டி ஒட்டகத்துக்கு உருவகிக்கும் கவிஞரின் கவித்துவம் இப்பாடலின் முதல் வரியிலேயே என்னைக் கவர்து விட்டது. பாடகர் பென்னி தயாலின் குரலை ஏற்கனவே விஜயின் 'அழகிய தமிழ் மக'னில் கேட்டு இரசித்தவன். இப்பொழுதெல்லாம் புற்றீசல்கள்போல் தமிழ்த்திரைப்படங்கள் வெளிவருவதால் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. அன்று வருடத்துக்கு வெளியாகும் தமிழ்த்திரைப்படங்கள் எல்லாமே நினைவில் நிற்கும். அவற்றின் நடிகர்களும் , பாடகர்களும் நினைவில் நிற்பார்கள். ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. யார் பாடினார்? எந்தப் படத்தில் பாடல் இடம் பெற்றது? யார் நடித்தது? ஒன்றுமே தெரிவதில்லை. இதற்குத் தலைமுறை இடைவெளி முக்கிய காரணமென்று நினைக்கின்றேன். இதனால் எனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கையில் அவை இடம் பெற்றுள்ள திரைப்படங்களின் கதைக்களனை அவற்றின் விக்கிபீடியாவிலுள்ள ஆங்கிலப்பக்கங்கள் மூலம் அறிந்துகொள்வேன். தமிழ் விக்கிபீடியாப் பக்கங்களில் அவை பற்றிய விரிவான பக்கங்களைக் காண முடியாது. 'ஆண்டவன் கட்டளை' (2016) திரைப்படக் கதையினையும் அவ்வாறே அறிந்துகொண்டேன்.
•Last Updated on ••Saturday•, 14 •March• 2020 15:14••
•Read more...•
••Friday•, 13 •March• 2020 11:17•
??- ஊர்க்குருவி -??
கலை
"எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு " - கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவுக்குத் தேசிய விருது பெற்றுக்கொடுத்த இன்னுமொரு பாடல். ஒரு கவிஞரின் வரிகளுக்கு விருதுகளைப்பெற்றுக் கொடுப்பவை அவரது வரிகள் மட்டுமல்ல. அதனைப்பாடிய பாடகர்களின் குரல்கள், இசை, ஒளிபதிவு & நடிப்பு எல்லாமேதாம்.
இப்பாடலினை இருவர் பாடியிருந்தாலும் , பாடலின் அதிக பகுதியை எடுத்துக்கொண்டிருப்பவர் பாடகி சின்மயி. சின்மயி தற்போதுள்ள பாடகிகளில் மிகச்சிறந்த பாடகியாக நான் உணர்வதுண்டு. அதற்குக் காரணம் வரிகளை உள்வாங்கி, உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் குரல் அவருடையது. கேட்டுப்பாருங்கள். நெஞ்சைக் கிழித்துக்கொண்டு அதன ஆழத்துக்கே செல்லும் குரல் சின்மயினுடையது.
இப்பாடல் பலவகைகளிலும் சிறந்து விளங்குகின்றது. யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாடல் காட்சிகளை உருவாக்கியிருக்கும் உயிர்த்துடிப்புள்ள, இயற்கை வளம் கொழிக்கும் ஒளிப்பதிவு, விஜய் சேதுபதி & தமன்னாவின் நடிப்பு எல்லாமே நெஞ்ச வசியபடுத்திக் கட்டிப்போட்டு விடுவன. மன அழுத்தங்களிலிருந்து விடுபட வைக்கும் தன்மை மிக்கவை.
•Last Updated on ••Saturday•, 14 •March• 2020 15:02••
•Read more...•
••Thursday•, 05 •March• 2020 10:37•
??- ஊர்க்குருவி -??
கலை

"அதோ அந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்" - கவிஞர் கண்ணதாசன்
மானுட விடுதலை பற்றிய கவிஞர் கண்ணதாசனின் மிகச்சிறந்த பாடல். 'சிட்டுக்குருவையைப் போல் விட்டு விடுதலையாகி' நிற்கக் கனாக்கண்டான் மகாகவி பாரதி அடிமையிருள் சூழ்ந்த இருந்தியாவில். சுதந்திரமாகச் சிறகடிக்கும் புள்ளினத்தைப்பார்த்து, ஆடும் கடல் அலைகளைப்பார்த்து விடுதலை பற்றிய கனவில் மிதக்கின்றான் கவிஞன் இங்கே. 'ஒரே வான். ஒரே மண். ஒரே கீதம்! உரிமைக் கீதம்' என்று மானுட விடுதலையின் மகத்துவத்தைப் பாடுகின்றான் இவன். கவிஞர் கண்ணதாசனின் மிகச்சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. எளிமையான மொழியில் எவ்வளவு ஆழமாக, சிறப்பாகக் கவிதையினை வடித்துள்ளார்.
•Last Updated on ••Thursday•, 05 •March• 2020 10:50••
•Read more...•
••Tuesday•, 03 •March• 2020 13:56•
??- ஊர்க்குருவி -??
கலை
"பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்.... நீ போகும் பாதை என் பூங்காவனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும் என் ஜென்மமே ஈடேறவே" - கவிஞர் மேத்தா
அவ்வப்போது எழுத்தாளர்கள் திரையுலகையும் எட்டிப்பார்க்கத்தவறுவதில்லை; தடம் பதிக்கத்தவறுவதில்லை. கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாத்துரை, சுஜாதா, ஜெயமோகன், பாலகுமாரன், விந்தன் என்று பலரைக்குறிப்பிடலாம். அவர்களில் கவிஞர் மேத்தாவும் ஒருவர். ரஜனிகாந்த்தின் 'வேலைக்காரன்' திரைப்படப்பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. 'உதயகீதம்' திரைப்படப்பாடலான இப்பாடலையும் அவர்தான் எழுதியிருக்கின்றார்.
கவிஞர் மேத்தா என்றதும் 'வானம்பாடிக் கவிதைக்குழு' ஞாபகம் எழும். அவரது புதுக் கவிதைகளின் ஞாபகம் எழும். எனக்கு இவர் முதன் முதலில் அறிமுகமானது ஒரு சிறுகதையின் மூலம்தான். என் பால்ய பருவத்தில் நான் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், தினமணிக்கதிர், ராணி, ராணிமுத்து, அம்புலிமாமா, கண்ணன், கலைமகள் என்று விழுந்து விழுந்து வாசித்துக்கொண்டிருந்த காலத்தில் அறிமுகமானவரே எழுத்தாளர் மேத்தா. அப்பொழுதெல்லாம் ஆனந்தவிகடன் நிறுவனத்தினர் மாதந்தோறும் மாவட்டமலர்ச்சிறப்பிதழ்களை வெளியிட்டு வந்தார்கள். மதுரை மாவட்டம், தஞ்சை மாவட்டம், சேலம் மாவட்டம் என்று மாதாமாதம் மாவட்டமொன்றைப்பற்றிய தகவல்கள், கட்டுரைகள்,கவிதைகளுடன் அம்மாவட்ட மலர் வெளிவரும். அம்மாவட்ட மலர்களில் அம்மாவட்ட மண்மணம் கமழும் மாவட்டமலர்ச் சிறுகதையொன்றும் வெளியாகும், அதற்கு பரிசும் வழங்கப்படும். அவ்விதமாக விகடனின் தஞ்சை மாவட்ட மலரில், பரிசு பெற்ற சிறுகதையாக வெளியானதுதான் மேத்தாவின் சிறுகதையும். அதுவே மேத்தாவின் முதற் சிறுகதையாகக்கூட இருக்கலாம். பின்னர் அதே விகடன் தனது பொன்விழாவையொட்டி நடாத்திய சரித்திர நாவல் போட்டியில் முதற் பரிசினைப்பெற்றதும் மேத்தாவின் 'சோழ நிலா'வே என்பதும் குறிப்பிடத்தக்கது.
•Last Updated on ••Tuesday•, 03 •March• 2020 13:58••
•Read more...•
••Tuesday•, 03 •March• 2020 13:47•
?? - ஊர்க்குருவி -??
கலை
இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.
அக்காட்டுப்பகுதியில் அக்காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினர் தற்காலிக முகாம்களை அமைத்துத் தங்கியிருந்தனர். சில சமயங்களில் நீண்ட தடிகளைக் கால்களில் கட்டி ஒரு சிலர் நடந்து சென்று மாணவர்களான எங்களுக்கு விளையாட்டுக் காட்டுவார்கள். நாமும் செல்லும் வழியில் அவர்கள் இவ்விதம் நடப்பதை வியப்புடன் பார்த்துச் செல்லுவோம்.
அவ்விதமானதொரு நாளில்தான் இப்பாடலும் வவுனியா நகரசபைப்பக்கமிருந்து ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. நகரசபை மண்டப அரங்கில் சில வேளைகளில் கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அவ்விதமான சமயங்களில் இவ்விதம் ஒலிபெருக்கிகள் மூலம் தமிழ்த்திரைப்படப்பாடல்களைப்போடுவார்கள். அம்மண்டப அரங்கில்தான் ஒரு முறை நாடகமொன்றும் அப்பாவுடன் சென்று பார்த்திருக்கின்றேன். அதன் பெயர் "உடையார் சம்பந்தம்". இந்நகர சபை மைதானத்தில்தான் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடைபெறுவதும் வழக்கம். ஜேவிபியினரின் முதலாவது புரட்சியின் போது இலங்கை வான் படையினரின் ஹெலிகொப்டர்கள் அடிக்கடி இம்மைதானத்தில்தான் வந்திறங்கிச் செல்வது வழக்கம்.
•Last Updated on ••Tuesday•, 03 •March• 2020 13:56••
•Read more...•
••Tuesday•, 25 •February• 2020 11:18•
??- ஊர்க்குருவி -??
கலை

"எந்தெந்த நாடும் நமது. சொந்தம் என்றாகும் பொழுது. அன்பினில் ஆடும் மனது. அத்தனை பேர்க்கும் இனிது! அமுது! புதிது!" - கவிஞர் வாலி
'உலகம் சுற்றும் வாலிபன்' படப்பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத சிறப்பான கானங்கள். பாடல்கள் அனைத்தும் பயண ஆவணங்களாகவும் விளங்கும் வகையில் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. இப்பாடற் காட்சிகளைப்பாருங்கள். அக்கூற்று எவ்வளவு உண்மையென்பதைப்புரிந்துகொள்வீர்கள்.
இப்பாடலில் எம்ஜிஆரும் சந்திரகலாவும் நடித்திருப்பார்கள். எம்ஜிஆர் சந்திரகலாவுடன் நடித்த ஒரேயொரு திரைப்படம் இதுதான். 'அலைகள்' மூலம் தன் சிறப்பான நடிப்பால் என்னைக் கவர்ந்த நடிகை சந்திரகலா. அவர் நடித்து நினைவில் நிற்கும் இன்னுமொரு திரைப்படம் 'புகுந்த வீடு'. தனது இள வயதிலேயே மறைந்தது பேரிழப்பு. சிறந்த நடிகையான அவர் திரையுலகில் இருந்திருந்தால் இன்னும் பல சாதித்திருப்பார்.
எம்ஜிஆருக்காக எழுதும் காதற்பாடல்களில்கூடக் கருத்தாழம் மிக்க, சமுதாயப்பிரக்ஞை மிக்க வரிகளைப் புகுத்தி எழுதுவதில் வல்லவர் கவிஞர் வாலி. இப் 'பன்சாயி காதல் பறவைகள் பாடும் கவிதைகள்' காதலர்கள் இருவர் இணைந்து பாடும் காதற்பாடல். இடையில் வரும் கீழ்வரும் வரிகளைக் கவனியுங்கள்.
•Last Updated on ••Tuesday•, 25 •February• 2020 11:44••
•Read more...•
••Monday•, 17 •February• 2020 03:36•
??- ஊர்க்குருவி -??
கலை
எனக்கு பிடித்த இலங்கைத்தமிழ்ப்பாடகர்களில் இவருமொருவர். இவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று இவர் பாடிய "வான நிலவில் அவளைக் கண்டேன் நான். வாசமலரில் அவளை கண்டேன் நான் ." இப்பாடலை எழுதியவர் அல்வாய் சுந்தரம். பாடலுக்கு இசையமைத்திருப்பவகே. சவாஹிர். எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து நேற்று (16.02.2020) மறைந்த செய்தியினை முகநூலில் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். என்னைப்போன்ற பலரைத் தன் குரலால் இன்பமூட்டியவர் ராமச்சந்திரன் அவர்கள். அவருக்கு என் அஞ்சலி. அவரிழப்பால் வாடும் அனைவர்தம் துயரத்திலும் நானும் 'பதிவுகள்' சார்பில் பங்குகொள்கின்றேன். அத்துடன் ஜூலை 15, 2012 ஞாயிறு தினகரன் வாரமஞ்சரியில் வெளியான "பொப்இசை பாடகர் எஸ். இராமச்சந்திரன்" என்னும் இவரைப்பற்றிய கட்டுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இவர் பாடிய 'வான நிலவில் அவளைக் கண்டேன்' பாடலுக்கான இணைப்பு: https://www.youtube.com/watch?v=gkzbvnUJBuE
(தினகரன் - இலங்கை) பொப்இசை பாடகர் எஸ். இராமசந்திரன் பரசுராமன் 1970 இலங்கையில் இயல் இசை நாடகம் முற்போக்கான எழுச்சியைக்கண்ட காலம். ஈழத்து சஞ்சிகை, ஈழத்து சினிமா, மெல்லிசைப்பாடல், இலங்கை பொப்பாடல் என வரிசைக்கட்டிக்கொண்டு கொடிக்கட்டிப்பறந்தது. இக்கால கட்டத்தில்தான் தொழில் ரீதியாக இலங்கை வானொலியில் இணைந்து தன் இசைத் திறமையால் இலங்கை பொப்இசை உலகில் பிரவேசித்து ரசிகர்களை கிரங்க வைத்தவர்தான் எஸ். இராமச்சந்திரன்.
கடந்த நான்கு தசாப்தங்களைத் தாண்டியும் இலங்கை, தமிழகம் மற்றும் உலகளாவிய புலம்பெயர் நாடுகளிலும் வாழும், தமிழ் உள்ளங்களில் துள்ளிசையாக ஒலித்துக்கொண்டிருக்கிறது இவரது பொப் இசை பாடல்கள். மனது மறக்காத சமூக நலம் நாடிய பாடல்களைத் தந்த அவரை திரும்பிப் பார்க்கின்றேன் பக்கத்திற்காகச் சந்தித்தேன்.
•Last Updated on ••Monday•, 17 •February• 2020 04:17••
•Read more...•
••Tuesday•, 24 •December• 2019 10:41•
??- ஊர்க்குருவி -??
கலை
கவிஞர் கண்ணதாசனின் கவித்துவத்தையும், மொழியாற்றலையும் வெளிப்படுத்தும் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. மானுட வாழ்க்கையைப்பற்றிய சிந்தனையைத்தூண்டிவிடும் கருத்துகளின் பெட்டகம் இப்பாடல். கே.பாலச்சந்தர் படப்பாடல்களில் முதலிடத்திலுள்ள பாடல்களிலொன்று. வாணி ஜெயராம் பாடிய சிறந்த பாடல்களிலொன்று. அவரது பாடல்களைப்பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மல்லிகை என் மயங்கும் பாடல். கூடவே நினைவுக்கு வரும் பாடலிப்பாடல். எம்,எஸ்.வி இசையமைத்த சிறந்த பாடல்களிலொன்று.
நடிகை ஶ்ரீவித்யாவை நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படம் அபூர்வராகங்கள். கூடவே நினைவுக்கு வரும் பாடல் இப்பாடல். நடிகை ஶ்ரீவித்யா தாய் எம்.எல்.வசந்தகுமாரி சிறந்த கர்நாடகப்பாடகி. ஶ்ரீவித்யாவும் சிறந்த பாடகி. சிறந்த நர்த்தகியும் கூட. ஆனால் அவர் சுடர்விட்டது திரையுலகில்தான். தமிழ்த்திரையுலகைப்பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தாலும் ,, நினைவுக்கு வருவது பின்னாளில் அவர் நடித்த நடுத்தர அம்மா வேடங்கள் மூலமே. ஆனால் மலையாளத்திரைப்படங்களைப்பொறுத்தவரையில் நிலை வேறு. மிகச்சிறந்த நடிகையாக, பின்னணிப்பாடகியாக அவரை மலையாளத்திரையுலகம் கொண்டாடுகின்றது.
ஜார்ஜ் தாமஸ் என்ற மலையாள துணை இயக்குனரோடு தொடங்கிய அவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. துயர் மிகுந்தது. ஆரம்பத்தில் நடிகர் கமலகாசனுக்கும், அவருக்குமிடையில் நிலவிய காதல்பற்றிச் செய்திகள் வெளியாகின. அதுவும் தோல்வியில் முடிந்தது. அது ஶ்ரீவித்யாவை உளரீதியாக மிகவும் பாதித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் தனது கடைசிக்காலத்தில் புற்றுநோயால் மரணப்படுக்கையில் கிடந்தபோது அவர் தன்னைப்பார்க்க அனுமதித்த மிகச்சிலரில் கமலகாசனும் ஒருவர். அவர் நிலைகண்டு மிகவும் மனம் வருந்திய கமல் அவரை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று சிகிச்சை செய்ய முன்வந்ததாகவும் , அதை ஶ்ரீவித்யா மறுத்துவிட்டதாகவும் இணையத்திலெங்கோ வாசித்துள்ளேன்.
•Last Updated on ••Tuesday•, 24 •December• 2019 10:53••
•Read more...•
••Monday•, 16 •December• 2019 01:06•
?? -ஊர்க்குருவி -??
கலை

பட்டிக்காட்டுப் பொன்னையா வந்தது தெரியாமல் போன எம்ஜிஆர் திரைப்படங்களிலொன்று. இலங்கையில் திரையிடப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ஆனால் இப்பாடலை யு டியூப்பில் கேட்டபோது உடனடியாகவே பிடித்துப்போனது.. முதற் காரணம் டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலினிமை. அடுத்தது கே.வி.மகாதேவனின் இசை. அடுத்த காரணம் ஒன்றுமுண்டு. அது எம்ஜிஆர் & ஜெயலலிதாவின் நடிப்பு. பாடலுக்கேற்ப பாடலைச் சுவையாக்குவதில் இருவரின் பங்கும் முக்கியமானது. பாட,ல் வரிகளைப்பொறுத்தவரை குறிப்பிடத்தக்கதாக எவையுமில்லை, சந்தத்துக்கு எழுதியவை என்பதைத்தவிர.
பாடலில் எனக்கு மிகவும் பிடித்த கட்டமாக "நித்திரையை நீ மறக்க!" என்று வாத்தியார் (டி.எம்.எஸ்) கூற ஜெயலலிதா "ம்ஹூ' (சுசீலா) என்பார். தொடர்ந்து 'நீல விழி தான் சிவக்க' என வாத்தியார் கூற , ஜெயலலிதா 'ஓஹோ' என்பார். மீண்டும் வாத்தியார் "நித்திரையை நீ மறக்க!" என்று கூற, ஜெயலலிதா 'ஆகா' என்பார். மீண்டும் "'நீல விழி தான் சிவக்க" என்று வாத்தியார் தொடர, ஜெயலலிதா 'ம்ஹூ' என்பார். மேலும் டி.எம்.எஸ் 'முத்திரையை நான் பதிக்க!' என்று தொடர்ந்து 'முந்நூறு நாள் நடக்க!; என்று முடிக்க, ஜெயலலிதா சிரிப்பார். சிரித்தது ஜெயலலிதாவா சுசீலாவா என்பதில் எனக்கொரு சந்தேகமுண்டு. தொடர்ந்து ஜெயலலிதா "உன் முகம் போலே" என்பார். பதிலுக்கு வாத்தியார் 'ஆகா" என்பார். மேலும் ஜெயலலிதா ' என் மடி மேலே" என்பார். வாத்தியார் ஓகோ' என்பார். பாடலின் இப்பகுதியை நடிகர்களுக்காகவும்,. பாடகர்களுக்காகவும் மிகவும் இரசித்தேன். நீங்களுமொரு தடவை அப்பகுதியைக் கேட்டுப்பாருங்கள். மயங்கி விடுவீர்கள்.
•Last Updated on ••Monday•, 16 •December• 2019 01:12••
•Read more...•
••Thursday•, 14 •November• 2019 09:22•
??--ஊர்க்குருவி -??
கலை
எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலும் சரி , இன்றும் சரி எம்ஜிஆரின் படங்களென்றால் அவை ஒரே மாதிரியானவை. கருத்துள்ள பாடல்களைக் கொண்டவை. காதல் பாடல்கள் இனிமையானவை. இவற்றுடன் தம் கருத்துகளை நிறுத்தி விடுவார்கள். ஆனால் எம்ஜிஆர் சண்டைக்காட்சிகளில் மட்டுமல்ல இன்னுமொரு விடயத்திலும் நன்கு சிறப்பாக செயற்படக்கூடியவர். அது அவரது நடனத்திறமை. திரைப்படங்கள் பலவற்றில் எம்ஜிஆரின் நடன அசைவுகளை அவதானித்தால் அக்காலகட்டக் கதாநாயக நடிகர்களில் அவரைப்போல் நடனமாடக் கூடிய நடிகர்கள் வேறு யாரையும் என்னால் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. நடிப்புத்திறமை மிக்க நடிகர் திலகத்தால் 'வண்டி தொந்தி'யுடன் விரைவாக, சிறப்பாக ஆட முடிவதில்லை. ஆனால் முறையான உடற் பயிற்சியினால் உடலைச் சிறப்பாகப்பேணிய எம்ஜிஆர் தனது இளமைப்பருவத்தில் மட்டுமல்ல வயது ஐம்பதைத்தாண்டிய நிலையிலும் மிகச்சிறப்பாக ஆடியுள்ளார்.
எம்ஜிஆரின் திரைப்பட நடனங்களில் என்னை மிகவும் கவர்ந்தவையாக உடனடியாக நினைவுக்கு வருபவை: குடியிருந்த கோயிலில் எல்.விஜயலட்சுமியுடன் 'ஆடலுடன் பாடல்' பாடலுக்காக ஆடும் பஞ்சாபிய நடனம். இது பற்றி நேர்காணலொன்றில் எல்.விஜயலட்சுமி இப்பாடலுக்காக எம்ஜிஆர் ஒரு மாதம் வரையில் பயிற்சி செய்தே தன்னுடன் ஆடியதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறந்த நடனத்திறமை மிக்க தன்னுடன் இணைந்து ஆடுவதற்காக என்று எம்ஜிஆரே கூறியதையும் அவர் நேர்காணலில் எடுத்துரைத்துள்ளார். 'மதுரை வீரன்' திரைப்படத்தில் 'வாங்க மச்சான் வாங்க' பாடலுக்காக அவர் இ.வி,சரோஜா குழுவினரின் கேலியைத் தொடர்ந்து ஆடும் காட்சியும் சிறப்பானது.
•Last Updated on ••Thursday•, 14 •November• 2019 09:33••
•Read more...•
••Thursday•, 03 •October• 2019 23:31•
?? - ஓவியர் கெளசிகன் (இலங்கை) -??
கலை
 இலங்கையில் வசிக்கும் ஓவியர் கெளசிகன் நடிகர் திலகத்தின் பிறந்ததினத்தையொட்டி அனுப்பிய நினைவுக் குறிப்புகள் இவை. 1997இல் நடிகர் திலகம் இலங்கை வந்தபோது அவரைச் சந்தித்ததையும், அவருக்குத் தான் வரைந்த ஓவியத்தைக் கொடுத்ததையும் நினைவுகூர்கின்றார். அத்துடன் அந்நிகழ்வுக்கான காணொளியினையும் பகிர்ந்துகொள்கின்றார். மேலும் அந்நிகழ்வில் நடிகர் திலத்தை வைத்துத் தான் வரைந்த இன்னுமோர் ஓவியத்தையும் காட்டி அதில் நடிகர் திலகத்தின் 'ஆட்டோகிராப்'பையும் வாங்கிக் கொள்கின்றார். அவ்வோவியத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கின்றார் கெளசிகன். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. - பதிவுகள் -
சுமார் 22 வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் அவர்களை நான் சந்தித்த நிமிடங்களை , அனுபவங்களை தொகுத்து சிவாஜி சாரின் பிறந்ததினத்தன்று தருகிறேன். இதற்கு முன் நான் இவ்வளவு பெரிதாக எதையும் எழுதியது கிடையாது. வாசிப்பவர்களுக்கு ஒருவேளை சலிப்பை உண்டாக்கும் என்ற நினைப்பில் படங்களை மட்டுமே முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தேன்.
இதோ எனது அந்த மிக இனிமையான அனுபவம், வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாத சந்தோஷமான தருணங்கள்...
1997வருடம், ஜூலை மாதம்.
என் வாழ்நாளில் மறக்கவே முடியாத வருடம். அப்போது நான் ' மெட்டல் எம்போசிங் பெயின்டிங் '(metal embossing painting) எனப்படும் ஓவியக்கலையை பயின்றுகொண்டிருந்தேன். திடீரென பத்திரிகைகளின் ஒரு செய்தி. நடிகர் திலகம் இலங்கை வருகிறார். "நடிகர் திலகத்திற்கு மீண்டும் முதல் மரியாதை" என்றவொரு பெரிய விழா அவருக்காக ஏற்பாடாகி வருகிறது என்று.
•Last Updated on ••Friday•, 04 •October• 2019 09:21••
•Read more...•
••Saturday•, 06 •July• 2019 23:12•
??- கானக்குருவி -??
கலை

மானுடரின் வாழ்வின் வளர்ச்சிப் பருவங்களில் ஏற்படும் காதல் உணர்வுகள் தவிர்க்க முடியாதவை. இங்கு ஒரு பெண்ணின் காதல் உணர்வுகளைத் தன் எழுத்தால் சிறப்பாக வடித்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். அதற்குக் குரலால் உயிரூட்டியுள்ளார் பாடகர் பி.சுசீலா. நடிப்பால் உயிரூட்டியிருப்பவர் நடிகையர் திலகம். பாடலுக்கு இசையால் உயிரூட்டியுள்ளவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர். பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் : " காத்திருந்த கண்கள்"
•Last Updated on ••Saturday•, 06 •July• 2019 23:21••
•Read more...•
••Saturday•, 06 •July• 2019 22:42•
??- கானக்குருவி -??
கலை

"ஊரெல்லாம் உறங்கிவிடும் உள்ளம் மட்டும் உறங்காது ஓசையெல்லாம் அடங்கி விடும். ஆசை மட்டும் அடங்காது ஆசை மட்டும் அடங்காமல் அவனை மட்டும் நினைத்திருப்பேன்." - கவிஞர் வாலி -
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் 'கற்பகம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கவிஞர் வாலியின் பாடல் 'பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்'. பி.சுசீலாவின் உயிரோட்டமான குரலில், நடிகையர் திலகம் சாவித்திரியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் உயிரோட்டமான நடிப்பில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையரின் உயிரோட்டமான இசையில் ஒலிக்கும் காலத்தால் அழியாத இன்னுமொரு கானம். இப்பாடலும் காதல் வயப்பட்ட உள்ளத்துணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தும் பாடல்.
•Last Updated on ••Saturday•, 06 •July• 2019 23:02••
•Read more...•
••Sunday•, 23 •June• 2019 21:40•
??- மாதவி சிவலீலன் -??
கலை
இலண்டன் இந்திய திரைப்பட விழாவில் மெக்சிக்கன் பல்கலைக்கழகத் திரைப்படத்துறைப் பேராசிரியரும், குறுந்திரைப்படம், ஆவணப்படம், திரைப்படம் என்பவற்றின் இயக்குனருமாகிய சுவர்ணவேல் ஈஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் மிஸ்கின், அனுஷா பிரபு, பிரீதி கரன் ஆகியோர் நடித்த கட்டுமரம்” திரைப்படத்தை BFI Southbank எனும் இடத்தில் 21.06.2019 அன்று பார்க்கக் கிடைத்தமை நல்லதொரு பொழுதாக அமைந்தது.
வாழ்வு எவ்வளவு சவால்களைக் கொண்டதென்பதை முன்னிறுத்தியதான கதைப்பிரதியைக் காட்சிப்படுத்தியமைக்காகச் சுவர்ணவேல் அவர்களைப் பாராட்டியேயாக வேண்டும். கதைக்கரு, உரையாடல், நடிப்பு, கிராமிய வாழ்வுப்பதிவு என்று அனைத்தும் கச்சிதமாக அமைந்துள்ளன. இவற்றோடு படத்தைத் தாங்கி நிற்கும் இசையையும் கமராவின் நகர்வையும் பார்க்கின்ற போது, இது சாதாரண தமிழ்ப் படமின்றி நுணுக்கமான உத்திகளையும் உணர்வுகளையும் தரவல்லதென எண்ண வைக்கின்றது. இங்கு கரையேறப் போராடும் மக்களைக் கட்டுமரமாக்கி இயக்குனர் பயணிக்கின்றார். படம் முழுதும் நீரினால் சூழப்பட்ட கிராமமும், அங்கு கடலை நம்பி வாழும் மக்களும் ஓயாது ஆர்ப்பரித்து அலையும் கடலும் மூசி மூசி வீசும் காற்றும், கவித்துவமாகப் பதிவாகியுள்ளன.
கதைக்களமாகச் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசம் அமைகின்றதென்பதும், அங்கு மீனவ வாழ்வு பதியப்படுகின்றதென்பதும், அதற்குக் கட்டுமரம் என்கின்ற குறியீடு வைக்கப்பட்டுள்ளதென்பதும் எமது எதிர்பார்ப்பாக அமைய, அவற்றையும் மீறி, அழகிய காதல்கதையை அதுவும் லெஸ்பியனின் காதல் வெளிப்பாட்டைச் சமூகம் ஏற்கும் வகையில் காட்டியமை திரைப்படத்துறையில் இயக்குனருக்கு இருக்கும் ஆளுமையைத் தெளிவுபடுத்துகின்றது.
தமிழ்ச் சமுகத்தில் திருமணம், குடும்ப வாழ்வு என்பன எவ்வளவு முக்கியத்துவமானவை என்பது ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளாலும் வெளிப்படுத்தப்படுகின்றது. சிங்காரம் தாய்தந்தையற்ற மருமகளான ஆனந்திக்குத் திருமணம் செய்து வைப்பதில் காட்டும் தீவிரம், மாமாவுக்கு விதவையான மலரே மனைவியாக அமைந்தால் நல்லதென நினைக்கும் மருமகள், மகள் லெஸ்பியனாக இருந்தாலும் அவளுக்கு வாழ்வு அமைத்துக் கொடுக்க விரும்பும் தந்தையான விக்ஷ்ணுஜித்தன், திருமணம் செய்து வை அல்லது செய் எனத் தூண்டும் நண்பர்களென யாவருமே சமூக அழுத்தமொன்றைப் பேணுபவர்களாகவுள்ளனர்.
•Last Updated on ••Sunday•, 23 •June• 2019 21:49••
•Read more...•
••Wednesday•, 12 •June• 2019 08:10•
??- க. பாலேந்திரா -??
கலை
இந்திய நாடகத் துறையில் முக்கிய ஆளுமைகளிலொருவர் கிரீஸ் கர்னாட். அவரது மறைவு பற்றிய செய்தியைத்தாங்கிய பல பதிவுகள் முகநூலில் நேற்று பதிவு செய்யப்பட்டன. இவர் இந்திய சினிமாவின் வெற்றிகரமான நடிகர்களிலொருவரும் கூட. இலங்கைத்தமிழ் நாடகத்துறையின் முக்கிய ஆளுமைகளிலொருவரான க.பாலேந்திரா அவர்கள் எண்பதுகளில் தினகரனில் கிரீஸ் கர்னாட் பற்றி எழுதிய 'நாடக ஆசிரியர் கிறீஸ் கர்னாட்' என்னும் கட்டுரையைப் பதிவு செய்திருந்தார். அக்கட்டுரையை அமரர் கிரீஸ் கர்னாட் அவர்களை நினைவு கூரும்பொருட்டு இங்கு நன்றியுடன் பகிர்ந்து கொள்கின்றோம். - பதிவுகள்-.
நாடக ஆசிரியர் கிரீஸ் கர்னாட்
-க. பாலேந்திரா -
இந்தியத் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் கன்னட மொழி ஆக்கங்கள், தற்போது தனித்துவம் பெற்று விளங்குகின்றன. “சம்ஸ்காரா”, “காடு”, “கடசிராத்தா”, “சோமனதுடி” போன்ற திரைப்படங்கள் பலசர்வதேச விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவை. நாடகங்களில் “துக்ளக்” “யயாதி', “காகன்ன” “கோட்டே”, “ஹயவதனா” போன்றவை பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு அகில இந்திய புகழ்பெற்றவைகளாக விளங்குகின்றன. நாடகத்தில் அறுபதுகளில் ஆரம்பித்த இந்தத்தீவிர இயக்கம் பிறகு திரைப்படத் துறையைப் பாதித்து விட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் இவற்றின் பாதிப்புக்கள் ஏற்பட ஏனோ கஷ்டமாக இருக்கிறது.
புதிய கோணம்
இப்படைப்புகளில் பொதுவாக இந்தியாவின் பண்டைக் கலாசாரப் பின்னணியில் கிராமிய கலைவடிவங்களினதும் புராண இதிகாசங்களினதும் செல்வாக்கு அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். மேற்குறிப்பிடப்பட்ட நாடக திரைப்பட ஆக்கங்கள் அனைத்துக்கும் மூலகர்த்தாக்கள், கிரீஸ் கர்னாட், பி. வி. காரந்த், ஆனந்தமூர்த்தி போன்ற ஆங்கிலக் கல்வியறிவுள்ள புத்தி ஜீவிகள்தான், மேலைத் தேசங்களில் பெற்ற கலை அனுபவங்களோடு தத்துவச் சிந்தனைகளோடு திரும்பிவரும் இவர்கள் கிராமங்களிலும், ஏட்டுச் சுவடிகளிலும் மறைந்து கிடக்கும் பழமைகளைக் கண்டெடுத்து துலக்கிக் காட்டும் போது அவை ஒரு புதிய கோணத்தில் சிறந்த கலாவடிவங்களாக எமக்குக் கிட்டுகின்றன. கிரீஸ் கர்னாட் இவர்களில் முக்கியமானவர். நாடகாசிரியராக அறிமுகமான இவர், சிறந்த மேடை, திரைப்பட நடிகனாக, நாடகத் திரைப்பட தயாரிப்பாளனாக, சிறந்த மொழிபெயர்ப்பாளனாக இப்படி பல துறைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.
கிரீஸ் கர்னாட் கன்னடத்தில் எழுதுகிறபோதும் கொங்கணி மொழிதான் இவரது முதல்மொழி. ஆங்கிலம், மராத்தி, ஹிந்தி போன்ற மொழிகளிலும் சமதையான ஆளுமையுடையவர். தன்னுடைய ஆக்கங்களை கன்னடத்தில்தான் நெருடல் இல்லாமல் வெளிப்படுத்த முடிகிறதாகக் கூறுகிறார் இவர். கன்னடம் அவருடைய சிறு பிராயத்து மொழி. ஆங்கிலத்திலும் எழுதும் இவர், சிறுவயதில் தான் ஒரு ஆங்கிலக் கவிஞனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர். தனது கன்னட மொழி ஆக்கங்களைத் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். இதைவிட வேறு நாடகங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தயாரிக்கிறார்.
•Last Updated on ••Wednesday•, 12 •June• 2019 08:37••
•Read more...•
••Thursday•, 16 •May• 2019 01:22•
??- ஸ்ரீரஞ்சனி -??
கலை
 ஆண், பெண் சராசரி மாதிரிகளையும், திருமண உறவில் ஒரு பெண்ணின் பங்கினையும் விமர்சனத்துக்குள்ளாக்கும் A doll's house என்ற Henrik Ibsenஇன் நாடகம் அந்த நேரத்தில் ஐரோப்பாவில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருந்ததாக அறிகின்றோம். அந்த நாடகம் முன்வைக்கும் கேள்விகள் இன்றும் எங்களுக்குப் பொருத்தமானவையாகவே உள்ளன, துரதிஷ்டவசமாக சமூகம் இன்னும்தான் மாறவில்லை.
இந்த நாடகத்தின் தமிழ் வடிவம் 'ஒரு பொம்மையின் வீடு' என்ற பெயரில் 'மனவெளி'யின் கடந்த அரங்காடலின்போது அரங்கேறியிருந்தது. மே மாதம் 4ம் திகதி மீண்டும் அதனைத் திரையில் பார்க்குமொரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருந்தது. இந்த நாடகத்தின் ஒத்திகை ஒன்றைக் கடந்த மே மாதத்தில் பார்த்தபோது - அரசியின் அற்புதமான வெளிப்பாட்டை, இந்த நாடகம் சொல்லும் முக்கியமான கருத்துக்களை, சொற்களை மனதில் சிறைபிடிக்கச் சொல்லும் பி. விக்னேஸ்வரனின் அழகான தமிழ் மொழிபெயர்ப்பை அனைவரும் பார்க்கவேண்டுமென நான் ஒரு பதிவிட்டிருந்தேன். பின்னர் நாடகம் பற்றிய விரிவான விமர்சனம் ஒன்றை எழுதவேண்டுமென விரும்பினேன். ஆனால், அதற்கு நேரம் ஒத்துழைக்கவில்லை. இதனைத் திரையில் பார்த்த அனுபவம் பற்றி எழுதும்படி மனவெளி செல்வன் கேட்டபோது நேரம் சவாலாக இருக்கின்றது என மீண்டும் தவிர்க்க முடியவில்லை. சிறந்ததொரு கலைப்படைப்பினை வழங்குபவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அனைவரினதும் கடமை என்பதற்கேற்ப அதுபற்றிய எனது சில மனப் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கான பொருள்களுடன் மகிழ்ச்சியாக வீட்டுக்கு வரும் நோறாவின் வருகையுடன் இந்த நாடகம் ஆரம்பமாகிறது. அப்படியொரு அலங்காரப் பொருளாகத்தான் நோறா வாழ்கின்றாள் என்பதற்கான படிமம் இது எனலாம். வந்ததும் வராததுமாக மக்றோன்களை வாயில் போட்டுவிட்டு அவற்றைச் சாப்பிடுவது கணவர் ஹெல்மருக்குப் பிடிக்காது என அவற்றை ஒளித்துவைக்கும் நோரா குழந்தைத்தனமான, கணவனுக்குப் பயந்த அல்லது கணவனைத் திருட்டுத்தனமாகவேனும் மேவ விரும்பும் ஒரு பெண்ணாக எங்களுக்கு அறிமுகமாகிறார்.
என்ரை சின்ன அணில் குஞ்சு என ஹெல்மர் அழைக்கும்போது அதில் பரவசப்படுவபவராக, அவரிடம் செலவுக்கு கையேந்தும் அப்பாவியாக, ஹெல்மருக்குப் பிடிக்காது என அடிக்கடி சொல்லிசொல்லி அவர் விரும்பாதவற்றைத் தவிர்க்கும் ஒரு கீழ்ப்படிவுள்ள, அன்பான மனைவியாக வெளிப்பார்வைக்குத் தோன்றும் நோறா, ஒளிப்பு மறைப்புள்ளவளாகவராகவும், தனக்குப் பிடித்தவற்றைப் பெறுவதற்காக சரசமாடக்கூடியவராகவும், தன்னைப் பற்றிப் பீற்றிக்கொள்ளும் சுயநலமிக்கவராகவும்கூட இருக்கிறார். முடிவில் கணவனின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன்னுயிரை மாய்க்கக்கூடத் துணியும் நோறா, குடும்ப நலனுக்காக அவர் செய்த தவறிலிருந்து அவரைப் பாதுகாப்பாரென கணவன்மீது அவர் கொண்டிருந்த எதிர்பார்ப்புப் பொய்த்தவுடன் கிளர்ந்தெழும் ஒரு புரட்சிகரப் பெண்ணாக மாறிவிடுகிறார். இத்தனை வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட அந்த நோறா பாத்திரத்தை அரசி விக்னேஸ்வரனைத் தவிர வேறு எவரால் செய்யமுடியும் என நினைக்குமளவுக்கு மிகச் சிறப்பாக அதை வெளிக்கொணர்ந்திருந்தார் அரசி.
•Last Updated on ••Thursday•, 16 •May• 2019 02:05••
•Read more...•
••Sunday•, 31 •March• 2019 08:56•
??- பி. பொன்னுத்துரை -??
கலை
“இலங்கையின் தமிழ் நாடக உலகில் மறக்கமுடியாத ஒரு பேசும் பொருளாக மறைந்த லடீஸ் வீரமணி திகழ்கிறார். அவரின் படைப்புகளையும் ஆளுமைகளையும் முறையாக ஆய்வு ரீதியாகவும் பதிவு செய்தால் தமிழ் நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய வீரியமிக்க பணி வெளிப்படும். அவர் தமிழ் நாடக மேடைக்கு அளித்த பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருக்கும் அந்தனி ஜீவா சுறுசுறுப்பானவர் காத்திரமான தகவல்களை தேடி அவற்றை மக்களிடையே வெளிக்கொணர்வதில் மிகவும் சமர்த்தர். சில நேரங்களில் அவற்றை ஆத்திரமாகவும் வெளிப்படுத்த அஞ்சாதவர்”.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வாராந்தம் புதன்கிழமைகளில் நடத்தும் அறிவோர் ஒன்றுகூடலில் ‘தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் அந்தனிஜீவா உரையாற்றிய கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசும் போதே இவ்வாறு கூறினார்.
கடந்த மே மாதம் 26ம் திகதி இந் நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றவர்கள் தமிழ் நாடகம் பற்றிய முழுக்கவனம் செலுத்தியதுடன் வந்தாறுமுல்லை செல்லையா போன்ற நாட்டுக்கூத்து கலைஞர்களையும் அவர்களின் கூத்துக்களையும் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வந்து அவற்றை மேடை ஏற்றி அவர்களின் திறமைகளை வெளிகொணந்தவர். பின்னர் வந்த பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்கள் அவரின் செயல்பாடு களை பின் பற்றினாரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று தனது உரையில் மேலும் தெரிவித்தார் சபாஜெயராஜா.
அந்தனிஜீவா உரையாற்றுகையில் தலைநகரில் தமிழ் நாடக மேடையில் விஸ்வரூபதரிசனம் தந்தவர் நடிகர் லடீஸ் வீரமணி என்றார்.
“தலைநகரில் தமிழ் நாடக வரலாறு தமிழ் நாடக மேடையின் முன்னோடி யும் முதல்வருமான இராஜேந்திரம் மாஸ்டர் அவர்களிடமிருந்தே தொடங்குகிறது.
இந்தியாவில் தூத்துகுடியிலிருந்து வந்து கொழும்பு மத்தி ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் குடியேறிய கத்தோலிக்க குடும்பத்தில் கலையார்வமிக்க இளைஞர் ஒருவருக்கு இசைக்கருவிகளை வாசிப்பதிலும், கத்தோலிக்கக் கூத்துக்களிலும் ஈடுபாடு இருந்தது. ஈழத்து தமிழ் நாடக வரலாறு கலையரசு சொர்ணலிங்கத்துடன் தொடங்குவதைப் போல் கொழும்பு தமிழ் நாடகமேடையின் வரலாறு இராஜேந்திரம் மாஸ்டர் என்ற கலையார்வமிக்க இளைஞனுடனே தொடங்குகிறது. டவர் ஹோல் நாடக அரங்கின் முன்னோடிகளான ஜோன் டி சில்வா, டொன் பாஸ்ரியான், சார்ள்டயஸ் ஆகியோரின் நாடகங்களும் கொழும்பில் வாழ்ந்த இராஜேந்திரன் மாஸ்டர் என்ற கலைஞரை ஊக்குவித்தன.
ஜோன் டி சில்வா என்ற கலைஞரு டன் தொடர்பு கொண்டிருந்த இராஜேந் திரம் மாஸ்டர், அவரோடிருந்த டபிள்யூ. சதாசிவத்தின் தூண்டுதலால், ஜோன் டி சில்வா அவரது மகன் பீட்டர் சில்வா ஆகியோரின் நாடக மேடை ஏற்றத் திற்குத் திரைக்குப் பின்னால் இருந்து பல பணிகளில் ஒத்துழைப்பு வழங்கி யுள்ளார். இதனால் நாடகங்களை அனுபவ ரீதியாக கற்று அறிந்து கொண்டவர்.
•Last Updated on ••Sunday•, 31 •March• 2019 09:05••
•Read more...•
••Tuesday•, 08 •January• 2019 08:05•
??– முனைவர் ச. அ. வீரபாண்டியன். -??
கலை

இளையராஜா லண்டன் சென்று சிம்பொனி இசை அமைத்தது பற்றி மட்டும் நமக்குத் தெரியும். ஆனால் சிம்பொனி இசையின் தோற்றம், பின்னணி அதன் மதச்சார்பற்ற தன்மை ஆகியவை நமக்குத் தரப்படவில்லை. இவ்விசையைப்பற்றி சில செய்திகளை முன்பு எமது இதழில் வெளியிட்டிருந்தோம். தற்போது இதைப் பற்றி பேராசிரியர் செ.அ. வீரபாண்டியன் அவர்களின் விரிவான ஆய்வுக் கட்டுரையிலிருந்து சுருக்கித் தருகிறோம்.
மனிதன், சமூகம், இயற்கை ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றியதே இசையாகும். மனிதர் தம்மைவெளிப்படுத்திக் கொள்வது (Expression) தொடர்பான சில தேவைகளின் அடிப்படையில் இசை தோன்றியது என்ற கருத்தை மேற்கத்திய இசை அறிஞர் டேவிட்டி பாய்டன் முன்வைக்கிறார். எனவே மனித சமூக வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தது இசை வரலாறு என்பது தெளிவாகிறது. இசை வரலாறு என்பது இசை பற்றிய அறிவின் வரலாறு. இசை வடிவங்களின் வரலாறு, இசை உள்ளடக்கங்களின் வரலாறு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். சமூக வரலாற்றில் செல்வாக்குப் பெற்ற இசை வடிவங்களை, அவை தொடர்பான இசை அறிவை, உள்ளடக்கத்தை ஆராய்ச்சி செய்வது சமூக ஆய்வுக்குத் துணை புரிவதாக அமையும்.
இந்தப்பின்னணியில் மேற்கத்திய இசையில் புகழும் செல்வாக்கும் பெற்ற ’சிம்பொனி’ என்ற இசைவடிவம் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. உலக அளவில் இன்றும் போற்றப்படுகிற இந்த இசை வடிவத்தின் சில இசைக்கூறுகள் இன்று தமிழ்நாட்டு இல்லங்களின் கதவு ஒலிகளில் (Door bells) சொகுசுக் கார் ஒலிகளில்(Car horns) வெளிப்படும் அளவுக்கு செல்வாக்குப் பெற்றுள்ளது. இத்தகைய புகழ் பெற்ற சிம்பொனியானது மேற்கத்திய செவ்விசையாக, (Western classical music) அடையாளம் பெற்றுள்ளது.கி.பி 18 ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய சமூக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத் தக்கவையாக பிரெஞ்சுப் புரட்சியும், சிம்பொனி இசையும் இடம்பெற்றுள்ளன. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் குறிப்பிடத்தகும் சமூக மாற்றப்போக்குகளாக ஐரோப்பாவில் தேசிய உணர்வுகளின் எழுச்சிக்கு வித்திட்ட போக்குகளாக, கிறித்துவப் பாதிரிகளின் செல்வாக்கிற்கும் ’லத்தீன்’ என்ற மொழியின் ஆதிக்கத்திற்கும் எதிரான போக்குகள் அடையாளம் காணப்படுகின்றன. அரசர்களுக்கும் மேலான அதிகாரத்தை செல்வாக்கை கிறித்துவப் பாதிரிகள் பெற்றிருந்தனர்.
கிறித்துவச் சமயச் செல்வாக்குப் பெற்ற லத்தீன் மொழியின் ஆதிக்கத்திற்கும். அன்று செல்வாக்குடன் இருந்த தேவாலய இசை (Church music) ஆதிக்கத்திற்கும் எதிரான போக்குகள், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய இசைகளில் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் வெளிப்பட்டன. பிரான்ஸ் நாட்டில் குயிலாம் துமாசாத் (Guillame de Machaut) எனும் இசை அறிஞர் தமது தாய் மொழியான பிரெஞ்சு மொழியில் மதச்சார்பற்ற (Secular கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டு பல்லிசைக் கருவியிசையில் (Polyphonic) ‘சான்சன்’ (Chanson) என்ற இசை வடிவத்தில் புதுமையான தாள இசைக் கூறுகளை வளர்த்தெடுத்து மேற்கத்திய இசை வரலாற்றில் இடம் பெற்றார். மதச்சார்பற்ற இசை வடிவமாக சான்சன் அடையாளம் காணப்பட்டது.
•Last Updated on ••Tuesday•, 08 •January• 2019 08:15••
•Read more...•
••Thursday•, 03 •May• 2018 19:07•
?? - பேராசிரியர் சி. மௌனகுரு -??
கலை
 2012 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கொழும்பில் அசோகா ஹந்தகமயின் இனி அவன் எனும் திரைப்படம் முன்னோடிக்காட்சியாக கொழும்பு புல்லர்ஸ் வீதியில் இருந்த இலங்கைத் திரைபடக் கூட்டுத்தாபன சினிமா திரைஅரங்கில் திரையிடப்படுகிறது. நண்பர் அசோகா ஹந்தகம எனக்கும் ஓர் அழைப்பு அனுப்பியிருந்தார். இடையில் சந்தித்தபோது அவசியம் வாருங்கள் என்றும் கூறியிருந்தார். திரை அரங்கினுள்ளே சிங்கள சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர்களான அசோகா ஹந்தகம, தர்மசேன பத்திராஜா, தர்மசிரி பண்டாரநாயக்க, சுனில் ஆரியரத்தினா முதலான சிங்கள சினிமா நெறியாளர்களும் ,சுவர்ணமல்லவாராய்ச்சியும் அமர்ந்திருந்தனர். (இவர்கள் அனைவரும் நாடகத்தால் எனக்கு நண்பரானவர்கள்) மற்றும் நான் அறியாத சிங்கள பிரபல சினிமா நடிகர்களும் ,சினிமா விமர்சகர்களும்,பத்திரிகையாளர்களும் பிரசன்ன விதானகே முதலான முக்கிய சிங்கள சினிமா நெறியாளர்களும் காத்திரமான சினிமா ரசிகர்களும் அரங்கை நிறைத்த வண்ணம் அமர்ந்திருந்தனர். அரங்கு நிறைந்த சபை. படம் இன்னும் ஆரம்பமாகவில்லை. திடீரென அனைவரும் எழுந்து நின்றனர். மகிழ்ச்சியோடு கர ஒலி எழுப்பினர். யாரையோ வரவேற்றது போல இருந்தது. பின் வாசல் வழியாக தொண்டு கிழவரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை அவர் மனைவி சுமித்ரா சக்கர நாற்காலிவண்டியில் வைத்துத் தள்ளிய வண்ணம் அரங்கினுள் பிரவேசித்தார்,
இப்பெரும் நெறியாளர்களும் நடிகர்களும் தம் இரு கைகூப்பி அவரைப் பக்தியோடு குனிந்து வணங்கினர். அது ஓர் உணர்ச்சிகரமான கணம். தங்களுக்கு காத்திரமான சினிமா எடுக்க வழிகாட்டிய தமது பாட்டனாரைப் பேரக் குழந்தைகள் அன்பு பொங்க மிக மரியாதையுடன் வரவேற்ற கணங்கள் அவை. அவரும் ஒரு குழந்தைபோல கை அசைத்து சக்கர நாற்காலி வண்டியிலிருந்து சற்று எழும்பி அனைவரதும் வரவேற்பை அன்போடு ஏற்றுக்கொண்டார். ஒரு முது கலைஞரை இளம் கலைஞர் தலைமுறை மதித்துப்போற்றும் அப்பண்பு என்னை வெகுவாக ஆகர்சித்தது. நாமும் அவர்களுடன் கலந்து எழுந்து நின்று பெரு மகிழ்ழ்சியோடும் மரியாதையோடும் கைதட்டி லெஸ்டரை வரவேற்றோம். குனிந்து வணங்கினோம். அவ்வணக்கமும் கைகுவிப்பும் நம் நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து வந்தவை. அந்த அளவு சினிமா ரசிகர்களின் மனதில் ஓர் பெரும் இடம் பிடித்து வீற்றிருந்தார் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்.
1960 களில் பேராதனைப்பல்கலைக்க்ழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சிங்கள சினிமாக்களுக்கு அறிமுகமானேன். அப்போது சிங்களம் புரியாவிடினும் சில நல்ல சிங்கள சினிமாக்களுக்கு எமது சிங்கள நண்பர்கள் எம்மை அறிமுகம் செய்தனர். அவற்றுள் ஒன்றுதான் லெஸ்டரின் இரண்டாவது படமான சந்தேசிய (தூது) இப்படத்தை நான் 1961 இல் பார்த்தேன். தமிழ் சினிமா பார்த்து அதன் மனோரதிய உலகில் இருந்த என்னை சந்தேசிய படம் நிஜ உலகுக்கு இழுத்து வந்தது. உள்ளூரிலிருந்த போர்த்துக்கேசிய கோட்டை ஒன்றை உள்ளூர்க் கிராமப் புரட்சிகர இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தாக்கி அழிக்கும் கதை. அந்த இளைஞர்களுள் ஒருவராக வந்து அப்போரில் இறப்பவராக மறைந்த நடிகர் காமினி பொன்சேகா நடித்திருந்தார். அதற்காக அக்கிராமம் தலைநகரில் இருந்து வந்த போர்த்துக்கேய இராணுவத்தால் ஈவு இரக்கமின்றி அழித்தொழிக்கப்படுகின்றது. அந்த அழித்தொழிப்பும் மக்கள் அவலமும் மனதில் ஆழமாகப்பதிந்தன. அந்தப்படத்தின் தயாரிப்பாளர் குணரத்தினம். அதன் இசையமைப்பாளர்கள்: முத்துசாமி , மொஹிதீன்பெக், லதாவல்பொல, தர்மதாச வல்பொல ஆகியோராவர். அதில் வந்த “போர்த்துக்கீசக்காரயா ரட்டவல்லல் யன்ன சூரயா” என்ற பாடல் சிங்கள மக்கள் நாவெல்லாம் நடமாடிய பாடல்.
•Last Updated on ••Thursday•, 03 •May• 2018 19:13••
•Read more...•
••Saturday•, 30 •December• 2017 13:20•
??- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -??
கலை
தாய்மொழியை பேசுவதற்கு கூச்சப்பட்டுக்கொண்டு ஆங்கில மோகத்தில் டாம்பீகமாக வாழ்ந்து வருபவர்கள் அதிகம். அந்நிய நாடுகளுக்குச் சென்ற சிலருக்கு தனது சொந்த நாட்டின் பெயரை சொல்தற்கே வெட்கம். அப்படிச் சென்று அங்கு தொழில் புரிபவர்கள் மத்தியில் ஒரு சிலர் சொந்த பந்தங்களை அனுசரித்துப் போவதும் அரிது.
இதையெல்லாம் தாண்டி, நாடுவிட்டு நாடு சென்று கடந்த வருடங்களாக பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் நாடான அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும் தமிழ் மீது, தான் கொண்ட பற்றினால் தமிழ் வளர்க்கும் வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து, இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியாக அதை மெருகேற்றி, உள்நாட்டுக் கலைஞர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்து உதவி செய்து வருகின்றார் அவுஸ்திரேலியாவிலிருந்து தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்கள்.
அந்த வகையில் அவுஸ்திரேலிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவு வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் "வளர்பிறை முஸ்லிம் சஞ்சிகை நிகழ்ச்சி"யை தொகுத்து வழங்கி வருகின்றது. இந்நிகழ்ச்சியானது கடந்த மூன்று வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி நேயர்களது மனம் கவரும் வகையில்; அமைந்திருக்கின்றமை கூடுதல் சிறப்பம்சமாகும்.
கலை இலக்கியம் சார்ந்த விடயங்களும், சமூக அக்கறை சார்ந்த விடயங்களும் நிகழ்ச்சியை அலங்கரித்து மேலும் வலு சேர்க்கின்றன. தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்களது வழிகாட்டுதலின் கீழ் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியில் நம் நாட்டிலுள்ள பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஜனாப். முஹம்மது எஸ். முஹ்ஸீன், வானொலிக் கலைஞர்களான ஏ.ஜே. ஷஹிம், பாத்திமா ரிஸ்வானா, மரீனா இல்யாஸ் சாபி, சைபா அப்துல் மலீக், பஸ்மினா அன்ஸார், பாத்திமா பர்ஸானா ஆகியோரின் அயராத உழைப்பில் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக தொடர்ந்தும் இடம்பெற வேண்டுமென்பதே நேயர்களது பேரவா.
•Last Updated on ••Saturday•, 30 •December• 2017 13:27••
•Read more...•
••Thursday•, 21 •April• 2016 20:33•
??- பதிவுகள் -??
கலை
தன் பாடல்களைத் தானே எழுதி, நடித்து, பாடி, தயாரித்து, கிட்டார் இசைக்கருவியினையும் வாசித்து சாதனை புரிந்த பாடகர் கிராமி விருதுகளை, ஆஸ்கார் விருதினை எனப்பல்வகை விருதுகளையும் பெற்றவர் மட்டுமல்லர் சமுதாயப்பிரக்ஞை மிக்க கலைஞரும் கூட. Rolling Stone சஞ்சிகை இவரை உலகின் சிறந்த கிட்டார் வாத்தியக்கருவியை வாசிப்பதில் 33ஆவது இடத்தில் வைத்துப்புகழாரம் சூட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எண்பதுகளில் தனது இசைக்குழுவுக்கு 'புரட்சி' (Revolution) என்னும் பெயரினையிட்டுத் தன் இசைப்பயணத்தைத்தொடர்ந்தவர் பிரின்ஸ். அக்காலகட்டத்தில் வெளியான இவரது 'ஆல்பமா'ன 'Purple Rain' , பின் அதே பெயரில் வெளியான 'திரைப்படம்' என்பவை இவரது கலையுலகப்பயணத்தின் சாதனைகள். இத்திரைப்படத்துக்காகவே அவர் ஆஸ்கார் விருதினையும் பெற்றவர். அண்மையில் பால்டிமோர் நகரில் காவற்துறையினரின் பாதுகாப்பிலிருந்த கறுப்பின இளைஞரின் மரணத்துக்குக் குரல் கொடுப்பதற்காகவும், அதனைத்தொடர்ந்து அங்கு வெடித்த ஆர்ப்பாட்டங்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதற்காகவும் 'பால்டிமோர்' என்னும் பாடலை வெளியிட்டு ஆதரவு தெரிவித்தவர் பிரின்ஸ். சமுதாயப்பிரக்ஞையுள்ள கலைஞன் பிரின்ஸின் மறைவு பெரியதோர் இழப்பே. அவருக்கு எம் அஞ்சலி! அவரைப்பற்றிய விரிவான தகவல்களைக்கீழுள்ள விக்கிபீடியா இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
•Last Updated on ••Thursday•, 21 •April• 2016 20:39••
••Monday•, 08 •February• 2016 23:34•
??நன்றி: வதிரி மன்றம் இணையம்??
கலை
- அண்மையில் மறைந்த 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' பாடலை எழுதிய எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் எழுதிய கட்டுரையிது. இதில் அவர் தான் 'சின்ன மாமியே!' பாடலை எழுதி, மெட்டமைத்த விபரங்களைப்பதிவு செய்திருக்கின்றார். இதனைப் பதிவுகள் இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள். அவருக்கு எம் நன்றி. - பதிவுகள் -
வதிரியூரில் பல்வேறு குடும்பக் குழுமங்கள் மத்தியில் யாவத்தை என்ற நீண்டகால வர்த்தகம்,கல்விப் பாரம்பத்திற்குரிய குடும்பங்களில் சீனித்தம்பி தங்கரத்தினம் தம்பதியினருக்கு மூத்த மகனாக 1939 ஆம் ஆண்டு மாசி 26 ஆம் திகதி பிறந்தேன். யாவத்தையில் வசித்த கூட்டுக்குடும்பங்களின் மத்தியில் நான் மூத்தவன். ஆண் பிள்ளை என்பதனாலும் என்னிடம் பற்றுப் பாசம் என அபிரிமித்மாகக் கிடைக்கப் பெற்ற எனக்கு தேவையான சகல வசதிவாய்ப்புக்களும் ஏற்படுத்தப் பட்டிருந்தன. கல்விப் பருவத்தையடைந்த நான் யா/தேவரையாளி இந்துவில் (அப்போதைய தேவரையாளிச் சைவ கலைஞானசபைப் பாடசாலை) ஆரம்பக்கல்வியினைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கற்றுப் பின் எனது தகப்பனார் தென்னிலங்கை மாத்தறையில் தொழில் நிமிர்த்தம் இருந்தமையால் தென்மாகாணம் மாத்தறை சென்தோமஸ் கல்லூரியில் (1946-1948) கல்விதனைத் தொடர்ந்தேன்.அதனையடுத்து யா/சென்யோன்ஸ் கல்லூரியில் 1949-1952 வரை கல்லூரி விடுதி (BOARDING) யில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்தேன். இக்காலப்பகுதியில்தான் அங்கு பதினொரு வயதுப் பிரிவு உதைபந்தாட்ட அணியில் ஒருவராக இணைந்து விளையாடினேன். இதுதான் எனது உதைபந்தாட்ட முதல் பிரவேசமுமாகும்.
•Last Updated on ••Sunday•, 17 •April• 2016 04:49••
•Read more...•
••Saturday•, 23 •January• 2016 23:15•
?? -ரிஷ்யசிருங்கர்- -??
கலை
நெருக்கடியான சூழ் நிலையில்தான் உன்னதமான கலை, இலக்கியங்கள் பிறக்கும்/ என்றான் ஒரு அறிஞன். இன்று நெருக்கடி மிக்க சூழ்நிலையில் தவிக்கின்ற யாழ் மண்ணுக்கு சமீபத்தில் சென்றபோது அந்த அறிஞனின் வார்த்தைகள்தான் எத்துணை அர்த்தம் பொதிந்தது என்பது புலனாகியது. ஷெல்கள் விழுந்தாலும், வானில் பறக்கும் ஹெலிகொப்டர் பறவைகள் "துப்பாக்கிச் சன்ன" எச்சில்களை துப்பினாலும், வரட்சிக்கு வசந்தம் வீசுமாப்போல் இலக்கிய அரங்குகளும், நூல் வெளியீடுகளும், கவியரங்குகளும் குறையேதுமின்றி நடந்து கொண்டிருப்பதை அங்கு காண முடிந்தது. இன்று தமயந்தியின் புகப்படக் கண்காட்சி - யாழ்.பீச் இன் ஹோட்டேலில் என்ற விளம்பரத்தை நாளேடு ஒன்றில் பார்த்ததும் ஆர்வம் மீதுற விரைந்தேன்.
"தமயந்தி": நேரில் சென்று பார்த்த பின்பே என் கணிப்புத் தவறாகியது. அவர் 'இளைஞர்'. ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது கரம் 'கமெரா"வை மட்டும் பிடிக்கவில்லை, இவரது பேனாவில் பிறந்த இரண்டு கவிதை நூல்களும் உண்டு. "சாம்பல் பூத்த மேட்டில்", "உரத்த இரவுகள்" ஆகிய இரண்டு தொகுப்புகளின் பிரம்மா இவர். கண்காட்சியில் இவர் வெளியிட்ட பிரசுரம் இரத்தினச் சுருக்கமாக புகைப்படக் கலையின் தாற்பரியத்தை விளக்குகிறது. அவர் சொல்கிறார்; "1839இல் புகைப்படம் தோன்றியது. இற்றைவரை காலத்தில் உலகெங்கிலுமான அறிவியற் சாதனைகளினாலும், படைப்புத்திறன் மிக்க கலைஞர்களின் பரிசோதனை முயற்சிகளினாலும் கலை என்ற வகையில் பாரிய வளர்ச்சி நிலைகளை அது எய்தியிருக்கிறது. ஆனால், இன்றும் ஈழத் தமிழர்களிடையில் புகைப்படத்துறை ஒரு கலையாக ஸ்தாபிதம் அடைந்திருக்கிறது எனக் கூற முடியாது. ஸ்ரூடியோக்களுக்குள் முடங்கியுள்ள ஒரு தொழிலாகவும், வெளியில் சில நிகழ்வுகளைப் பதிவு செய்யும் சடங்காகவுமே இது கருதப் படுகிறது. புகைப்படக் கண்காட்சிகளையோ, இத்துறைக் கலைஞர்களாகத் தமது ஆளுமைகளை ஸ்தாபித்துக் கொண்டவர்களையோ இங்கு காண முடியாமலே இருக்கிறது. எமது வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் இவை பற்றிய செய்திகளோ, கட்டுரைகளோ முக்கிய இடத்தைப் பெறுவதுமில்லை. இந்த நிலைமைகள் தொடர்ந்தும் நீடிப்பது மகிழ்ச்சிக்குரியதல்ல. எமது சமூக, பொருளாதார, அரசியற் கலாசார அம்சங்கள் புகைப்படம் என்ற கலை வடிவத்தினூடாக வெளிப்பாடு காணவேண்டும். ஆளுமை மிக்க கலைஞர்கள் உருவாக வேண்டும்."
•Last Updated on ••Saturday•, 23 •January• 2016 23:53••
•Read more...•
••Friday•, 01 •May• 2015 21:07•
??- ரதன்,-??
கலை
மே மாதம் இரண்டாம் திகதி பதினோராவது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகின்றது. இவ் விழாவில் சுமார் பன்னிரண்டு குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. போருக்குப் பின்னரான இலங்கை வாழ்வியலையும், புலம் பெயர் வாழ்வியலையும் கருவாக பெரும்பாலான படங்கள் கொண்டுள்ளன. விழாவிற்கு வருகை தந்து இப் படைப்பாளிகளை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சிறப்பு விருந்தினராக அம்சன் குமார் கலந்து கொள்கின்றார்.
இடம்: JC’S Group Hall, 1686 Ellesmere Road (McCowan and Ellesmere) | காலம்: 12.00 p.m to 5.00p.m | அனுமதி $5
ரதன், சுயாதீன திரைப்பட கழகம், கனடிய திரைப்பட மேம்பாட்டு மையம் சார்பாக
416-450-6833, 416-731-4953
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•Last Updated on ••Friday•, 01 •May• 2015 21:19••
••Monday•, 30 •March• 2015 23:27•
??- விக்கிபீடியா -??
கலை
[ ஓவிய்ர் வான் கோவின் பிறந்த தினம் மார்ச் 30. அதனையொட்டி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. உண்மைக்கலைஞன். வாழ்வின் சவால்கள் எவையும் அவனது கலையார்வத்தைத்தடுக்கவில்லை. இங்கு க்லைஞர்கள் எதைச்செய்தாலும் முதல் கேள்வி அதைச்செய்வதால் ஏதாவது வருமானம் வருகிறதா? என்பதுதான். வான் கோ பொருளியல், உளவியற் சூழல்களை மீறிப்படைப்புகளைத்தந்தவன். பிரமிக்க வைக்கிறது. - பதிவுகள் ]
வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்கள் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். இவர் முதலில் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களை இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.
இளமை வின்செண்ட் வில்லியம் வான்கோ நெதர்லாந்தில் உள்ள குரூட் சுண்டெர்ட் எனுமிடத்தில் 1853-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். வான்கோ பிறப்பதற்கு முன்பே சரியாக ஓராண்டுக்கு முன்னர் அதே தேதியில் பிறந்த அவரது அண்ணன் சில வாரங்களில் இறந்து போனார் எனவே அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியிருந்தது. அந்த மரணத்திற்கு பின் பிறந்ததால் அண்ணனுக்கு வைத்த பெயரையே அவருக்கும் வைத்தனர்.[note 1] இது தெரிந்தபோது வான்கோவுக்கு ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை ஏற்படத் தொடங்கியது. அண்ணன் பெயரை தாங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் அதற்கு காரணமாயிருந்திருக்கலாம். வான் கோவின் தந்தை தியோடரஸ் வான்கோ ஒரு மதபோதகராக இருந்தார் ஓவியமும் மதமும் இவரது குடும்பத்தில் இரு முக்கியப்பணியாக இருந்தது. வான்கோவின் சகோதரர் தியோ வான்கோ ஒரு புகழ்பெற்ற ஓவியராவார். இவர் 1857, மே 1 ஆம் நாள் பிறந்தார். இவரது மற்றொரு சகோததரர் கோர். வான்கோவுக்கு சகோதரர்களத் தவிர எலிசபெத், அன்னா, வில்லிமினா என்ற மூன்று சகோதரிகளும் இருந்தனர். அதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை. தாழ்வு மனப்பான்மையும், குடும்ப வறுமையும் வான் கோவை முன்கோபியாகவும், முரடனாகவும் மாற்றியது. தேவலாயத்தில் உபதேசம் செய்யும் தந்தையால்கூட வான் கோவை அடக்க முடியாமல் போனது.
•Last Updated on ••Wednesday•, 15 •April• 2015 17:01••
•Read more...•
••Saturday•, 07 •March• 2015 00:23•
??- குரு அரவிந்தன் -??
கலை
சுப்பர் சிங்கர் ஜ+னியர் - 4 இன் முடிவுகள் வெளிவந்த போது ஆசை காட்டி மோசம் செய்து விட்டார்கள் தொலைக்காட்சியினர் என்று எல்லோருமே புலம்பினார்கள். ஆனால் ஒவ்வொருவரின் புலம்பலும் வித்தியாசமானவையாக இருந்தன. ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்பார்த்தபடியே நடந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் எல்லாமே தலை கீழாக நடந்து முடிந்து விட்டது. இது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சிதான், இதைப் பெரிது படுத்தக்கூடாது என்று நேயர்கள் நினைத்தாலும், இத்தனை மாதங்களாக நடுவர்களை வைத்து மிகவும் சிறப்பாக நடத்திய ஒரு நிகழ்ச்சியைக் கடைசி நேரத்தில் கோட்டை விட்டு விட்டார்கள் என்பதே பலரின் கருத்தாகவும் இருக்கின்றது. போட்டி என்று வந்தால் நேர்மையாக நடக்க வேண்டும் நடுவர்களின் தீர்ப்பபை ஏற்கவேண்டும். இதுதான் சரியான, நேர்மையான போட்டியாக இருக்கும். இதைத்தான் குழந்தைப் பருவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம், இதைத்தான் சிறுவர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றோம். அந்த நேர்மையைத்தான் தொலைக்காட்சி நிறுவனத்தினரிடம் நேயர்களும், சிறுவர்களான போட்டியாளர்களும் எதிர்பார்த்தார்கள். 2010 ஆம் ஆண்டு நடந்த சுப்பர் சிங்கர் ஜூனியர் - 2 இல் அதிரடியாக அஜித்தைத் தெரிவு செய்து எப்படி சுதப்பினார்களோ அதே தவற்றை மீண்டும் செய்ய மாட்டார்கள் என்று நேயர்கள் எதிர்பார்த்தார்கள். மீண்டும் ஒரு தவறுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது வேறாகி விட்டது. பொருளாதார ரீதியாகப் பார்ப்போமேயானால் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வருமானம் தான் முக்கியம் என்பதை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். முடிவெடுப்பது அவர்களாகையால், நேயர்களாகிய நாம் விருப்பமோ இல்லையோ அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
•Last Updated on ••Tuesday•, 10 •March• 2015 03:57••
•Read more...•
••Tuesday•, 27 •January• 2015 23:47•
??- குரு அரவிந்தன் -??
கலை
சுப்பர் சிங்கர் ஜுனியர் - 4 போட்டி இம்முறை சர்வதேசத் தமிழர்களின் பார்வையை வெகுவாகத் திருப்பியிருக்கின்றது. காரணம் கனடியத் தமிழரான ஜெசிக்கா யூட் அதில் கலந்து கொண்டு சிறந்த பாடகிகளுள் ஒருவராக முன்னணியில் நிற்பதேயாகும். ஏற்கனவே கனடாவில் இருந்து பலர் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சண் தொலைக்காட்சியில் எனது தமிழ் வகுப்பில் தமிழ் கற்ற மாணவனான சுபவீன் சென்ற வருடம் முதலிடத்தைப் பெற்று எமக்குப் பெருமை தேடித்தந்தார். யார், எங்கேயிருந்து வந்தார் என்பதைவிட, திறமைக்குச் சண் தொலைக்காட்சி அங்கே முதலிடம் கொடுத்திருந்ததைப் பலரும் பாராட்டியிருந்தார்கள். அது போலவே கனடாவில் இருந்து பாடக, பாடகிகளான எலிசபெத் மாலினி, விஜிதா, மகிஷா, சரிகா, சாயிபிரியன் போன்றவர்களும் சென்ற வருடங்களில் விஜே தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். விஜே தொலைக்காட்சி மூலம் தங்கள் திறமையைக் காட்டியிருந்தனர். இம்முறை 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஜெசிக்காவிற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. அதை எந்த அளவிற்கு அவர் பயன் படுத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
•Last Updated on ••Wednesday•, 28 •January• 2015 00:13••
•Read more...•
••Tuesday•, 23 •September• 2014 20:04•
??-கலா (இலண்டன்) -??
கலை
 தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் இலங்கையில் 1978 இல் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து இயங்கும் ஒரே தமிழ் நாடக அமைப்பு; இலண்டனில் மையம் கொண்டு உலகில் பல நாடுகளிலும் நாடக விழா நடத்தி வருகின்றது . எதிர் வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் வருடாந்த லண்டன் நாடக விழா வடக்கு இலண்டன் பகுதியிலே வாத்போர்ட் பம்ப் ஹவுஸ் அரங்கில் நிகழவிருக்கிறது. இவர்களது இந்த விழாவில் இரண்டு வெவ்வேறு சுவை தரும் நாடகங்கள் மேடையேறுகின்றன. முதலாவதாக லண்டன் தமிழ் நாடக பள்ளி சிறுவர்கள் நடிக்கும் "அரசனின் புத்தாடை ' என்ற மாவை நித்தியானந்தனின் நாடகம் இடம் பெறுகின்றது. அடுத்து மிகவும் காத்திரமான உலகப் புகழ் பெற்ற "சமூக விரோதி " என்ற நாடகம் பேராசிரியர் சி சிவசேகரம் அவர்களின் பிரதியாக்கத்தில் அரங்கேறுகிறது. இரு நாடகங்களையும் தமிழ் நாடக உலகு நன்கு அறிந்த நெறியாளர் க பாலேந்திரா நெறிப்படுத்துகிறார்.
அரசனின் புத்தாடை நாடகம் ஒரு இசை கலந்த நாடகமாக, லண்டனில் பாலேந்திரா -ஆனந்தராணி ஆகியோரால் கடந்து பத்து வருடங்களாக நடத்தப் படும் இலண்டன் நாடகப் பள்ளி மாணவர்கள், அழகு தமிழில் முறையான அரங்கப் பயிற்சியுடன் , நிகழ்த்தும் வர்ணங்கள் நிறைந்த மேடை நிகழ்வு. நகைசுவையுடன் கூடிய நாடகத்தில் , லண்டன் சிறுவர்கள் ஆடி பாடி கலகலப்பாக தோன்றுகின்றனர். துசி தனு சகோதரிகள் மற்றும் ஜனன இசை வழங்க விஜயகுமாரி , தர்ஷினி ஆகியோர் பாடல்களை பாடுகின்றனர் நடக்க ஆசிரியர் மாவை நித்தியானந்தன் இது பற்றி கருத்து தெரிவிக்கும் போது பின் வருமாறு கூறுகிறார்:
•Last Updated on ••Wednesday•, 24 •September• 2014 05:38••
•Read more...•
••Wednesday•, 12 •March• 2014 19:45•
??- த.சிவபாலு -??
கலை
 கலைஞர்கள் எமது சமுதாயத்தை இன்புற வைப்பவர்கள் என்னும் அடிப்படையில் பிறக்கும்போதே கலைமகளின் அருளைத் தமதாக்கிக்கொண்டு பிறக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக ஈழத்துக் கலைஞர்களும் திகழ்ந்துள்ளார்கள். சமுதாயத்தில் மிகப் பிரபலமானவர்களாகவும், மக்களால் மிகவம் மதிக்கப்பட்டவர்களாவும் அவர்கள் காணப்பட்டுள்ளனர். கலைரசிகர்களால் நன்கு காமுறப்பட்டவர்கள், பெருமைப் படுத்தப்பட்டவர்கள் நல்ல கலைஞர்கள். இசை, நடனக் கலை மரபில் ஈழத்தில் தலைசிறந்துவிளங்கிய கலைஞர்களுள் நடனக் கலை ஆசான் அமரர் ஏரம்பு சுப்பையா முக்கியமானவர். அவர் விடுத்துக் சென்ற கலை இன்றும் கொடிகட்டிப் பறக்கின்றது.
ஈழத்திருநாடு பன்நெடுங்காலமாக கலை இலக்கிய வளர்ச்சியில் தனக்கான ஒரு தனியிடத்தைப் பெற்றுவந்துள்ளது. பரதநாட்டியம், கிராமியக்கலைகள், நாட்டுக்கூத்துகள் என்பன தமிழரின் தனித்துவம் பேணப்பட்டுவந்துள்ளமையை வரலாறு எமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொலநறுவையில் உள்ள சிவன் ஆலயத்திலும், கந்தளாயில் இருந்து விஜயராஜ ஈஸ்வரத்திலும் தேவதாசியாட்டம் அல்லது சதுராட்டம் எனப்படும் நாட்டிய வகைகள் இறை பக்தர்கள் அல்லது தாசர்கள் எனப்படுவோரால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன என்பதனை ஈழத்திற்கு வருகை தந்திருந்த மொறோக்கோ நாட்டுப் பயணியாகிய இபன்பட்டுட்டா 1244ல் குறிப்பிட்ட வரலாற்றுக்குறிப்பு, மற்றும் இங்கு பதியப்பட்டுள்ள கல்வெட்டுக்களாலும் அறியமுடிகின்றது. இபன்பட்டுட்டாவின் குறிப்பில் 500க்கு மேற்பட்ட தேவரடியார்கள் இருந்துள்ளனர் எனக்குறிப்பிட்டுள்ளார். சிங்கள இலக்கியங்களும் நடன, கலை நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புக்கள் இந்து ஆலயங்களில் இடம்பெற்றுள்ளமையை குறிப்பிட்டுள்ளன.
•Last Updated on ••Wednesday•, 12 •March• 2014 23:14••
•Read more...•
••Monday•, 10 •March• 2014 23:08•
??- Dr Vasumathi Badrinathan -??
கலை
The earliest women I saw and heard in music and who marked my memories profoundly were M.S. Subbulakshmi and D.K. Pattammal. They were iconic figures then already, when I discovered them in my childhood. While they enjoyed much in common, they were also sharply in contrast. Both were towering and well respected women on the music front. Both enjoyed large and faithful audiences, sang to full houses. Both shone in their brilliant diamonds and Kanchipuram silks. They remained all through loyal to the traditional Tamil-lady look, their sarees drawn over the shoulders. Pattammal was pleasant looking while MS was strikingly beautiful. MS had her faithful retinue on stage till the end. Pattammal had her devoted brother and outstanding musician in himself, D.K. Jayaraman with her in their duet performances, till his death separated the pair. Pattammal’s spouse obliged her by granting her permission to carry on her career. MS’ spouse went out of his way to chart his wife’s course. Both lent their voices to films and immortalised several classical lyrics. While MS became an emblematic figure worldwide synonymous with her nightingale-like voice and the trance that she spun her audience into with her soothing bhajans and multilingual compositions, Pattammal remained the unchallenged goddess of laya, of emotion-laden singing, of a clarity and articulation hitherto unmatched and her devotion to Tamil lyrics.
•Last Updated on ••Monday•, 10 •March• 2014 23:13••
•Read more...•
••Saturday•, 01 •March• 2014 02:46•
??- முல்லைஅமுதன் -??
கலை
ஈழத்தின் வடபுலக் கிராமமான கரவெட்டியில் 10/07/1944இல் பிறந்து கலை உலகின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் அமரர்.கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்.எழுத்து,நடிப்பு தன் மூச்சாகக் கொண்டவர்களில் இவரும் ஒருவர்.தொலைபேசியில் பேசுகையில் அதிராமல்,நிதானமாகக் கேட்டபடி அமைதியாக பதில் சொல்வது அவரின் பழுத்த அனுபவத்தைச் சுட்டி நின்றன.யாழ்ப்பாணத்தில் நாடகம்,நடிப்பு என அலைந்த நாட்களில் யாழ்நகர விளம்பர நிறுவனங்களான பெஸ்டோன்,மணிக்குரல் விளம்பரசேயினரின் ஒலிபரப்பில் அடிக்கடி பயணிக்கையில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். பயணிக்கும் போதும் பயணிகளை மகிழ்வதற்காக பேரூந்தின் சாரதியால் ஒலிபரப்படும் ஒலிநாடாவும் பயண களைப்புத் தெரியாமல் குதூகலமாய் திரிந்த காலங்களும் உண்டு.பின் இலங்கை வானொலியில் -அண்னை றயிற், ஒலிக்கையிலும் எங்கடை பொடியன் என்று என் தந்தை சொல்லி மகிழ்ந்ததி இன்றும் நினைக்கத் தோன்றுகிறது.பிறகு கே.எம்.வாசகரின் இயக்கத்தில் சில்லையூராரின் அறிவிப்பில் ஒலிபரப்பாகிய 'தணியாத தாகம்' அந் நாட்களில் எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது.இன்றுஎப்படி சின்னத்திரைகள் நம்மவர்களைக் கட்டிப்போட்டதோ அதே போல அந் நாட்களில் இலங்கை வானொலி நாடகங்கள் நம்மை ஆட்கொண்டிருந்ததை மறக்கமுடியாது. தணியாததாகத்தில் சோமு என்ற பாத்திரமே மக்கள் மனதில் இடம்பிடித்தது. யாழ்ப்பாணத்து வழக்கு மொழியை மேடையில் அற்புதமாக கொழும்பு மேடைகளில் ஒலிக்க வைத்ததில் வரணியூரானுக்கும், கே.எஸ்.பாலச்சந்திரனுக்கும் முக்கிய இடம் உண்டு.அதே போல கமலாலயம் மூவீஸாரின் 'வாடைக்காற்று' திரைப்படத்திலும் முக்கிய பாத்திரமேற்று நடித்து திரையிலும் ஜொலித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலும் கடமையாற்றியபடி, மேடை,வானொலிநிகழ்விலும் பங்குபற்றினார்.
•Last Updated on ••Saturday•, 01 •March• 2014 02:59••
•Read more...•
••Tuesday•, 17 •September• 2013 22:27•
??- வி. ரி. இளங்கோவன்-??
கலை
அந்த நாள் இன்றும் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது..! 1972 -ம் ஆண்டு யாழ்ப்பாணம் புதிய வின்சர் திரையரங்கில் 'குத்துவிளக்கு" என்ற ஈழத்துத் திரைப்படம் வெளியாகியது. அதனைப் பார்ப்பதற்கு நண்பர்களுடன் போயிருந்தேன். திரைப்படம் 'ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே.." என்ற பாடலுடன் ஆரம்பமாகியது. கணீரென்ற குரலில் அந்தப் பாடல் தொடங்கியதும் 'ஆகா… அற்புதமான குரலில் பாடல் ஒலிக்கிறதே…" என வியந்தேன். நண்பர்களுடன் சேர்ந்து கைதட்டி மகிழ்ந்தது இன்றுபோல் எனக்கு ஞாபகமிருக்கிறது..! ஆமாம்.. அற்புதமாக அந்தப் பாடலைப் பாடியவர்தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்று இசைத் தயாரிப்பாளராக விளங்கிய சங்கீத பூசணம் எம். ஏ. குலசீலநாதன். பின்னர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிராமிய நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக விளங்கிய எமது குடும்ப நண்பர் ஏ. சிறிஸ்கந்தராசாவின் கொழும்பு - நாரங்கன்பிட்டி தொடர்மாடி வீட்டில் பலமுறை குலசீலநாதனைக் கண்டு பேசிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வேளைகளில் எமது வேண்டுகோளுக்கிணங்க அவர் பல பாடல்களைப் பாடுவார். சகோதரர் வி. ரி. தமிழ்மாறன் அவரிடம் எழுதிக்கொடுத்திருந்த 'கீற்றோலைத் தென்றலிலே கீதமொன்று கேட்குதையா.." போன்ற சில மெல்லிசைப் பாடல்களையும் அவர் பாடிக்காட்டுவார். நாம் அவரது இசைமழையில் நனைந்து மகிழ்வுறுவோம். அவர் எங்கள் அன்புக்குரிய 'பல்கலை வேந்தர்" சில்லையூர் செல்வராசனின் உற்ற நண்பர். இருவரும் ஒன்றாகவிருந்து பேசிக்கொள்வதை, பாடி மகிழ்வதைப் பார்ப்பதே ஆனந்தம். சில்லையூர் கவித்தூறல் சொட்ட, இவர் அதனை இசைமழையாகப் பொழிவார். ஆகா… அதனைக் கேட்பது தான் எத்தனை ஆனந்தம்..!
•Last Updated on ••Tuesday•, 17 •September• 2013 22:39••
•Read more...•
••Friday•, 19 •July• 2013 17:49•
??- நக்கீரன் -??
கலை
கவிஞர் வாலி நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்து விட்டார். அகவை 81 ஆண்டுகள் வாழ்ந்த அவர் படுக்கையில் வீழ்ந்த 4 நாள்களில் இவ்வுலக வாழ்வை நீக்கி எங்கோ பறந்து விட்டார். தனது மரச் சுரங்கத்தில் பூட்டி வைத்திருந்த பல்லாயிரம் பாடல்களோடு சென்றுவிட்டார். கவிஞர் வாலி இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்ற ஆதங்கம் ஒரு புறம் இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததே பெரிய சாதனை. அவரை தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு அவரது தோற்றத்தில் முதுமை காணப்படவில்லை. அவரது நகைச் சுவைப் பேச்சில் தடுமாற்றம் இல்லை. குரல் முன்னர் போல் கணீரென்று இருந்தது. மகாகவி பாரதி தனது 39 ஆவது அகவையில் இயற்கை எய்தினார். இருந்தும் மிகக் குறைந்த வாழ்நாளில் பாரதி வான் புகழ் கவிதைகள் படைத்தார். அவர் பதித்த சுவடுகள் காலத்தால் அழியாதவை. புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கில்லையெனும் வசை அவராற் கழிந்தது என்று அவரே சொன்னார். பாரதியாரின் பாஞ்சாலி சபதம் தாகூரின் கீதாஞ்சலியைக் காட்டிலும் உயர்ந்தது. தனக்குப் பின் தமிழ்க் கவிதைத் தளத்தில் ஒரு நீண்ட பரம்பரையைத் தோற்றுவித்தவர் பாரதியார்.
•Last Updated on ••Friday•, 19 •July• 2013 18:01••
•Read more...•
••Friday•, 31 •May• 2013 17:54•
??- ஆல்பர்ட், விஸ்கான்சின்,அமெரிக்கா -??
கலை
அன்று.....

முதன் முதலாக சீனாவில் 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வானொலியின் குரல் ஒலிக்கத் துவங்கியது எனலாம். சீனாவின் குறிப்பிட்டசில நகரங்களில் அரசியல் சூழலுக்காகவே உதயமான வானொலி ஒலிபரப்பாக இருந்தது. சீன கம்யூனிசக் கட்சி மார்ச் மாதம் 1940ல் மாஸ்கோவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒலியலைபரப்பிகளின் ஊடாக சோதனை முயற்சியைத் துவங்கியது. ஷின்ஹுவா புதிய சீன வானொலி ( Xinhua New Chinese Radio (XNCR) ) என்ற பெயரில் யான்னானிலிருந்து 1940ம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள்30ம் நாள் ஒலிக்கத் துவங்கியது. இந்த வானொலியானது 1945களில் இதன் நிகழ்ச்சி நிரல் ஒழுங்குபடுத்தப்பட்டுச் செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், போர் குறித்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றோடு கலை மற்றும் இலக்கியஞ்சார்ந்த நிகழ்ச்சிகளை பரவலாக ஒலிபரப்பத்துவங்கியது.
•Last Updated on ••Friday•, 31 •May• 2013 18:12••
•Read more...•
••Saturday•, 11 •August• 2012 22:41•
??BY MANJULA WEDIWARDANE??
கலை
In 1997, Chandragupta Thenuwara coined the term 'Barrelism' as a way of conceptualizing his opposition to militarization. As the barrels kept invading city squares, urban streets and many other public spaces, he converted the barrels painted in camouflage into works of art. Instead of artistic reproduction of landscapes, he created 'barrelscapes' using the empty exhibition spaces of the art galleries. "If someone asked me to portray the present state of Sri Lankan society, I have nothing to draw but barrels. Barrels have occupied the space around us. Barrels have blocked my view. How can I paint the sky as it hardly can be seen?" he asked during an interview in 1999. Since then more than a decade has elapsed and the war has paused. "We now live in a post-barrelist stage, surrounded by new symbols of militarization" he said to JDS, while his latest exhibition of sculpture and drawings - 'The Monument and Other Works' - is being held at Lionel Wendt Art Gallery in Colombo. Returning to the island in 1993 after completing his postgraduate studies at the Moscow State Art Institute, Thenuwara became head of the Vibhavi Academy of Fine Arts - better known as VAFA - apart from lecturing at the Faculty of Aesthetic Studies at the Colombo University. He was an artist in residence at CAIR, Centre for Art International Research at Liverpool John Moores University and served as a Board Member of the Architectural Association Foundation in London in 1996-97.
•Last Updated on ••Saturday•, 11 •August• 2012 22:51••
•Read more...•
••Friday•, 29 •June• 2012 05:45•
??- ஊர்க்குருவி -??
கலை
விஜய் தொலைக்காட்சியின் 'ஏர்டல் சுப்பர் சிங்கர் ஜூனியர்' நிகழ்ச்சியின் மூலம் உலகத் தமிழர்களின் மத்தியில் மிகுந்த ஆதரவையும், அன்பையும் பெற்ற இளைய பாடகி மகிஷாவின் இசைப்பயணம் நிறைவு பெற்றாலும் , அந்நிகழ்ச்சியில் முதல் 12 இடங்களில் ஒருவராகத் தேர்வுசெய்யப்பட்டு தன் பாடும் ஆற்றலை வெளிப்படுத்திய மகிஷாவின் ஆற்றலும், முயற்சியும் பாராட்டுக்குரியன. அவரது இசைப்பயணம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அங்கு எஞ்சியிருந்த ஏனைய பாடகர்களும், பெற்றோர்களும் கண்ணீர் விட்டழுதனர். அது அவர்களுக்கிடையில் நிலவிய அன்பினை வெளிப்படுத்தியது. நடுவர்களாகச் செயற்பட்ட பிரபல பாடகர்களான 'சின்னக்குயில்' சித்ரா, 'மாங்குடி' சுபா, மனோ ஆகியோர் எழுந்து நின்று தங்களது வாழ்த்தைத் தெரிவித்ததுடன், கனடாவின் சிறந்த பாடகியாக அவரை குறிப்பிட்டும் மகிழ்ந்தனர். மகிஷா தன் முயற்சியையும், திறமையையும் மூலதனமாக்கித் தமிழக மக்களை, உலகத் தமிழ் மக்களைக் கவர்ந்தார். அனைவருமே அவரைத் தம்முள் ஒருவராக இனங்கண்டார்கள். மகிஷாவின் முயற்சிக்காகவும், ஆற்றலுக்காகவும் அவரைப் பாராட்டுகின்றோம்.
•Last Updated on ••Saturday•, 30 •June• 2012 06:34••
••Wednesday•, 23 •May• 2012 16:42•
??- மு.ஹரிகிருஷ்ணன் -??
கலை
அன்புடையீர் வணக்கம், கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல, அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள தொல்கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு.மரபார்ந்த தொல்கலைக்ககூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும், அக்கறையையும், அதிகாரங்களுக்கு எதிரான போர்க்குணங்களையும், கலகக்குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெறவேண்டியிருக்கிறது. அத்துடன் ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வேறெந்த கொம்பு முளைத்த கலையிலக்கிய உற்பவனங்களும் தந்து விட முடியாது.
•Last Updated on ••Wednesday•, 23 •May• 2012 17:00••
•Read more...•
••Monday•, 26 •March• 2012 02:52•
?? கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை), தடாகம் சர்வதேச கலை இலக்கிய வட்டம் -??
கலை
-வானொலி என்றால் அது இலங்கை தான். அது போல வானொலிக் குரலுக்குச் சொந்தக்காரி மதிப்பிற்குரிய அம்மா திருமதி இராஜேஸ்வரி சண்முகம். குழல் இனிது, யாழ் இனிது, மழலைச்சொல் கேளாதவர், ஆனால் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது குரலில் ஒரு ஈர்ப்புச் சக்தி இருக்கின்றது.எழுத்துக்கள் உச்சரிக்கும் பொழுது வார்த்தைகள் சகா வரம் பெறுகின்றன. சொல் நயம், ஒலி நயம், அதற்கெல்லாம் மேலாக இயற்கை கொடுத்த குரல் நயம் அதை உபயோகிக்கக் கூடிய "சூழ் கலை நயம்". வானொலி செய்த பாக்கியமோ, நேயர்கள் செய்த பாக்கியமோ, இலங்கைசெய்த பாக்கியமோ, எல்லாவற்றிக்கும் மேலாக நாம் கேட்கும் பாக்கியம்! மழையின் சாரல்களை அவரின் குரலில் செவிமடுக்கின்றோம். அலங்காரத்தின் அலங்காரமாய் ஜொலிக்கிறார் அவர் குரலால் கேட்கிறோம்.
•Last Updated on ••Monday•, 26 •March• 2012 14:27••
•Read more...•
••Saturday•, 25 •February• 2012 18:46•
?? - க.மோகனதாசன், விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை -??
கலை
 ஒரு கலைஞன் தான் பார்த்து கேட்டு அனுபவித்த விடயங்களை தனக்கு கை வந்த ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் போது அது கலையாகின்றது. கலைஞர்களுக்கிடையே வெளிப்படுத்தும் முறையிலும் கையாளும் உத்திகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களது அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் சூழலினாலும் வேறுபடுகின்றது. ஒரு கலைப்படைப்பில் சமூகத்திலுள்ள பிரச்சினைகளும் அதிலிருந்து மீள்வற்கான வழிமுறைகளும் கூறப்படும் போது அதன் பெறுமதி இன்னும் அதிகரிக்கின்றது. கலையாக்கங்களில் சமூகத்தின் நிலைமைகளை பிரதிபலிப்போரில் பழைய கதைகளுக்கு புதிய வியாக்கியானங்களையும் புதிய கருத்தேற்றங்களையும் செய்வோரும் உள்ளனர். இது தழுவலாகவோ அல்லது அதே கதையமைப்புடன் சிறு மாற்றத்தினை மேற்கொள்ளும் முறைமையுடையதாகவோ அமைந்து காணப்படும். இராமாயணம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பல விடயங்களை உள்ளடக்கி யுள்ளது. இதனால்தான் பல இராமாயணங்கள் (கம்பர், வால்மீகி, வசிட்டர், போதாயினர், துளசி, சம்பூர்ணர்,….இராமாயணங்கள்) உருவாயின. இராமாயணம் சமூகத்திற்கான பல்வேறுபட்ட கருத்துக்களை முன் வைக்கின்றது. அந்தவகையில் இராமாயணக் கதையினை அடிப்படையாகக் கொண்டு, 2010ல் இராமாயணத்தைத் தழுவியதான கதையமைப்புடன் மணிரத்தினத்தின் இராவணணனும் (சினிமா) இராமாயணத்தின் யுத்த காண்டத்தை அடிப்படையாகக் கொண்டு மௌனகுருவின் இராவணேசனும்(நாடகம்) படைத்தளிக்கப்பட்டுள்ளன.
•Last Updated on ••Saturday•, 25 •February• 2012 19:18••
•Read more...•
••Tuesday•, 04 •October• 2011 20:09•
??- ஊர்க்குருவி -??
கலை
அண்மையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தாரால் நடத்தப்பெற்ற , புகழ் பெற்ற நிகழ்சிகளிலொன்றான 'சுப்பர் சிங்கர் 3' இறுதி நிகழ்வின் முடிவுகளையிட்டு நீதிபதிகளாகவிருந்த பின்னணிப் பாடகர்கள் சிலர் அதிருப்தியடைந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இவர்கள் எல்லோரும் ஒன்றினை மறந்து விட்டார்கள். மேற்படி 'சுப்பர் சிங்கர் 3' நிகழ்வில் பங்குபற்றிய அனைவரினதும் முக்கியமான கனவு தமிழ்ச் சினிமாவின் பின்னணிப் பாடகர்களிலொருவராக ஆவதுதான். அந்த அடிப்படையில் மக்களிடத்தில் மேற்படி பாடகர்கள் தங்கள் பாதிப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இறுதியில் மக்களின் வாக்களிப்பில் மேற்படி நிகழ்வின் வெற்றியாளரைத் தெரிவு செய்திருப்பது ஒருவிதத்தில் நியாயமானதும் கூட. ஆனால் ஒருவருக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் தெரிவு செய்திருந்தால் அதுவே நியாயமானதாகவிருந்திருக்கும். இருந்தாலும் நீதிபதிகளாகவிருந்தவர்கள் ஏன் நல்ல பாடகரான சத்தியபிரகாஷ் மக்களின் அமோகமான வாக்குகளைப் பெறவில்லை என்பதை ஆராய்வதும் நல்லதே.
•Last Updated on ••Tuesday•, 04 •October• 2011 20:42••
•Read more...•
••Tuesday•, 14 •June• 2011 18:05•
??- கே.எஸ்.பாலச்சந்திரன் ??
கலை
மீள்பிரசுரம்!
 கொழும்பில் 60களில் நடைபெற்ற நிழல் நாடகவிழா என்னைப்போன்ற நாடக அபிமானிகளுக்கு நல்விருந்தாக அமைந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தினமும் ஒன்றாக புகழ்பெற்ற இயக்குனர்களின் நாடகங்கள், சிறந்த கலைஞர்களின் பங்களிப்புடன் மேடையேறின. அவற்றில்; ஒன்றுதான் நடிகவேள் லடிஸ் வீரமணி இயக்கி நடித்த :'சலோமியின் சபதம்' பைபிளில் வரும் சலோமியின் கதையை ஒஸ்கார்வைல்ட் நாடகமாக எழுதியிருந்தார். அதுவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு லடிஸ் வீரமணியால் மேடையேற்றப்பட்டது. பார்த்தவர்கள் முற்றுமுழுதாக அந்த நாடகத்தின் தன்மையினால் கவரப்பட்டார்கள். ஆரம்பக்காட்சியில் ரோமாபுரி வீரர்கள், கலீலி வீரர்கள் கவர்ச்சியான ஆடை, அணிகலன்களுடன் மேடையில், நிரம்பியிருந்தார்கள். ஏரோது மன்னனின் மாளிகையின் முன்னுள்ள புற்றரையில் கைகளில் மதுக்கிண்ணங்களுடன் அவர்கள் பேசிக்கொள்வதும், உலாவிவருவதும் மிகச்சிறந்த நெறியாள்கையின் வெளிப்பாடாக சீருடன் இருந்தது. ஓஸ்கார் வைல்ட்டின் வசனங்களை அவர்கள் அழகு தமிழில் பேசினார்கள். நிலவைப் பார்த்து அவர்கள் பேசினார்கள். சிரியநாட்டு இளைஞன், நிலவு இளவரசி சலோமி போல இருப்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஹேரோதியா அரசியின் பணியாளோ 'நிலவு மரணக்குழியிலிருந்து எழுந்து வந்ததுபோல இருக்கிறது. அது சாவின் துர்க்குறி' என்கிறான். அவர்களுக்கு நடுவே கம்பீரமாக நடந்து வரும் ஏரோது அன்ரிபாஸ் (லடிஸ் வீரமணி) என்ற குறுநிலமன்னன். அவனது பிறந்தநாளைக் குறிக்குமுகமாக நடனமாடும் அவனது பெறாமகள் சலோமி(சந்திரகலா). பாதாளச்சிறையில் இடப்பட்டபோதும், அஞ்சாமல் யேசுவின் வருகையைக்கூறும் ஜோவான் (கலைச்செல்வன்) போன்ற பாத்திரங்கள். தனது பெறாமகளின் ஆட்டத்தினால் மகிழ்வுற்ற ஏரோது அன்ரிபாஸ், 'நீ எதை விரும்புகிறாயோ.. அது உன்னதாகட்டும்' என்று சலோமிக்கு சொல்கிறான். தனது தாயின் தூண்டுதலினால், தனது ஆட்டத்திற்கு பரிசாக ஜோவானின் தலையை ஏரோதுவிடம் கேட்டுப் பெறுகிறாள் சலோமி.
•Last Updated on ••Tuesday•, 14 •June• 2011 18:14••
•Read more...•
••Sunday•, 08 •May• 2011 00:16•
??ROM News??
கலை
A North American premiere, this exhibition of original vintage Bollywood cinema artworks features the greatest Bollywood celebrities and award-winning films from India's recent film history. These pieces embody the quirky and colourful style of India's cinema culture, which holds a growing fascination in the West, and is a deep cultural tradition in the East. With an emphasis on cinema showcards from the 1950s to the 1980s, the exhibition includes more than 60 original showcards from the Hartwick collection, a private collection assembled in Mumbai over several decades. Commissioned to promote Bollywood films, these showcards were produced by local artisans who used a combination of photo collage and hand painting to create dynamic and colourful interpretations of scenes from Bollywood films. Along with posters, lobby cards, cinema booklets and photographs from the ROM's collection, Bollywood Cinema Showcards traces a historical and visual journey through the world of Bollywood Cinema.
•Last Updated on ••Sunday•, 08 •May• 2011 00:22••
•Read more...•
••Friday•, 01 •April• 2011 00:00•
??Dr Vasumathi Badrinathan??
கலை
Last week, I went for the Homai Vyarawalla retrospective, currently exhibited in Mumbai. The beautiful black and white photos of a bygone era, captured moments of history in a special way that made you want to see and re-see the pictures. They also told the story of a fiery, gutsy young woman ahead of her time, wielding her camera and immortalising precious instances of political history as India’s first woman photojournalist. Confined to a wheelchair, this nonagenarian belies the spirit that went behind her photographs. What a pity it took 90 odd years for her contribution to be recognised with a Padma award just this year!
•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:17••
•Read more...•
|